கழுகுமலை வெட்டுவான் கோயில்

கழுகுமலையின் பின்புறம் அமைந்துள்ளது வெட்டுவான் கோயில். மலையின் பழம்பெயர் அரைமலை. ஊரின் பழம்பெயர் பெருநெச்சுறம் அல்லது திருநெச்சுறம். மலையின் ஒரு பகுதியில் பாறையை வெட்டி அந்த ஒற்றைப் பாறையிலேயே ஒரு கோயிலைச் செதுக்கி இருக்கிறார்கள். கழுகுமலையின் ஒரு பகுதியில் 7.50 மீட்டர் ஆழத்துக்குச் சதுரமாக வெட்டி எடுத்து அதன் நடுப்பகுதியைக் கோவிலாகச் செதுக்கி உள்ளனர். இத்தகைய கோயில் தமிழகத்திலேயே இது ஒன்று தான் இருக்கின்றது. இக்கோயில் 8 ஆம் நூற்றாண்டில் பாண்டிய மன்னர்களால் செதுக்கப்பட்டது. மிகவும் நுணுக்கமான சிற்பங்களைக் கொண்டு இக்கோயில் அமைந்துள்ளது. கோயிலின் முழு பணியும் முற்றுப்பெறாமல் தற்போது கருவறையில் பிள்ளையார் சிலை ஒன்று வைக்கப்பட்ட நிலையில் உள்ளது

சங்கரன்கோவில் கோவில்பட்டி சாலையில் இரு நகரங்களுக்கும் நடுவே அமைந்து உள்ளது கழுகுமலை பேரூர். மலையின் பின்பகுதியில் உள்ள படிக்கட்டுகளின் வழியாக மேலே ஏறினால் பதினைந்து இருபது நிமிடங்களுக்கு உள்ளாக ஏறி விடலாம். மலையின் நடுவே ஓரிடத்தில் வரிசையாகப் பல சிலைகள் செதுக்கப்பட்டு உள்ளன. சமணர்கள் தங்கள் குரு, தாய், தந்தை ஆகியோரின் நினைவாக இங்கே சிலைகளைச் செதுக்கி உள்ளனர். இச்சிற்பங்களின் கீழே அவற்றைச் செதுக்கியவர்களின் பெயர்கள் தமிழ் வட்டு எழுத்துகளில் பொறிக்கப்பட்டு உள்ளன. சிறுசிறு குகைகளும் உள்ளன. ஆனால் அந்தக் கோவிலின் பணி முழுமையாக நிறைவு பெறவில்லை.

கோவிலில் கருவறையும் அர்த்த மண்டபமும் உள்ளன. கோவில் கோபுரத்தில் உமா மகேசுவரர், தட்சிணாமூர்த்தி, திருமால், பிரம்மா வடிவங்கள் உள்ளன..விமானத்தின் மேற்குத்திசையில் நரசிம்மரும், வடக்கில் பிரம்மனும் காட்சி தருகின்றனர். விமானத்தின் நான்கு மூலைகளில் நந்தி சிலைகளும் இவற்றுக்குக் கீழே யாளியும் உள்ளன. பராந்தக நெடுஞ்சடையன் என்ற மன்னனின் காலத்தில் கழுகுமலையில் சிற்பங்களைச் செதுக்கி இருக்கிறார்கள். கழுகுமலையில் மூன்று நினைவுச் சின்னங்கள் உள்ளன. 1. சமணர் பள்ளி 2. வெட்டுவான் கோயில் 3. முருகன் கோவில்.

மகாபாரதம் 4. விராட பருவம் பகுதி -11

ரதத்தில் இருந்து கீழே குதித்து ஓடிய உத்தரனை கண்ட பிருஹன்நளா அவனைத் துரத்திப் பிடித்து அவனுக்கு உற்சாகம் ஊட்டினாள். ராஜகுமாரன் நடு நடுங்கி கொண்டு நின்றான். பயந்து கொண்டிருந்த ராஜகுமாரனிடம் ராஜகுமாரா பயப்படாதே ஒரு நெருக்கடியில் பயந்து ஓடுகின்ற யாரும் எதையும் சாதிக்க முடியாது. பயம் மனிதனைப் பாழ்படுத்திவிடும். நீ ரதத்தை ஓட்டு. எதிரிகளை நான் தோற்கடித்து உனக்குரிய பசுக்களெல்லாம் மீட்டு உன்னிடம் தருகிறேன். அதனால் வருகின்ற வெற்றியும் கீர்த்தியும் உனக்கே உரியதாகட்டும் என்று கூறி ராஜகுமாரனை தூக்கிய ரதத்தில் வைத்துக்கொண்டு ஊருக்கு அருகில் இருந்த இடுகாட்டு பக்கம் ஓட்டி சென்றாள்.

