மகாபாரதம் 7. துரோண பருவம் பகுதி -11

அர்ஜுனன் கண்களில் தூரத்தில் குன்றின் மீது நின்று கொண்டிருந்த ஜயத்ரதன் தென்பட்டான். அர்ஜுனா அதோ ஜயத்ரதன் நாணேற்றிய அஸ்திரத்தை விடுத்து அவன் தலையைக் கொய்து வனத்திலே தவம் செய்து கொண்டிருக்கும் அவன் தந்தை விருத்தக்ஷத்ரன் என்ற மடியில் விழச் செய் என்று ஆணையிட்டார் கிருஷ்ணர். கண்ணிமைக்கும் நேரத்தில் காண்டீபத்திலிருந்து கணை புறப்பட்டது. அது ஜயத்ரதன் தலையைக் கொய்து விண்ணிலே தூக்கிச் சென்று வனத்தில் தவம் செய்துகொண்டிருந்த விருத்தக்ஷத்ரன் மடியில் போட்டது. தன் தவத்தை யாரோ கலைப்பதாக எண்ணி மடியில் விழுந்த தலையைத் தரையில் தள்ளினான் விருத்தக்ஷத்ரன். உடனே விருத்தக்ஷத்ரனின் தலை சுக்குநூறாக வெடித்தது.

ஜயத்ரதனுடைய தந்தை விருத்தக்ஷத்ரன் சிந்து ராஜ்யத்தின் அரசன். தன் மைந்தன் ஜயத்ரதன் திறம் வாய்க்கப் பெற்றவனாக வடிவெடுத்த பொழுது ராஜ்யத்தை அவனிடம் ஒப்படைத்து விட்டு தவ வாழ்க்கையில் ஈடுபட்டான். தன்னுடைய தவப்புதல்வன் ஜயத்ரதன் பற்றிய உண்மை ஒன்றை ஞானதிருஷ்டியில் கண்டார். உலக பிரசித்தி பெற்ற போர்வீரன் ஒருவன் ஜயத்ரதனை கொல்வான் என்பது அவர் பெற்ற ஞானக்காட்சி. அதை அறிய வந்த விருத்தக்ஷத்ரன் இறைவனிடம் தவம் புரிந்து தன் மகன் ஜயத்ரதன் தலையை எவன் தரையில் விழச் செய்கிறானோ அவன் தலை சுக்குநூறாக வெடிக்க வேண்டும் என்று வரம் பெற்றிருந்தான் விருத்தக்ஷத்ரன். அவன் பெற்ற வரமே அவனை அழித்துவிட்டது.

விருத்தக்ஷத்ரன் பெற்ற வரத்தை பற்றிய ரகசியத்தை கிருஷ்ணன் ஒருவரே அறிந்திருந்தார். அர்ஜுனனை காப்பாற்றும் பொறுப்பை கிருஷ்ணன் ஏற்றிருக்கின்றார். ஆகையால் அர்ஜுனன் உயிர் பிழைத்தான். பாண்டவர்களின் கண்கள் ஆனந்தக் கண்ணீர் சொரிந்தன. கிருஷ்ணரை அர்ஜுனன் நெஞ்சாரத் தழுவிக்கொண்டான். சபதத்தை முடித்தான் அர்ஜுனன். சூரியன் மறைய பதினான்காம் நாள் பகல் பொழுது யுத்தம் முடிவுக்கு வந்தது. பதினான்காம் நாள் இரவும் யுத்தம் தொடர்ந்தது.

