அன்னை பராசக்தி தன்னுடைய உடலில் இருந்து 8 யோகினிகளை தோற்றுவித்தார். அந்த 8 யோகினிகளும் தலா 8 பேர் வீதம் 64 யோகினிகளாக மாறினர். சக்தி வழிபாட்டில் மிக முக்கியமான பரிவார தேவதைகளாக விளங்குபவர்கள் இந்த 64 யோகினிகள். அதில் ஒருவர் யோகினி உல்கா என்று இவரை வடநாட்டில் அழைக்கின்றனர். நான்கு கைகளுடனும் இரண்டு கைகளில் வாள் மற்றும் கேடயத்துடனும் இரண்டு கைகள் உதட்டில் குவித்து விசில் சத்தம் கொடுப்பது போலவும் அமைந்துள்ளது. இவளை மகாலட்சுமியின் அம்சமாகவும் அவரின் வாகனமாக ஆந்தை செல்லப் பறவையாகவும் வாகனமாகவும் வட இந்தியாவில் வழிபட்டு வருகிறார்கள். நம் நாட்டில் மத்திய பிரதேசத்தில் இருந்த இந்த பழமையான சிற்பம் தற்போது அமெரிக்கா டெக்சாஸில் உள்ள சான்அன்டோனியோ அருங்காட்சியகத்தில் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது. காலம் 10 முதல் 11 ஆம் நூற்றாண்டு.