செயல்

ஒரு ஜென் மத குருவிடம் சீடன் ஒருவன் தங்களுடைய கொள்கை என்ன என்று கேட்டார். அதற்கு குரு பசி எடுத்ததால் சாப்பிடுவது தூக்கம் வந்தால் தூங்குவது. சீடர் மறுபடியும் கேள்வி கேட்டார். பசித்தால் புசிப்பது உறக்கம் வந்தால் உறங்குவது இதைத்தான் எல்லோரும் செய்கிறார்களே என்றார். ஞானி சிரித்தார். மற்றவர்களுக்கும் எனக்கும் வேறுபாடு உள்ளது. நீங்கள் சாப்பிடும் போது உங்கள் மனம் சாப்பாட்டில் இருக்காது. அங்கும் இங்குமாக அலைபாயும். எதையோ நினைத்துக் கொண்டு பேசிக் கொண்டு சாப்பிடுவீர்கள். நான் சாப்பிடும் போது சாப்பிட மட்டும் செய்கிறேன். வேறு எந்த சிந்தனையும் கிடையாது. நீங்கள் தூங்கும் போது உங்களது மனம் தூக்கத்தில் இல்லை. கவலையில் சிந்தனைகளில் மற்றும் குழப்பத்தில் அலைகிறீர்கள். ஆனால் தூக்கத்தின் போது நான் தூங்க மட்டுமே செய்கிறேன் என்றார்.

செய்வதைச் சரியாகச் செய்வதே யோகம் என்று பகவத்கீதை கூறுகிறது. எந்த செயலானாலும் செய்யும் செயலில் ஒன்றிவிடும் போது அது தியானமாகி விடுவதோடு செய்யப்படும் செயலும் முழுமை அடைந்து விடுகிறது. அத்துடன் செய்யும் செயலின் பாரம் துன்பம் எதுவும் இல்லாமல் அச்செயலை நிறைவாக செய்யமுடியும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.