ஓப்பீடு

துறவி ஒருவரின் புகழ் நாடெங்கும் பரவியதைக் கண்ட மன்னர் ஒருவருக்கு பொறாமை ஏற்பட்டது. தன் அமைச்சரிடம் எனக்கு சேவை செய்ய ஆயிரமாயிரம் பணியாளர்கள் காத்துக் கிடக்கின்றனர். ஆனால் ஏதுமில்லாத துறவிக்கு கிடைக்கும் மரியாதை எனக்கு கிடைக்கவில்லை ஏன் எப்படி? என கேட்டார்.

அமைச்சர் மன்னரிடம் இன்றே நாம் துறவியை சந்தித்து அவரது புகழுக்கான் காரணத்தை அறிந்து கொள்வோமே என்றார். இருவரும் துறவியைச் சந்தித்தனர். சுவாமி என் மனதில் ஒரு சந்தேகம் என வந்த நோக்கத்தை வெளிப்படுத்தினார் மன்னர். உடனே துறவி மன்னா வானில் பிரகாசிக்கிறதே அது என்ன? என்று கை காட்டினார். நிலா என்றார் மன்னர். தென்றலில் அசைந்தாடும் மலரைக் காட்டி இது என்ன என கேட்டார். ரோஜாப்பூ என்றார் மன்னர். இந்த பூ எப்போதாவது நிலவைப் பார்த்து அதைப் போல ஒளி வீச முடியவில்லையே என்று வருந்தியிருக்கிறதா? அல்லது நிலா மலர் போல மணம் வீச முடியவில்லையே என எண்ணியதுண்டா? யாரையும் யாரோடும் ஒப்பிடத் தேவையில்லை இயற்கையின் படைப்பில் உயர்வு தாழ்வு இல்லை ஒவ்வொருவர்குள்ளும் ஒரு திறமை இருக்கிறது. உன்னைப்போல் என்னால் வாளெடுத்து என்னால் சண்டை போடமுடியாதே என்றார் துறவி. மன்னருக்கு தன் சந்தேகம் தீர்ந்து அறிவுக் கண் திறந்தது.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.