விபூதி

நீறில்லா நெற்றி பாழ் என்பது ஓளவை வாக்கு.

விபூதி என்றால் ஞானம் ஐஸ்வர்யம் என்றெல்லாம் பொருள் தரும். பிறப்பு இறப்பு என்னும் கொடுமையான பிறவிச் சுழலிலிருந்து விடுவித்து ஈசனின் திருவடிகளில் நம்மைக் கொண்டு சேர்க்கும் மாமருந்து திருநீறு என்றும் மந்திரச் சொற்களுக்கு நிகரானது திருநீறு என்றும் போற்றுகிறார் திருஞானசம்பந்தர் தனது திருநீற்றுப் பதிகத்தில்

சைவ சித்தாந்தம் கூறியபடி திருநீறு நான்கு வகைப்படும். அவை கல்பம், அணுகல்பம், உபகல்பம், அகல்பம் என்பன. கன்றுடன் கூடிய ஆரோக்கியமான பசுவின் சாணத்தை பிரம்ம மந்திரம் சொல்லி சிவாக்னியில் எரித்து உருவாக்குவது கல்பத் திருநீறு. காடுகளில் மேயும் பசுக்களின் சாணங்களைக் கொண்டு எரித்து செய்வது அணுகல்பத் திருநீறு. தொழுவங்களிலிருந்து எடுத்த சாணத்தைத் தீயில் எரித்து எடுக்கப்படுவது உபகல்பத் திருநீறு. இதுவே நாம் பயன்படுத்தும் திருநீறு. தரையில் விழுந்து கிடக்கும் சாணங்களை எடுத்துத் தயாரிக்கும் திருநீறு அகல்பம். சாம்பலாகிவரும் திருநீறு மும்மலங்களையும் சாம்பலாக்கும் என்கிறது தேவாரம்.

மனித உடலில் நெற்றி ஒரு முக்கியமான ஸ்தானம். புருவ மத்தியை வசியப்படுத்தி பல வகை சித்துகளை செய்ய முடியும் என்பது ஞானியர் வாக்கு. நெற்றியின் மையத்தைக் காப்பதற்கே விபூதி அணியப்படுகிறது. ஆக்ஞா விசுத்தி சக்கரங்களை பாதுகாத்து ஆன்ம ஒளியைப் பெருக்குவது விபூதி. பிட்யூட்டரி சுரப்பியைத் தூண்டச் செய்யும் நெற்றியைச் சீர்படுத்தவும் சூரியக் கதிர்களின் சக்திகளை நெற்றி வழியாக உள்ளே செலுத்தவும் திருநீறு பயன்படுகிறது. விபூதி சிறந்த கிருமி நாசினி அதனால் பல நோய்களை வராமல் தடுக்க முடியும் விபூதியை ஜபம் மந்திரித்தல் யந்திரங்கள் மருத்துவம் எனப் பல்வேறு பணிகளுக்காகப் பயன்படுத்திய விதத்தை அகத்திய மாமுனி அகத்தியர் பரிபூரணம் என்ற நூலில் விளக்கியிருக்கிறார்.

மகாபாரதம் 6. பீஷ்ம பருவம் பகுதி -15

பத்தாம் நாள் போர் தொடங்கியது. கௌரவர்கள் அசுர வியூகத்தை வகுத்துக்கொண்டார்கள். பாண்டவர்கள் தேவ வியூகத்தை வகுத்துக்கொண்டார்கள். சிகண்டிக்கு நான்கு பக்கமும் பாதுகாப்புடன் சிகண்டியை முன் நிறுத்தி பாண்டவர்களின் படை முன்னேறியது. இதுவரை இல்லாத பாதுகாப்பு பத்தாம் நாள் பீஷ்மருக்கு இருந்தது. இன்று பீஷ்மரை எப்படியாவது வெற்றி பெற்று விடவேண்டும் என்று பாண்டவர் பாசறையில் முடிவு எடுக்கப்பட்டிருந்தது.

அர்ஜூனன் உணர்ச்சிவசப்பட்டு கலங்கி நின்றான். தான் சிறுவயதில் பீஷ்மரின் மடியில் அமர்ந்து விளையாடிய நேரங்களை கண்ணீருடன் நினைவு கூர்ந்தான். தன் அன்பிற்கும் பாசத்திற்கும் மரியாதைக்கும் உரிய பீஷ்மரை கொல்ல போகிறோமே என்று வேதனை அடைந்தான். காண்டீபத்தை தொட அவன் மனமும் கைகளும் மறுத்தன. நாம் தோற்றாலும் பரவாயில்லை கங்கை புத்திரரை கொல்ல மட்டேன் என்று கிருஷ்ணரையும் அண்ணன்களையும் தழுவி அழுதான்.

அப்போது கிருஷ்ணர் அர்ஜுனா பீஷ்மரின் சாபம் முடியும் நேரம் நெருங்கிவட்டது. அவர் முக்தி அடைய போகிறார். நீ அவரை கொல்லபோவதில்லை அவருக்கு உன் கைகளால் முக்தி கொடுக்க போகிறாய். உன் பாசத்திற்குரிய தாத்தாவிற்கு நீ கொடுக்க போகும் மிக பெரிய பரிசு இது அர்ஜூனா. எடு காண்டீபத்தை மோக்ஷத்தை கொடுத்து அவரை வழி அனுப்பு அவரின் ஆசி என்றும் உன்னோடு இருக்கும் என்று அர்ஜுனனுக்கு பீஷ்மரின் பிறப்பு ரகசியத்தை மீண்டும் ஒரு முறை சொல்லி முடித்து தனது சங்கை ஊதினார். அர்ஜுனன் தெளிவானான். காண்டீபதில் நானேற்றினான். நானை சுண்டிவிட்டான். அதன் ஒலி எட்டு திக்கிற்கும் சென்றடைந்தது.

