ஓர் முனிவரிடம் மூன்று இளைஞர்கள் வந்தனர். முனிவரே உம் சீடராக எங்களை ஏற்க வேண்டும் என்றனர். ஆளுக்கொரு கிளியைக் கொடுத்த முனிவர் யாரும் இல்லாத இடத்திற்குச் சென்று இந்த பறவையைக் கொன்று விட்டு வாருங்கள் என உத்தரவிட்டார். முதல் இளைஞன் கிளியை எடுத்துக் கொண்டு காட்டுக்குச் சென்றான். ஆளே இல்லாத அந்த காட்டில் கிளியைக் கொன்று விட்டு முனிவரிடம் திரும்பினான். முனிவர் அவனிடம் உனக்கு இன்னும் பக்குவம் வரவில்லை. அதனால் உன்னை சீடனாக ஏற்க முடியாது என அனுப்பி விட்டார். இரண்டாவது இளைஞனுக்கு கிளியின் மீது இரக்கம் உண்டானது. கொல்ல மனமின்றி அதைக் காட்டில் உயிரோடு பறக்கவிட்டான். அவனிடம் முனிவர் நீ இரக்கம் கொண்டவன். உனக்கு நல்ல குரு கிடைக்க என் ஆசிகள் என்று திருப்பி அனுப்பினார். மூன்றாவது இளைஞன் எங்கும் சுற்றித் திரிந்தான். எங்கும் இறைவன் நிறைந்து இருக்கிறார். அதனால் இறைவன் இல்லாத இடம் என்று ஒரு இடம் எங்குமில்லை. அதனால் இதைக் கொல்ல முடியாது என்று சொல்லி முனிவரிவிடம் கிளியை ஒப்படைத்தான். அவனைக் குரு சீடனாக ஏற்றுக் கொண்டார். பின் தன் யோகசக்தியால் மற்ற இரண்டு கிளிகளையும் வரவழைத்து அவைகளை சுயரூபத்திற்கு மாற்றினார். கந்தவர்களாக மாறிய கிளிகள் முனிவரை வணங்கிவிட்டு புறப்பட்டனர்.
கிருஷ்ணரின் சகாயம் பாண்டவர்கள் பக்கம் முழுமையாக இருக்கின்றது என்பது அனைவருக்கும் வெளிப்படையாகத் தெரிந்தது. இந்த அற்புதத்தை பார்த்த பிறகும் துரியோதனனுக்கு நடக்கப்போகும் விபரீதம் அதன் விளைவுகள் விளங்கவில்லை. போராட்டத்தை தவிர்ப்பதற்கு அத்தனை பேர்களும் எடுத்துக்கொண்ட முயற்சிகள் யாவும் பயனற்றுப் போயின. யுத்தம் நிகழப் போவது உறுதியாயிற்று.
அஸ்தினாபுரத்தை விட்டு புறப்படுவதற்கு முன்பு கிருஷ்ணன் கர்ணனை தனியாக சந்தித்தான். இதுவரை அறியாத கர்ணனின் வரலாற்றை கிருஷ்ணன் கர்ணனுக்கு எடுத்து விளக்கினான். குந்தி தேவி சிறுமியாய் இருந்த பொழுது சூரியனுக்குரிய மந்திரத்தை உச்சரித்து அந்த சக்தியின் விளைவாக முதல் மகனாக கர்ணனை பெற்றெடுத்துவிட்டு மீண்டும் கன்னிகையானாள். ஆகையினால் தர்மசாஸ்திரப்படி அவன் பாண்டுவின் முதல் மகன் ஆகின்றான். குரு வம்சத்து அரசாங்கத்துக்கு அவனே தலைமகன் ஆகின்றான். இவ்வுண்மையை பாண்டவ சகோதரர்கள் அறிந்தால் அவர்கள் மகிழ்வோடு கர்ணனை அரசனாக சிம்மாசனத்தில் அமரச் செய்வார்கள். இவ்வுண்மையை துரியோதனன் அறிந்தால் பாண்டவர்களுடன் ஒன்றுகூடி கர்ணனை அரசனாக்குவான். அதன் விளைவாக இப்பொழுது உருவெடுத்து வருகின்ற பயங்கரமான யுத்தம் தடுக்கப்படும். மகிழ்ச்சிக்கூறிய இந்த செயல்கள் யாவும் இப்போது உன்னிடத்தில் இருக்கின்றன என்று கிருஷ்ணன் விளக்கியதை கர்ணன் முற்றிலும் நம்பினான். ஆயினும் மூன்று முக்கியமான காரணங்களை முன்னிட்டு அவன் தன்னைப் பற்றிய உண்மையை வெளிப்படுத்த ஆகாது என்று கிருஷ்ணனிடம் வேண்டிக்கொண்டான்.
முதலாவதாக தன்னை வளர்த்து வந்த அதிரதன் ராதை தம்பதிகள் கர்ணனை தங்கள் மகன் என்றே கருத வேண்டும். இந்த எண்ணத்திற்கு எந்த இடைஞ்சல்களும் வரக்கூடாது. இரண்டாவது எக்காரணத்தை முன்னிட்டும் தனக்கும் துரியோதனனுக்கும் இடையிலான நட்பு வேறு போக்கில் மாறக்கூடாது. மூன்றாவதாக அர்ஜுனனை கொல்வதாக விரதம் பூண்டிருக்கின்றேன். அப்பொழுது அதனை மாற்றியமைக்க தான் ஆயத்தமாக இல்லை. ஆகையால் யுத்தம் முடிவடையும் வரையில் கர்ணனை பற்றிய வரலாற்றை ரகசியமாகவே வைத்து இருக்க வேண்டும் என்று கிருஷ்ணரிடம் வற்புறுத்தி வேண்டிக்கொண்டான். கர்ணனுடைய சுயநலப் பற்றற்ற பாங்கையும் ஆண்மையையும் கிருஷ்ணன் பெரிதும் பாராட்டினார்.