கௌரவர்களுடைய சேனைக்கு மிக அருகில் இந்நிகழ்ச்சி நடந்தது. துரோணாச்சாரியார் கூர்ந்து கவனித்துப் பார்த்தார். சாரதியாக வந்த அந்த பெண்ணிடத்தில் அர்ஜூனனுடைய பங்குகள் சில தென்படுகின்றன என தெரிவித்தார். இதனை கேட்ட கர்ணன் தன்னந்தனியாக வந்துள்ள இந்த ராஜகுமாரன் உத்தரனுக்கு சாரதியாக வந்து இருப்பவள் ஒரு பெண். அவள் ஆடை அணிந்திருப்பதில் நேர்த்தி எதுவும் தென்படவில்லை அவள் அஞ்சிக் கொண்டிக்கின்றாள். அத்தகைய பெண்ணொருத்தியை அர்ஜுனன் என்று யூகிப்பது தவறு என்றான். ஆனால் கிருபாச்சாரியார் துரோணருடைய அபிப்பிராயத்தை ஆமோதித்தார். இவர்கள் இப்படி விதவிதமாக பேசிக்கொண்டிருப்பது குறித்து துரியோதனனுக்கு கோபத்தை உண்டாக்கியது. எதிர்த்து நின்றவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை உடனே கொல்ல வேண்டும் என்று துரியோதனன் அனைவர் முன்னிலையிலும் கூறினான்.

விராட நகரின் எல்லையில் இருக்கும் இடுகாட்டில் ஒரு மரத்தின் மீது தொங்கிக் கொண்டிருந்த சவத்தை உத்தரனிடம் பிருஹன்நளா காட்டினாள். அதைப் பொருட்படுத்த வேண்டாம் என்றும் மரத்தின் மீது ஏறி அதன் உள்பகுதியில் இருக்கும் தோல் பையை தூக்கிக் கொண்டு வரவேண்டும் என்று உத்தரனிடம் பிருஹன்நளா வேண்டிக் கொண்டாள். அவள் சொல்லியபடியே உத்தரனும் நடந்துகொண்டான். மரத்தில் இருந்த பொந்தின் உள்ளே இருந்த ஒரு பெரிய தோல் பையை பார்த்து அவன் திகைத்துப் போனான். அதை கீழே எடுத்துக் கொண்டு வர அவனுக்கு இயன்றது. அதைத் திறந்து பார்த்தபோது சூரியப் பிரகாசத்தோடு ஒளிர்ந்து கொண்டிருந்த ஆயுதங்கள் தென்பட்டன. அதை பார்த்த ராஜகுமாரனுக்கு எண்ணிலடங்காத வியப்பு உண்டாயிற்று. இப்பொழுது விஷயங்கள் அனைத்தையும் உத்தரனிடம் அர்ஜூனன் எடுத்துக்கூறினான்.

ஆயுதங்கள் அனைத்தும் பாண்டவர்களாகிய எங்களுக்கு சொந்தம். கனகன் எனும் பெயருடன் இருப்பவர் யுதிஷ்டிரர். சமையல்காரர் வல்லாளன் பெயருடன் இருப்பவர் பீமன். பிருஹன்நளாவாகிய நான் அர்ஜுனன். தமக்ரந்தி என்ற பெயருடன் குதிரைக்காரனாக இருப்பவன் நகுலன். தந்திரிபாலன் என்ற பெயருடன் பசுக்களை பார்த்துக்கொள்பவர் சகாதேவன். சைரந்திரி பெயருடன் வேலைக்காரியாக இருப்பவள் திரௌபதி. ஒரு வருஷம் மறைந்து வாழ்ந்து இருத்தால் பொருட்டு நாங்கள் அனைவரும் உங்கள் அரசாங்கத்தில் அடைக்கலம் புகுந்து வாழ்ந்து வருகின்றோம். இன்னும் சில நாட்கள் தான் பாக்கி இருக்கின்றன. அதன் பிறகு எங்களை இன்னாரென்று வெளிப் படுத்திக் கொள்வோம். அதுவரையில் உன் தந்தையிடம் கூட எங்களைப் பற்றிய ரகசியத்தை தயவு செய்து வெளியிட வேண்டாம் என்று அர்ஜுனன் உத்தரனிடம் கேட்டுக்கொண்டான்.

திருசெந்தூர் சுப்பிரமணிய சுவாமி ஆலயம்.

திருச்செந்தூர் முருகன் கோயில் கடற்கரையிலிருந்து வெறும் 67 மீட்டர் தொலைவில் அமைக்கப்பட்டுள்ளது. 133 அடி உயரமுள்ள இந்த திருக்கோயிலின் ராஜ கோபுரம் கடற்கரையிலிருந்து 140 மீட்டர் தொலைவில் தான் அமைந்துள்ளது. இந்த கோயிலின் கருவறை தரை மட்டத்திலிருந்து 15 அடியும் கடல் மட்டத்திலிருந்து 10 அடியும் தாழ்வான இடத்தில் கட்டப்பட்டுள்ளது.