போரில் அன்றும் பீஷ்மர் தன் அம்புகளை காற்றென செலுத்தி கொண்டிருந்தார். பாண்டவர்களுக்கு சவாலாக நின்றார். பாண்டவர்களின் வெற்றியை தடுக்கும் ஒரே ஒரு மாபெரும் சக்தியாக இருந்தார். இந்த நிலையில் சிகண்டியின் தேர் பீஷ்மருக்கு எதிரில் நின்றது. அதற்கு அருகில் அர்ஜுனனின் தேர் நின்றது. கிருஷ்ணரின் முகத்தில் அமைதியான புன்னகை. அதை பார்த்த பீஷ்மர் மனதில் ஆனந்தம். கிருஷ்ணரை வணங்கி நின்றார். தன் முடிவை அறிந்த பீஷ்மர் கடைசி முறையாக தன் வில்லை கையில் ஏந்தினார். பல ஆண்டுகளாக ஆயிரம் ஆயிரம் வீரர்களை கொன்று வெற்றி கொண்டு தோல்வியே இல்லாத மகாராதனாக தான் விளங்கியதற்கு காரனமாய் இருந்த தன் வில்லை தொட்டு அதற்க்கு இறுதி வணக்கத்தை வீரத்தோடு தெரிவித்தார்.

சிகண்டி பீஷ்மர் மீது ஆயுதம் எடுத்து போர் புரிய ஆயத்தமானான். சிகண்டி சிவனிடம் பெற்ற வரத்தின் விளைவாக பீஷ்மரால் ஆயுதம் எடுத்து போர் புரிய இயலாமல் போனது. பீஷ்மரின் வில்லை அர்ஜுனன் உடைத்தான். அவருடைய வேலாயுதத்தை நொறுக்கினான் அவருடைய கதாயுதத்தை தூளாக்கினான். எதிரில் சிகண்டி ஆயுதம் தாங்கி நின்று கொண்டிருந்ததால் ஆயுதம் இன்றி பீஷ்மர் ஒடுங்கிப் போனார்.

மகாபாரதம் 6. பீஷ்ம பருவம் பகுதி -14

கிருஷ்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் என்னை அழிக்க இயலும். நான் ஆயுதம் தாங்கி இருக்கும்போது கிருஷ்ணரால் மட்டுமே அழிக்க இயலும். ஆனால் அர்ஜுனனுக்கு என் ஆயுதம் செயலற்று இருக்கின்ற பொழுது தான் என்னை கொல்ல இயலும். இறைவன் அருளால் நான் அளப்பரிய ஆற்றல் படைத்தவனாக இருக்கின்றேன். நான் போரில் புறமுதுகு காட்டி ஓடுபவரோடோ ஆயுதம் இல்லாதவரோடோ பெண்களிடமோ பேடுவுடனோ போரிட மாட்டேன். பெண்பால் ஒருத்தி நான் ஆயுதம் தாங்கி போர் புரிந்து கொண்டிருக்கும் பொழுது என்னை எதிர்த்து வந்தால் அப்போது என் ஆயுதங்கள் பயனற்றுப் போகும். இதுவே என் போர் திறமையை பற்றிய மர்மம். அர்ஜுனன் இதை பயன்படுத்திக் கொள்வாயாக என்றார்.

பல ஆண்டுகளுக்கு முன்பு காசிராஜன் தனது குமாரிகளின் சுயம்வரத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார். அப்போது அம்பா அம்பிகா அம்பாலிகா என்ற கொண்ட மூன்று ராஜகுமாரிகளை பலாத்காரமாக நான் தூக்கி கொண்டு போய் விட்டேன். நம்முடைய குரு வம்சத்திற்கு அவர்களை மகாராணியாக அமைப்பது என் நோக்கமாக இருந்தது. அவர்கள் மூவரில் மூத்தவளாகிய அம்பா சால்வ மன்னனை மணந்து கொள்ள தீர்மானத்திருப்பதாக விஷயத்தை எடுத்துரைத்தாள். ஆகையால் அவளை தக்க பாதுகாப்புடன் சால்வ மன்னனிடம் அனுப்பி வைத்தேன்.
ஆனால் வேற்றுவனால் கொண்டு செல்லப்பட்ட பெண்ணை அம்மன்னன் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டான்.