விதுரரையும் சாத்யகியையும் தன்னோடு அழைத்துக் கொண்டு கிருஷ்ணன் நேராக குந்திதேவியை பார்க்கச் சென்றான். சபையில் நிகழ்ந்தவைகள் அனைத்தையும் தெரிவித்தான். அதற்கு குந்திதேவி தர்மத்தை சார்ந்திருந்த போராட்டம் ஒன்றை நிகழ்த்த வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கும் மக்களை பெற்றுள்ள பாக்கியம் க்ஷத்திரிய பெண்ணாகிய எனக்கு அமைந்திருக்கிறது. எனவே நான் பாக்கியவதி ஆகின்றேன். இனி வரப்போகும் யுத்தத்தில் அவர்கள் முறையாக ஈடுபட்டு வெற்றி பெறுவார்கள். கிருஷ்ணா என்னுடைய ஆசீர்வாதங்களை தயவு கூர்ந்து என் பிள்ளைகளுக்கு தெரிவிப்பாயாக என்றாள்.
கங்கை நதிக்கரையில் இருந்து 4 மைல் தூரத்தில் உள்ள சிறிய கிராமத்தில் புண்ணியதாமா என்ற வயதான அந்தணர் வசித்து வந்தார். அதே ஊரில் பிருஹத்தபா என்ற பெரும் தவசியும் வாழ்ந்து வந்தார். அவர் தினமும் மாலை வேளைகளில் இறைவனின் லீலைகளை கதையாக கூறுவார். அந்த கதைகளை புண்ணியதாமா தவறாமல் கேட்டு விடுவார். தனது அன்றாட பணிகளை முடித்துக் கொண்டு பிருஹத்தபா கூறும் கதையை கேட்க கிளம்பிவிடுவார். தனது வாழ்க்கையில் ஒரு நாள் கூட அவர் கதையை கேட்க தவறியதில்லை. அன்றாட பணிகளை முடிப்பது கதை கேட்பது உணவு தங்க இடம் கேட்டு வருபவர்களை உபசரிப்பது அவரது பணியாக இருந்தது. கங்கையில் இருந்து 4 மைல் தூரத்தில் இருந்தாலும் ஒரு நாள் கூட புண்ணியதாமா கங்கையில் நீராடியதில்லை. அவருக்கு அது பற்றிய சிந்தனையும் இருந்ததில்லை.
ஒரு முறை வெகு தொலைவில் இருந்த இரண்டு யாத்திரிகர்கள் கங்கா ஸ்நானம் செய்வதற்காக காசி நோக்கி சென்று கொண்டிருந்தனர். இரவு நேரம் ஆகி விட்டதால் வழியில் எங்காவது தங்கி மறுதினம் பயணத்தை தொடர இருவரும் நினைத்தனர். அருகில் இருந்த புண்ணிய தாமாவின் வீட்டிற்கு சென்று வீட்டு திண்ணையில் தங்க இடம் கிடைக்குமா என்று கேட்டனர். அவர்கள் இருவரையும் யாத்திரிகர்கள் என்று தெரிந்து கொண்ட புண்ணியதாமா வீட்டிற்குள் அழைத்துச் சென்று தனது மனைவியிடம் கூறி அன்னம் பரிமாறக் கூறினார். இரண்டு யாத்திரிகர்களும் உணவருந்துவதற்காக அமர்ந்தனர். அப்போது அவர்கள் புண்ணியதாமாவிடம் நாங்கள் காசிக்கு சென்று கங்கையில் நீராட உள்ளோம். இங்கிருந்து கங்கை எவ்வளவு தூரத்தில் உள்ளது என்று கூறமுடியுமா என்று கேட்டனர்.
அதற்கு புண்ணியதாமா நான் நூறு ஆண்டுகளாக இந்த கிராமத்தில் இருக்கிறேன். இங்கிருந்து 4 மைல் தூரத்தில் கங்கை நதி இருப்பதாக பிறர் சொல்ல நான் கேள்விப்பட்டுள்ளேன். இதுவரை நான் ஒருமுறை கூட கங்கையில் ஸ்நானம் செய்தது கிடையாது என்றார். ஒரு கணம் திகைத்த அந்த யாத்திரிகர்கள் மறுகணம் அன்னத்தை நிராகரித்து எழுந்து விட்டனர். பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்து கொண்டு கங்கா என்று சொன்னாலும் கூட பாவங்கள் விலகிவிடும். இவர் அருகிலேயே இருந்து கொண்டு கங்கையில் நீராடவில்லை என்கிறார். இவரை விட பாவி யாரும் இருக்க முடியாது. இவ்வளவு சமீபத்தில் இருந்து கொண்டு கங்கா ஸ்நானம் செய்யாதவரின் வீட்டில் நாம் அதிதிகளாக தங்கியதே மகா பாவம் என்று நினைத்து வீட்டை விட்டு உடனடியாக வெளியேறினர். அவர்களின் செய்கையைக் கண்டு புண்ணிய தாமாவின் மனம் மிகவும் துயரத்தில் ஆழ்ந்துவிட்டது. இரு யாத்திரிகர்களும் கங்கையில் நீராடாதவரின் வீட்டில் தங்கியிருந்த பாவத்தை கங்கையில் நீராடிதான் போக்க வேண்டும் என்று தங்களுக்குள் பேசியபடியே கங்கை நதியை நோக்கி வேகமாக நடைபோட்டுச் சென்றனர்.
