தானிதர் லிங்கம் குஜராத்தின் தானிதர் பகுதியிலுள்ள சிவன் கோயிலில் இந்த சிவலிங்கம் அமைந்துள்ளது.

தானிதர் லிங்கம் குஜராத்தின் தானிதர் பகுதியிலுள்ள சிவன் கோயிலில் இந்த சிவலிங்கம் அமைந்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் பொன்னமராவதி அருகே வேந்தன்பட்டி கிராமம் உள்ளது. இந்த பகுதியில் 90 வருடங்களாக வேப்பமரம் ஒன்று உள்ளது. இந்த வேப்பமரத்தின் அடியில் நெய் நந்தீஸ்வரர் சுயம்புவாக தோன்றி உள்ளார். இந்த சுயம்பு நந்திக்கு வேப்பமரத்து நந்தி என்றும் பெயரிட்டு வழிபட்டு வருகின்றனர். இவர் தஞ்சாவூர் நந்தீஸ்வரரின் தம்பியாகக் கருதி தம்பி நந்தி என்றும் பக்தர்கள் பெயரிட்டு அழைக்கின்றனர். இந்த நந்தீஸ்வரருக்கு லிட்டர் கணக்கில் நெய் அபிஷேகம் செய்யப்படும். அபிஷேக நெய்யை பிற உபயோகத்திற்காக இக்கோவிலில் பயன்படுத்துவதில்லை. அதை கோவில் வளாகத்திலுள்ள ஒரு கிணற்றில் கொட்டி விடுவார்கள். தற்போது இந்த கிணறு நெய் நிறைந்த நிலையில் இருக்கிறது. பொதுவாக நெய்யின் வாசனைக்கு ஈ, எறும்பு போன்ற உயிர்கள் வரும். ஆனால் இங்கு இருக்கும் நெய்யை ஈ, எறும்புகள் மொய்ப்பதில்லை. நந்தீஸ்வரரின் கொம்புகளுக்கு நடுவே ஒரு சக்கரம் உள்ளது. இது இயற்கையாகவே அமைந்த அமைப்பு. நெய்க்கு ஈ எறும்புகள் வராத இந்த தன்மைக்கு இந்த சக்கரம்தான் ஆதார சக்தியாக அமைந்துள்ளது. இக்கோவிலில் சொக்கலிங்கேஸ்வரரும் மீனாட்சியம்மனும் அருள்பாலித்து வருகின்றனர்.
அர்ஜுனனின் சபதம் ஒற்றர்களின் வழியாக ஜயத்ரதனின் செவிகளுக்கு எட்டியது. சபதத்தைக் கேட்ட ஜயத்ரதன் போர்க்களத்தை விட்டு தன் நாட்டிற்கு ஓடிவிடலாமா என யோசித்தான். அது வீரனுக்கு அழகில்லை என்று மற்றவர்கள் தடுத்தனர். கௌரவர்கள் ஒன்று கூடி ஜயத்ரதனை காப்பாற்ற திட்டம் தீட்டினார்கள். அர்ஜூனனை எண்ணி துரோணர் கலங்கினார். அன்றைய போர் பயங்கரமாய் இருக்கும் என உணர்ந்தார். எனவே சகடவியூகம் மகர வியூகம் பத்ம வியூகம் என மூன்று விதமான வியூகங்களை வகுத்தார். இந்த மூன்று வியூகங்களும் விண்ணவர்களே வந்தாலும் அசைக்க முடியாது.
துரியோதனனின் தனது திட்டத்தில் ஒன்று ஜயத்ரதனை அன்று மாலை வரை தன் முழு படைபலம் கொண்டு காக்க வேண்டும். அல்லது அன்று மாலை வரை அவனை மறைத்து வைக்க வேண்டும். இரண்டில் எது நடந்தாலும் அர்ஜுனன் சபதத்தில் தோற்பான். அர்ஜுனனை எதிர்த்து போரிடுவதை விட ஜயத்ரதனை மறைத்து வைப்பது என்று முடிவு செய்தனர்.
