உத்குடி ஆசனத்தில் அய்யனார்

கருவறையில் அய்யனார் வடக்கு நோக்கிய நிலையில் உத்குடி ஆசனத்தில் ஜடாமுடியுடன் மாலை மற்றும் யக்ஞோபவீதம் கால்களில் சலங்கை அணிந்து அமர்ந்துள்ளார். சுற்றி காவல் தெய்வங்கள் உள்ளார்கள். உள்ளூர் மக்கள் இந்த அய்யனாரை சாஸ்தா என்றும் அழைக்கிறார்கள். இங்கு இவரது வாகன யானை பீடத்தின் முன் பக்கத்தில் வைக்கப்பட்டுள்ளது. இடம்: விஷ்ணு கோவில் இடங்கிமங்கலம் லால்குடி திருச்சி மாவட்டம்.

சாஸ்தா

சைவம் மற்றும் வைணவத்தை சாஸ்தா தன்னுள் இணைத்து அவர்களின் ஒற்றுமையை உறுதிப்படுத்துகிறார். இந்தச் சிற்பத்தில் சாஸ்தா பகவான் ஒரு பீடத்தில் அமர்ந்தபடி வலது காலை கீழே தொங்கவிட்ட நிலையில் இடது காலை மடக்கி ஆசனத்தில் அமர்ந்துள்ளார். இடம் திருவனந்தபுரம் நேபியர் மியூசியம். காலம் கிபி 15 ஆம் நூற்றாண்டு.