இராமாயண இதிகாசத்துடன் தொடர்புடைய ஆதி ஜகந்நாதர் கோவிலில் உள்ள சந்தான கோபாலகிருஷ்ணன் சந்தனா என்ற சொல்லுக்கு குழந்தை என்று பொருள். குழந்தைகளை விரும்பும் தம்பதிகளுக்கு அருள் பாலிக்கிறார். இடம் திருப்புல்லாணி கோவில், ராமநாதபுரம் மாவட்டம்

இராமாயண இதிகாசத்துடன் தொடர்புடைய ஆதி ஜகந்நாதர் கோவிலில் உள்ள சந்தான கோபாலகிருஷ்ணன் சந்தனா என்ற சொல்லுக்கு குழந்தை என்று பொருள். குழந்தைகளை விரும்பும் தம்பதிகளுக்கு அருள் பாலிக்கிறார். இடம் திருப்புல்லாணி கோவில், ராமநாதபுரம் மாவட்டம்
கேள்வி: ஆன்மீக பாதையில் செல்லும் காலத்தில் அன்பு காட்டுவது விடுதல் வேண்டுமோ?
அடிப்படையாக கூறுவது அன்பே சிவம் என்று அனைத்தும் அன்புக்குரியதாம். குடும்பத்தில் அன்பு காட்ட வேண்டாம் என்று யாம் கூறியதில்லை. குடும்பத்தில் காட்டும் அன்பை உலகத்தில் காட்டுவாய் என்றே கூறுகிறோம். அனைத்து ஜீவராசிகளுக்கும் அன்பு காட்டுதல் வேண்டும். குறுகிய குடும்பத்தில் காட்டிய அன்பு வெளியில் உள்ள படைப்புக்கு அணைத்திற்கும் காட்டுதல் வேண்டும் என்பதே உண்மையான ஆன்மீக நிலை. இதனை உணராமல் அன்பு காட்டுவது தவறு. அன்பு காட்டாதிருந்தால் ஆன்மீக வளர்ச்சி உண்டாகும் என எண்ணிக் கொண்டால் இது பாதாளத்திற்கே செல்ல வேண்டிய நிலை உண்டாகும். அன்பு அன்பு அன்பு ஏனெனில் நாம் இன்று இங்கு நிலைப்பதே இறைவனின் அன்பின் விளைவாகும் என்பதை மறவாது அவ்அன்பினை பகிர்ந்து கொள்ளுதல் வேண்டும் அனைத்து ஜீவராணிகளும் உமது அன்பை பெறுதல் வேண்டும் என்பதே ஓர் நோக்கமாகக் கொண்டால் அதுவே ஜெயம் என கூறுகின்றோம்.
நந்திகேஸ்வரரும் நந்திகேஸ்வரியும் மனித உருவில் சிவபெருமானின் மீது அசையாத பக்தியுடன் பாதுகாவலர்களாக கச்சபேஸ்வரர் கோயிலில் அருள்பாலிக்கிறார்கள். புராணத்தின் படி சிவபெருமான் இந்த உலகத்தில் திருநடனம் ஆடிய போது அதனைக் காண்பதற்கு நந்தி பகவான் மனித ரூபத்தில் காண விருப்பம் கொண்டு தனது சக்தியுடன் வந்து தரிசனம் செய்தார். இடம் பெரிய காஞ்சிபுரம்.
கேள்வி: இறைவன் கொடியவனா நம்மை தண்டிக்க?
தண்டிப்பது இறைவன் அல்ல நீங்களே உங்களை தண்டிக்கிறீர்கள். ஏனெனில் இறைவன் நல்வழியில் நமக்குள் இயங்குகின்றான் என உணர்ந்து கொண்டால் நாம் தவறு செய்ய மாட்டோம் அல்லவா! இவ்விதம் உணர்ந்து தவறுகள் செய்திட அதன் விளைவு நம்மை தண்டிக்கின்றது. இறைவன் வெறும் சாட்சியாக நிற்கின்றான் என்பதை நன்கு உணருதல் வேண்டும். தண்டனைகளை தவிர்த்திட எப்பொழுதும் இறைவன் உள்ளிருந்து நம்மை இயக்குகின்றான் இறைவனை சட்சியாக நிற்கும் போது தீயவை யாதும் செய்தல் கூடாது என்று மட்டுமல்லாது தீயவை சிந்தித்தல் கூடாது என்பதை மனமதில் நிறுத்தி செயல்பட அனைத்தும் நல்வழியில் நீங்கும் பின்பு தண்டனை இல்லை.
உத்திரபிரதேசம் பரேலி மாவட்டம் அஹிச்சத்ரா என்னும் ஊரில் 3 ஆம் நூற்றாண்டில் சூலத்துடன் அருள்பாலித்த இந்த முக்கண் பைரவர் தற்போது அமெரிக்க நாட்டில் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள LACMA அருங்காட்சியகத்தில் உள்ளார்.
கேள்வி: மகான்களுக்கு ஜெயந்தியும் (பிறந்த நாள்) ஆராதனையும் (முக்தி அடைந்த நாள்) நல்வழியில் கொண்டாடப்படுகிறது இதில் எது முக்கியத்துமானது?