ஜயத்ரதன் துரோணரைப் பார்த்து நீங்கள் அனைவருக்கும் சமமாக தான் விற்பயிற்சி அளித்தீர்கள் ஆனால் அர்ஜூனன் போல் மற்றவர்கள் சிறக்கவில்லையே ஏன் என்று கேட்டான். அதற்கு துரோணர் அர்ஜூனன் தவ வலிமை உடையவன். ஆகவே மேம்பட்டு விளங்குகிறான். அவனுடைய தவ வலிமை என்னிடம் மட்டுமல்ல கௌரவ படையில் யாரிடமும் இல்லை. அவனை எதிர்க்கும் சக்தி படைத்தவர் இருவர் மட்டுமே இருக்கின்றனர். ஒருவர் இப்போது அம்பு படுக்கையில் இருக்கும் பீஷ்மர். மற்றவர் விதுரர் அவர் துரியோதனனின் அறிவற்ற செயலால் போரில் பங்கேற்கவில்லை. மேலும் கிருஷ்ணர் அவன் தேருக்கு சாரதியாய் இருக்கிறார். எனவே இந்த யுத்தத்தை பொறுத்த வரை அவன் வெல்ல முடியாதவன்.
பதினான்காம் நாள் யுத்தம் துவங்கியது. கிருஷ்ணன் தேரை ஓட்ட அர்ஜூனன் கண்கள் சிவக்க மனதில் வெறி கொண்டு மகனின் மரணத்திற்கு பழி தீர்க்க காண்டீபத்துடன் போர்க்களத்திற்குள் வந்தான். துரியோதனன் தன் தம்பியான துர்மர்ஷணனை பெரும்படையுடன் அர்ஜூனனை நோக்கி அனுப்பினான். நேற்று அபிமன்யூவின் வீரத்தை கண்டு அந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளாத துர்மர்ஷணன் அர்ஜுனனை கண்டு புறமுதுகிட்டு ஓடினான். அவன் ஒட்டத்தைக் கண்ட துச்சாதனன் கடும் சினம் கொண்டு அர்ஜூனனை எதிர்த்தான். துச்சாதனன் படைகளை அனைத்தையும் அர்ஜூனன் அழித்தான். அர்ஜூனனை எதிர்க்க முடியாமல் தோல்வியுற்று அவனும் கௌரவ பாசறைக்கு திரும்பினான்.
ஜயத்ரதனை தேடிச் சென்று வியூகத்தை உடைக்க அர்ஜூனன் முன்னேறினான். அர்ஜூனனை துரோணர் தடுத்து போரிட்டார். துரோணரை பொருட்படுத்தாமல் தன் தாக்குதலின் வலிமையை காண்பித்தான் அர்ஜூனன். துரோணரால் அர்ஜூனனை தடுக்கமுடியவில்லை. மேலும் முன்னேறினான். அதைக்கண்ட துரியோதனன் துரோணரை பார்த்து அர்ஜுனனை உங்களால் தடுக்க முடியவில்லை. நீங்கள் படை தளபதியாக இருக்க தகுதி அற்றவர் என்று கடுமையாக சாடினான். அதற்கு துரோணர் துரியோதனா அர்ஜூனனை ஜயத்ரதனை தேடி வேறு பக்கம் போக வைத்தால் யுதிஷ்டிரரை கைதியாக பிடித்து விடலாம் இதுவே எனது திட்டம் அதை செயல்படுத்திக் கொண்டிருக்கின்றேன் என்றார்.