திருச்செந்தூர் கோவில் பற்றிய விவரங்கள் தொல்காப்பியம், புறநானூறு, அகநானூறு, திருமுருகாற்றுப்படை சிலப்பதிகாரம் போன்ற சங்ககால இலக்கியங்களில் காணப்படுவதை நாம் கருத்தில் கொண்டால் இந்த கோயில் கட்டப்பட்டு குறைந்தது 3000 ஆண்டுகளுக்கு மேல் இருக்குமென்று நாம் அறிந்து கொள்ளலாம். இவ்வளவு ஆபத்தான இடத்தில் கடலுக்கு மிக அருகில் துணிந்து கட்டப்பட்ட இந்த திருக்கோயில் இத்தனை ஆண்டுகளாக எந்தவித பாதிப்புகளுமில்லாமல் கம்பீரமாக நிற்கிறது. தமிழகத்தில் உள்ள கோவில்கள் பெரும்பாலும் மன்னர்களாளும் பெரும் பணக்காரர்களும் கட்டப்பட்டிருக்கும் நிலையில் பிட்சை ஏற்று உண்ணும் ஆண்டிகலாலேயே கட்டப்பட்ட திருக்கோவில் திருச்செந்தூர் முருகன் கோவிலாகும். கோவிலைக்கட்டிய ஆண்டிகள் இந்த ஐவரின் ஜீவசமாதிகளும் திருசெந்தூர் அருகிலேயே அமைந்துள்ளது. திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி திருக்கோவில் திருப்பணி செய்து ஆலயத்தை கட்டி புனரமைப்பு பணிகள் செய்த ஆண்டிகள்.

  1. மௌனசுவாமி
  2. காசிசுவாமி
  3. ஆறுமுகசுவாமி இவர் ராஜகோபுரம் கட்டியவர்
  4. ஸ்ரீவள்ளிநாயகசுவாமி
  5. தேசியமூர்த்திசுவாமி.

முதல் மூவர்களான காசி சுவாமி, மௌன சுவாமி, ஆறுமுகசுவாமி ஆகிய மூவருக்கும் ஜீவசமாதி திருச்செந்தூர் முருகன் ஆலத்தின் நேர் எதிராக கடற்கரையில் சற்று தூரத்தில் அமைந்திருக்கும் நாழிக் கிணற்றின் தெற்கே மூவர் சமாதி என்ற பெயருடனே அமைந்துள்ளது.

நான்காவதாக ஞான ஸ்ரீவள்ளிநாயகசுவாமி அவர்களின் ஜீவசமாதி திருச்செந்தூர் கோவிலின் ராஜ கோபுரத்தின் வடக்கு வெளிப்பிரகாரத்திலிருந்து சரவணபொய்கை செல்லும் பாதையின் அருகில் வலதுபுறம் உள்ளது.

ஐந்தாவதாக ஞான ஸ்ரீதேசிய மூர்த்தி சுவாமி அவர்களின் ஜீவசமாதி திருச்செந்தூரிலிருந்து திருநெல்வேலி சாலையில் ஸ்ரீவைகுண்டத்திற்கு முன்னதாக ஆழ்வார்திருநகரி எனும் ஊரில் இறங்கி அங்கிருந்து ஆற்றைக் கடந்து ஆழ்வார்தோப்பு என்னும் ஊரில் தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள காந்தீஸ்வரம் சிவன் ஆலயத்தின் பின்புறம் உள்ளது.

மகாபாரதம் 4. விராட பருவம் பகுதி -10

கனகனால் தூண்டப்பட்ட சமையல்காரன் வல்லாளன் விராட மன்னனை விடுவிக்க விரைந்து ஓடினான். மரம் ஒன்றை வேரோடு பிடுங்கி எடுத்துக் கொண்டு போனான். உனக்கு விருப்பமான போர் முறைகளை இங்கே கையாள வேண்டாம் ஏனென்றால் இன்னும் சில தினங்களுக்கு நாம் மறைந்திருக்க வேண்டும். சாதாரண போர் வீரர்கள் போன்று போர் செய்வாயாக என்று வல்லாளனுக்கு கனகன் எச்சரிக்கை பண்ணினார். கனகனின் ஆணைப்படியே நடந்து கொண்டா வல்லாளன் சுதர்மனை தோற்கடித்து விராட மன்னனை விடுவித்தான். அதோடு சுதர்மனின் கைகளையும் கால்களையும் கட்டி போட்டு தன்னுடைய ரதத்திலே வைத்து அவனைக் கொண்டு போனான். எதிரியின் படை தோல்வியுற்றது. தன்னை காப்பாற்றிய புதிய போர் வீரர்களுக்கு விராட மன்னன் நன்றி மிக செலுத்தினான். அவர்கள் அடைந்த வெற்றி நகரத்தாருக்கு தெரிவிக்கப்பட்டது. மிக மகிழ்வுடன் இச்செய்தியை கேட்ட நகர மக்கள் தங்களுடைய நகரை நன்கு அலங்கரித்து தங்களுடைய பெரும் பாராட்டுகளோடு அவர்கள் வரவேற்றனர்.