தனக்கு நேர்ந்த கதியை தெரிவிக்க அவள் மீண்டும் அஸ்தினாபுரத்திற்கு திரும்பி வந்து அவளுடைய வாழ்க்கையை பாழடித்துவிட்டதாக என் மீது குற்றம் சாட்டினாள். என்னை யாராலும் வெல்ல முடியாது என்பதை அறிந்த அவள் சிவனை நோக்கி கடும் தவம் இருந்து என்னை யுத்தத்தில் அழிப்பதற்கான வரத்தை கேட்டு பெற்றாள். சென்ற ஜென்மத்தில் அவளுக்கு அதற்கான யுத்தகாலம் வராத காரணத்தினால் என்னை அழிக்க இந்த ஜென்மத்தில் துருபத மன்னனின் மகளாக பிறப்பெடுத்தாள். பெண்ணாக பிறந்து பின் ஆணாக மாறி சிகண்டி என்ற பெயரில் பேடுவானாள்

இந்த ஒன்பது நாள் யுத்தத்தில் சிகண்டியை நேருக்கு நேர் சந்திக்காமல் நான் சமாளித்து வந்தேன். பெண்ணாகப் பிறந்து ஆணாக மாறிய சிகண்டியை முன் நிறுத்தி நாளை என்னுடன் போரிடு. சிகண்டியின் முன் என் ஆயுதங்கள் பலனன்றி போய்விடும். அப்போது நீ என்னை எதிர்த்துப் போர் செய். வெற்றி கிட்டும் என்றார். நீங்கள் அனைவரும் உங்கள் ராஜ்யத்தை மீட்டெடுத்து அமைதியாக வாழ்ந்து இருப்பீர்களாக என்று ஆசீர்வாதம் வழங்கினார். பீஷ்மர் வழங்கிய ஆசீர்வாதங்களை பாண்டவர்கள் மகிழ்வோடு ஏற்றுக் கொண்டார்கள். தம்மை தோற்கடிப்பதற்கான ரகசியத்தை அவர் வெளியிட்டது பாண்டவர்களுக்கு புதியதொரு உற்சாகத்தை உண்டு பண்ணியது. தனது முடிவு நெருங்கி விட்டதை பீஷ்மர் உணர்ந்து மகிழ்ந்தார். அம்பாவின் சாப விமோசனம் கிடைக்க போகும் பீஷ்மரை மனதார வாழ்த்தி மெல்லிய புன்னகை பூத்தார் கிருஷ்ணர். அந்த புன்கையின் அர்த்தம் பீஷ்மருக்கும் கிருஷ்ணருக்கும் மட்டுமே அன்று புரிந்திருந்தது. பீஷ்மர் கூற்றைக் கேட்ட பாண்டவர்கள் அமைதியாகப் பாசறைக்குத் திரும்பினர். அடுத்தநாள் பீஷ்மரிடம் சிகண்டியை முன்னிறுத்த கிருஷ்ணர் திட்டம் வகுத்தார்.

வைகுண்ட ஏகாதசி

ஏகாதசி என்ற சொல்லுக்குப் பதினோராவது நாள் என்று பொருள் ஞானேந்திரியங்கள் ஐந்தும் கர்மேந்திரியங்கள் ஐந்தும் மனம் என்ற ஒன்றும் சேர்ந்து மொத்தம் பதினொன்றையும் பெருமாளுடன் ஐக்கியப்படுத்தித் தியானம் இருப்பதே ஏகாதசி விரதம். உடலாலும் உள்ளத்தாலும் பெருமாளுடன் ஒன்றியிருப்பதே உபவாசம். உபவாசம் என்றால் என்ன என்பது பற்றி ஸ்ரீமத் பாகவதத்தில் கதை ஒன்று உள்ளது.

பிருந்தாவனத்தில் இருந்த கோபியரில் சிலர் மோரும் தயிரும் வெண்ணையும் விற்க காலையிலேயே அக்கரைக்குச் சென்றனர். மாலை திரும்பியபொழுது யமுனையில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது. அப்பெண்களோ யமுனையைத் தாண்டி அக்கரைக்குச் செல்ல வேண்டும்.
இவர்கள் வந்திருந்த பகுதியில் பாலம் ஏதும் இல்லை. பாலத்தை அடைய வேண்டுமென்றால் ஊரைச் சுற்றிக்கொண்டு போக வேண்டும். நேரமோ மாலைப் பொழுது. இருட்டிக்கொண்டு வருகிறது. திகைத்த அவர்கள் சுற்றுமுற்றும் பார்த்தார்கள். அங்கே வியாசர் தவத்தில் இருந்ததைக் கண்டார்கள். வியாசர் உதவக்கூடும் என்று நினைத்து அவரிடம் அபயம் கேட்டார்கள். அவரும் தவம் கலைந்து ஒரு நிபந்தனையுடன் உதவுவதாக வாக்களித்தார்.

கோபியர்களின் பானைகளில் மீதமுள்ள மோர், தயிர், வெண்ணை ஆகியவற்றைச் சாப்பிடக் கேட்டார். மழை காரணமாக ஒன்றும் விற்காததால் மொத்தத்தையும் அவர்கள் வியாசரிடம் கொடுத்தார்கள். அவர் எல்லாவற்றையும் சாப்பிட்டுவிட்டார். உண்ட களைப்பு தீரக் கால் நீட்டிப் படுத்துவிட்டார். கோபியர் அவரை எழுப்பி உதவுகிறேன் என்று சொல்லி அனைத்தையும் சாப்பிட்டீர்களே குழந்தைகள் காத்திருப்பார்கள் தயவுசெய்து உதவுங்கள் என்றனர். வியாசரும் நதியின் அருகே சென்றார்.