அபிமன்யுவை எதிர்த்து துரியோதனனுக்கு பதில் அளிக்கும் விதத்தில் போரில் வீரம் காட்டினார் துரோணர். எப்படியாவது அவனை வீழ்த்த எண்ணி அதர்ம யுத்தத்தில் ஈடுபட்டார். கர்ணன் யுத்த நெறிக்குப் புறம்பாக பின்னால் இருந்து அபிமன்யூவின் வில்லை முறித்தான். பின்புறமிருந்து தாக்கியவன் யார் என அபிமன்யு திரும்பி பார்த்தபோது துரோணர் அவனின் தேர்க் குதிரைகளை வெட்டிச் சாய்த்தார். துரோணர் மீண்டும் புறம்பாக பின்புறத்திருந்து வில்லை துண்டித்தார். அதேமுறையில் கர்ணன் அவனது கேடயத்தைத் தகர்த்தான். மாவீரன் அபிமன்யு குதிரையையும் வில்லையும் வாளையும் கேடயத்தையும் இழந்தாலும் வீரத்தை இழக்கவில்லை.
துரோணர் விட்ட அம்பு அபிமன்யுவின் தேர்க் கொடியை அறுத்தது. கர்ணனின் அம்பு தேர்ச் சக்கரத்தை முறித்தது. துரியோதனனின் ஆயுதம் தேர்ப்பாகனை கொன்றது. துச்சாதனனின் அம்பு அபிமன்யுவை கீழே தள்ளியது. ஜயத்ரதனின் பாணம் அபிமன்யுவின் கரத்தைக் கிழித்தது. ஆனால் எதற்கும் தளராத அபிமன்யூ வாளைக் கையில் ஏந்தி தேரிலிருந்து குதித்து பல நூறு வீரர்களை வெட்டி வீழ்த்தினான். உடம்பெல்லாம் புண்ணாகி குருதி ஒழுக நிராயுதபாணியாக நின்ற அபிமன்யு உடைந்த தன் தேரில் இருந்து தேர் சக்கரத்தை கையில் ஆயுதமாக ஏந்தி தாக்க ஆரம்பித்தான். அப்போது துச்சாதனனின் மகன் பின்னாலிருந்து தன் கதையால் அபிமன்யுவின் தலையில் தாக்கினான். சுருண்டு விழுந்தவன் எழுந்து விடுவானோ என்ற பயத்தில் மற்ற மகாரதர்கள் தங்கள் ஆயுதங்களால் வலிமையாகத் தாக்கினார்கள். இறுதிவரை வீரத்தோடு போர் புரிந்த அபிமன்யுவின் தேகத்தை துரோணர், கிருபர், கர்ணன், ஜயத்ரதன் ஆகியோர் செலுத்திய அம்புகள் துளைத்தது. அபிமன்யு தரையில் வீழ்ந்து வீர மரணம் எய்தினான். சரித்திர நாயகன் ஆனான். சொர்க்கம் அவனை வரவேற்றது.
அபிமன்யுவின் வீழ்ச்சியை பற்றி கேள்விப்பட்ட யுதிஸ்டிரர் ஸ்தப்பித்து போனார். வீரம் நிறைந்த அபிமன்யுவினுடைய வீழ்ச்சிக்கு பொறுப்பாளி தானே என்று தன்னைப் பெரிதும் நொந்து கொண்டான். இந்நிலையில் போர் புரிவதை விட மடிந்து போவது மேல் என்னும் உணர்ச்சி அவருடைய உள்ளத்தை வாட்டியது. இந்த நெருக்கடிகள் வியாச பகவான் அங்கு பிரசன்னமானார். மரணம் என்பது வாழ்வின் மற்றொரு பக்கம் என்று அவர் யுதிஷ்டிரனுக்கு எடுத்துக் காட்டி ஆறுதல் வழங்கினார். வாழ்வையும் சாவையும் சமமாக கருதி வாழ்வு என்னும் போராட்டத்தில் மனிதன் தீவிரமாக ஈடுபட வேண்டும் என்று வியாசர் எடுத்துரைத்தார்.