விராட நாட்டின் வடக்கு திசையில் துரியோதனன் படை எடுத்து வந்து அங்கிருக்கும் மாட்டுப் பண்ணையில் பசுக்களை எல்லாம் அஸ்தினாபுரம் ஓட்டிச்சென்றான். அப்பண்ணையை நிர்வாகித்து வந்தவர்கள் ஆதரவற்றவர்களாயினர். துரியோதனன் பசுக்களை கொள்ளையடித்ததை தெரிவிப்பதற்கு விராட மன்னனுடைய சபா மண்டபத்திற்கு சென்றனர். ஆனால் அங்கு சபாமண்டபம் காலியாக கிடந்தது. அதன் பிறகு அவர்கள் நாட்டிய மண்டபத்திற்கு ஓடினார்கள். அங்கு இளவரசன் உத்தரன் வீணை வாசித்துக் கொண்டு இருந்ததைப் பார்த்தார்கள். அரசாங்கத்துக்கு உரிய கால்நடைகளை துரியோதனன் அபகரித்துக் கொண்டு செல்கின்றான் என்று தெரிவித்தார்கள். உத்தரனுக்கு அதைப்பற்றி கவலை உண்டாயிற்று. போரில் வெற்றி பெருவதற்கு சாரதி மிகவும் முக்கியம் என்றும் தனக்கு சரியான தேர் ஓட்டும் சாரதி ஒருவன் கிடைத்தால் அர்ஜுனனுக்கு நிகராக போர்புரிய முடியும் என்று அவன் பெருமை பேசினான்.

அதைக்கேட்ட சைரந்திரி உத்தரன் முன்பு வந்து பிருஹன்நளா ஆடுவதிலும் பாடுவலும் கெட்டிக்காரியாக இருப்பது போன்று சாரதி தொழிலிலும் வல்லவள். அவளை அழைத்துச் சென்றாள் போர் சூழ்நிலைக்கு ஏற்றார் போல் அவளால் சிறப்பாக தேரை ஓட்ட முடியும் என்றாள். உத்தரனும் பிருஹன்நளா சாரதியாக வருவதற்கு சம்மதித்தான். இந்த நெருக்கடியை கருத்தில் வாங்கிக்கொண்டு பிருஹன்நளா உடனடியாக ஆயுதங்களை எடுத்து அணிந்து கொண்டு ரதத்தில் குதிரையைப் பூட்டி அதனுள் அரசகுமாரனை அமரச்செய்து அந்த ரதத்தை வடக்கு திசை மாட்டுப்பண்ணை நோக்கி விரைந்து ரதத்தை ஓட்டிச் சென்றாள். கையில் ஆயுதம் பிடித்திருந்த உத்தரனுக்கு இப்போது உற்சாகம் மிகுதியாக இருந்தது. தன்னால் இயன்றவரை போர் புரிய வேண்டுமென்று அவன் துணிந்து சென்றான். கௌரவர்களுடைய சேனை எங்கு இருந்தது என்பதை கவனித்து பார்த்து அத்திசையை நோக்கி ரதத்தை பிருஹன்நளா செலுத்தினாள். அங்கு கௌரவர்கள் பெரும் கூட்டமாக போரில் சிறந்த வீரர்கள் போருக்கு ஆயத்தமாய் இருப்பதை பார்த்து பயந்து போன உத்தரன் ரதத்திலிருந்து கீழே குதித்து தம் உயிரை காப்பாற்றிக்கொள்ள விரைந்து ஓடினான்.

ஹாசன அம்மாள்

பெங்களுர் அருகே ஹாசன் என்ற ஊரில் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே அதுவும் ஒரே ஒரு நாள் முழுவதும் கோவில் திறக்கப்படும். அங்கே மூன்று சின்ன சின்னதாக கற்கள் இருக்கும். இந்த சுவாமியின் பெயர் ஹாசன அம்மாள். மூன்று சிறு சிறு கற்கள் தான் அந்த ஹாசன அம்மாள். மூன்று கற்கள் மீதும் சிகப்பு வண்ணத்தில் சந்தனம் இருக்கும். அந்த சந்தனத்தை முழுவதும் சுரண்டி விட்டு அந்த சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்படும். சுவாமிக்கு அருகே இரண்டு பெரிய நெய் தீபங்கள் இருக்கும். கோவில் திறந்தவுடன் அந்த இரண்டு நெய் தீபத்திலும் இருக்கும் நெய்யை எடுத்து விட்டு புதிதாக நெய் ஊற்றப்படும். இதில் என்ன அதிசயம் என்றால் ஊற்றிய நெய் தீபம் அடுத்த ஆண்டு வரை அணையாமல் ஒரு வருடம் எரிந்து கொண்டே இருக்கும். நெய் எக்காரணம் கொண்டும் குறையவே குறையாது. சுவாமியின் மீது இருக்கும் சந்தனம் சுரண்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். இந்த சந்தனம் இயற்கையாகவே சுவாமி மீது வருகிறது. அபிஷேகம் முடிந்த பிறகு சுவாமிக்கு நைவேத்தியம் சுடாக கொதிக்க கொதிக்க நைவேத்தியம் செய்யப்படுகிறது. சுவாமிக்கு முன் ஒரு குடம் நிறைய தண்ணீர் வைக்கப்பட்டு அதுவும் நைவேத்தியம் செய்யப்படுகிறது. ஒரு ஆண்டு கழித்து மீண்டும் கோவில் திறக்கும் போது தண்ணீர் கொஞ்சம் கூட குறைந்திருக்காது, நெய் தீபத்தில் கொஞ்சம் கூட நெய் குறைந்திருக்காது, சுவாமிக்கு நைவேத்தியம் செய்யப்பட்ட அன்னம் கெடாமல் அதே சூட்டில் சுட சுட இருக்கும், சந்தனத்தை முழுவதும் எடுத்து விட்டு அபிஷேகம் செய்து முடித்து வெறும் கற்கலாக தான் நடை சாற்றப்படுகிறது. ஆனால் மீண்டும் ஒரு ஆண்டு கழித்து கோவில் திறக்கும் போது மூன்று சுவாமிகள் மீதும் சிகப்பு வண்ணத்தில் சந்தனம் இருக்கும்.