துரியோதனனோ பெரும் கவலை அடைந்தான். இதுவரை அர்ஜுனனை ஒரு சாமானிய வில்லாளி என்றே எண்ணி வந்தான் துரியோதனன். இப்பொழுது அவனுடைய பராக்கிரமத்தை பார்த்த பிறகு தன் அபிப்பிராயத்தை மாற்றிக் கொள்ள வேண்டிய சூழ்நிலைக்கு துரியோதனன் வந்தான். அன்று நடந்த போரில் கௌரவர்களின் முக்கியமான வீரர்களில் ஒருவனான ஜயத்ரதனை இழந்தான். மாவீரன் பூரிசிரவஸ் என்பவனையும் இழந்தான். மேலும் பல தம்பியர்களை இழந்திருந்தான். அவனின் மன வலிமை சற்றே தளர்ந்து இருந்தது. எப்படியும் வெற்றி பெற வேண்டும் என்று யோசித்து கொண்டிருந்தான். யாரையும் பார்க்க அனுமதிக்கவில்லை. போர்களத்தின் காட்சிகள் அவன் கண் முன் ஓடியது. தம்பியர்களின் மரண ஓலங்கள் மீண்டும் மீண்டும் ஒலித்தது. இருப்பினும் ராஜ்ஜியத்தை விட்டு கொடுக்க அவனுக்கு மனம் வரவில்லை.

கடுவெளிச் சித்தர் பாடிய பாடல்

நந்தவனத்தில் ஓர் ஆண்டி அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி
கொண்டு வந்தான் ஒரு தோண்டி மெத்தக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி

விளக்கம்

மனித ஜீவன் ஓர் ஆண்டியாக இந்த பாடலில் உவமிக்கப் பட்டு இருக்கிறது. இங்கே படைப்புக்குரியவன் குயவன் என்று சொல்லப்பட்டு இருக்கிறான். ஜீவன் என்கின்ற ஆண்டி படைப்பிற்குரிய குயவனிடம் சென்று நா-லாறு மாதமாய் அதாவது பத்து மாதமாய் வேண்டிக்கொண்டதன் விளைவாக படைப்பிற்குரிய குயவன் ஆண்டியிடம் உடல் என்கிற தோண்டியை ஒப்படைக்கிறான். ஜீவன் இறைவனிடம் வேண்டிப்பெற்ற உடலுடன் மனிதனாக உலகத்தில் நடமாடத் தொடங்கிவிட்டது. இந்தத் தோண்டியை சரியான காரணத்திற்கு பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் தான் குயவன் செய்து கொடுத்தான். தோண்டி கிடைத்தவுடன் ஆண்டி என்ன செய்தான்? கண் மண் தெரியாமல் கூத்தாடினான் தோண்டியை போட்டும் உடைத்தான். ஆகவே தோண்டி கொடுக்கப்பட்டதன் நோக்கம் நிறைவேற வில்லை. தோண்டியை தவறாக பயன்படுத்தி உடைத்து விடுகிறான் ஆண்டி. ஜீவாத்மா இறைவனிடம் வேண்டி பெற்ற உடலை தவறான வழிகளில் பயன்படுத்தி விடுகிறார்களே என்ற கவலையினை வெளிப்படுத்துகின்றார் கடுவளி சித்தர்

மகாபாரதம் 7. துரோண பருவம் பகுதி -10

அர்ஜுனனை பார்த்து சத்யாகி சிறிது நேரத்திற்கு முன்பு இவன் தன் பாதத்தை என் நெஞ்சின் மீது வைத்து என்னை அவமானப்படுத்தினார் நான் உயிர் பிழைத்தால் இவனை கொல்ல தீர்மானித்தேன். அத்தீர்மானத்தை இப்பொழுது நிறைவேற்றினேன் நான் செய்த செயல் சரி என்று எண்ணுகிறேன். உலகத்தவர் என் செயலை எப்படி வேண்டுமானாலும் கருதிக் கொள்ளட்டும் என்று கூறினான். இச்செயலில் அதிக நேரம் விவாதிக்க அர்ஜுனனுக்கு அவகாசம் இல்லை. சூரிய அஸ்தமனத்திற்கு முன்பு ஜயத்ரதன் கொல்லப்படவேண்டும் அச்செயலை முன்னிட்டு தீவிரமாக முன்னேறினான்.