தென்திசையில் சம்சப்தர்களை ஒழித்துத் திரும்பிய அர்ஜூனன் காதில் இச்செய்தி விழ அவன் மயங்கி விழுந்தான். கண்ணனின் ஸ்பரிசம் பட்டு எழுந்த அர்ஜுனன் மகனின் உடலை கட்டி தழுவி அழுதான். மகனின் மரணத்திற்கு மூலக் காரணம் ஜயத்ரதன் என அறிந்து ஜயத்ரதனை நாளை சூரிய அஸ்தமனத்திற்குள் கொல்வேன் தவறினால் அஸ்தமனமானதும் நான் அக்னிப்பிரவேசம் செய்துவிடுவேன். இது கிருஷ்ணன் மீது ஆணை என்று சபதம் செய்தான். அதன் அறிகுறியாக தன் காண்டீபத்திலிருந்து ஒலி எழுப்பினான். கிருஷ்ணர் சங்கு நாதம் செய்தார். இவ்விருவரும் கிளம்பிய ஓலம் எங்கும் பயங்கரமாக எதிரொலித்தது. அவ்வொலிக் கேட்டு அண்ட சராசரமும் அதிர்ந்தன. சூரியன் மறைய பதிமூன்றாம் நாள் யுத்தம் முடிவுக்கு வந்தது.
போஜ்பூர் சிவலிங்கம் மத்தியப்பிரதேச மாநிலத்திலுள்ள போஜ்பூர் சிவன் கோயிலின் மிகப்பெரிய சிவலிங்கம்.
பத்ம வியூக அமைப்பை கண்ட யுதிஷ்டிரர் கலக்க முற்றார். ஆபத்து மிக வாய்ந்த பத்ம வியூகம் பாண்டவர்களின் படைகளை விரைவில் அழித்துவிடும். இந்த நெருக்கடியில் அபிமன்யு யுதிஷ்டிரன் முன்னிலைக்கு வந்து தன்னுடைய கருத்தை தெரிவித்தான். இதுபோன்ற பத்ம வியூகம் ஒன்றை உடைத்துக்கொண்டு உள்ளே போகும் பயிற்சியை தந்தையான அர்ஜுனன் எனக்கு புகட்டியிருக்கிறார் என்றும் ஆனால் அதில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு வெளியே வரும் பயிற்சியே தன் தந்தை இன்னும் தனக்கு புகட்டவில்லை என்றும் அவன் தெரிவித்தான். அதனைக் கேட்ட யுதிஷ்டிரன் எப்படியாவது இந்த பத்ம வியூகத்துக்கு உள்ளே நுழைவதற்கான உபாயம் ஒன்றை கையாளும் படி அபிமன்யு கேட்டுக்கொண்டான். அபிமன்யு வியூகத்திற்குள் செல்லும் போது அவனை பின்பற்றி பீமனும் பெரிய பெரிய போர் வீரர்களும் பின் தொடர்ந்து உள்ளே நுழைந்து விடுவார்கள். அத்தனை பேரும் உள்ளே போனபிறகு எதிரிகளின் வியூகத்தை உடைத்து தகர்த்து விடுவார்கள். வியூகம் உடைந்த பிறகு அதிலிருந்து தப்பித்துக் கொண்டு சுலபமாக வெளியே வந்து விடலாம் என்றும் யுதிஷ்டிரன் அபிமன்யுவிடம் கூறினான். அபிமன்யுவும் இத்திட்டத்திற்கு சம்மதித்தான்.
அபிமன்யு தன் திறமையை கையாண்டு பத்ம வியூகத்தை உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்தான். பாண்டவர்களின் துர்பாக்கியவசத்தால் அபிமன்யுவை பின்பற்றி ஏனைய போர்வீரர்கள் உள்ளே நுழைய இயலவில்லை. அபிமன்யு உள்ளே நுழைந்ததும் பத்மவியூகம் மூடிக்கொண்டது. ஏனைய போர்வீரர்கள் இந்த வியூகத்திற்க்குள் நுழைய முடியாதவாறு ஜெயத்ரதன் தன் மாய சக்தி கொண்டு வியூகத்தின் நுழைவை மறைத்தான். அன்று முழுவதும் வீரியம் நிறைந்த போராட்டமே கழிந்தது ஆயினும் ஜயத்ரதனை வெல்ல பாண்டவ போர்வீரர்களுக்கு இயலவில்லை.