மகாபாரதம் 4. விராட பருவம் பகுதி -9

மத்சிய நாட்டு மன்னன் நம்மோடு ஒரு தோழனாக மறுத்துவிட்டான் என்ற துரியோதனன் விராட நகரத்தை தெற்கு திசையிலிருந்து சுதர்மன் தாக்கட்டும். அந்நகரை வட திசையிலிருந்து நாம் தாக்குவோம். இரண்டு முனைகளையும் சமாளிக்க விராட மன்னனுக்கு வலிமை இல்லை. அவனை நாம் தோற்கடிப்போம். அவனுடைய பசுக்களை எல்லாம் சூரையாடுவோம். மறைந்திருக்கும் பாண்டவர்களையும் கண்டுபிடிப்போம். விராட நகரம் அவர்களுக்கு அளித்துள்ள பாதுகாப்பு வீண் போயிற்று என்று நிரூபிப்போம் என்று துரியோதனன் கூறினான். அனைவரும் இத்தீர்மானத்தை ஆமோதித்து அதிவிரைவில் விராட நகரை ஆக்கிரமிப்பு செய்ய சென்றார்கள்.

தென்திசை பண்ணையில் இருக்கும் பசுக்களை எல்லாம் திரிகர்த்த நாட்டு மன்னன் சுதர்மன் தன்வசப்படுத்தி ஓட்டிக்கொண்டு போகின்றான் என்று மாட்டுக்காரர்கள் ஓடிவந்து விராட மன்னனிடம் முறையிட்டார்கள். வல்லமைமிக்க கீச்சகனுடைய மரணம் தான் துணிச்சல் நிறைந்த இப்படையெடுப்புக்கு காரணம் என்று விராட மன்னனின் யூகித்தான். ஆயினும் தன் படையை அதிவிரைவில் திரட்டினான். அவனுடைய சகோதரர்களும் அவனோடு சேர்ந்து கொண்டனர்.

கனகன் தனக்கு போரில் ஓரளவு பயிற்சி இருக்கிறது என்றும் தானும் போருக்கு வருவதாகவும் மன்னனிடம் தெரிவித்தான். மேலும் உறுதியான உடல் படைத்திருக்கும் சமையல்காரன் வல்லாளன் குதிரைக்காரன் தாமக்ரந்தி மாட்டுக்காரன் தந்திரிபாலன் இப்போருக்கு நன்கு பயன்படுவார்கள் என்றும் மன்னரிடம் எடுத்துரைத்தான். அரண்மனையில் புதிதாக வேலைக்காரர்களாக எடுத்துக்கொள்ளப்பட்ட நால்வரிடத்திலும் ஓரளவு ஒரு போர் திறமை இருக்கிறது என்று விராட மன்னன் உணர்ந்தான். அவர்கள் போர் வீரர்களா என்று தெரியாது. ஆயினும் தற்போது இருக்கும் இக்கட்டான சூழ்நிலையில் நால்வருக்கும் ரதங்களும் அவர்களுக்கேற்ற ஆயுதங்களும் வழங்கப்பட்டன. கனகனுக்கு இந்த நிகழ்வு பெருமகிழ்வை ஏற்படுத்தியது. ஏனென்றால் தனக்கும் தன் சகோதரர்களுக்கும் விராட நகரம் செய்த உதவிக்கு இப்போரில் அவனுக்கு வெற்றி தேடிக்கொடுத்து தக்க முறையில் விராட நகருக்கு நன்றி செலுத்தி விடலாம் என்று கனகன் மகிழ்ந்தான்.

திரிகார்த்த நாட்டு சேனையை விராட மன்னனை சேனாதிபதியாக கொண்டு அதிவிரைவில் சென்று தாக்கியது. போர் மிக மும்முரமாக நிகழ்ந்தது. இருபக்கத்திலும் உயிர்சேதம் இருந்தது. விராட மன்னனை கைதியாக பிடித்துக் கொள்வதில் சுதர்மன் ஏதோ ஒரு போக்கில் வெற்றி அடைந்தான். அதன் விளைவாக விராட சேனைக்குள் குழப்பம் உண்டாயிற்று. வீரர்கள் குழப்பமடைந்து அடைந்து அது நாலாபுறமும் சிதறி ஓடினர். ஆனால் புதிதாக சேனையில் சேர்ந்திருந்த நான்கு போர்வீரர்களும் இந்த நெருக்கடியை நன்கு சமாளித்தார்கள். பொருத்தமான இடங்களில் அவர்கள் நின்று கொண்டு வீரர்களுக்கு ஊக்கத்தையும் உற்சாகத்தையும் ஊட்டினார்கள். அதன் விளைவாக கலைந்து போன வீரர்கள் மீண்டும் உறுதியுடன் ஒன்றுபட்டனர். நிகழ்ந்த போராட்டத்தில் திடீரென்று மாறுதல் ஒன்று நிகழ்வதாயிற்று.

