ஏகமுகலிங்கம்

வெள்ளை சலவை கல்லினால் செதுக்கப்பட்ட ஏகமுகலிங்கம். 9 ஆம் நூற்றான்டில் ஆப்கானிஸ்தானில் இருந்த ஷாஹி சாம்ராஜ்யத்தினால் செதுக்கப்பட்டது. ஷாஹி குடும்பம் குஷான் பேரரசின் வீழ்ச்சியுக்குப் பிறகு காபூல் பள்ளத்தாக்கு மற்றும் காந்தாராவின் பழைய மாகாணத்தை ஆட்சி செய்தது.

கூர்ம அவதாரம்

ராஜஸ்தான் மாநிலம் பூந்தி என்னும் ஊரிலுள்ள ராணிஜி கி பௌரி கிணற்றில் இறங்குவதற்கு மேலே உள்ள சுவரில் விஷ்ணு பகவானின் இரண்டாவது அவதாரமான கூர்ம அவதார சிற்பம் உள்ளது.

காளி

இராஜேந்திரசோழர் தனது கலிங்கப் போரின் வெற்றியின் அடையாளமாய் கொண்டு வந்த நிசும்பசூதனியின் அரிய சிற்பம். உதட்டு சாயம் போல தெரிவது குங்கும பூச்சு. இடுப்பில் உள்ளது தற்காலச் சங்கிலி. காலடியில் சும்பன் மற்றும் நிசும்பன். இடம்: செங்கல்மேடு அரியலூர் மாவட்டம்.

கஜேந்திர மோட்சம்

கஜேந்திர மோட்சத்தை விளக்கும் சிற்பம். எந்த நேரத்திலும் விஷ்ணு பகவானையும் தாயார் லட்சுமி தேவியையும் தாங்கி பறப்பதற்கு தயாராக இருக்கும் பெரிய திருவடி கருடாழ்வார். அவருக்கு கீழே கஜேந்திரனையும் (யானை) அவருக்கும் கீழே முதலையும் மிக நேர்த்தியாக செதுக்கியுள்ளனர். இந்த அரிய சிற்பம் ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தின் பெண்ணா நதிக்கரையில் உள்ள தக்குதேவாலயம் என்னும் விஷ்ணு கோவிலில் அமைந்துள்ளது.

பாலகிருஷ்ணர்

விஸ்வகர்மாவால் குழந்தை கிருஷ்ணரின் திருவுரும் செய்யப்பட்டு துவாரகையில் இந்த சிலையை மனைவி ருக்மணிதேவியால் வழிபடப்பட்டு துவாரகை கடலில் மூழ்கிய போது மூழ்கி பல ஆயிரம் ஆண்டுகள் கழித்து மத்வருக்குக் கிடைத்து. மத்வரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட இந்த பாலகிருஷ்ணர் குழந்தை கிருஷ்ணரின் திருவுருவமே உடுப்பி கிருஷ்ணர் கோயிலில் உள்ளது. இவரை சுவரில் உள்ள ஜன்னல் வழியாகத்தான் பார்க்க வேண்டும். இடம் கர்நாடகா உடுப்பி.

காளி மரச்சிற்பம்

எட்டு கரங்களைக் கொண்ட காளி தேவி ஈசனுக்கே உரியதான சந்திரப்பிறைக் கொண்ட கிரீடத்தை அணிந்துள்ளார். இங்கே இவள் தீயவற்றை அழிக்க கோபத்துடன் பார்க்கும் கண்கள் மற்றும் கோரைப் பற்களுடன் காட்சியளிக்கின்றாள். தேவி அணிந்துள்ள காதணிகளில் வலது காதில் சிங்கத்தையும் இடது காதில் யானையையும் அணிந்திருக்கிறாள். ஒவ்வொரு கைகளிலும் அரிவாள் வில் அம்பு ஈட்டி மண்டை ஓடு சுடர்விடும் ரத்தினம் என்று தமிழில் அறியப்படும் அரிவாள் வடிவ பலி வாள் ஏந்தியிருக்கிறாள். 17 ஆம் நூற்றாண்டை சேர்ந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த மரத்தில் செதுக்கப்பட்ட காளி தேவியின் சிலை தற்போது அமெரிக்கா நாட்டின் நியூயார்க் நகரம் மெட்ரோபாலிட்டன் கலை அருங்காட்சியகத்தில் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது.

வாசுகி நர்த்தனர்

சிவபெருமான் வாசுகி பாம்பின் மீது நர்த்தனமாடும் திருக்கோலமே வாசுகி நர்த்தனர் திருக்கோலம் எனப்படும். ஆணவத்தில் படம் விரித்தாடி விஷம் கக்கி அனைவரையும் பயமுறுத்திய வாசுகியின் தலைமீது ஈசன் தன் திருப்பாதம் வைத்து நாடனம் ஆடினார். ஈசனின் நடன வேகத்தால் நிலை குலைந்த வாசுகி ஆணவம் நீங்கி அவரிடம் அபயம் கேட்டது. வேண்டியவருக்கு அருள் செய்யும் ஈசன் வாசுகியை மன்னித்துத் தன்னுடைய கழுத்தில் அணிந்து கொண்டு நாகாபரணராகத் திருக்காட்சி அளித்தார். பத்துத் திருக்கரங்களோடு வாசுகி மீது திருப்பாதம் தாங்கிப் புன்னகையோடு நிற்கும் நடன மூர்த்தி இரு கரங்கள் அபய வர ஹஸ்தங்கள் உள்ளது. மற்ற இரு திருக்கரங்களில் மான் மழு யோக முத்திரைகளோடு அருள் காட்சி தருகிறார் ஈசன். இடம் ஸ்ரீமேகாம்பிகை சமேத மேகநாதீஸ்வரர் ஆலயம் மேலக்கோட்டையூர்.

சரஸ்வதிதேவி

மணல் கல்லிலான முப்பெரும் தேவியர்களின் ஒருவரான சரஸ்வதிதேவியின் சிற்பம். நேபாளத்தை சேர்ந்த இந்த சிற்பம் 10 மற்றும் 11 நூற்றாண்டை சேர்ந்தது. தற்போது இருக்கும் இடம்: வால்டர்ஸ் கலை அருங்காட்சியகம். பால்டிமோர் ஆசிய கலை அருங்காட்சியகம் சான்பிரான்சிஸ்கோ.