“நேர்த்திக் கடன்” எனும் தலைப்பில் “ஆன்மிகத் திண்ணை” எனும் குழுவில் Zoom நேரலையில் 23-08-2025 அன்று நிகழ்த்திய கலந்துரையாடல்.
Month: October 2025
அட்டாங்க யோகம் சாதக முறைகள் பற்றிய சில கருத்துக்கள்
“அட்டாங்க யோகம் சாதக முறைகள் பற்றிய சில கருத்துக்கள்” எனும் தலைப்பில் “ஆன்மிகத் திண்ணை” எனும் குழுவில் Zoom நேரலையில் 18-05-2024 அன்று நிகழ்த்திய கலந்துரையாடல்.
திருமூலர் வர்க்க வேடம்
“திருமூலர் வர்க்க வேடம்” எனும் தலைப்பில் “ஆன்மிகத் திண்ணை” எனும் குழுவில் Zoom நேரலையில் 27-09-2025 அன்று நிகழ்த்திய கலந்துரையாடல்.
அகத்தியர்
“அகத்தியர் – சிந்தனைகள்” எனும் தலைப்பில் “ஆன்மிகத் திண்ணை” எனும் குழுவில் Zoom நேரலையில் 11-05-2024 அன்று நிகழ்த்திய கலந்துரையாடல்.
திருமந்திரம் நற்சிந்தனைகள்
“திருமந்திரம் நற்சிந்தனை” எனும் தலைப்பில் “ஆன்மிகத் திண்ணை” குழுவில் Zoom நேரலையில் 26-07-2025 அன்று நிகழ்த்திய கலந்துரையாடல்
அறிவு என்றால் என்ன? ஞானம் என்றால் என்ன? இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?
பகவான் ராமகிருஷ்ண பரமஹம்சரிடம் பாடம் படித்துக் கொண்டிருந்த மாணவர்கள் அறிவு என்றால் என்ன? ஞானம் என்பது எது? என்று கேள்வி கேட்டனர். பகவான் ராமகிருஷ்ணர் மூன்று மாணவர்களை அழைத்து இன்று உங்களுக்கு ஞானம் என்பது எது? என்பதை ஒரு செயல் மூலம் விளக்கப் போகிறேன் என்று சொல்லிவிட்டு மூவரையும் ஒரு அறையில் உட்கார வைத்தார். அவர் மற்றொரு அறைக்குச் சென்று சிறிது நேரத்தில் வெளியே வந்தார். அறையின் கதவுகளை மூடிவிட்டு அம்மூவரின் அருகில் வந்து அமர்ந்தார். முதல் மாணவனைப் பார்த்து அந்த அறையினுள் மூன்று குவளையில் பால் உள்ளது. அதில் நீ ஒரு குவளை பாலை பருகிவிட்டு வா என்றார். அவன் உள்ளே சென்றான். தங்கம் வெள்ளி வெண்கலம் ஆகிய மூன்று குவளைகளில் பால் இருந்தது. தங்க குவளையில் இருந்த பாலை எடுத்து மிகுந்த மகிழ்ச்சியோடு பருகினான். பிறகு வெளியே வந்தான். அடுத்து இரண்டாவது மாணவன் உள்ளே சென்றான். தங்கத் தம்ளரில் பால் இல்லாததைப் பார்த்த அவன் அதிலிருந்த பால் தனக்குக் கிடைக்கவில்லையே என்று ஆதங்கமுற்றான். ஆயினும் அதற்கடுத்த மதிப்பினைக் கொண்ட வெள்ளி குவளையில் இருந்த பாலை எடுத்துக் குடித்துவிட்டு ஓரளவு நிறைவோடு வெளியே வந்தான். மூன்றாவது மாணவன் உள்ளே சென்றதும் காலியாகக் கிடந்த தங்க வெள்ளி குவளைகளைப் பார்த்ததும் கோபம் தலைக்கேறியது. எனக்கு வெண்கல குவளை பாலா? யாருக்கு வேண்டும் இது? நான் என்ன அவ்வளவு தாழ்ந்தவனா? எந்த விதத்தில் நான் தாழ்ந்தவனாகி விட்டேன்? என்று அவன் மனதில் எண்ணங்கள் ஓடின. ஆயினும் குரு பாலைக் குடித்து வா என்றதை நினைவில் கொண்டு வருத்தத்தோடு குடித்துவிட்டு வெளியே வந்தான். அவன் முகத்தில் கவலை நிலைகொண்டிருந்தது.
