மகாபாரதம் 6. பீஷ்ம பருவம் பகுதி -15

பத்தாம் நாள் போர் தொடங்கியது. கௌரவர்கள் அசுர வியூகத்தை வகுத்துக்கொண்டார்கள். பாண்டவர்கள் தேவ வியூகத்தை வகுத்துக்கொண்டார்கள். சிகண்டிக்கு நான்கு பக்கமும் பாதுகாப்புடன் சிகண்டியை முன் நிறுத்தி பாண்டவர்களின் படை முன்னேறியது. இதுவரை இல்லாத பாதுகாப்பு பத்தாம் நாள் பீஷ்மருக்கு இருந்தது. இன்று பீஷ்மரை எப்படியாவது வெற்றி பெற்று விடவேண்டும் என்று பாண்டவர் பாசறையில் முடிவு எடுக்கப்பட்டிருந்தது.

அர்ஜூனன் உணர்ச்சிவசப்பட்டு கலங்கி நின்றான். தான் சிறுவயதில் பீஷ்மரின் மடியில் அமர்ந்து விளையாடிய நேரங்களை கண்ணீருடன் நினைவு கூர்ந்தான். தன் அன்பிற்கும் பாசத்திற்கும் மரியாதைக்கும் உரிய பீஷ்மரை கொல்ல போகிறோமே என்று வேதனை அடைந்தான். காண்டீபத்தை தொட அவன் மனமும் கைகளும் மறுத்தன. நாம் தோற்றாலும் பரவாயில்லை கங்கை புத்திரரை கொல்ல மட்டேன் என்று கிருஷ்ணரையும் அண்ணன்களையும் தழுவி அழுதான்.

அப்போது கிருஷ்ணர் அர்ஜுனா பீஷ்மரின் சாபம் முடியும் நேரம் நெருங்கிவட்டது. அவர் முக்தி அடைய போகிறார். நீ அவரை கொல்லபோவதில்லை அவருக்கு உன் கைகளால் முக்தி கொடுக்க போகிறாய். உன் பாசத்திற்குரிய தாத்தாவிற்கு நீ கொடுக்க போகும் மிக பெரிய பரிசு இது அர்ஜூனா. எடு காண்டீபத்தை மோக்ஷத்தை கொடுத்து அவரை வழி அனுப்பு அவரின் ஆசி என்றும் உன்னோடு இருக்கும் என்று அர்ஜுனனுக்கு பீஷ்மரின் பிறப்பு ரகசியத்தை மீண்டும் ஒரு முறை சொல்லி முடித்து தனது சங்கை ஊதினார். அர்ஜுனன் தெளிவானான். காண்டீபதில் நானேற்றினான். நானை சுண்டிவிட்டான். அதன் ஒலி எட்டு திக்கிற்கும் சென்றடைந்தது.

போரில் அன்றும் பீஷ்மர் தன் அம்புகளை காற்றென செலுத்தி கொண்டிருந்தார். பாண்டவர்களுக்கு சவாலாக நின்றார். பாண்டவர்களின் வெற்றியை தடுக்கும் ஒரே ஒரு மாபெரும் சக்தியாக இருந்தார். இந்த நிலையில் சிகண்டியின் தேர் பீஷ்மருக்கு எதிரில் நின்றது. அதற்கு அருகில் அர்ஜுனனின் தேர் நின்றது. கிருஷ்ணரின் முகத்தில் அமைதியான புன்னகை. அதை பார்த்த பீஷ்மர் மனதில் ஆனந்தம். கிருஷ்ணரை வணங்கி நின்றார். தன் முடிவை அறிந்த பீஷ்மர் கடைசி முறையாக தன் வில்லை கையில் ஏந்தினார். பல ஆண்டுகளாக ஆயிரம் ஆயிரம் வீரர்களை கொன்று வெற்றி கொண்டு தோல்வியே இல்லாத மகாராதனாக தான் விளங்கியதற்கு காரனமாய் இருந்த தன் வில்லை தொட்டு அதற்க்கு இறுதி வணக்கத்தை வீரத்தோடு தெரிவித்தார்.

சிகண்டி பீஷ்மர் மீது ஆயுதம் எடுத்து போர் புரிய ஆயத்தமானான். சிகண்டி சிவனிடம் பெற்ற வரத்தின் விளைவாக பீஷ்மரால் ஆயுதம் எடுத்து போர் புரிய இயலாமல் போனது. பீஷ்மரின் வில்லை அர்ஜுனன் உடைத்தான். அவருடைய வேலாயுதத்தை நொறுக்கினான் அவருடைய கதாயுதத்தை தூளாக்கினான். எதிரில் சிகண்டி ஆயுதம் தாங்கி நின்று கொண்டிருந்ததால் ஆயுதம் இன்றி பீஷ்மர் ஒடுங்கிப் போனார்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.