யமுனையே நான் நித்திய உபவாசி என்றால் விலகி வழி விடு என்றார். கணப் பொழுதில் யமுனை ஆற்று நீர் விலகி வழிவிட்டது. பல கேள்விகள் மனதில் எழுந்தாலும் கோபியர் வாய் திறவாமல் அவரைப் பின் தொடர்ந்தனர். பாதுகாப்பாக யமுனையை கடந்ததும் அவரைப் பார்த்துக் கேட்டார்கள். முனிவராக இருந்தும் இப்படிப் பொய் சொல்லலாமா. எங்களிடம் இருந்ததையெல்லாம் வாங்கிச் சாப்பிட்டுவிட்டு நித்திய உபவாசி என்பது உண்மையானால் என்று யமுனையிடம் கூறினீர்களே. அவளும் உண்மை அறியாமல் வெள்ளம் விலக்கி வழி தந்துவிட்டாளே என்றார்கள்.வியாசர் சிரித்தபடியே, உப என்ற சொல்லுக்கு அருகில் என்று பொருள். வாசம் என்றால் வசிப்பது இருப்பது என்று அர்த்தம். என் மனதார நான் நித்தியமும் கண்ணன் அருகிலேயே இருக்கிறேன். அதனால் நான் நித்திய உபவாசி என்றார்.

வைகுண்ட ஏகாதசியன்று உண்ணாமல், உறங்காமல், கிருஷ்ணரை எண்ணிக்கொண்டு கடைப்பிடிக்கும் விரதத்தை நாம் உபவாசம் என்று அழைக்கிறோம்.

மகாபாரதம் 6. பீஷ்ம பருவம் பகுதி -13

ஒன்பதாம் நாள் யுத்தம் துவங்கியது. பீஷ்மர் சர்வதோபத்ர வியூகம் வகுத்தார். திருஷ்டத்துய்மன் அதற்கேற்ப திரிசூல வியூகம் வகுத்தான். திரிசூலத்தின் மும்முனைகளிலும் பாண்டவர்களின் சிறந்த வீரர்களான அர்ஜுனன் திருஷ்டத்துய்மன் பீமன் என்று முறையே நின்றனர். நகுல சகாதேவ சகோதரர்கள் பின்புற சுவராக நின்றனர். திருஷ்டத்துய்மனால் மிகவும் நேர்த்தியாக அமைக்கப்பட்ட வியூகம். பீஷ்மருக்கு எதிராக சரியான நேரத்தில் சரியான நபர்களுடன் அமைக்கப்பட்டது. திருஷ்டத்துய்மன் போர் வியூகம் வகுப்பதில் பீஷ்மருக்கு இணையானவன் என்பதை நிரூபித்தான். அர்ஜுனன் இருக்கும் போது திருஷ்டத்துய்மனை படை தளபதியாக கிருஷ்ணர் அறிவித்ததின் காரணத்தை யுதிஷ்டிரர் இப்போது அறிந்தார்.

அபிமன்யுவிற்கும் அலம்பசனுக்கும் பெரும்போர் நடந்தது. மாயாவியான அலம்பசனின் அணைத்து மாயங்களும் அபிமன்யுவிடம் தோற்றது. அவனோ மாயப்போர் புரிந்தான். எங்கும் இருள் சூழும்படி அம்பு மழை பொழிந்தான். அபிமன்யூ மாயத்தை மறைக்கும் மாற்றுப் படையால் மாயையை விலக்கி அலம்புசனைத் தாக்கினான். அலம்புசன் போர்க்களம் விட்டு ஓடினான். அன்றைய போரில் அபிமன்யு துரியோதனன் சகோதரர்களில் மூவரை கொன்று அர்ஜுனனின் பிம்பமாகவே காட்சியளித்தான்.

துரோணர் அர்ஜூனனை எதிர்த்தார். குருவும் சீடன் என எண்ணவில்லை சீடனும் குரு என எண்ணவில்லை. துரோணரின் அம்புகள் அனைத்திற்கும் தன் வில்லால் பதில் அளித்தான் அர்ஜுனன். ஆனாலும் அவன் கவனம் முழுவதும் பீஷ்மரை வெற்றி கொள்வதில் மட்டுமே இருந்தது. பின்பு பாண்டவர்கள் ஒன்று கூடிப் பீஷ்மரை எதிர்த்தனர். பீஷ்மரை அசைக்க முடியவில்லை. அன்று பாண்டவர்கள் படையில் கடும் சேதத்தை பீஷ்மர் விளைவித்தார். கௌரவர்கள் அனைவரும் அழிந்தாலும் பீஷ்மர் ஒருவர் மட்டும் அவர்களை வெற்றி பெற செய்துவிடுவார் என்பதை பாண்டவர்கள் உணர்ந்தனர். சூரியன் மறைய ஒன்பதாம் நாள் யுத்தம் முடிவுக்கு வந்தது.