மாலை நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. பலரையும் வென்றவாறு அர்ஜூனன் போர்க்களம் எங்கும் ஜயத்ரதனை தேடினான். ஜயத்ரதனை கிடைக்கவில்லை. எவரும் அறியாத மலைக்குகை ஒன்றில் ஜயத்ரதனைத் தகுந்த பாதுகாப்போடு மறைத்து வைத்துவிட்டான் துரியோதனன். அர்ஜுனன் ஜயத்ரதனைத் தேடிக் காணாமல் நம்பிக்கையிழந்தான். துரியோதனன் தன் திட்டம் வென்றதாக கூறி ஆனந்தம் அடைந்தான். சூரியன் மேற்கு திசையில் தன் பயணத்தை முடித்துக்கொள்ள ஆயத்தமாய் இருந்தான். கௌரவ படைகள் வெற்றி அடைந்து விட்டதாக ஆர்பரித்தனர். திரும்பிய திசை எங்கும் கௌரவ படையின் வெற்றி முழக்கம். பாண்டவர்கள் செய்வதறியாமல் திகைத்தனர்.
கிருஷ்ணர் தன்னுடைய யோக சக்தியின் மூலம் சுதர்சன சக்கரத்தை கொண்டு சூரியனை மறைத்தார்

சூரியன் மறைந்து விட்டான். அர்ஜுனன் முயற்சி தோற்றது. பாண்டவர்கள் பதறினர். கிருஷ்ணரின் பாதங்களில் விழுந்து கதறினர். மனம் உடைந்தான் அர்ஜுனன். அபிமன்யுவை நினைத்து கண்ணீர் சிந்தினான். கண்ணன் மேல் தான் செய்த சபதத்தை நிறைவேற்ற ஆயத்தமானான். மௌனம் சாதித்தார் கிருஷ்ணர். அக்னி வளர்க்கப்பட்டது. எடுத்த சபதத்தின்படி அர்ஜுனன் அக்னிப் பிரவேசம் செய்யத் தயாரானான். அவன் அக்னியில் இறங்கி அழியப்போவதைக் காண ஜயத்ரதனும் ஆவலோடு மலை முகட்டின் மறைவிடத்தில் இருந்து வெளியே வந்தாது கௌரவர்களின் கூட்டத்தில் ஒருவனாக நின்று கொண்டான் ஜயத்ரதன். பாண்டவர்கள் தன்னை அவமானப்படுத்தியதற்காக பழி தீர்த்து விட்டதாக எண்ணி பூரிப்படைந்தான். பாண்டவர்கள் வேதனையுடன் காணப்பட்டனர். ஆனால் எல்லாம் அறிந்த கிருஷ்ணரோ தன் லீலையை நிகழ்த்த காத்துகொண்டிருந்தார். அர்ஜுனன் அக்னியை வலம் வந்தான். கிருஷ்ணரின் பாதங்களை வணங்கினான். அப்போது கிருஷ்ணர் அர்ஜுனா காண்டீபத்தை உன் கையில் ஏந்தி தலைகளைக் கொய்து நினைத்த இடத்துக்கு கொண்டு போகும் வல்லமை வாய்ந்த அஸ்திரம் ஒன்றை நாணேற்றிய வண்ணம் அக்னியை வலம் வா என்றார்.

அர்ஜுனனும் கிருஷ்ணனின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு அவ்வாறே செய்தான். யாரும் எதிர்பார்க்காத வண்ணம் கிருஷ்ணர் தன் லீலையை ஆரம்பித்தார். சுதர்சனச் சக்கரம் சூரியனை விட்டு நகர்ந்தது இருளெனும் மாயை மறைந்து மேற்கு திசையில் வானம் சிவப்பொளியை வீசியது. கண்ணன் தன் சுதர்சனச் சக்கரத்தால் சூரியனை மறைத்து வைத்திருந்தான் என்பதை அனைவரும் புரிந்துகொண்டனர்.

