புஷ்பக விமானம்

இராவணனின் புஷ்பக விமானம் பிரம்மாவுக்காக விஸ்வகர்மா உருவாக்கினார். பின்னர் பிரம்மா அதை செல்வத்தின் அதிபதியான குபேரனுக்கு பரிசளித்தார். பின்னர் அதை அவரது ஒன்றுவிட்ட சகோதரர் இராவணன் குபேரனிடம் இருந்து கைப்பற்றி தனதாக்கிக் கொண்டார். இராமர் அனுமன் உருவாக்கிய பாலத்தின் மூலம் இலங்கை சென்று இராவணனை போரில் வென்று இராவணன் வைத்திருந்த புஷ்பக விமானத்தில் சீதையுடன் திரும்ப அயோத்திக்கு வந்தார். தனது பட்டாபிஷேகம் முடிந்த பின்னர் குபேரனை அழைத்து மீண்டும் குபேரனிடம் புஷ்பக விமானம் திரும்ப கொடுத்து விட்டார். இவ்வரலாறு கம்ப இராமாயணத்தில் மீட்சிப் படலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வரலாற்றை மரச்சிற்பமாக வடித்துள்ளார்கள். கிபி 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கேரள மாநிலத்தின் திருச்சூர் மாவட்டத்தில் அமைந்துள்ள கடவல்லூர் விஷ்ணு ஆலயத்தின் கருவறையின் வெளிச்சுவரில் இந்த சிற்பம் உள்ளது.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.