அன்று இரவு கிருஷ்ணரும் பாண்டவர்களும் சபையில் கூடி யுத்தத்தின் நிலைமையை விமர்சனம் பண்ணினார்கள் தொடர்ந்து 9 நாட்கள் யுத்தம் முடிந்தது. இரு பக்கங்களிலும் எண்ணிக்கையில் அடங்காத போர்வீரர்கள் மடிந்து போய்விட்டார்கள். இதற்கு பலன் எதுவும் கிடைக்கவில்லை. பீஷ்மரை வென்றால் மட்டுமே இந்த யுத்தம் முடிவுக்கு வரும். ஆயுதத்துடன் இருக்கும் அவரை அழிக்க கிருஷ்ணனுக்கு மட்டுமே சாத்தியம். கிருஷ்ணர் ஆயுதம் தொடமாட்டேன் என்ற வாக்குப்படி அது சாத்தியம் இல்லை. பீஷ்மரை தோற்கடிக்க அர்ஜூனன் உறுதி பூண்டிருந்தான். ஆயுதத்துடன் இருக்கும் பீஷ்மரை தோற்கடிக்கும் வழி அர்ஜூனனுக்கு தெரியவில்லை. பாண்டவர்கள் கிருஷ்ணரை வணங்கி. இதுவரை நடைபெற்ற போரில் பீஷ்மரை வெல்ல முடியவில்லையே என்ற கவலையை வெளியிட்டனர். நீண்ட யோசனைக்குப் பின் அவரை வெல்வது குறித்து பீஷ்மரையே கேட்க முடிவெடுத்தனர்.

பீஷ்மர் இருக்குமிடம் அனைவரும் சென்று வணங்கினர். கிருஷ்ணரை பீஷ்மர் பக்திபூர்வமாக வரவேற்றார். பீஷ்மர் பாண்டவர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்று தழுவிக் கொண்டார். பின் அர்ஜூனன் பிதாமகரே போர் தொடக்கத்திற்கு முன் எங்களுக்கு வெற்றி கிடைக்கட்டும் என வாழ்த்தினீர்கள். தங்களை வென்றால்தானே எங்களுக்கு வெற்றி கிடைக்கும் என்பதை உணர்ந்து கொண்டோம். தங்களைத் தோற்கடிப்பது எப்படி என்று கேட்டான்.

தியானம் என்றால் என்ன

தியானம் என்றால் என்ன? அந்தச் சிறுவனுக்கு நெடு நாட்களாய்த் தீராத சந்தேகம். அந்தச் சிறுவனின் பெற்றோருக்கோ சிறுவனுக்குப் புரிந்த மொழியில் சொல்லமுடியாத இயலாமை. ஒருநாள் மூவரும் ரமண மகர்ஷியைச் சந்திக்கச் சென்றிருந்த போது சிறுவன் ரமணரை நெருங்கி தன் கேள்வியை முன் வைத்தான். சிரித்துக் கொண்டே அந்தச் சிறுவனுக்கு இலையில் ஒரு தோசையைப் பறிமாறச் சொன்னார். சிறுவனிடம் நான் எப்போ ம் சொல்றேனோ அப்போ சாப்பிட ஆரம்பிக்கணும். அதே மாதிரி எப்போ ம் சொல்றேனோ அதுக்கப்புறம் இலையில் தோசை இருக்கக் கூடாது. புரிஞ்சுதா என்றார் சிரித்துக் கொண்டே சிறுவனுக்கு ஒரே உற்சாகம். சுற்றியுள்ளோருக்குக் குழப்பம்.

மகரிஷியின் ம் க்காகத் தோசையில் ஒரு கையை வைத்தபடி தவிப்புடன் அவர் முகத்தைப் பார்த்தபடி இருந்தான். சிறுவனைச் சிறிது காக்க வைத்து சற்றைக்குப் பின் ம் சொன்னார் ரமணர். அடுத்த சில நிமிஷங்களுக்குள் இரண்டாவது ம் வந்து விடக் கூடாதே என்ற பதைப்புடன் பெரிய பெரிய விள்ளல்களாக எடுத்து அவசர அவசரமாகத் திணித்துக் கொண்டே மகரிஷியின் முகத்தைக் கவனிப்பதும் தோசையைப் பிய்த்து உண்பதுமாக நேரம் கரைந்தது. புன்னகை மாறாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாரே ஒழிய ம் சொல்வதாக இல்லை. தோசையோ சிறுத்து ஒரு சிறு விள்ளலாக மாறியிருந்தது இப்போது. சிறுவனும் அந்த விள்ளலில் கையை வைத்தபடி எப்படா இந்தத் தாத்தா ம் சொல்லுவார் என்று காத்திருந்தான். சுற்றியுள்ளவர்களுக்கும் என்னதான் நடக்கப் போகிறது என்றறிய ஆவல். எதிர்பாராத ஒரு நொடியில் ம் சொல்லவும் சிறுவன் சடாரென்று கடைசி விள்ளலை வாயில் போட்டுக் கொண்டான். இரண்டு ம் களுக்கு நடுவில் உன் கவனம் எப்படித் தோசை மேலும் என் மேலும் இருந்ததோ அதே போல் நீ எந்தக் காரியம் செய்தாலும் அடிநாதமாக இறைவன் மேல் கவனம் வைத்திருப்பாயானால் அதன் பேர் தியானம். புரிந்ததா இப்போ என்றார் மகரிஷி புன்னகைத்தபடி. ரமணர் சொன்ன இரண்டு ம் கள் வாழ்வும் மரணமும் இதற்கு இடைப்பட்ட காலத்தின் எல்லா நேரமும் ஒருவன் தியானத்தில் இருக்க வாய்ப்பு இருப்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

Image result for தியானம் ரமணர்

மகாபாரதம் 6. பீஷ்ம பருவம் பகுதி -12

பீமனின் ஆற்றல் முழுமையாக வெளிப்பட்டுக் கொண்டிருந்தது. பீமன் ஒருவனே நான்கு திசைகளிலும் சுழன்றான். அவன் திரும்பும் திசை எங்கும் கௌரவர்கள் மாண்டனர். பீமனை தாக்க துரியோதனன் தனது தம்பிகள் 24 பேரை மூன்றாக பிரித்து அனுப்பினான். அவர்களில் முதல் எட்டு பேரை கை கால்களை உடம்பில் இருந்து பிய்த்து எடுத்து தலையை கதாயுதம் கொண்டு நசுக்கியும் கொடூரமாக கொன்றான். பின்பு பீமன் யனைப் படையை அழித்தான். கௌரவர்கள் அவனை கண்டு அஞ்சினர். இதை கண்டு துரியோதனனும் சஞ்யனின் மூலம் கேட்டு அறிந்த திருதிராட்டிரனும் வருந்தினர். கௌரவர்கள் படை தோல்வி மேல் தோல்வி கண்டது.