மந்திரத்தின் பலன்

செகந்தராபாதில் பெரியவா முகாம். அப்போது ரயில்வேயில் மூத்த அதிகாரிகள் சிலபேர் பெரியவாளை தரிசனம் பண்ண வந்தார்கள். அவர்கள் பெரியவாளிடம் தங்கள் அனுக்ரகத்தால எங்களோட கர்மானுஷ்டானங்களை எல்லாம் விடாமப் செய்து கொண்டு இருக்கோம். ஆனாஇந்த ஊர்ல பூஜை ஸ்ராத்தம் தர்ப்பணம் இதெல்லாத்தையும் சரியாப் பண்ணிவெக்க வேதம் படிச்ச சாஸ்த்ரிகள் இல்லே ஒரே ஒருவர் தான் இருக்கிறார். அவரும் பண்ணி வெக்கும் போது அவர் சொல்ற மந்திரங்களுக்கு அவருக்கே அர்த்தம் தெரியலை. அர்த்தம் தெரியாம பூஜை ஸ்ராத்தம் தர்ப்பணம் பண்றதை எங்கள் வீட்டு பிள்ளைகள் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். பெரியவா தயவுபண்ணி மடத்துலேர்ந்து யாராவது வேதம் படிச்ச சாஸ்த்ரிகள் பாத்து இந்த ஊருக்கு அனுப்பிச்சுக் குடுக்கணும் என்றார்கள்.

அதற்கு பெரியவா பிள்ளைகள் சொல்றதுலேயும் ஞாயம் இருக்கு என்று அவர் ஆரம்பித்த போது ஸ்ரீமடத்துக்கான அன்றைய தபால்களை எடுத்துக் கொண்டு ஒரு போஸ்ட்மேன் வந்து சில கடிதங்களை கொடுத்து விட்டு சென்றார். பெரியவா அதிலிருந்து ஒரு லெட்டரை எடுத்தார். அதில் பின்கோடு என்று இருந்த இடத்தை அந்த அதிகாரிகளுக்கு சுட்டிக் காட்டி பின்கோடுன்னு போட்டிருக்கே அதோட அர்த்தம் தெரியுமா என்று கேட்டார். அந்த அதிகாரிகளுக்கு தெரியவில்லை. கொண்டு வந்த தபால்காரருக்கும் தெரியவில்லை.

போஸ்டல் இன்டெக்ஸ் நம்பர் என்று அதற்கு விளக்கம் கொடுத்துவிட்டு பின்கோடுன்னு போட்டிருக்கற இடத்தில் சரியான நம்பரை எழுதிட்டா அது சரியா போய்சேர வேண்டிய இடத்துக்கு போய்விடும். அது மாதிரி பூஜை ஸ்ராத்தம் தர்ப்பணம் பண்ணி வெக்கற ப்ரோகிதருக்கு மந்திரங்களோட அர்த்தம் தெரியாவிட்டாலும் பண்ணிக்கற ஒங்களுக்கெல்லாம் அர்த்தம் புரியாட்டாலும் எந்த கர்மாவுக்கு எந்த மந்திரம் சொல்லணுமோ அதை சரியாக சொன்னால் அதுக்குண்டான பலனை அது குடுக்கும். அதுல ஒங்களுக்கு எந்த விதமான சந்தேகமும் வேண்டாம். அதுனால இப்போ இருக்கற ப்ரோகிதரை நிறுத்தாம நீங்க பண்ண வேண்டிய கர்மாக்களை சிரத்தையோட பண்ணிட்டு வாங்க ஒரு குறைவும் வராது கையைத் தூக்கி ஆசிர்வதித்தார்.

Image result for காஞ்சி பெரியவர்

மகாபாரதம் 7. துரோண பருவம் பகுதி -9

துரோணர் துரியோதனை பார்த்து என்னிடம் மந்திர சக்தி வாய்ந்த கவசம் ஒன்று இருக்கிறது அதை உனக்குத் தருகிறேன். அதை யாரும் பிளக்க முடியாது. சிவபெருமான் இதை இந்திரனுக்கு அளித்தார். இந்திரன் ஆங்கீசரருக்குக் கொடுத்தான். ஆங்கீசரரர் தன் புதல்வன் பிரகஸ்பதிக்கு அருளினார். பிரகஸ்பதி அக்னியேச்யருக்குக் கொடுத்தார். அக்னியேச்வரர் எனக்குத் தந்தார். அதை உனக்கு நான் தருகிறேன். நீ போய் அர்ஜூனனுடன் போரிடு இனி உனக்கு வெற்றியே. என்றார்.