கங்கை நதிக்கரையை அவர்கள் அடைந்த போது கண்ட காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கங்கை நதி வறண்டுபோய் கிடந்தது. அதில் ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லை. கானல் நீர் கூட தென்படவில்லை. கங்கை நதிக்கரை ஓரமாகவே நடந்து கங்கை உற்பத்தியாகும் இடம் வரை சென்று விட்டனர். ஆனாலும் அவர்களால் கங்கையை காணமுடியவில்லை. எவ்வளவு தூரத்தில் இருந்து வந்திருக்கிறோம். நம்மால் கங்கையில் நீராட முடியாத நிலை ஏற்பட்டுவிட்டதே! நாம் ஏதோ அபவாதம் செய்து விட்டதாக தெரிகிறதே என்று புலம்பத் தொடங்கி விட்டனர். பின்னர் கங்கா தேவியை மனதார நினைத்து தாங்கள் செய்த குற்றத்தை பொறுத்து தங்களுக்கு காட்சி தர வேண்டும் என்று மனமுருக வேண்டினர். அப்போது அவர்கள் முன் தோன்றிய கங்கா தேவி என்னை காணும் தகுதியை நீங்கள் இழந்து விட்டீர்கள். மிகவும் பாக்கியசாலியும் புண்ணியவானுமான புண்ணியதாமாவை இருவரும் சேர்ந்து நிந்தித்து விட்டீர்கள். இறைவனின் லீலைகள் கதை எங்கெல்லாம் பேசப்படுகிறதோ அங்கெல்லாம் அனைத்து தீர்த்தங்களும் இருக்கின்றன. அதே போல் இறைவனின் லீலைகள் கதையை தொடர்ந்து கேட்பவர்கள் படிப்பவர்கள் புனிதத்திலும் புனிதம் அடைந்தவர் ஆகிறார்கள். அத்தகைய சிறப்பு மிக்க புண்ணியவானின் பாதங்கள் என் மீது படாதா என்று பல காலங்களாக நான் காத்திருக்கிறேன். நீங்களானால் அவரது மனம் புண்படும்படி நடந்து கொண்டு வந்திருக்கிறீர்கள். புண்ணியதாமாவிடம் சென்று மன்னிப்பு கோருங்கள். அதுவரை உங்களால் கங்கையில் நீராட முடியாது என்று கூறி மறைந்து விட்டாள்.
தங்கள் தவறை உணர்ந்து கொண்ட இருவரும் உடனடியாக புண்ணியதாமாவிடம் சென்று நடந்தவற்றை கூறி அவரது காலில் விழுந்து தங்கள் தவறை மன்னிக்கும்படி கேட்டுக்கொண்டனர். அவர்களை அரவணைத்துக் கொண்ட புண்ணியதாமா இருவரையும் பிருஹத்தபாவிடம் அழைத்துச் சென்று இரண்டு ஆண்டுகள் ஹரி கதை கேட்கும்படியாக செய்தார். பின்னர் அனைவரும் சென்று கங்கையில் நீராடி மகிழ்ந்தனர்.
கருத்து
கங்கையில் நீராடுவது என்பது நிச்சயமாக அனைவராலும் முடியாது. இறைவனின் லீலைகளை கதையாக கேட்பது படிப்பது என்பது அனைவராலும் நிச்சயம் செய்ய முடியும். இறைவனின் லீலைகள் கதையாக எங்கெல்லாம் பேசப்படுகிறதோ அங்கெல்லாம் அனைத்து தீர்த்தங்களும் இருக்கின்றன. அதனை தொடர்ந்து கேட்பவர்கள் புனிதத்திலும் புனிதம் அடைந்தவர்கள் ஆகிறார்கள். இறைவனின் லீலைகளை கதையை படிப்பதன் வாயிலாகவும் நமது பாவங்கள் அனைத்தும் விலகும். அதே நேரம் இறைவனின் பக்தனை நிந்திப்பது என்பது பாவத்திலும் பாவமாகும். ஆயிரம் பிரம்மஹத்தி தோஷத்திற்கும் கூட பிராயச்சித்தம் என்பது உண்டு. ஆனால் பகவானின் பக்தனை நிந்திப்பவனுக்கு எந்த பிராயச்சித்தமும் இல்லை.
அஸ்தினாபுரத்தின் சபா மண்டபத்தில் அனைவரும் துரியோதனனுக்கு புத்திமதி கூறினார்கள். அதற்கு துரியோதனன் இவ்வளவு நாட்கள் நிகழ்ந்த அனைத்திற்கும் நானே பொறுப்பாளி என்றும் குற்றம் முழுவதும் என்னைச் சார்ந்தது என்றும் நீங்கள் அனைவரும் ஒன்றுகூடி எண்ணுவதாக தென்படுகிறது. குரு வம்ச அரசாங்கத்துக்கு நான் ஒருவனே எல்லா விதத்திலும் அசைக்க முடியாத இளவரசன் ஆகின்றேன் எல்லோரும் ஒன்றுகூடி யுதிஷ்டிரனை இளவரசனாக்கியது பெரும் பிழையாகும். அதிர்ஷ்டவசத்தால் யுதிஷ்டிரன் பெற்ற ராஜ்யத்தையும் செல்வத்தையும் பகடை விளையாட்டில் பணயமாக வைத்து விளையாடி இழந்து விட்டான். யுதிஷ்டிரன் இழந்த ராஜ்யத்தை மனமுவந்து நாங்கள் அவனுக்கு திருப்பி கொடுத்து உதவினோம். மற்றுமொருமுறை அவன் அதை பணயமாக வைத்து இழந்தான். இது என்னுடைய குற்றமல்ல. இப்பொழுது பாண்டவர்கள் பாஞ்சால நாட்டு அரசர்களோடு சேர்ந்துகொண்டு குரு வம்சத்து அரசாங்கத்தின் மீது உள்நாட்டு கழகத்தை கிளப்பியிருக்கின்றார்கள். ஆயினும் தற்காப்பு நான் அவர்களைவிட மேம்பட்டவனாகவே இருக்கின்றேன்.