பல காலங்களுக்கு முன்னர் திரௌபதியை தூக்கிச் செல்ல முயன்று தோல்வியுற்று பாண்டவர்களால் அவமானப்பட்ட ஜயத்ரதன் பாண்டவர்களை பழிதீர்க்க சிவனை நோக்கித் தவம் செய்து பாண்டவர்களை கொல்ல வரம் கேட்டான். பாண்டவர்களுக்கு துணையாக கிருஷ்ணர் இருப்பதால் அவ்வரத்தை தர இயலாது என்று சிவன் மறுக்க ஒரு நாளாவது பாண்டவர்களை சமாளிக்கும் வரத்தை பெற்றிருந்தான். அந்த வரத்தை பயன்படுத்தி பீமன், நகுலன், சகாதேவன், யுதிஷ்டிரர் அபிமன்யுவிற்கு உதவி செய்யாதவாறு தடுத்தான்.
எதற்கும் அஞ்சாத அபிமன்யு வியூகத்தின் நுழைந்ததும் தன் முதல் அம்புவிலேயே தலையாய் நின்ற துரோணரின் வில்லை முறித்தான். அக்கினி ஆற்றை போல் உள்ளே நுழைந்தான் பயமின்றி துணிச்சலாக தாக்கினான். அபிமன்யு எட்டு திசையிலும் அம்புகளை அனுப்பினான். கர்ணனின் குதிரைகளை காயப்படுத்தினான். துரியோதனனின் மகுடத்தை மண்ணில் தள்ளினான். துச்சாதனனின் தேரை முறித்தான். அஸ்வதாமனை கதை கொண்டு விரட்டினான். துணைக்கு யாரும் இல்லாத நிலையில் மாபெரும் போர் வீரர்களுடன் பதினாறே வயதான அபிமன்யு தனித்து நின்று போரிட்டான். அவன் வீரம் கண்டு துரோணர் கிருபரிடம் இவன் வீரத்தில் அர்ஜூனனை விட சிறந்து காணப்படுகிறான் என்று வியந்து பாராட்டினார். இதைக் கண்ட துரியோதனன் எதிரியை புகழ்ச்சி செய்வது நம்பிக்கை துரோகம். இதனால் நம் படையின் உற்சாகம் குறையும் என்று எச்சரித்தான்.
பைஜ்நாத் சிவலிங்கம் ஹிமாச்சல பிரதேசம் மாநிலத்தின் பாலம்பூர் பகுதியிலுள்ள பைஜ்நாத் சிவன் கோயிலில் அமைந்துள்ள இந்த சிவலிங்கம் இலங்கை வேந்தன் இராவணனால் இங்கே பிரதிஷ்டை செய்யப்பட்டது.
பதிமூன்றாம் நாள் போர் சங்கு முழங்கியது. கௌரவ படைகளும் பாண்டவ படைகளும் அணிவகுத்து நின்றன. இன்றைய போரில் எத்தனை தம்பியர்களை இழக்க போகிறோம் என்ற கவலையுடன் இருந்தான் துரியோதனன். துரோணர் மீதும் கர்ணன் மீதும் அசைக்க முடியாத நம்பிக்கை இருந்த போதிலும் அர்ஜுனனையும் கிருஷ்ணரையும் பார்க்கும் போது போர்க்களம் அவனுக்கு ஒரு மாயவலை போன்றே தோன்றியது.
