ஆமை அன்னங்கள்

மகாராஷ்டிர மாநிலம் கோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள கித்ராபூரில் கோபேஷ்வர் கோயில் தூணில் ஒரு ஆமை மற்றும் இரண்டு அன்னங்கள் இந்த சிற்பத்தில் உள்ளது. எல்லா நேரத்திலும் பேசுவது ஆபத்தை தரும் என்ற கருத்தை இந்த சிற்பம் சுட்டிக் காட்டுகிறது.

ஒரு ஏரியில் கம்புக்ரீவா என்ற ஆமை ஒன்று வாழ்ந்து வந்தது. அந்த ஆமைக்கு சகட மற்றும் விகட என்ற இரண்டு அன்னங்கள் நல்ல நண்பர்களாக இருந்தன. அவர்கள் மூவரும் ஒவ்வொரு நாளும் ஏரியின் கரையில் சந்தித்து சூரிய அஸ்தமனம் வரை தங்களது கருத்தைப் பரிமாறிக் கொண்டு ஒருவருக்கொருவர் நட்புடன் இருந்தார்கள். ஓராண்டு மழை பெய்யாமல் ஏரி வறண்டு போகத் தொடங்கியது. ஏரியின் நீர்மட்டம் குறைந்து வருவதைக் கண்டு மூவரும் கவலைப்பட்டார்கள். ஆமையும் அன்னங்களும் தங்களது கருத்தை ஒருவருக்கோருவர் பரிமாறிக் கொண்டார்கள். ஏரியில் உள்ள நீர் அனைத்தும் விரைவில் வற்றிவிடும். வற்றினால் ஆமை பெரிய மிருகங்களிடம் எளிதாக சிக்கிக் கொள்ளும். நீர் வற்றினால் இந்த ஏரியில் ஆமை தொடர்ந்து வாழ முடியாது. அன்னங்களுக்கும் உணவு கிடைக்காது. இனி இங்கு வாழ்வது மிகவும் கடினம். ஆகவே தண்ணீர் நிறைந்த மாற்று ஏரியைத் தேடி பிறகு அங்கு செல்லலாம் என திட்டமிட்டனர். பிரச்சனையை ஆமை அறிந்திருந்தது.

ஆமை தொடர்ந்தது. நீங்கள் முதலில் பறந்து சென்று வேறொரு ஏரியைக் கண்டு பிடியுங்கள். பின்பு நீங்கள் இருவரும் ஒரு குச்சியை பிடித்துக் கொள்ளுங்கள். நான் அந்த குச்சியை எனது வாயால் இறுக்கமாகப் பிடித்துக் கொள்கிறேன். அன்னை அங்கே அழைத்துச் சென்று விடுங்கள். பின்பு மூவரும் எப்போதும் போல் அங்கு மகிழ்ச்சியுடன் வாழலாம் என்று சொன்னது. இரண்டு அன்னமும் சம்மதித்து அன்னங்கள் தொலைதூர இடங்களுக்கு பறந்து சென்று ஒரு ஏரியை கண்டு பிடித்தார்கள். பின் திட்டப்படி ஆமை இருக்கும் இடம் ஒரு குச்சியுடன் வந்தார்கள். அப்போது அன்னம் ஆமையிடம் எல்லாம் சரியாகத் தெரிகிறது. உங்கள் வாயை சென்று சேரும் வரை இறுக்கமாக மூடிக்கொள்ளுங்கள். நீங்கள் பேசக்கூடாது. இல்லையெனில் நீங்கள் விழுந்து விடுவீர்கள் என்றது. ஆமை குச்சியை வாயால் இறுக்கமாக பிடித்துக் கொண்டது. அவர்கள் பறக்க ஆரம்பித்தார்கள்.

அவர்கள் மலைகள் பள்ளத்தாக்குகள் கிராமங்கள் காடுகள் ஆகியவற்றின் மீது பறந்து இறுதியாக ஒரு நகரத்தின் மீது வந்தனர். அவர்கள் நகரத்தின் மீது பறந்து கொண்டிருந்த போது இந்த விசித்திரமான காட்சியைப் பார்க்க ஆண்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வந்தனர். குழந்தைகள் கத்தவும் கைதட்டவும் தொடங்கினர். அதோ பார் இரண்டு பறவைகள் குச்சியின் உதவியால் ஆமையைச் சுமந்து செல்லும் அபூர்வக் காட்சி இது என்று வியந்து பாராட்டினர். ஆமை தான் ஆபத்தான நிலையில் தொங்கிக் கொண்டிருப்பதை மறந்து இந்த கை தட்டல்களுக்குப் பின்னால் உள்ள காரணத்தை அறிய மிகவும் ஆர்வமாக இருந்தது. ஆமை தனது நண்பர்களிடம் என்ன ஆச்சு? என்று வாயைத் திறந்தது. ஆமை வாயைத் திறந்த நொடியே கீழே விழுந்து இறந்தது. ஆமை பூமியில் விழுவதை அன்னங்களால் எதுவும் செய்ய முடியவில்லை. தாங்கள் மட்டும் ஏரிக்கு சென்றது. கதையின் நீதி: எல்லா நேரத்திலும் பேசுவது ஆபத்தை தரும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.