11 அக்ஷௌஹினி படைகள் என் வசம் இருக்கின்றன. பாண்டவர்களிடம் வெறும் 7 அக்ஷௌஹினி படைகளே இருக்கின்றன. யாராலும் வெல்ல முடியாத பீஷ்மர் துரோணர் கிருபர் அஸ்வத்தாமன் கர்ணன் ஆகிய மாபெரும் வீரர்கள் என் பக்கம் இருக்கின்றார்கள். யுத்தத்தில் நான் ஜெயிப்பது உறுதி. ஒருவேளை நான் தோல்வி அடைகின்றேன் என்றே வைத்துக்கொள்வோம் அவ்வாறு நிகழ்ந்தாலும் அதை நான் பொருட்படுத்த மாட்டேன். க்ஷத்திரியனான நான் வெற்றிக்கும் தோல்விக்கும் ஆயத்தமாக இருக்கின்றேன். என்னுடைய வழக்கு நீதிக்கு உட்பட்டது. ஆகையால் பயமுறுத்துதலுக்கு நான் அஞ்சுபவன் அல்ல. யார் நயந்து கேட்பதையும் நான் பொருட்படுத்த மாட்டேன். இந்த ராஜ்யம் முழுவதும் எனக்கு உரியது என்பதை நான் நன்கு அறிகிறேன். ஆகையால் ஒரு ஊசி முனை நிலம் கூட நான் பாண்டவர்களுக்கு கொடுக்கப் போவதில்லை என்று கூறிவிட்டு முதியோர்களை அவமானப்படுத்தும் வகையில் துரியோதனன் சபையிலிருந்து வெளியேறினான்.
கிருஷ்ணனை கைதியாக பிடித்து அடைத்து வைக்க துரியோதனன் தனது கூட்டாளிகளுடன் சதி ஆலோசனை செய்தான். இச்செய்தி சபையோரின் காதுக்கு எட்டியது. அவர்கள் பரபரப்பு மிக அடைந்தனர். கைது செய்ய வந்தவர்களுக்கு கிருஷ்ணன் தன்னுடைய விஸ்வரூபத்தை காட்டினான். அதை பார்த்த சதியாலோசனைக்காரர்கள் திக்குமுக்காடி விட்டார்கள். பார்க்கும் அனைவரும் கிருஷ்ணனாக காட்சி கொடுத்தனர். யாரைப்பிடித்து எங்கே கட்டி வைப்பது என்றே அவர்களுக்கு விளங்கவில்லை. கிருஷ்ணரின் இச்செயலால் ஒரு சிறு நலனும் வடிவெடுத்தது. திருதராஷ்டிரனுக்கு சிறிது நேரம் கண் பார்வைய கிடைத்தது. வந்த பார்வையைக் கொண்டு அவனுக்கு கிருஷ்ணனுடைய தெய்வீக ஆற்றல் ஓரளவு விளங்கியது. வேறு எதையும் பார்ப்பதற்கான கண்பார்வை தனக்கு வாய்க்க வேண்டும் என்று அவர் பிரார்த்தனை பண்ணவில்லை. கிருஷ்ணரை பார்த்தை இன்பத்திலேயே அவர் லயித்திருந்தார்
கிருஷ்ணர் மேலும் பேசினார். குருவம்சத்தை சேர்ந்த துரியோதனும் அவனுடைய கூட்டாளிகளும் பாவம் நிறைந்த அதர்மத்தை செய்து வந்திருக்கின்றார்கள். அதற்கு அரசனான தங்களும் ஒருவிதத்தில் உடந்தையாக இருந்திருக்கின்றீர்கள். அத்தகைய ஆடாத பாவச்செயல்களை மன்னிக்கவும் மறக்கவும் யுதிஷ்டிரன் இப்போது ஆயத்தமாய் இருக்கின்றான். இப்பொழுதும் தங்களுக்கு அடிபணிந்து நடந்து கொள்ள அவன் ஆயத்தமாய் இருக்கின்றான். பகடைவிளையாட்டின் முடிவில் அமைத்து வைத்த ஒப்பந்தப்படி அவர்கள் தானாக சம்பாதித்துக் கொண்ட ராஜ்யத்தை அவர்களுக்கு திருப்பித் தந்துவிட வேண்டும் என்பது ஒன்றே அவர்களுடைய வேண்டுகோள் ஆகும் என்று கிருஷ்ணன் சபையில் தெரிவித்தார்.
திருதராஷ்டிரன் பேசினார். இது ஒரு ஓயாத குடும்பத்தகராறு. ஆயினும் இது விரைவில் அமைதியாகவும் பெருந்தன்மையான முடிவுக்கு வர வேண்டும் என்பதே என்னுடைய ஆவல். ஆனால் என் மகன் துரியோதனன் என் சொல்படி கேட்க மறுக்கிறான். அவன் கர்ணன் சகுனியுடம் சேர்ந்து கொண்டு தன் போக்கில் விபரீதமாக நடந்து கொள்கின்றான். கிருஷ்ணா தயவு செய்து நீ தான் அவனை நல்வழியில் நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
கிருஷ்ணன் துரியோதனிடம் ராஜ குடும்பத்தில் பிறந்தவன் அதற்கேற்றவாறு பெருந்தன்மையோடு நடந்து கொள்வது சரியானது. கீழோன் ஒருவன் கடைபிடிக்கின்றன சிறுநெறிகள் உனக்கு ஒரு பொழுதும் பொருந்தாது. நீசனாக இருப்பவன் பேராசை பிடித்தவனாகின்றான். மற்றும் தயாள குணம் படைத்திருப்பது மன்னனின் மகனாக பிறந்து இருப்பவனுடைய பாங்கு ஆகின்றது. நீ முற்றிலும் மன்னனுடைய மாட்சிமை படைத்தவனாக இருப்பாயாக. பெற்றோர் சொல்லை கேட்பதனால் அறநெறியில் நிலைத்திருப்பவன் ஆகின்றாய். சகோதரர்களோடு நல்லிணக்கம் பூணுவதன் வாயிலாக உன்னுடைய வல்லமையும் மகிமையும் நீ வளர்க்கின்றாய். இதற்கு நேர்மாறாக யுத்தத்தில் இறங்குவாய் என்றால் அதன் விளைவாக குரு வம்சம் முழுவதும் அழிந்து பட்டுப் போகும். வேறு சில பல அரச குடும்பங்களும் அழிந்து போகும் என்று கிருஷ்ணன் துரியோதனிடம் கூறினார்.