மகிழ்ச்சியுடன் அக்கவசத்தை அணிந்து அர்ஜூனனைத் தாக்கினான் துரியோதனன். அர்ஜூனனின் அம்புகள் கவசத்தைத் துளைக்க முடியவில்லை. அதிர்ந்த அர்ஜூனன் என்ன செய்வது என்று கிருஷ்ணரை நோக்கினான். கிருஷ்ணர் அர்ஜூனா அவன் கவசம் தான் தகர்க்க முடியாததாய் இருக்கிறதே பின்பு ஏன் உன் பானங்களை வீனடிகின்றாய் கவசம் இல்லாத இடங்களில் உன் அம்புகளால் தாக்கு என்றார். துரியோதனன் மந்திர சக்தி வாய்ந்த கவசத்தை அணிந்திருக்கும் சூட்சமத்தை புரிந்து கொண்டான் அர்ஜுனன். போர் முறையை அர்ஜுனன் மாற்றி அமைத்தான். துரியோதனனுடைய சாரதியையும் ரதத்தையும் குதிரைகளையும் முதலில் அழித்தான். அதன் பிறகு அவனுடைய வில்லையும் ஒடித்தான் அதைத் தொடர்ந்து ஊசிகள் போன்ற அம்புகளை துரியோதனனின் கவசம் இல்லாத இடம் பார்த்து அம்புகளைச் செலுத்தினான். காயமுற்ற துரியோதனன் வலி பொறுக்காது அங்கிருந்து ஓட்டம் பிடித்தான்.

ஒட்டம் பிடித்த துரியோதனை அர்ஜூனன் தாக்க முற்பட்ட போது துரியோதனனை தாக்க முடியாத படி பூரிசிரவஸ் அர்ஜுனனை வழி மறித்து தாக்கினான். உடன் சாத்யகி அர்ஜூனனின் உதவிக்கு வந்து பூரிசிரவஸைத் தாக்கத் தொடங்கினான். இருவரும் போட்ட சண்டை மிகக் கடுமையாக இருந்தது. இருவரும் மற்றவர் வைத்திருந்த ரகங்களையும் குதிரைகளையும் மாற்றி மாற்றி அழித்தனர். அதன்பிறகு இருவரும் குத்துச்சண்டையில் இறங்கினார் சத்யகி சிறிது களைத்த போது சாத்யகியை கீழே தள்ளி காலால் மார்பில் உதைத்தான் பூரிசிரவஸ். மயக்கம் அடைந்தான் சாத்யகி. அவன் தலையை துண்டிக்க முயற்சித்த பூரிசிரவஸ் கையை வெட்டினான் அர்ஜூனன். அந்த கை வாளுடன் வீழ்ந்தது.

பூரிசிரவஸ் அர்ஜூனனைப் பார்த்து நான் வேறு ஒருவருடன் போரிடும் போது அறநெறி கெட்டு கையை வெட்டுகின்றாயே யுதிஷ்டிரரின் தம்பி நீ அதர்மம் செய்யலாமா என்றான். நேற்று என் மகன் அபிமன்யு மீது தர்மவழியை மீறி போரிட்டவன் நீ அது அறநெறியா என்றான் அர்ஜுனன். மேலும் என் பக்கம் சேர்ந்துள்ள ஒருவன் மயங்கி கிடக்கின்ற பொழுது அவன் தலையை வெட்ட முயற்சிக்கிறாய். நான் வெறுமனே உன் செயலைப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும் என்று நீ எதிர்பார்க்கிறாயா உன் செயல் அயோக்கியத்தனம் அல்லவா என்றான். பூரிசிரவஸ் தன் செயல் குறித்து நாணினான். தனது இடக் கையைத் தரையில் ஊன்றி தன் அம்புகளை தரையில் பரப்பினான். அதன் மீது அமர்ந்து கொண்டு பரம்பொருளை கொடுத்து தியானம் பண்ணி உயிரை விட அவன் தீர்மானம் பண்ணி விட்டான். அப்போது மயக்கம் தெளிந்த சாத்யகி தியானத்தில் இருந்தவன் தலையை வெட்டினான். சாத்யகியின் இச்செயலுக்கு அர்ஜூனன் ஆட்சேபம் தெரிவித்தான்.