பகவான் ராமகிருஷ்ணர் மூவரையும் பார்த்து பாலைக் குடித்தீர்களா என்றார். முதல் மாணவன் மகிழ்ச்சிப் பூரிப்புடன் தங்கத் குவளையில் பால் குடித்தேன். நான் மிகவும் கொடுத்து வைத்தவன் குருவே என்றான். இரண்டாவது மாணவன் எனக்கு தங்க குவளையில் பால் கிடைக்கவில்லை என்கிற வருத்தம் இருந்தாலும் வெள்ளி குவளையிலாவது கிடைத்ததே என்கிற மகிழ்ச்சி ஓரளவு இருக்கிறது குருவே என்றான். மூன்றாவது மாணவன் பதில் சொல்ல ஆரம்பிக்கும் முன்பே அழுகை வந்துவிட்டது. மூன்று பேர்களில் மிகவும் துரதிர்ஷ்டக்காரன் நானே குருவே. எனக்கு வெண்கலக் குவளையில் பால் கிடைத்தது என்றான். மூவரும் பேசியவற்றை அமைதியாக கேட்ட பகவான் ராமகிருஷ்ணர் பேச ஆரம்பித்தார். மாணவர்களே தங்கம் வெள்ளி வெண்கலம் ஆகிய மூன்று குவளைகளிலும் ஏலக்காய் குங்குமப்பூ சேர்த்து சுண்டக் காய்ச்சிய சுவையான பசும் பால் ஒரே அளவில் இருந்தது. அதில் எந்த வேறுபாடும் இல்லை. பாலை பருகப் போகிற மூவருக்குமே அதிலிருந்து ஒரே மாதிரியான சுவையும் சத்துவ குணமும்தான் கிடைக்கப் போகிறது. அதிலும் வேறுபாடில்லை. ஆனால் நீங்கள் மூவருமே நினைத்தது வேறு. பால் ஊற்றி வைத்திருக்கும் குவளைகளின் மதிப்பைப் பற்றியே உங்கள் மனம் யோசித்தது. பாலின் குணம் சுவை ருசி ஆகிய அனைத்தும் ஒரேமாதிரிதான் இருக்கும் என்பதை யோசிக்கவே இல்லை. ஆகவே நீங்கள் பண்டத்தை விட்டு விட்டு பாத்திரத்தையே பார்த்துள்ளீர்கள் பாத்திரத்தைப் பார்த்து மகிழ்ச்சி அடைவது அறிவு. அதில் உள்ள பண்டத்தை நுகர்ந்து அனுபவித்து இன்புறுவது ஞானம். நீங்கள் அறிவைக் கொண்டு புறத்தோற்றத்தைப் பார்த்தபடியால் அது எதனால் ஆனது? மதிப்பானதா? மதிப்பு குறைவானதா? என்று சிந்தித்து அதில் உங்களின் கவனம் முழுமையாக சென்றது. பாலில் உள்ள சுவையை அனுபவிக்காமல் விட்டு விட்டீர்கள். நீங்கள் அறிவு கொண்டு பார்க்காமல் ஞானம் கொண்டு பார்த்திருந்தால் அதில் உள்ள சுவையை அனுபவித்து மூவருமே ஒரே மாதிரியான மன நிலையை கொண்டு ஒரே மாதிரியான அனுபவத்தை பெற்றிருப்பீர்கள்..
ஞானிகள் பண்டத்தைப் பற்றியும் அதன் பயன் பற்றியுமே பார்ப்பார்கள். பாத்திரங்களுக்கு மதிப்பு தர மாட்டார்கள். மண் சட்டியில் ஊற்றிக் கொடுத்தால் கூட ஆனந்தமாக பருகிச் செல்வார்கள். ஏனேனில் ஞானிகள் அனைத்திலும் உள்ள இறைவனை நுகர்ந்து அனுபவித்து ஆனந்தமடைவார்கள். இதுவே ஞானத்தின் உச்சம் என்று பகவான் ராமகிருஷ்ணர் சொல்லி முடித்ததும் மூன்று பேர்களுக்கும் அறிவிற்கும் ஞானத்திற்கும் உள்ள வேறுபாடு தெளிவாக விளங்கியது.