கடோத்கஜன் கௌரவ வீரர்கள் பலரைக் கொன்றான். துரியோதனனை எதிர்த்து கடும் போர் செய்து அவன் தேரை அழித்தான். அவன் மார்பில் அம்புகளைச் செலுத்தினான். கடோத்கஜன் போர் வலிமைக் கண்டு துரோணர் கடோத்கஜனைத் தாக்கினர். பீமன் கடோத்கஜனுக்கு உதவிட விரைந்தான். துரோணரை தாக்கி அவரின் தேரை முறித்தான். கடோத்கஜனை காப்பாற்றும் முயற்சியில் பீமன் மேலும் துரியோதனனின் தம்பியர் எட்டு பேரை கொன்றான்.

தனது தம்பிமார்கள் கொன்ற பீமனை கொல்லும்படி பீஷ்மரிடம் துரியோதனன் நயந்து வேண்டினான் ஆனால் தம்மால் பாண்டவர்களை கொள்ள இயலாது என்று பீஷ்மர் கூறிவிட்டார். சூரிய அஸ்தமனத்திற்கு முன்பு பீமன் துரியோதனின் சகோதரர்கள் மேலும் 8 பேரை வெட்டித் தள்ளினான். எட்டாம் நாள் மட்டும் பீமன் துரியோதனன் தம்பியர் பதினாறு பேரைக் கொன்றிருந்தான். ஆக இதுவரையில் பீமன் துரியோதனனின் சகோதரர்கள் 24 பேரை கொன்று விட்டான். துரியோதனன் மீண்டும் பீஷ்மரிடம் எப்படியாவது பாண்டவர்களை கொன்றதாக வேண்டும் என்று வற்புறுத்திக் கேட்டான். பீஷ்மர் மீண்டும் துரியோதனனிடம் தனது பழைய கருத்தை எடுத்துரைத்தார். கிருஷ்ணன் பாண்டவர்களை பாதுகாத்து வருகின்றான். மண்ணுலகத்தாரும் விண்ணுலத்தாரும் ஒன்று கூடினாலும் பாண்டவர்களை அழிக்க முடியாது. ஆனால் துர்புத்தியே வடிவெடுத்த துரியோதனனுக்கு மட்டும் இக்கருத்து விளங்கவில்லை தான் கையாண்டு வந்த செயல் முற்றிலும் சரியானது என்று மனப்பூர்வமாக நம்பினான்.

அர்ஜுனன் பீஷ்மர் மீது சரமாரியாக அம்புகள் எய்து திணறடித்தான். இந்திரன் தன் வேலைகளை நிறுத்திவிட்டு அன்று அர்ஜுனன் போர் செய்வதை கண்டு தன்னை மறந்தான். யானைகள் சரிந்தன குதிரைகள் மடிந்தன காலாட்படைகள் அழிந்தன. திரும்பிய திசை எங்கும் பாண்டவர்களின் வெற்றி ஆராவாரம் தெரிந்தது. துரியோதனன் செய்வது அறியாமல் திகைத்தான். தர்மம் தலை தூக்க தொடங்கியது. சூரியன் மறைய எட்டாம் நாள் யுத்தம் முடிவுக்கு வந்தது.

மகாபாரதம் 6. பீஷ்ம பருவம் பகுதி -11

நகுலனும் சகாதேவனும் சேர்ந்து சல்லியனை எதிர்த்து போரிட்டனர். சல்லியன் வில்வித்தையிலும் போர்முறைகளிலும் தேர்ந்தவன். தேரோட்டத்தில் வல்லவன் சல்லியனை சாய்க்க நகுல சாகாதேவ சகோதரர்கள் கடுமையாக போராடினர். சல்லியனும் துரிதமாக தன் ஆயுதங்களை பயன்படுத்தினான். சகாதேவன் தன் ஈட்டியால் சல்லியனின் தேரை தாக்கினான். அவன் ஈட்டி பாய்ந்து வருவதை கண்டு சல்லியனின் குதிரைகள் மிரண்டு தடுமாறி ஓட அவைகளை அடக்கினான் சல்லியன். நகுலனோ தன் வாள்திறமையால் சல்லியனின் வில்லை வென்றான். சகாதேவனை சல்லியனின் அம்புகள் தாக்காதவாறு தன் வாழ்சுழற்சியால் அவற்றை தடுத்தான். சல்லியன் தன் இரு மருமகன்களின் போர் திறமையை கண்டு வியந்தான். இறுதியில் மூவரும் சோர்ந்தனர். சல்லியன் மயங்கி நிராயுதபாணியாக தான் தேரில் சாய்ந்தான். தர்மத்தின் படி சல்லியனை கொல்லாமல் உயிர் வாழ விட்டனர் நகுல சகாதேவ சகோதரர்கள்.

