ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் நாகலாபுரத்தில் புகழ்பெற்ற ஸ்ரீ வேத நாராயண சுவாமி கோயிலின் கோஷ்டத்தில் வீணாதார தட்சிணாமூர்த்தி அருள் பாலிக்கிறார். தட்சிணாமூர்த்தி வழக்கமாக அனைத்து சிவாலயங்களில் இருப்பார். சில பெருமாள் தலங்களில் புராண கதைகளின் படி இவரைக் காண முடியும். தட்சிணாமூர்த்தி தன் கரங்களில் வீணையை ஏந்தி இசையின் மூலம் பிரபஞ்ச ஞானத்தைப் போதிக்கும் காட்சியில் அருள் பாலிக்கிறார். பேரரசர் கிருஷ்ண தேவராயரின் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட இக்கோயில் கட்டடக் கலைக்கும் ஆன்மீக ஒற்றுமைக்கும் சான்றாக விளங்குகின்றது.
இந்த பெருமாள் கோயிலில் தட்சிணாமூர்த்தி அருள்பாலிப்பதுபோல் கல்லிடைக் குறிச்சி மன்னார் கோயிலில் உள்ள வேதநாராயணர் கோவில் விமானத்திலும், கடையநல்லூர் நீலமணிநாதசுவமி கோயிலிலும் கம்பம் கம்பராயப்பெருமாள் கோயிலிலும் மதுரை சோழவந்தானிலுள்ள பெருமாள் கோவிலிலும் அருள்பாலிக்கிறார்.
