சாமுண்டி

இயமனின் மனைவி என்பதைச் சுட்டுமாறு இவரது திருவடிக்கீழ் எருமைத்தலை செதுக்கப்பட்டுள்ளது. குடைவரைக் காலச் சாமுண்டிகளில் இவரே அளவில் பெரியவர். படியச் சீவி உச்சியில் கொண்டையிட்ட சடைப்பாரமும் மிகப் பெரிய முகமும் கொண்டுள்ள சாமுண்டியின் செவிகளில் சடல குண்டலங்கள் தோள்களை வருடுகிறது. கொண்டையின் முகப்பில் மண்டையோடு உள்ளது. வலக் கையில் சுரைக் குடுவை உள்ளது. இடம் சிவகங்கை மாவட்டத்திலுள்ள திருக்கோளக்குடிக் குடைவரை கோவில். தமிழ்நாட்டிலேயே மிக அதிக அளவிலான கல்வெட்டுப் பதிவுகளைக் கொண்டுள்ள ஒரே குடைவரை கோயில் கோளக்குடிதான்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.