அர்ஜுனனின் பாசத்திற்குரிய மகன் அபிமன்யு என்பதை துரோணர் அறிந்திருந்தார். அபிமன்யுவை கொன்றுவிட்டால் அர்ஜுனனின் போர் திறன் நிச்சயமாக பாதிக்கப்படும் என்று கணக்கிட்டார். அபிமன்யுவிர்க்கு ஆபத்து என்றால் அர்ஜுனன் வந்து அவனை காப்பாற்றிவிடுவான், எனவே அர்ஜுனனை திசை திருப்ப திட்டம் தீட்டினார். சம்சப்தர்கள் என்னும் ஏழு சகோதரர்களையும் எட்டாயிரம் வீரர்களையும் மூன்று யானை படைகளையும் அர்ஜுனன் மீது ஏவ திட்டம் தீட்டீனார்கள். அவர்களின் திட்டப்படி அவர்கள் மேற்கு திசையில் இருந்து அர்ஜுனனுக்கு சவால் விடுத்தனர். சவாலை ஏற்ற அர்ஜுனன் கிருஷ்ணரை மேற்கு நோக்கி ரதத்தை செலுத்த சொன்னான். நடக்க இருப்பதை அறிந்திருந்த கிருஷ்ணன் மௌனம் சாதித்தார். பின்பு அர்ஜுனனை நோக்கி வீரம் என்பது போர்களத்தில் கொன்று குவிப்பது மட்டும் அல்ல எத்துனை இழப்பு வந்தாலும் துவளாமல் இறுதி லட்சியத்தை அடைவது தான் உண்மையான வீரம் என்றார். அர்ஜூனக்கு ஒன்றும் புரியவில்லை. நிச்சயம் லட்சியத்தை அடைவேன் என்று கிருஷ்ணரிடம் வாக்களித்து போருக்கு தயாரானான். பின்பு மேற்கு நோக்கி பயணிதான்.
அர்ஜுனனை திசை திருப்பிய துரோணர் தன் வியூகத்தில் பாதி வென்றார். அடுத்த கணம் துரோணர் பத்மவியூகம் அமைத்தார். முகப்பில் அவர் இருந்து தலைமை தாங்கினார். துரியோதனன் பத்மவியூகத்தின் நடுவில் நின்றான். கர்ணன், துச்சாதனன், அஸ்வத்தாமன், துச்சாதனன், துஷ்ப்ரதர்ஷன், துஸ்ஸலன், அனுவிந்தன், உபசித்ரன், சித்ராக்ஷன் உட்பட 76 வீரர்களும் நூற்று கணக்கான காலாட்படை வீரர்களும் பத்மவியூகத்தின் சுவர்களாக நின்றனர்.
பத்மவியூகம் என்பது ஒர்புள்ளி தொடர் சுழல் போன்றதாகும். பத்மவியூகத்தை உடைத்து உள்ளே செல்வது கடினம். மீறி உள்ளே சென்று வெளியே வந்து விட்டால் வியூகத்தை வென்று விடலாம். உள்ளே செல்வதை விட வெளியே வருவது நூறு மடங்கு சிரமம். ஒவ்வொரு திருப்பத்திலும் இரண்டு அல்லது மூன்று மகாரதர்கள் இருப்பர். அவர்களுக்கு துணையாக அவர்களின் காலாட்படை வீரர்கள் இருப்பார்கள். வியூகத்தின் மத்திய புள்ளிக்கு சென்றுவிட்டால் எந்த திசையில் இருந்தும் யார் வேண்டுமென்றாலும் தாக்க கூடும். எப்பக்கத்தில் இருந்து அம்பு பாய்கிறது. யார் ஈட்டி எறிகிறார்கள். யார் போர்வாள் சுழற்றுவார்கள். கதாயுதம் எங்கிருந்து வரும் என்று எதையுமே யூகிக்க முடியாது. பத்மவியூகத்தை உடைக்க அசாத்திய ஆற்றல் வேண்டும்.
பஞ்சமுக சிவலிங்கம் ஆந்திர மாநிலம் பத்ராச்சலத்தில் உள்ள ITDA கோயிலில் இந்த பஞ்சமுக சிவலிங்கம் அமையப்பெற்றிருக்கிறது.