பொதுவாக ஆதியில்லாது அந்தம் இல்லை. அந்தம் இல்லாமல் ஆதியும் இல்லை என்பது விதியாகும். இவ்விதம் பார்க்க இரண்டும் முக்கியமாகும். இருப்பினும் முக்கியத்துவம் காண்பது பிறப்பே ஆகும். பிறப்பு என்பது மானிடப் பிறப்பாகும். மானிடனாகப் பிறந்து பல பிறவி கண்ட பின்பே முக்தி நிலை அடைய முடிகிறது என்பதால் ஜெயந்தியே முக்கியத்துவம் ஆகும். அந்நாளில் மகான்களிடம் பெறும் வாழ்த்துக்களும் ஆசிகளும் பெருமளவில் நலம் தரும். ஆராதனை என்பதும் முக்தி என்பதும் ஓர் சாதனையின் நாளில் பக்தர்களும் மக்களும் முக்தி பெற்றவர்களை மட்டுமல்லாது அவரின் சாதனையையும் போற்றுகின்றனர். இந்நிலையில் முதன்மையில் வந்தது பிறப்பு, பின்பு வந்தது முக்தி என்பதால் முக்கியத்துவம் காண்பது முதலில் வந்த பிறப்பு ஆகும். சாதனையில் முக்தி பெரிதாக தோன்றினாலும் பிறவி இல்லையெல் முக்தி இல்லை.
இடம்: உடுப்பி மாவட்டம் கோட்டா
ஆன்மீக நிலை அடைய வேண்டும் என பலரும் எண்ணம் கொண்டும் அந்நிலையில் சிறப்புகள் காணுதல் வேண்டும் என ஏக்கம் கொண்டனர். அதற்குரிய பயிற்சிகள் யாரும் செய்வதில்லை. பயிற்சிகளை கையாளவே அனைத்தும் கைகூடும் என்பதை மறந்தீர்களே. அனைவரும் இன்று ஓடுகின்றனர் செல்வத்தை நாடியே செல்வம் வேண்டும் அதை மறுப்பதற்கில்லை. எந்த அளவிற்கு வேண்டும் என்பதே கேள்வியாகின்றது. மானிட நிலையில் வேண்டியது உடை, உணவு, இருப்பதற்கு ஓர் இடம் இதற்கு மேலாக சொத்துக்கள் சேர்ப்பது ஏன் என கேள்வி கேட்போம். குழந்தைகளுக்கு வேண்டும் என்று கூறினால் தவறாகாது குழந்தைகளால் அச்சொத்துகளை காக்க முடியுமா என கேள்வி கேட்போம் இல்லை அவர்கள் ஏமாற்றப்பட்டால்? என கேள்வி கேட்போம் இவையாவும் உங்களது பொறுப்பல்ல படைத்த இறைவனின் பொறுப்பே பின்பு நீங்கள் ஏன் செல்வத்தை நோக்கி ஓடுகின்றிர்கள். சிறு காலம் தெய்வ சிந்தனையில் ஈடுபடுங்கள்.
இரண்டாவதாக எதிர்காலங்கள் அறிய வேண்டும் என அறிய ஆவல் ஏன்? நடப்பது நன்றாகவே நடக்கும் அதை தடை படுத்த முடியாது. வீணாக ஜாதகத்தை எடுத்து அங்கும் இங்கும் அலைவதை சிறிது நிறுத்துங்கள். இறைவன் மீது பரிபூரணமாக நம்பிக்கை வையுங்கள். ஜாதக நிலைகளில் என்ன நடக்கும் என அறிந்து விட்டால் வருவதை உங்களால் தவிர்க்க முடியுமா? இயலாத நிலையில் அதை அறிந்து கொள்ள நினைப்பது ஏன்? ஜோதிடம் என்பது ஓர் பொய்யான அறிவு என்று யாம் இங்கு எடுத்துரைக்கவில்லை அதில் சத்தியம் உண்டு. ஆனால் அதை தெரிந்து கொண்டு நீ என்ன செய்யப் போகின்றாய் என்பது தான் கேள்வியாகின்றது. இறைவனிடம் அனைத்தும் விட்டு விட்டு சரணடைந்த பின் எதிர்காலம் அவன் பொறுப்பாகின்றது. அதனை அறியாமல் அங்கும் இங்கும் ஓடி பல நூறு பணம் செலவு செய்து அவன் கூறும் பரிகாரங்களும் செய்த பின் இறைவனை குறை சொல்வது ஆகாது. முழுமையாக சரணடைந்தவனுக்கு எவ்வித தோல்விகள் நேரிடாது ஏனெனில் அவன் மனப்பக்குவன் அந்த அளவிற்கு இருக்கும். தன் கர்ம வினை தன்னை தொடர்ந்தது என அவன் அறிவான். இதற்கு இறைவன் பொறுப்பாக மாட்டான் சகிக்கும் தன்மை மட்டும் தருவான் என்பதை முழுமையாக உணர்ந்து சரணடைந்து முழுமையாக இறைவனை அடையுங்கள் இல்லையேல் அகங்காரத்தின் மறுபக்கமாக நான் செய்கிறேன் என்ற நம்பிக்கையில் செல்லுங்கள் மத்தியில் கிடந்து தவழாதிர்கள்.