கிருஷ்ணன் கொடுத்த அரிதிலும் அரிதான புத்திமதியை பீஷ்மரும் துரோணரும் முற்றிலும் ஆமோதித்தார்கள். தயாளகுணம் படைத்தவனாக துரியோதனன் இருக்கவேண்டுமென்று அவனிடத்தில் அன்போடு அவர்கள் எடுத்துரைத்தார்கள். விபரீதத்தை தவிர்ப்பதற்கு பாண்டவர்களோடு சமாதானம் பண்ணிக் கொள்வது ஒன்றே சரியான உபாயம் என்று எடுத்துரைத்தார்கள். அடுத்தபடியாக இதே விதத்தில் விதுரரும் துரியோதனிடம் முறையாக வேண்டிக்கொண்டார். துரியோதனனுடைய தந்தை திருதராஷ்டிரரும் தாய் காந்தாரியும் பிடிவாதம் பிடித்தவனாக இருக்க வேண்டாம் என்று அவனிடம் கேட்டுக்கொண்டார்கள்.
அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில். தாரமங்கலம் சேலம் மாவட்டம்.
அடிமுடி தேடிய நிகழ்வு முடிந்தவுடன் சிவபெருமான் திருமாலின் பூசனைக்கு மகிழ்ந்து லிங்க பாண உருவில் அருள் பாலித்தார். அப்போது சிவலிங்கத்திருமேனியைத் திருமால் தழுவி மகிழ்ந்தார். உடன் ஐந்து முகங்களுடன் பிரம்மா.
கிருஷ்ணர் கூறியதை கேட்ட துரியோதனன் தன் முயற்சியை நிறுத்திவிடவில்லை. குருவம்சம் முழுவதுக்கும் நீ நடுநிலை வகித்துள்ளாய். அப்படி இருக்க குரு வம்சத்தின் ஒரு பகுதியை வேற்றார் ஆகவும் மற்றொரு பகுதியை உற்றாராகவும் பாகு படுத்திப்பார்ப்பது ஏன் என்று கிருஷ்ணனிடம் துரியோதனன் கேட்டான். அதற்கு கிருஷ்ணன் பாண்டவ சகோதரர்கள் ஒருபொழுதும் தர்மத்திலிருந்து பிசகியவர்கள் அல்லர். அவர்கள் எப்பொழுதும் நேர்மையே வடிவெடுத்து இருக்கின்றார்கள். நீயோ அவர்களுக்கு ஜென்மசத்ரு அவர்களை ஒழித்துக்தள்ள தீர்மானித்திருக்கிறார். நல்லவர்களுக்கு பகைவன் எனக்கும் பகைவன் ஆகிறான். அவர்களை உனக்குச் சொந்தம் என்று நீ அங்கீகரிக்கும் வரையில் நான் உன்னிடத்தில் இருந்து விலகியிருக்க கடமைப்பட்டிருக்கிறேன் என்று கூறிவிட்டு கிருஷ்ணன் விதுரருடைய வீட்டுக்கு திரும்பிச் சென்றான்.
விதுரரும் கிருஷ்ணரும் நிலைமையை ஆலோசனை செய்து கொண்டார்கள். துரியோதனன் செருக்கே வடிவெடுத்து இருக்கின்றான். பிடிவாதக்காரனாக இருக்கின்றான். அவனுடைய சபா மண்டபத்திற்கு போவது சரியானதாக இருக்காது என்று விதுரர் கிருஷ்ணரிடம் தெரிவித்தார். ஆனால் கிருஷ்ணரோ கடைசி நிமிடம் வரையில் சமாதானத்திற்கு முயற்சி பண்ண வேண்டும் என்றும் அதன் விளைவு எதுவானாலும் ஆகட்டும் என்று கூறினார். அடுத்தநாள் துரியோதனனும் சகுனியும் திருதராஷ்டிரரின் பிரதிநிதிகளாக கிருஷ்ணன் இருக்குமிடம் வந்து அவனை சபா மண்டபத்திற்கு அழைத்தார்கள். கிருஷ்ணனும் அவ்வாறே வருவதற்கு சம்மதித்தார். விதுரரும் அவரைப் பின்பற்றிச் சென்றார். அஸ்தினாபுர சபா மண்டபத்தில் கிருஷ்ணன் தக்க மரியாதையுடன் வரவேற்கப்பட்டார். முதியோர்கள் அனைவரும் அவர்களுடைய பக்கத்தில் சேர்ந்திருந்த அரசர்கள் எல்லோரும் எழுந்து நின்று கிருஷ்ணருக்கு வணக்கம் செலுத்தினார்கள். ஆரம்பத்தில் நடைபெற வேண்டிய வரவேற்பு முறைமைகள் நிறைவேற்றப்பட்டன.
கிருஷ்ணன் எழுந்து தன் கருத்தை சபையோருக்கு தெரிவித்தார். குருவம்சத்துக்குரிய அரசாங்கம் பலவீணமடைந்த பொழுது தங்களுடைய தம்பியாகிய பாண்டு குருவம்சத்தை பழைய பெருமைக்கு கொண்டு வந்து நிலைநிறுத்தினார். வனத்தில் பாண்டு மன்னன் மடிந்து போன பொழுது அவருடைய பிள்ளைகள் அனாதைகள் போன்று தங்களிடம் வந்து சேர்ந்தார்கள். பெரியப்பாவாகிய உங்களை தங்களுடைய தந்தைக்கு நிகராக கருதி உங்களை அவர்கள் சார்ந்து இருந்தார்கள். ஆரம்பத்தில் தாங்கள் யுதிஷ்டிரனை யுவராஜனாக நியமித்தது முற்றிலும் பொருத்தமாக இருந்தது. அவன் தந்தைக்கு அடிபணிந்து நடப்பது போன்றே தங்களையும் அடிபணிந்து வந்திருக்கின்றான். ஆனால் தாங்கள் அவனுடைய அடக்க ஒடுக்கத்தை தேவைக்கேற்றவாறு பயன்படுத்திக் கொண்டீர்கள். தங்களுடைய தம்பியின் மக்களை எத்தனை எத்தனையோ வகையாக அல்லல்களுக்கு ஆளாக்கினீர்கள். மடிந்து போவதிலிருந்து அவர்கள் தப்பித்துக் கொண்டது தெய்வாதீனமானதாகும். தங்களுடைய மைந்தன் துரியோதனன் வேண்டுமென்றே அவர்களை பலபல ஆபத்துக்களுக்கு ஆளாக்கினான். அவர்கள் தப்பி கொண்டதும் தெய்வாதீனமானதாகும்.