வேந்தன்பட்டி நந்தீஸ்வரர்

புதுக்கோட்டை மாவட்டத்தில் பொன்னமராவதி அருகே வேந்தன்பட்டி கிராமம் உள்ளது. இந்த பகுதியில் 90 வருடங்களாக வேப்பமரம் ஒன்று உள்ளது. இந்த வேப்பமரத்தின் அடியில் நெய் நந்தீஸ்வரர் சுயம்புவாக தோன்றி உள்ளார். இந்த சுயம்பு நந்திக்கு வேப்பமரத்து நந்தி என்றும் பெயரிட்டு வழிபட்டு வருகின்றனர். இவர் தஞ்சாவூர் நந்தீஸ்வரரின் தம்பியாகக் கருதி தம்பி நந்தி என்றும் பக்தர்கள் பெயரிட்டு அழைக்கின்றனர். இந்த நந்தீஸ்வரருக்கு லிட்டர் கணக்கில் நெய் அபிஷேகம் செய்யப்படும். அபிஷேக நெய்யை பிற உபயோகத்திற்காக இக்கோவிலில் பயன்படுத்துவதில்லை. அதை கோவில் வளாகத்திலுள்ள ஒரு கிணற்றில் கொட்டி விடுவார்கள். தற்போது இந்த கிணறு நெய் நிறைந்த நிலையில் இருக்கிறது. பொதுவாக நெய்யின் வாசனைக்கு ஈ, எறும்பு போன்ற உயிர்கள் வரும். ஆனால் இங்கு இருக்கும் நெய்யை ஈ, எறும்புகள் மொய்ப்பதில்லை. நந்தீஸ்வரரின் கொம்புகளுக்கு நடுவே ஒரு சக்கரம் உள்ளது. இது இயற்கையாகவே அமைந்த அமைப்பு. நெய்க்கு ஈ எறும்புகள் வராத இந்த தன்மைக்கு இந்த சக்கரம்தான் ஆதார சக்தியாக அமைந்துள்ளது. இக்கோவிலில் சொக்கலிங்கேஸ்வரரும் மீனாட்சியம்மனும் அருள்பாலித்து வருகின்றனர்.

மகாபாரதம் 7. துரோண பருவம் பகுதி -8

அர்ஜுனனின் சபதம் ஒற்றர்களின் வழியாக ஜயத்ரதனின் செவிகளுக்கு எட்டியது. சபதத்தைக் கேட்ட ஜயத்ரதன் போர்க்களத்தை விட்டு தன் நாட்டிற்கு ஓடிவிடலாமா என யோசித்தான். அது வீரனுக்கு அழகில்லை என்று மற்றவர்கள் தடுத்தனர். கௌரவர்கள் ஒன்று கூடி ஜயத்ரதனை காப்பாற்ற திட்டம் தீட்டினார்கள். அர்ஜூனனை எண்ணி துரோணர் கலங்கினார். அன்றைய போர் பயங்கரமாய் இருக்கும் என உணர்ந்தார். எனவே சகடவியூகம் மகர வியூகம் பத்ம வியூகம் என மூன்று விதமான வியூகங்களை வகுத்தார். இந்த மூன்று வியூகங்களும் விண்ணவர்களே வந்தாலும் அசைக்க முடியாது.