ஆசை மீன்கள்

பருந்து ஒன்று வாயில் மீனைக் கொத்திக்கொண்டு பறந்தது. நூற்றுக்கணக்கான காகங்கள் கா கா என கரைந்தவாறு அதைச் சூழ்ந்து கொண்டு பருந்தை அமளி துமளி செய்தன. பருந்து எங்கு பறந்தாலும் காகங்களும் சுற்றிச் சுற்றி வந்தன. ஓர் கட்டத்தில் பருந்து தன் வாயில் இருந்த மீனை கீழே விட்டது. அவ்வளவு தான் காகங்கள் மீன் விழுந்த இடத்தை நோக்கிப் பாய்ந்து பருந்தை விட்டுவிட்டன. இதுவே ஆன்மீகம்

ஆசை மீன்கள் எதுவரை நம்மிடம் இருக்குமோ அதுவரை உலக விகாரங்களுடன் கவலை துன்பம் அமைதியின்மை ஆகியவையும் கூடவே நம்முடன் வரும். ஆசை மீன்களை விட்டுவிட்டால் அமைதி தானாக வரும்.

OLYMPUS DIGITAL CAMERA

மகாபாரதம் 4. விராட பருவம் பகுதி -8

பாண்டவர்களை பற்றி பேச்சு ஆரம்பமானதும் கர்ணனுக்கு இதைக் குறித்து பரபரப்பு மிக உண்டாயிற்று ஏனென்றால் பாண்டவர்கள் மறைந்து இருக்கும் காலம் பெரிதும் கடந்து போயிற்று. பாண்டவர்கள் மறைந்து வாழும் காலம் ஓர் வருடத்தில் இன்னும் சில நாட்களே உள்ளது. திறமை வாய்ந்த வேறு சில ஒற்றர்களை உடனடியாக அனுப்பி தீவிரமாக அவர்களைத் தேடிப் பார்க்க வேண்டும் என்று கர்ணன் தெரிவித்தான். பாண்டவர்கள் மறைந்து போயிருக்க மாட்டார்கள் என்றும் அவர்களே கண்டுபிடிப்பது சாத்தியமல்ல என்றும் துரோணாச்சாரியார் தனது கருத்தை தெரிவித்தார்.

துரோணாச்சாரியார் கருத்தை பீஷ்மரும் ஆமோதித்து கிருஷ்ணனுடைய கருணைக்கு பாண்டவர்கள் பாத்திரமாய் இருக்கிறார்கள். பாண்டவர்கள் தர்மத்தை விட்டு பிசகியது கிடையாது. பாண்டவர்கள் தர்மத்தை கடைபிடிப்பதால் அவர்கள் எங்கு வசித்து வருகின்றார்களோ அங்கு சௌபாக்கியங்களும் நிறைந்திருக்கும். அவர்கள் வசித்து வருவதை முன்னிட்டு அங்கு மழை ஒழுங்காக பெய்யும். அவர்கள் வசித்து வரும் இடத்தில் மக்கள் சண்டை சச்சரவு ஏதும் செய்ய மாட்டார்கள் என்று பீஷ்மர் தெரிவித்தார். மேலும் பாண்டவர்களுக்குரிய ராஜ்யத்தை துரியோதனன் தனக்கு சொந்தமாக்கி நன்கு அனுபவித்தாகி விட்டது. ராஜ ரீதியான முறையில் அவர்களிடம் செய்து கொண்ட உடன்படிக்கைக்கு ஏற்ப அவர்களுக்குரிய நாட்டை அவர்களிடமே ஒப்படைப்பது சரியானதாகும். அப்படி செய்வது துரியோதனுடைய கண்ணியத்திற்கு பொருத்தமானதாக இருக்கும் என்று கூறினார்.

ஒற்றர்களின் புதியதொரு படை நாடு முழுவதும் சுற்றிப்பார்த்து விட்டு விராட நகரை பற்றிய செய்தி ஒன்றை அஸ்தினாபுரத்தில் கொண்டு வந்தார்கள் பெண்பால் ஒருத்தியிடம் முறை தவறி நடந்து கொண்டதற்காக வலிமை வாய்ந்த கீச்சகன் கந்தர்வன் ஒருவனால் கொல்லப்பட்டான் என்பது அந்த செய்தி. அந்த செய்தியைப்பற்றி துரோயோதனன் எண்ணிப்பார்த்தான். கந்தர்வன் என்று சொல்லப்படுவான். நிச்சயம் பீமனாக இருக்கவேண்டும். அந்நிகழ்ச்சியில் சம்பந்தப்பட்ட பெண் துரௌபதியாக இருக்க வேண்டும். ஆகவே பாண்டவர்கள் மாறுவேடம் பூண்டு விராட நகரில் இருக்கின்றார்கள். அந்த நகரை முற்றுகையிட்டு போர் புரிய வேண்டும். விராட நகரம் தங்களை பாதுகாப்பாக வைத்ததற்கு கைமாறாக பாண்டவர்களும் போருக்கு கிளம்புவார்கள். போருக்கு வராமல் நகரில் மறைந்திருந்தாலும் ஊர் முழுவதும் அலசி ஆராய்ந்து பார்த்து அவர்களை கண்டுபிடித்து விடலாம். அதன் பிறகு உடன்படிக்கையின்படி பாண்டவர்கள் மறுபடியும் பன்னிரண்டு வருடகாலம் வனவாசம் செய்ய வேண்டும் என்று எண்ணி விராட நகரை தாக்க முடிவு செய்தான்.