கடுமையாய் இருந்த ஏழாம் நாள் போர் சூரியன் மறைய முடிவுக்கு வந்தது. அத்தனை போர் வீரர்களும் போராடி களைத்து போய் இருந்தனர் அன்று இரவு கிருஷ்ணனின் புல்லாங்குழல் வேணுகானம் அனைவருக்கும் அமைதியையும் ஆறுதலையும் கொடுத்தது. அன்று கௌரவர்களுக்கு நடந்த இழப்புகளை அடுத்த நாளில் சரி செய்ய வேண்டும். பாண்டவர்களின் படைகளை சிதறடிக்க வேண்டும் என்று கௌரவர்கள் ஆலோசித்து முடிவு செய்தனர்.

எட்டாம் நாள் பீஷ்மர் தனது சேனைகளை ஊர்மி வியூகத்தில் அமைத்தார். அது கடல் போல் பெரியதாக காட்சி அளித்தது. பீஷ்மருக்கு போட்டியாக தன் படையின் சிறந்த வீரர்களின் தொகுப்பை கொண்டு சிருங்கடக வியூகத்தை திருஷ்டத்துய்மன் வகுத்தான். அது பார்க்க இரண்டு கொம்புகள் போன்று காணப்பட்டது. மிகவும் வலுவான இந்த வியூகம் பகைவரின் வியூகம் எதுவானாலும் அதைச் சிதறச் செய்யும் ஆற்றல் உடையது. அர்ஜுனனும் திருஷ்டத்யும்னனும் வியூகத்தின் தலை பகுதியில் நின்றனர். தருமர், சிகண்டி, அரவான் இடது புறத்திலும் பீமன் மற்றும் கடோத்கஜன் வலது புறத்திலும் இருந்தனர். நகுல சகாதேவ சகோதரர்கள் அபிமன்யு துருபதன் ஆகியோர் வியூகத்தின் பின்புற சுவராக இருந்தனர்.

துரியோதனன் படை தளபதிகளிடம் கோபம் கொண்டான் ஆகையால் கௌரவ படைகள் சீற்றடுடன் போர் புரிந்தனர். பாண்டவ படைகள் ஏழாம் நாள் கிடைத்த வெற்றியினாலும் இரவு கிருஷ்ணர் கொடுத்த வேணுகானதினாலும் உற்சாகத்துடன் போர் செய்தனர். கௌரவ படையின் விகர்ணன் துச்சாதனன் தேர்கள் மற்றும் குதிரைகளை யுதிஷ்டிரர் மற்றும் சிகண்டிகை தூள் தூள் ஆக்கினர். விகர்ணனும் துச்சாதனனும் பின்வாங்கினார்கள். மற்றொரு புறம் நகுல சகாதேவ சகோதரர்களும் அபிமன்யுவும் சிந்து நாட்டரசன் ஜயத்திரதன், சகுனி, சகுனியின் மகன் உல்லூகன், சல்லியன், பர்பரிகன், பூரிசிரவஸ் ஆகியோரை கலங்கடித்தனர். அபிமன்யுவின் ஆற்றல் வெளிப்பட தொடங்கியது. பாண்டவர்களின் படையில் அபிமன்னு என்பவனின் மிகபெரிய ஆற்றல் மெதுவாகவும் அதே சமயம் வலிமையாகவும் உருவாகிகொண்டிருப்பது அன்று கௌரவர்களுக்கு தெரிய வந்தது.

Image may contain: 3 people

ராம ஜப மகிமை

ஒரு நாள் சக்கரவர்த்தி அக்பர் வேட்டைக்காக ஒரு பரந்த வனத்திற்குள் சென்றார். அவருடன் மந்திரி பீர்பாலும் சென்றார். ஆனால் காட்டுக்குள் சென்றவர்களுக்கு வழி தவறிப் போனது. கொடும் வனம் அதைவிட கொடிய பசி இருவரையும் வாட்டி வதைத்தது. ஆனால் பீர்பாலோ அடர்ந்த வனத்தின் அழகில் மனதை பறிகொடுத்து விட்டார். உடனே ஒரு பெரியமரத்தின் கீழ் அமர்ந்து ராம ராம என்று ராம நாம ஜபத்தை ஜபிக்கத் தொடங்கினார். அக்பர் பசி தாங்க முடியாமல் பீர்பாலை நோக்கி ஏதாவது உணவை சேகரித்துக் கொண்டு வாருங்கள். நிச்சயம் சிறிது தூரம் போனால் ஏதாவது வழி தென்படும் என்று கூற பீர்பாலோ அரசே என் வயிறோ உணவிற்கு ஏங்குகிறது. ஆனால் மனமோ ராம நாமத்திற்கு ஏங்குகிறது. அதனால் மன்னா இப்போது நான் உணவைப் போய் சேகரிக்கும் நிலையில் இல்லை என்று பதிலளித்தார்.

இதைக் கேட்டு சினம் கொண்ட அக்பர் தானே உணவை தேடிக் கொண்டு போனார். அவர் எதிர்பார்த்தது போலவே தொலைவில் ஒரு வீடு தென்பட விரைந்து சென்ற சக்கரவர்த்தி அக்பரை அவ்வீட்டினர் மனம் மகிழ்ந்து வரவேற்று அறுசுவை உணவளித்து உபசரித்தனர்.

