வள்ளிமலை வள்ளி

வள்ளி மலைக் கோவிலில் சுப்ரமணியர் குடவறை சன்னதியில் வள்ளி தெய்வானையுடன் காட்சி தருகிறார். வள்ளி வேடர் குலத்தில் வளர்ந்ததால் அர்த்த ஜாம பூஜையில் தேனும் தினை மாவும் நைவேத்யமாக படைக்கப்படுகிறது. வள்ளி வாழ்ந்த இடம் என்பதால் அவளது பெயரிலேயே இத்தலம் அழைக்கப்படுகிறது. அடிவாரம் மற்றும் மலைக் கோவிலில் குமரி வள்ளிக்கு தனி சன்னதி இருக்கிறது. இவள் கையில் பறவை விரட்ட பயன்படுத்தும் உண்டி வில் கவண் கல் வைத்திருக்கிறாள். முருகன் வள்ளியுடன் பேசிக்கொண்டிருந்த போது அங்கு நம்பிராஜன் வந்து விட்டார். எனவே முருகன் வேங்கை மரமாக உருமாறி தன்னை மறைத்துக் கொண்டார். இந்த மரமே இத்தலத்தின் விருட்சமாக இருக்கிறது. வள்ளி பாறைச் சிற்பமாக இங்கே அருள் பாலிக்கிறாள். இடம்: வேலூரில் இருந்து 25 கிமீ தூரத்தில் உள்ள வள்ளிமலை.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.