துரியோதனனின் தனது திட்டத்தில் ஒன்று ஜயத்ரதனை அன்று மாலை வரை தன் முழு படைபலம் கொண்டு காக்க வேண்டும். அல்லது அன்று மாலை வரை அவனை மறைத்து வைக்க வேண்டும். இரண்டில் எது நடந்தாலும் அர்ஜுனன் சபதத்தில் தோற்பான். அர்ஜுனனை எதிர்த்து போரிடுவதை விட ஜயத்ரதனை மறைத்து வைப்பது என்று முடிவு செய்தனர்.

ஜயத்ரதன் துரோணரைப் பார்த்து நீங்கள் அனைவருக்கும் சமமாக தான் விற்பயிற்சி அளித்தீர்கள் ஆனால் அர்ஜூனன் போல் மற்றவர்கள் சிறக்கவில்லையே ஏன் என்று கேட்டான். அதற்கு துரோணர் அர்ஜூனன் தவ வலிமை உடையவன். ஆகவே மேம்பட்டு விளங்குகிறான். அவனுடைய தவ வலிமை என்னிடம் மட்டுமல்ல கௌரவ படையில் யாரிடமும் இல்லை. அவனை எதிர்க்கும் சக்தி படைத்தவர் இருவர் மட்டுமே இருக்கின்றனர். ஒருவர் இப்போது அம்பு படுக்கையில் இருக்கும் பீஷ்மர். மற்றவர் விதுரர் அவர் துரியோதனனின் அறிவற்ற செயலால் போரில் பங்கேற்கவில்லை. மேலும் கிருஷ்ணர் அவன் தேருக்கு சாரதியாய் இருக்கிறார். எனவே இந்த யுத்தத்தை பொறுத்த வரை அவன் வெல்ல முடியாதவன்.

பதினான்காம் நாள் யுத்தம் துவங்கியது. கிருஷ்ணன் தேரை ஓட்ட அர்ஜூனன் கண்கள் சிவக்க மனதில் வெறி கொண்டு மகனின் மரணத்திற்கு பழி தீர்க்க காண்டீபத்துடன் போர்க்களத்திற்குள் வந்தான். துரியோதனன் தன் தம்பியான துர்மர்ஷணனை பெரும்படையுடன் அர்ஜூனனை நோக்கி அனுப்பினான். நேற்று அபிமன்யூவின் வீரத்தை கண்டு அந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளாத துர்மர்ஷணன் அர்ஜுனனை கண்டு புறமுதுகிட்டு ஓடினான். அவன் ஒட்டத்தைக் கண்ட துச்சாதனன் கடும் சினம் கொண்டு அர்ஜூனனை எதிர்த்தான். துச்சாதனன் படைகளை அனைத்தையும் அர்ஜூனன் அழித்தான். அர்ஜூனனை எதிர்க்க முடியாமல் தோல்வியுற்று அவனும் கௌரவ பாசறைக்கு திரும்பினான்.

ஜயத்ரதனை தேடிச் சென்று வியூகத்தை உடைக்க அர்ஜூனன் முன்னேறினான். அர்ஜூனனை துரோணர் தடுத்து போரிட்டார். துரோணரை பொருட்படுத்தாமல் தன் தாக்குதலின் வலிமையை காண்பித்தான் அர்ஜூனன். துரோணரால் அர்ஜூனனை தடுக்கமுடியவில்லை. மேலும் முன்னேறினான். அதைக்கண்ட துரியோதனன் துரோணரை பார்த்து அர்ஜுனனை உங்களால் தடுக்க முடியவில்லை. நீங்கள் படை தளபதியாக இருக்க தகுதி அற்றவர் என்று கடுமையாக சாடினான். அதற்கு துரோணர் துரியோதனா அர்ஜூனனை ஜயத்ரதனை தேடி வேறு பக்கம் போக வைத்தால் யுதிஷ்டிரரை கைதியாக பிடித்து விடலாம் இதுவே எனது திட்டம் அதை செயல்படுத்திக் கொண்டிருக்கின்றேன் என்றார்.