வழிவிடும் முருகன் திருக்கோயில்

வழிவிடும் முருகன் திருக்கோயில் இராமநாதபுரத்தில் உள்ளது. இக்கோயில் முருகரை வழிபட்டு செல்லும் பக்தர்களுக்கு ஒரு சிறந்த வழிகாட்டியாகவும் வாழ்க்கை முழுவதும் துணை வருவதாலும் இந்த முருகருக்கு வழிவிடும் முருகர் என்று பெயர் வந்தது. இக்கோயில் தற்போது உள்ள இடத்தில் பல ஆண்டுகளுக்கு முன் அரசமரம் இருந்தது. மரத்தின் கீழ் ஒரு சிறிய வேல் நடப்பட்டு அதற்கு பூஜை செய்யப்பட்டு வந்தது. கோயிலின் அருகிலேயே நீதிமன்றம் இருந்தது. தங்களது வழக்குகளில் வெற்றி பெற வேண்டும் என்று சொத்து வழக்குகளில் சிக்கி வாழ வழியற்று நிற்பவர்கள் கிரிமினல் வழக்குகளில் சிக்கிய நிரபராதிகள் எல்லாம் இந்ந முருகனை வணங்கி வாழ வழிபெற்றனர்.

இக்கோயிலில் உள்ள ஒரு சன்னதியில் வினாயகரும் முருகரும் ஒரே சன்னதியில் இருந்து அருள்பாலிக்கிறார்கள். இத்தலத்தில் சனீஸ்வரனின் தாய் சாயாதேவி மரம் வடிவில் அருள்பாலிக்கிறாள். இந்த மரத்துக்கு சாயாமரம் என்ற பெயருண்டு. சனி பகவான் தனது தாயின் சொல்லுக்கு கட்டுப்பட்டு இத்தலத்திற்கு வந்து வழிபடுவோரின் துன்பங்களை போக்கி அருள் பாலிக்கிறார். இந்த மரம் இலங்கையிலுள்ள கதிர்காமம் முருகன் கோயிலிலும் உள்ளது.

ஶ்ரீபூதநாதகீதை பகுதி – 5

இறைவனே மணிகண்டனாக அவதரித்திருக்கிறார் என்பதை அந்த இறைவனின் அருளால் உணர்ந்த ஐயப்பனின் வளர்ப்புத் தந்தை அரசன் இராஜசேகர பாண்டியன் இறைவனது பாத கமலங்களில் சரண் புகுந்து பிறவிப் பிணி தீர்க்க வேண்டி பிரார்த்தித்தார். முக்தியை நாடி வரும் மன்னனுக்கு மணிகண்டன் தானே ஞானாசிரியனாக விளங்கி ஞான தத்துவங்களை உபதேசித்தார். இந்த உபதேசத்தில் ஞான முதிர்ச்சி அடைந்தார் மன்னன். அந்த உபதேசமே ஶ்ரீபூதநாத கீதை நூல் ஆகும். இந்த ஶ்ரீபூதநாதகீதை நூல் திரு V. அரவிந்த் சுப்ரமணியம் அவர்களால் வெளிக் கொண்டு வரப்பட்டது. அந்த நூலில் உள்ள உபதேசங்களில் நான்காம் அத்தியாயத்தில் மனத்தை வென்று குருவருளால் முக்தியை அடைய வழி காட்டும் தத்வ விக்ஞான யோகம் பற்றி உபதேசித்திருக்கிறார். இந்த நான்காம் அத்தியாயத்தில் மொத்தம் 23 சுலோகங்கள் உள்ளது. இதில் முதல் 3 சுலோகங்களுக்கான சிறு விளக்கம் இந்த வீடியோவில் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதன் தொடர்ச்சி பகுதி – 6 விரைவில் பதிவேற்றப்படும்.

முருகர் 11 தலையுடன்

இராமநாதபுர மன்னர் பாஸ்கரசேதுபதி 300 ஆண்டுகளுக்கு முன் குண்டுக்கரை முருகன் கோவிலுக்கு தினமும் வந்து வழிபாடு செய்வார். ஒருமுறை இவர் சுவாமிமலை சென்று தரிசனம் செய்து விட்டு திரும்பி வந்தபோது இவரது கனவில் சுவாமிமலை முருகன் தோன்றி குண்டுக்கரை முருகன் கோவிலில் உள்ள எனது பழைய சிலையை எடுத்து விட்டு புதிய சிலை பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தால் உனக்கும் உனது மக்களுக்கும் நன்மை உண்டாகும் என கூறி மறைந்தார். பாஸ்கர சேதுபதியும் கனவில் முருகன் கூறியபடி புதிய முருகன் சிலை பிரதிஷ்டை செய்து சுவாமிநாதன் என்று பெயர் சூட்டினார்.