முனிவர் ஒருவர் மரத்தடியில் அமர்ந்து தம் வேட்டியில் இருந்த கிழிசலை தைத்துக்கொண்டு இருந்தார். அப்போது சிவனும் பார்வதியும் வான்வெளியில் வலம் வந்து கொண்டிருந்தனர். மரத்தடியில் ஒளிப்பிழம்பாய் அமர்ந்திருந்த முனிவரை கண்டதும் உளம் நெகிழ்ந்த பார்வதி ஐயனைப் பார்த்து மரத்தடியில் பார்த்தீர்களா ஏதேனும் வரம் கொடுத்துவிட்டுப் போகலாம் வாருங்கள் என்றாள் பார்வதி. அவன் அந்த நிலையெல்லாம் கடந்தவன். இப்போது அவனிடம் செல்வது வீண்வேலை வேண்டாம் வா நம் வழியே போகலாம் என சொல்ல ஆனால் பார்வதி விடவில்லை. ஐயனை வற்புறுத்தி மரத்தடிக்கு அழைத்து வந்துவிட்டாள்.
வணக்கம் முனிவரே என வணங்கினர் அம்மையும் அப்பனும். முனிவர் நிமிர்ந்து பார்த்தார். எம்பெருமானும் பெருமாட்டியுமா வரணும் வரணும் என்று வரவேற்றவர் தாகத்திற்கு மோர் கொடுத்து உபசரித்தார். அவ்வளவுதான். மீண்டும் கிழிசலைத் தைக்கத் தொடங்கிவிட்டார். சற்றுநேரம் பொறுமையாகக் காத்திருந்துவிட்டு நாங்கள் விடை பெறுகிறோம் என்றனர் அம்மையும் அப்பனும். மகிழ்ச்சியாய்ப் போய் வாருங்கள் வணக்கம் என்று சொல்லி விட்டு மீண்டும் கிழிசலைத் தைக்க முனைந்தார் முனிவர். அம்மை குறிப்புக் காட்ட அப்பன் பணிவாய்க் கேட்டார். முனிவரே நாங்கள் ஒருவருக்குக் காட்சி கொடுத்து விட்டால் வரம் கொடுக்காமல் போவதில்லை. எனவே தாங்கள் ஏதாவது வரம் கேளுங்கள். கொடுக்கிறோம் என சொல்ல முனிவர் சிரித்தார். வரமா உங்கள் தரிசனமே எனக்குப் போதும் பரமா வரம் எதுவும் வேண்டாம். உங்கள் வழியைத் தொடருங்கள் என்று சொல்லி விட்டுப் பணியில் ஆழ்ந்தார்.
அப்பனும் அம்மையும் விடவில்லை. ஏதாவது வரம் கொடுக்காமல் செல்ல மாட்டோம் என்று பிடிவாதமாய் நிற்க முனிவர் வேறு வழியின்றி ஒரு வரம் கேட்டார். நான் தைக்கும் போது இந்த ஊசிக்குப் பின்னாலேயே நூல் போக வேண்டும் அது போதும் என்றார்.
இதைக்கேட்ட அம்மையும் அப்பனும் ஏற்கனவே ஊசிக்குப் பின்னால் தான் நூல் போகிறதே. இதற்கு நாங்கள் ஏன் வரம் தர வேண்டும் என்று அம்மை பணிவாய் கேட்கிறார். அதைத்தான் நானும் கேட்கிறேன். நான் ஒழுங்கு தவறாமல் நடந்துகொண்டு வந்தால் வரவேண்டிய பலன் நியதிப்படி தானாகப் பின்னால் வருமே. இடையில் நீங்கள் எதற்கு எனக்கு வரம் தர வேண்டும்? என்று கேட்டார் முனிவர்.
முனிவரின் விளக்கத்தைக் கேட்ட அம்மையும் அப்பனும் சிரித்து விட்டு சென்றனர்.
தூய்மையான இறை நம்பிக்கையுடன் சரியாக நடந்துகொண்டால் அதன் விளைவும் சரியாக இருக்கும்.