விராட நகரம் மீது எவ்வாறு தாக்குதல் நடத்த வேண்டும் என்று ஆலோசனை செய்யப்பட்டது. விராட நாட்டு அருகில் உள்ள திரிகார்த்த நாட்டு வேந்தனாகிய சுதர்மன் விராட நாட்டை தென்புறத்தில் இருந்து தாக்க வேண்டும். இந்த ஆலோசனைக்கு சுதர்மன் மத்திய நாட்டு மன்னன் என்னுடைய விரோதி எனக்கு ஓயாது உபத்திரவம் கொடுத்து வந்த கீச்சகன் இறந்துவிட்டான். ஆகையால் இப்போது விராடநகரம் வலிவற்று இருக்கிறது. விராட நாட்டை தாக்கி அந்நாட்டுக்குறிய பசுக்களை நான் கைப்பற்றிக்கொள்கின்றேன் என்றான்.

புத்தன் சபரிமலை

கேரளாவில் சபரிமலையை போன்றே பழமையான அமைப்புடன் பதினெட்டு படிகளை உள்ளடக்கி சபரிமலை கோவிலை போன்றே ஆச்சார அனுஷ்டானங்களை பூஜைகளை கடைபிடித்து வரும் புத்தன் சபரிமலை எனும் கோவில் உள்ளது. அங்கு அனைத்து வயது பெண்களும் பதினெட்டு படிகள் வழியே செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். தற்போது பிரதான சபரிமலை அமைந்துள்ள பத்தனம்தெட்டா மாவட்டத்தில் திருவல்லாவிலிருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தூரத்தில் தடியூர் எனும் இடத்தில் மிக புராதான ஆலயமாக பழமை மாறாது காணப்படுகிறது இந்த புத்தன் சபரிமலை அய்யப்பன் ஆலயம். இந்த புத்தன் சபரிமலை அய்யப்பன் கோவில் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது, பழமையானது. இங்கும் அடர்ந்த வனப்பிரதேசம் ஒரு காலத்தில் இருந்துள்ளது கொடும் காட்டு விலங்குகள் வாழ்ந்த இந்த புத்தன் சபரிமலையில் பக்தர்கள் அவ்வளவாக சென்றதில்லை சுமார் நூறு வருடங்களாக மட்டுமே இருமுடி கட்டி பக்தர்கள் இங்கு வருகை தருகின்றனர்.

சபரிமலையில் உள்ளது போன்றே அதே வடிவிலான ஐம்பொன்னால் ஆன அய்யப்பன் விக்கிரகம் இங்கும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இங்குள்ள 18 படிகளும் கரும் கற்களால் சபரிமலையில் உள்ளது போன்றே செங்குத்தாக அமையப்பெற்றுள்ளது. இங்கு அனைத்து வயது பெண்களும் அனுமதிக்கப்பட்டாலும் இருமுடி கட்டு இல்லாத எவரும் படிக்கட்டுக்கள் மீது செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. இருமுடி கட்டு இல்லாதவர்கள் கோவிலின் வடக்கு பகுதி வழியாக செல்லவே அனுமதிக்கப்படுகிறார்கள். சபரிமலையில் பின்பற்றப்படும் பூஜைகளும் வழிபாட்டு முறைகளும் அபிஷேக வகைகளும் குறிப்பாக சந்தனாபிஷேகம், நெய்யபிஷேகம், பூ அபிஷேகம் போன்றவைகள் அப்படியே சற்றும் மாறாது இங்கும் கடைபிடிக்கப் படுகிறது.

சபரிமலையை போன்றே ஒவ்வொரு மலையாள மாதம் ஒன்றாம் தேதி முதல் ஐந்தாம் தேதி வரை பக்தர்கள் இங்கும் அய்யப்பனை வழிபட அனுமதிக்கப்படுகிறார்கள். சபரிமலையை போன்றே அப்பமும் அரவணை பாயாசமும் இங்கும் பிரதான பிரசாதங்கள். தை முதல் நாளில் மகர சங்கராந்தியன்று எப்படி சபரிமலையில் மகர விளக்கு காணப்படுகிறதோ அவ்வாறே இங்கும் மகரவிளக்கு தரிசனத்தை பக்தர்கள் காணலாம். எல்லாவற்றையும் விட சபரிமலை தந்தரியாக செயல்படுபவர்களே இங்கும் தந்தரியாக செயல்படுகிறார்கள்.

