நான்கு கரங்கள் கொண்ட விநாயகர். சந்நியாசத்தின் உருவகமாக தனது நெற்றியில் மூன்றாவது கண்ணுடன் ஒரு முனிவரின் புலித் தோலை அணிந்துள்ளார். 7 அல்லது 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த விநாயகர் சிலை. இடம் வியட்நாமில் உள்ள டா நாங் நகர். சாம் சிற்ப அருங்காட்சியகம்.

நான்கு கரங்கள் கொண்ட விநாயகர். சந்நியாசத்தின் உருவகமாக தனது நெற்றியில் மூன்றாவது கண்ணுடன் ஒரு முனிவரின் புலித் தோலை அணிந்துள்ளார். 7 அல்லது 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த விநாயகர் சிலை. இடம் வியட்நாமில் உள்ள டா நாங் நகர். சாம் சிற்ப அருங்காட்சியகம்.
நாகத்தை அடித்தளமாக கொண்டு மணல் கல்லால் ஆன சிவலிங்கம் இந்தோனேசியா கிழக்கு ஜாவாவில் உள்ளது.
அனுமனின் வாலின் மீது நின்றபடி திருமால் சிவனை வழிபடுகிறார்.
வலிமை கொண்ட இரு தலைகள் கொண்ட பறவையான கண்டபேருண்டா மல்லிகார்ஜூனா கோவிலில் புடைப்புச் சிற்பமாக உள்ளது. 1399 முதல் 1947 வரை மைசூர் சாம்ராஜ்யத்தை ஆண்ட உடையார்களின் அரச முத்திரையாக இந்த வலிமைமிக்க பறவை இருந்தது. தற்போது கர்நாடக அரசின் அதிகாரப்பூர்வ சின்னமாக உள்ளது.
குறுங்கலீஸ்வரர் கோயில் கோயம்பேடு சென்னை
சிவபெருமானின் கையில் உள்ள ருத்ராட்ச மாலை. அவரும் உமாமகேஸ்வரி அணிந்திருக்கும் அணிகலன்கள். அவள் மடக்கி வைத்திருக்கும் காலில் உள்ள கொலுசின் நிலைப்பாடு என்று பார்த்துப் பார்த்து செதுக்கியிருக்கிறார்கள் சிற்பிகள். இடம்: ஹலபேடு. ஹாசன் மாவட்டம் கர்நாடக மாநிலம்.
வியாக்கிரபாதர் பதஞ்சலி முனிவர் இருவருக்கும் நடராஜர் தனது திருநடனத்தை காட்டி அருளிய காட்சி. இடம் முக்தீஸ்வரர் கோவில். மதுரை வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளத்தின் மேற்கு பகுதியில் அமைந்துள்ளது.
மணக்கோலத்தில் சிவனும் உமையவளும். இடம் திருவாலந்துறையார் திருக்கோயில் மகாமண்டபத்தில் நுழைவாயில் வலதுபுறம் அமைந்துள்ளது. கீழப்பழுவூர் அரியலூர் மாவட்டம்.
ஸ்ரீ பாகம்பிரியாள் அம்பாள்
இடம்: ஸ்ரீ சங்கரராமேஸ்வரர் சிவாலயம். தூத்துக்குடி.