சூரபத்மனை வதம் செய்வதற்கு முன்பே முருகன் இத்தலத்துக்கு வந்ததாக கூறப்படுகிறது. அப்போது முருகனுக்கு 11 தலை 22 கைகள் இருந்ததாக தல வரலாறு சொல்கிறது. அதே வடிவில் விஸ்வரூபம் எடுத்த நிலையில் முருகன் தரிசனம் தருகிறார். முருகனுக்குரிய ஆறு முகம் மற்றும் சிவனுக்குரிய ஐந்து முகம் சேர்த்து மொத்தம் 11 முகங்களுடன் இவர் சிவமுருக அம்சமாக வீற்றிருக்கிறார். மற்ற கோவில்களில் எல்லாம் பிரணவ மந்திரத்தின் பொருள் கூற முருகன் சிவனின் மடியில் அமர்ந்திருப்பது போல சிலை இருக்கும். ஆனால் இத்தலத்தில் தகப்பன் சுவாமியான முருகன் குன்றின் மீது அமர்ந்து பிரணவ மந்திரத்திற்கு பொருள் சொல்ல சிவன் அதை நின்று கேட்கும் நிலையில் அமைந்து உள்ளது. இடம் இராமநாதபுரம் குண்டுக்கரை சுவாமிநாத சுவாமி கோயில்.

ஶ்ரீபூதநாதகீதை பகுதி – 4

இறைவனே மணிகண்டனாக அவதரித்திருக்கிறார் என்பதை அந்த இறைவனின் அருளால் உணர்ந்த ஐயப்பனின் வளர்ப்புத் தந்தை அரசன் இராஜசேகர பாண்டியன் இறைவனது பாத கமலங்களில் சரண் புகுந்து பிறவிப் பிணி தீர்க்க வேண்டி பிரார்த்தித்தார். முக்தியை நாடி வரும் மன்னனுக்கு மணிகண்டன் தானே ஞானாசிரியனாக விளங்கி ஞான தத்துவங்களை உபதேசித்தார். இந்த உபதேசத்தில் ஞான முதிர்ச்சி அடைந்தார் மன்னன். அந்த உபதேசமே ஶ்ரீபூதநாத கீதை நூல் ஆகும். இந்த ஶ்ரீபூதநாதகீதை நூல் திரு V. அரவிந்த் சுப்ரமணியம் அவர்களால் வெளிக் கொண்டு வரப்பட்டது. அந்த நூலில் உள்ள உபதேசங்களில் மூன்றாம் அத்தியாயத்தில் மொத்தம் 15 சுலோகங்கள் உள்ளது. இதில் முதல் 10 சுலோகம் வரை சிறு விளக்கம் இந்த வீடியோவில் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதன் தொடர்ச்சி பகுதி – 5 விரைவில் பதிவேற்றப்படும்.

ஶ்ரீபூதநாதகீதை பகுதி – 3

இறைவனே மணிகண்டனாக அவதரித்திருக்கிறார் என்பதை அந்த இறைவனின் அருளால் உணர்ந்த ஐயப்பனின் வளர்ப்புத் தந்தை அரசன் இராஜசேகர பாண்டியன் இறைவனது பாத கமலங்களில் சரண் புகுந்து பிறவிப் பிணி தீர்க்க வேண்டி பிரார்த்தித்தார். முக்தியை நாடி வரும் மன்னனுக்கு மணிகண்டன் தானே ஞானாசிரியனாக விளங்கி ஞான தத்துவங்களை உபதேசித்தார். இந்த உபதேசத்தில் ஞான முதிர்ச்சி அடைந்தார் மன்னன். அந்த உபதேசமே ஶ்ரீபூதநாத கீதை நூல் ஆகும். இந்த ஶ்ரீபூதநாதகீதை நூல் திரு V. அரவிந்த் சுப்ரமணியம் அவர்களால் வெளிக் கொண்டு வரப்பட்டது. அந்த நூலில் உள்ள உபதேசங்களில் இரண்டாம் அத்தியாயத்தில் மொத்தம் 14 சுலோகங்கள் உள்ளது. இதில் 6 ஆம் சுலோகம் முதல் 14 சுலோகம் வரை சிறு விளக்கம் இந்த வீடியோவில் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதன் தொடர்ச்சி 3 ஆம் அத்தியாயம் பகுதி – 4 விரைவில் பதிவேற்றப்படும்.