விதுரர் மற்றும் சஞ்சயனுடைய மேற்பார்வையில் மடித்து போனவர்களுடைய சடலங்கள் அனைத்தும் ஊழித்தீயில் தகனம் செய்யப்பட்டன. யுதிஷ்டிரரும் அவருடைய சகோதரர்களும் திருதராஷ்டிரனும் ஏனைய பிரமுகர்கள் அனைவரும் கங்கை தீர்த்தத்துக்கு போய் சேர்ந்தார்கள். காந்தாரியும் குந்தியும் திரௌபதியும் அவர்களை பின்தொடர்ந்து சென்றனர். அனைவரும் கங்கை நதியில் நீராடி மடிந்து போனவர்களுக்கு இறுதிக்கடன் முறையாக நிறைவேற்றினார்கள்.
இப்பொழுது உயிரை கொடுப்பதற்கு நிகரான கடமை ஒன்று குந்திக்கு வந்தது. துயரத்தில் இருந்த குந்திதேவி கர்ணன் தனக்கு பிறந்த முதல் செல்வன் என்பதையும் யுதிஷ்டிரனுக்கு மூத்தவன் என்பதையும் கர்ணனின் வரலாறு முழுவதையும் அனைவரிடம் கூறினாள். இச்செய்தி துயரத்தில் மூழ்கியிருந்த அனைவருக்கிடையில் சலசலப்பை உண்டு பண்ணியது. பாண்டவ சகோதரர்கள் கர்ணனை பலவிதங்களில் அவமானப்படுத்தி இருந்தனர். ஆனால் அதை அலட்சியம் செய்து பாண்டவர்கள் பேசியதை பொருட்படுத்தவில்லை. தன்னுடைய உண்மை வரலாற்றை வாழ்க்கையின் பிற்பகுதியில் கர்ணன் அறிந்தான். உயிர் இருக்கும் வரையில் துரியோதனனுக்கு சேவை செய்யும் பொருட்டு அந்த ரகசியத்தை மறைத்து வைத்திருந்தான். இத்தனை காலம் கர்ணனை யார் என்று அறிந்து கொள்ளாது அவனை அலட்சியப்படுத்திய பாண்டவர்கள் ஐவரும் கர்ணனின் மேல் இருந்த வெறுப்பு மாறி அவனிடம் மரியாதை கொண்டனர். உயிரோடு இருந்த காலமெல்லாம் சூழ்நிலையால் கர்ணனை வேற்றான் என்று எண்ணிய பாண்டவர்கள் இப்போது கர்ணனுக்கு சிரத்தையுடன் ஈமசடங்கை செய்து முடித்தனர்.
ஸ்திரீ பருவம் முடிந்தது அடுத்தது சாந்தி பருவம்.
![](https://i0.wp.com/tsaravanan.com/wp-content/uploads/2020/04/1.png?resize=483%2C659&ssl=1)
![](https://i0.wp.com/tsaravanan.com/wp-content/uploads/2020/04/2-19.jpg?resize=640%2C341&ssl=1)