ஒருமுறை பாவங்கள் எதுவும் செய்யாத புண்ணியாத்மாவான முனிவர் ஒருவர் கங்கையில் நீராட சென்றார். அப்போது கங்கையில் குளித்துக்கொண்டு இருந்தவர்கள் மாதா கங்கை என் பாவத்தினை போக்கி காத்தருள்க என்று கூறி நீராடினார்கள். இதை கேட்ட அந்த முனிவருக்கு ஒரு சந்தேகம் வந்தது. பாவம் செய்தவர்களின் பாவங்கள் விடப்படும் கங்கையில் நான் குளித்தால் இந்த பாவங்கள் என்னை வந்து ஒட்டி கொள்ளுமல்லவா எனவே அதில் குளிக்காமல் இருப்பதே நலம் என்று புறப்படலானார். அந்நேரம் ஒரு பெண் அங்கு வந்து ஏன் முனிவரே நீங்கள் குளிக்காமல் செல்கிறீர்கள் என்று கேட்டாள். முனிவர் தன் சந்தேகத்தை அவரிடம் கூறினார். இந்த நீர் ஓடி சென்று கடலில் கலக்கிறது. எனவே இந்த பாவங்கள் கடலை சென்று அடைகிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள். எனவே நீங்கள் இந்த கங்கையில் நீராடுங்கள் என்று கூறினாள். முனிவர் அந்த பெண்ணை பார்த்து நீங்கள் சாதாரண பெண்ணாக தெரியவில்லை நீங்கள் யார் என்று கேட்க அதை நீங்கள் போக போக தெரிந்து கொள்வீர்கள் என்று கூறி அங்கிருந்து சென்று விட்டாள்.
முனிவர் தன் சந்தேகத்தை தீர்க்க சமுத்திரத்திற்கு செல்வோம் சென்று சமுத்திரத்தை நோக்கி செல்லலானார். அங்கே சென்ற முனிவர் சமுத்திர தேவனை தபம் செய்தார். சமுத்திர தேவனும் அவர் முன் தோன்றி தன் வணக்கத்தை தெரிவித்தார். முனிவர் சமுத்திரத்திற்கு வரும் பாவங்கள் எங்கு செல்கின்றன தன் சந்தேகத்தை அவரிடம் கேட்டார். இதற்கு சமுத்திர தேவன் முனிவரே கடலில் கலக்கும் பாவங்கள் அனைத்தும் சூரிய பகவானின் ஒளிக்கதிர்களால் ஆவியாக மாற்றி இழுத்து கொள்வதால் கடல் ஒருபோதும் பாவங்களை தன்னுள் வைத்துக்கொள்ளவில்லை என்று கூறி சமுத்திர பகவான் மறைந்தார்.
தன் சந்தேகம் தீராத முனிவர் தன் சந்தேகத்தை தீர்த்துக்கொள்ள சூரிய தேவனை நோக்கி பிரார்த்தனை செய்தார். சூரிய பகவானே கடலில் சேரும் பாவங்களை தன் ஒளிக்கதிர்களால் ஈர்த்துக்கொள்ளும் தங்களை அது பாதிப்பதில்லையா என்று கேட்டார். அதற்கு சூரிய பகவான் முனிவரே என் ஒளிக்கதிர்களால் ஆவியாக்கப்படும் பாவங்கள் என் உஷ்ணத்தால் என்னை நெருங்குவதில்லை. இவை மேகங்களாக வானிலே தங்கிவிடுகிறது. உடனே முனிவர் அப்படியென்றால் இந்த பாவங்களின் தாக்கம் என்ன ஆகிறது என்று கேட்க அதை நீங்கள் மேகத்திடமே கேட்டு அறிந்து கொள்ளலாம் என்று கூறி மறைந்தார் சூரிய தேவன்.
முனிவர் மேகத்தை வேண்டி தன் கேள்வியை எழுப்பினார். சூரியனின் ஒளிக்கதிகளால் ஈர்த்தெடுக்கப்பட்ட பாவங்கள் காரிருள் மேகங்களாக வானில் வலம் வருகின்றது. அதன் தாக்கம் அதிகரிக்கும் போது மழை பெய்விக்கப்படுகின்றது. மழையுடன் அந்த பாவங்கள் பூமிக்கே திரும்பவும் அனுப்பப்படுகின்றது. அதை பொறுமையின் தேவதையான பூமியும் ஏற்றுக்கொள்கிறாள். ஆகவே தங்கள் சந்தேகத்தை பூமாதேவியிடமே கேட்டறிந்து கொள்ளுங்கள் என்றது மேகம்.
தன் பிரார்த்தனையை பூமாதேவியிடம் திருப்பினார். முனிவரின் பிரார்த்தனையில் மெச்சிய பூமாதேவி முனிவருக்கு அருளலானார்.
முனிவரே பொறுமைக்கு இலக்கணமாகிய எனக்கு மழை மூலம் என்னை நோக்கி வரும் பாவங்களை ஏற்றுக்கொள்வது என் கடமை. என்றாலும் நான் உட்கொண்ட பாவங்கள் என்னில் தங்குவதில்லை மழைநீர் வழியாக வரும் பாவங்கள் மீண்டும் கங்கைக்கே சென்றுவிடுகிறது என்றாள். முனிவரே இப்போது உங்கள் சந்தேகம் தீர்ந்ததா. இல்லை பூமி மாதா என்றார் முனிவர். நீங்கள் கங்கை கரைக்கே செல்லுங்கள். அங்கு நீங்கள் முதலில் கண்ட பெண்மணியை சந்தித்தால் முழு விளக்கவும் உங்களுக்கு கிடைக்கும் என்றாள் பூமி மாதா.