மகாபாரதம் 4. விராட பருவம் பகுதி -7

விராட நகருக்குள் மக்களிடமும் மன்னரிடமும் விடியற்காலையில் நம்பிக்கை ஒன்று பரவியது. யாராலும் எதிர்க்க முடியாத கீச்சகனை கந்தவர்கள் கொன்றுவிட்டார்கள். இச்செய்தியை குறித்து ஊரார் அனைவரும் நடுநடுங்கினர். சைரந்திரியை கந்தர்வர்கள் பாதுகாத்து வருகின்றார்கள். சைரந்திரிடம் முறை தவறி நடந்து கொள்கிறார்கள் ஆபத்துக்கு ஆளாவார்கள் என்று அவர்கள் அஞ்சினார்கள. ஆராய்ச்சிக்கு எட்டாத அப்பெண் விஷயத்தில் நடவடிக்கை எடுக்க அரசனுக்கு துணிவு வரவில்லை. அவளுக்கு சிறதளவும் மனவருத்தம் உண்டாகாதவாறு அவளை வெளியே அனுப்பி விடும்படி அரசியிடம் அரசன் தெரிவித்தான். சகோதரனுடைய மரணத்தைக் குறித்து அரசி சுதேசனா மிகவும் துயரத்தில் ஆழ்ந்நிருந்தாள். அதேவேளையில் சைரேந்திரிக்கு நிகழ்ந்த தௌர்பாக்கியத்தை குறித்தும் அரசி சுதேசனா வருந்தினாள். தனக்கு ஏற்பட்டிருக்கும் கஷ்ட திசையை பணிவுடன் சைரேந்திரியிடம் அரசி சுதேசனா தெரிவித்து அவள் மனம் கோணாது நகரை விட்டு உடனடியாக வெளியேற வேண்டும் என்று நயந்து வேண்டிக்கொண்டாள்.

அகதியாக வந்த தன்னை பதினோரு மாதங்கள் தாங்கள் என்னிடம் இரக்கம் மிக வைத்து நன்கு பாதுகாத்து வந்தீர்கள். நான் விமோசனம் அடைவதற்கு கிட்டத்தட்ட ஒருமாதம் மட்டுமே பாக்கியிருக்கிறது. தங்கள் என்னை காப்பாற்றி வருவது என்னுடைய கந்தர்வக் கணவர்கள் நன்றி மிக உடையவர்களாக கவனித்து வருகிறார்கள். தாங்கள் எனக்கு காட்டியிருக்கும் பேரன்புக்கு ஏற்ற கைமாறு ஒன்றை நிச்சயம் அவர்கள் தங்களுக்கு செய்து வைப்பார்கள். மடிந்துபோன தங்களுடைய சகோதரனுக்கு ஏற்ற ஈடு ஏதாவது இருக்குமானால் அதையும் அவர்கள் நிறைவேற்றி வைப்பார்கள். தாயே தங்களுக்கு வேறு எந்த தீங்கும் வந்து விடாது. என் மீது இரக்கம் வைத்து ஓர் மாதம் மட்டும் காப்பாற்றுங்கள் என்று அரசிடம் கேட்டாள். அதற்கு அரசி ஒரு மாதம் முற்றுப் பெறும் வரையிலும் தன்னுடனேயே வைத்துக் கொள்ள சம்மதம் கொடுத்தாள்.

பாண்டவர்கள் எங்கு எப்படி வாழ்ந்து வருகின்றார்கள் என்பதை கண்டுபிடிப்பதற்கு ஏற்ற மிக தகுதி வாய்ந்த ஒற்றர்களை துரியோதனன் நியமித்து இருந்தான். அவர்கள் நாடெங்கும் உள்ள மூலைமுடுக்குகளில் அலசி ஆராய்ந்து பார்த்தனர். பெரிய பட்டணங்களையும் பெரிய ஊர்களையும் கிராமங்களையும் அவர்கள் தேடிப் பார்த்தார்கள். வனந்திரங்களிலும் மலைகளிலும் குகைகளிலும் தேடிப் பார்த்தார்கள் ஆனால் மறைந்து வாழ்ந்திருக்கும் பாண்டவர்களை மட்டும் கண்டுபிடிக்க அவர்களுக்கு இயலவில்லை. ஆகையால் ஒற்றர்கள் அஸ்தினாபுரம் திரும்பி வந்து நாட்டை விட்டு சென்றவர்கள் இறந்து போய் இருப்பார்கள் அல்லது கடல் கடந்து வெளிநாடுகளுக்கு ஓடிப்போய் இருப்பார்கள் என்று உறுதி கூறினார்கள். தங்களுக்கும் தங்கள் அறிவுக்கு எட்டிய இடங்களில் எங்குமே அவர்கள் வாழ்ந்திருக்கும் அறிகுறி ஏதுமில்லை என்று அவர்கள் கூறினார்கள். பாண்டவர்கள் இறந்திருந்தால் உபத்திரவம் முடிந்தது என்று துரியோதனன் எண்ணினான். எனினும் இதுகுறித்து ஆலோசனை செய்ய சபை ஒன்றை கூட்டி ஆலோசனை கேட்டான்.