அக்பரும் மனம் கேளாமல் பீர்பாலிற்காகவும் உணவைக் கேட்டுப் பெற்று காட்டில் மரத்தடியில் ராமநாமத்தை ஜபித்துக் கொண்டிருந்தவருக்கு உணவு கொடுத்துவிட்டு ஏளனத்தோடு சொன்னார். பீர்பால் இப்போதாவது தெரிந்ததா நான் எடுத்த சரியான முடிவு தான் இன்று உங்களுக்கு உணவு கிடைத்தது. நீங்கள் ஜபித்துக் கொண்டிருக்கும் ராமஜபம் உங்களுக்கு உணவு கொடுக்கவில்லை தெரிந்துகொள்ளுங்கள் என்று கூறினார். உணவைப் புசித்து முடித்து விட்டு அமைதியாக பீர்பால் அரசே உணவிற்காக மகாபெரிய சக்கரவர்த்தியான தாங்கள் ஒரு சாதாரண பிரஜையிடம் யாசிக்க நேர்ந்தது. ஆனால் என் பிரபு ராமரோ எனக்கு உணவை மாமன்னரான உங்கள் கையில் கொடுத்தனுப்பியுள்ளார். இது தான் ராம ஜபத்தின் மகிமை என்று கூற அக்பர் வாயடைத்துப் போய் நின்றார்.

Image result for பீர்பால் அக்பர்

மகாபாரதம் 6. பீஷ்ம பருவம் பகுதி -10

பீஷ்மரும் பாண்டவர்களின் படை தளபதியான திருஷ்டத்துய்மனும் நேருக்கு நேர் போரில் சந்தித்தனர். வில் வித்தையில் தான் குருவையே தோற்கடித்தவர் பீஷ்மர் என்பதால் அவரின் ஆற்றல் என்ன என்பதை திருஷ்டத்துய்மன் நன்கு அறிவான். சாமர்த்தியமாக அவரை தாக்காமல் அவருடைய அனைத்து தாக்குதலையும் தடுத்து பீஷ்மரை சோர்ந்து போக வைத்தான்.

அர்ஜுனனும் துரோணரும் நேருக்கு நேர் சந்தித்தனர். அர்ஜூனனை பார்த்து துரோணர் அர்ஜுனா நீ என்னை வென்றால் அதனால் பெருமை எனக்கு தான். தயங்காமல் உன் அம்புகளை செலுத்து இது உனக்கும் எனக்கும் நடக்கும் போர் அல்ல. தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் நடக்கும் போர். வீழ்வது நானாக இருப்பினும் வெல்வது தர்மமாக இருக்க வேண்டும். நான் என் ஆற்றலை குறைத்து யுத்தம் செய்ய மாட்டேன் என் முழு ஆற்றலுடன் போர் செய்வேன். என்னை நீ இந்த போரில் வென்றால் நீ வில்லுக்கு விஜயன் என்று பெயர் பெறுவாய். வில்லுக்கு விஜயன் என்ற புகழ் உன்னை சேரட்டும் என்று ஆசி வழங்கினார். குருவின் ஆசியோடு அம்புகளை செலுத்தினான் அர்ஜுனன். அம்புகள் காற்றை கிழித்து கொண்டு பாய்ந்தன. அக்னி மற்றும் வாயு அஸ்திரங்களை செலுத்தினான். துரோணரும் அதற்க்கு ஈடாக போர் புரிந்தார். இருவரின் ஆயுதங்கள் தீர்ந்து போகும் நிலையில் இருவரும் சோர்ந்தனர். கிருஷ்ணர் அர்ஜுனரிடம் இன்று நீ புரிந்த யுத்தம் தான் துரோணரின் தலைமை சீடன் என்பதை உலகிற்கு தெரிவித்தது என்று கூறி ஊக்கம் அளித்தார்.

நகுலனும் சகாதேவனும் காலாட்படைகளை சிதறடித்தனர். நகுலனின் வாள் சுழர்ச்சியும் சகாதேவனின் ஈட்டியும் போர் களத்தில் புயலை உருவாகியது. அன்றிய போரில் சகாதேவன் வீசிய ஈட்டிகளின் எண்ணிக்கை 17485. ஆறாம் நாள் போரில் பாண்டவர்களின் கை ஓங்கி இருந்தது. அர்ஜுனன் துரோணர், பீமன், துரியோதனன், பீஷ்மர், திருஷ்டத்துய்மன், நகுலன் சகாதேவன் என அனைவரும் சோர்ந்திருந்த நிலையில் மாலையில் சூரியன் அஸ்தமித்தான். ஆறாம் நாள் போர் முடிவிற்கு வந்தது.

ஏழாம் நாள் யுத்தத்திற்கு அனைவரும் தயாரானர்கள். ஆறாம் நாள் போரில் சோர்வடைந்த துரியோதனன் அடுத்த நாள் காலை பீஷ்மரிடம் முறையிட்டான். எனது அச்சமும் சோர்வும் என்னை விட்டு அகவில்லை. உங்கள் உதவி இல்லாமல் நான் எப்படி வெற்றி பெறுவேன் எனக் கெஞ்சிக் கேட்டான். பீஷ்மர் என்னால் முடிந்த அளவிற்கு போர் செய்து கொண்டு தான் இருகிறேன் என்று கூறினார்.