இதை கேட்ட முனிவர் மீண்டும் கங்கை கரைக்கே சென்றார். அங்கே அவர் முதலில் கண்ட பெண்மணியை காணலானார். இதை பார்த்த அப்பெண்மணி இப்போது உங்களுக்கு என்ன சந்தேகம் என்று கேட்க நீங்கள் வெறும் சாதாரண பெண்மணி இல்லை என்று நான் அறிகிறேன் தாங்கள் யார் என்பதை எனக்கு உணர்த்தியருளுங்கள் என்று முனிவர் கேட்க தன் சுயரூபத்தை காண்பித்து நான் தான் கங்காதேவி என்று முனிவருக்கு அருளினார். இதனால் மகிழ்ச்சியுற்ற முனிவர் மாதா மனிதர்கள் செய்யும் பாவங்கள் சுழன்று சுழன்று மீண்டும் கங்கையை வந்தடைகிறது. மனிதர்கள் மேலும் மேலும் பாவங்களை செய்து கங்கையில் கரைப்பதால் கங்காநதியில் பாவத்தின் பாரம் அதிகமாகி கொண்டே செல்லுமல்லவா என்று கேட்டார். முனிவரே இந்த சந்தேகம் ஒருமுறை எனக்கும் வந்தது அந்நேரம் நான் சிவபெருமானை வேண்டி என் சந்தேகத்தை முன் வைத்தேன். அதற்கு சிவபெருமான் தேவி கங்கையில் பாவம் செய்தவர்கள் மட்டுமே நீராடுவதில்லை. பூமியில் புண்ணியாத்மாக்களும் உண்டு என்பதை அறிந்து கொள்ளவும். அங்ஙனம் புண்ணியம் செய்தவர்கள் கங்கையில் நீராடும் போது கங்கையில் பெருகிவரும் பாவங்களின் ஒரு பாகம் அந்த புண்ணியாத்மாவின் புண்ணியத்திற்கேற்ப எரிந்து நாசமாகிறது என்றார். முனிவரே இப்போது உங்கள் சந்தேகம் தீர்ந்ததா என்று கங்காதேவி கேட்க ஆம் என்றார் முனிவர். அதனால் தான் தங்களை நீராடுமாறு கேட்டுக்கொண்டேன் என்று தேவி கூற. நிச்சயமாக செய்கிறேன் என்று கூறி முனிவர் நீராட சென்றார்.
பாண்டவர்களும் கிருஷ்ணனும் பேசுவதைக்கேட்ட திரௌபதி கிருஷ்ணனை தனியாக சந்தித்து தேம்பித் தேம்பி அழுதாள். அஸ்தினாபுரத்தில் சபை நடுவே தான் பட்ட அவமானத்தையும் அல்லல்களையும் கிருஷ்ணனுக்கு அவள் ஞாபகம் மூட்டினாள். பரிதாபகரமான காட்சியை பார்த்த கிருஷ்ணன் திரௌபதியிடம் சமாதானத்தை நாடி நான் அஸ்தினாபுரம் போகிறேன். ஆனால் துரியோதனன் அதற்கு சம்மதம் கொடுக்க மாட்டான். போராட்டத்தில் தான் அவன் நம்மை இணைத்து வைக்கப்போகிறான். அதன் விளைவாக உனக்கு நிகழ்ந்த மானபங்கத்துக்கு பொருத்தமான ஈடு வந்து சேரும் என்று கூறினான். கிருஷ்ணன் பேச்சைக் கேட்ட திரௌபதி மன ஆறுதல் அடைந்தாள்.
பாண்டவர்களிடம் விடைபெற்று சாத்யகியை தன்னோடு அழைத்துக்கொண்டு கிருஷ்ணன் அஸ்தினாபுரம் புறப்பட்டுப் போனான். கிருஷ்ணருடைய வருகையைப் பற்றி கேள்விப்பட்ட திருதராஷ்டிர மன்னன் அவனுக்கேற்ற மேன்மைமிக்க வரவேற்பை அளிக்கவேண்டும் என்று ஆணையிட்டான். கிருஷ்ணருடைய மேன்மையை பாராட்டும் விதத்தில் துரியோதனன் ஆங்காங்கு ராஜரீதியான கொட்டைகளையும் வரவேற்பு பந்தல்களையும் அமைத்து வைத்தான். ஆனால் கிருஷ்ணனோ எந்த ஆடம்பர ஏற்பாடுகளையும் கவனிக்காமல் தன் போக்கில் பயணம் சென்றார். அத்தகைய ஆடம்பரங்களுக்கு கிருஷ்ணன் கட்டுப்பட மாட்டான் என்றும் பாண்டவர்களுக்கு கௌரவர்கள் செய்துள்ள பாதங்களுக்கு நிவர்த்தி தேடுவதே கிருஷ்ணனுடைய வருகையின் நோக்கமாக இருக்கிறது. அதைப் புறக்கணித்து விட்டு பண்ணுகின்ற எந்த ஒரு செயலும் கிருஷ்ணனை திருப்திப்படுத்தாது என்று துரியோதனனுக்கு விதுரன் எடுத்து விளக்கினார்.
கிருஷ்ணனை பிடித்து கைதியாக அடைத்து வைத்து விடலாம் என்று துரியோதனன் சதி ஆலோசனை பண்ணினான். ஆனால் முதியவர்கள் அதற்கு சம்மதம் கொடுக்கவில்லை. சமாதானம் பேச வருகின்றவரை இவ்வாறு கையாளுதல் முற்றிலும் பொருத்தமற்றது என்று துரியோதனனின் செயலுக்கு தடை போட்டார்கள். கிருஷ்ணன் அஸ்தினாபுரத்தை வந்தடைந்த பொழுது பொது மக்கள் பலமான வரவேற்பு அளித்தனர். வந்தவன் முதலில் திருதராஷ்டிர மன்னனுடைய மாளிகைக்குப் போய் அவனுக்கு வணக்கம் செலுத்தினர். அடுத்தபடியாக விதுரருடைய வீட்டிற்குச் சென்றான் அங்கு வசித்து வந்த குந்திதேவி கிருஷ்ணரை பார்த்ததும் தாரைதாரையாக கண்ணீர் சிந்தி வரவேற்றாள். வனவாசத்தில் தன் புதல்வர்கள் அனுபவித்த கஷ்ட திசையை அவள் கண்ணீர் சிந்துவதற்கு காரணமாக இருந்தது. அவளுடைய புதல்வர்களுக்கு அதிவிரைவில் நல்ல காலம் வரும் என்றும் தான் எப்போதும் துணை இருப்பதாகவும் கிருஷ்ணன் அவளுக்கு ஆறுதல் அளித்து அங்கிருந்து கிளம்பினான்..
கிருஷ்ணர் துரியோதனன் இருப்பிடத்திற்கு சென்று நலம் விசாரித்தான். துரியோதனன் கிருஷ்ணனை தன் மாளிகைக்கு விருந்துக்கு வரவேண்டும் என்று அழைத்தான். ஆனால் கிருஷ்ணனோ அதற்கு சம்மதம் கொடுக்கவில்லை. தூதனாக வந்த ஒருவன் வந்த காரியம் வெற்றிகரமாக நிறைவேறுவதற்கு முன்பு எதிரிகளிடமிருந்து உணவு ஏற்றுக் கொள்ளல் ஆகாது என்று தெரிவித்தார்.
கிருஷ்ணனுடைய உதவியை நாடி அவனை முதலில் சந்தித்தவன் நான். கிருஷ்ணனுடைய உதவியை பெற்றுக்கொள்ளும் உரிமை முதலில் எனக்கே இருந்தது. அப்படி இருக்கும்போது அர்ஜுனனுக்கு கிருஷ்ணன் ஒரு சலுகை காட்டினான். கிருஷ்ணன் ஆயுதம் இல்லாத தன்னை ஒற்றை ஆளாக ஒருபக்கமும் தளவாடங்கள் நிரம்பப்பெற்றிருந்த சேனைகள் மற்றொரு பக்கமும் பிரித்து வைத்து பங்கு போட்டான். இரண்டில் ஒன்று விருப்பப்பட்ட பாகத்தை எடுத்துக்கொள்ளலாம் என்று அனுதாபம் காட்டினான். அசடு ஆகிய அவனோ வல்லமை வாய்ந்த சேனையை புறக்கணித்துவிட்டு ஆயுதம் எடுத்து போர் புரிவது இல்லை என்று கூறிய கிருஷ்ணனை தன் பக்கம் சேர்த்துக் கொண்டான். யுத்தத்துக்கு தேவையாக இருக்கின்ற கிருஷ்ணனுடைய சேனையை நான் பெற்றுள்ளேன். இப்பொழுது என் வசம் 11 அக்ஷௌஹினி படைகள் இருக்கின்றன. ஆனால் பாண்டவர்கள் வசம் 6 அக்ஷௌஹினி படைகள் மட்டுமே உள்ளது. ஆகையால் அவர்கள் தோற்றுப் போவார்கள். தோற்று விடுவோம் என்று பாண்டவர்கள் அஞ்சுகிறார்கள் ஆகையால் தான் அவர்களுடைய வாழ்க்கை ஆதாரத்திற்கு வெறும் ஐந்து கிராமங்கள் கிடைத்தால் போதும் என்று அவர்கள் கெஞ்சுகின்றார்கள் என்று துரியோதனன் பேசினான்
திருதராஷ்டிரன் பேசினார். துரியோதனா நீ தாராள மனம் படைத்தவனாக இரு. அவர்களுடைய ராஜ்யம் முழுவதையும் அவர்களிடம் திருப்பி ஒப்படைத்து விடு. நீ இப்படி நடந்து கொள்வது உன்னுடைய பரந்த மனப்பான்மையை வெளிக்காட்டுவதாக இருக்கும். ஒருவரை ஒருவர் நேசிக்கின்ற சகோதரர்களாக நீங்கள் வாழ்ந்திருங்கள். நீங்கள் இவ்வாறு வாழ்வது எனக்கு பெருமையை உண்டு பண்ணும் என்றார். அதற்கு துரியோதனன் தந்தையே அவர்கள் கேட்பது ஐந்து கிராமங்கள். நான் ஐந்து ஊசி முனை அளவு நிலம் கூட அவர்களுக்கு தரப்போவதில்லை. அவர்கள் மீண்டும் வனதிற்கு சென்று தொலைந்து போகட்டும் என்று கூறிவிட்டு அக்கணமே சபையில் இருந்து வெளியேறினான்.
சஞ்சயன் திரும்பிச்சென்ற பிறகு பாண்டவர்கள் இடையே மீண்டும் ஆலோசனை நடந்தது. கௌரவர்கள் அபகரித்துக் கொண்ட ராஜ்யத்தின் எந்த ஒரு பகுதியையும் அவர்கள் திருப்பித் தரப் போவதில்லை என்று யுதிஷ்டிரன் தெரிவித்து விட்டு இந்த நெருக்கடியான நேரத்தில் கிருஷ்ணனுடைய அபிப்பிராயத்தை அவன் நாடி நின்றான். இவ்வளவு நாள் போர்புரிய பொங்கிக்கொண்டிருந்த பீமனுக்கு ஏதேனும் ஒரு போக்கில் சமாதானம் செய்து கொள்வதே நலம் என்னும் சாந்த மனப்பான்மை இப்பொழுது வடிவெடுத்தது. போர் நிகழ்ந்தால் என்னென்ன கேடுகள் எப்படியெல்லாம் அமையக் கூடும் என்பதை அர்ஜுனன் யோசித்தான். சமாதானத்தை நாடி அஸ்தினாபுரத்திற்கு செல்லப்போவதாக கிருஷ்ணன் தெரிவித்தான். அப்படி போவது உயிருக்கு ஆபத்தாக முடியும் என்று யுதிஷ்டிரன் அதற்கு ஆட்சேபம் தெரிவித்தான். ஆனால் கிருஷ்ணனோ தன்னை யாரும் எதிர்த்து ஒன்றும் செய்ய முடியாது என்று உறுதி கூறினான்.