பைஜ்நாத் சிவலிங்கம் ஹிமாச்சல பிரதேசம் மாநிலத்தின் பாலம்பூர் பகுதியிலுள்ள பைஜ்நாத் சிவன் கோயிலில் அமைந்துள்ள இந்த சிவலிங்கம் இலங்கை வேந்தன் இராவணனால் இங்கே பிரதிஷ்டை செய்யப்பட்டது.

பைஜ்நாத் சிவலிங்கம் ஹிமாச்சல பிரதேசம் மாநிலத்தின் பாலம்பூர் பகுதியிலுள்ள பைஜ்நாத் சிவன் கோயிலில் அமைந்துள்ள இந்த சிவலிங்கம் இலங்கை வேந்தன் இராவணனால் இங்கே பிரதிஷ்டை செய்யப்பட்டது.
பதிமூன்றாம் நாள் போர் சங்கு முழங்கியது. கௌரவ படைகளும் பாண்டவ படைகளும் அணிவகுத்து நின்றன. இன்றைய போரில் எத்தனை தம்பியர்களை இழக்க போகிறோம் என்ற கவலையுடன் இருந்தான் துரியோதனன். துரோணர் மீதும் கர்ணன் மீதும் அசைக்க முடியாத நம்பிக்கை இருந்த போதிலும் அர்ஜுனனையும் கிருஷ்ணரையும் பார்க்கும் போது போர்க்களம் அவனுக்கு ஒரு மாயவலை போன்றே தோன்றியது.
அர்ஜுனனின் பாசத்திற்குரிய மகன் அபிமன்யு என்பதை துரோணர் அறிந்திருந்தார். அபிமன்யுவை கொன்றுவிட்டால் அர்ஜுனனின் போர் திறன் நிச்சயமாக பாதிக்கப்படும் என்று கணக்கிட்டார். அபிமன்யுவிர்க்கு ஆபத்து என்றால் அர்ஜுனன் வந்து அவனை காப்பாற்றிவிடுவான், எனவே அர்ஜுனனை திசை திருப்ப திட்டம் தீட்டினார். சம்சப்தர்கள் என்னும் ஏழு சகோதரர்களையும் எட்டாயிரம் வீரர்களையும் மூன்று யானை படைகளையும் அர்ஜுனன் மீது ஏவ திட்டம் தீட்டீனார்கள். அவர்களின் திட்டப்படி அவர்கள் மேற்கு திசையில் இருந்து அர்ஜுனனுக்கு சவால் விடுத்தனர். சவாலை ஏற்ற அர்ஜுனன் கிருஷ்ணரை மேற்கு நோக்கி ரதத்தை செலுத்த சொன்னான். நடக்க இருப்பதை அறிந்திருந்த கிருஷ்ணன் மௌனம் சாதித்தார். பின்பு அர்ஜுனனை நோக்கி வீரம் என்பது போர்களத்தில் கொன்று குவிப்பது மட்டும் அல்ல எத்துனை இழப்பு வந்தாலும் துவளாமல் இறுதி லட்சியத்தை அடைவது தான் உண்மையான வீரம் என்றார். அர்ஜூனக்கு ஒன்றும் புரியவில்லை. நிச்சயம் லட்சியத்தை அடைவேன் என்று கிருஷ்ணரிடம் வாக்களித்து போருக்கு தயாரானான். பின்பு மேற்கு நோக்கி பயணிதான்.
அர்ஜுனனை திசை திருப்பிய துரோணர் தன் வியூகத்தில் பாதி வென்றார். அடுத்த கணம் துரோணர் பத்மவியூகம் அமைத்தார். முகப்பில் அவர் இருந்து தலைமை தாங்கினார். துரியோதனன் பத்மவியூகத்தின் நடுவில் நின்றான். கர்ணன், துச்சாதனன், அஸ்வத்தாமன், துச்சாதனன், துஷ்ப்ரதர்ஷன், துஸ்ஸலன், அனுவிந்தன், உபசித்ரன், சித்ராக்ஷன் உட்பட 76 வீரர்களும் நூற்று கணக்கான காலாட்படை வீரர்களும் பத்மவியூகத்தின் சுவர்களாக நின்றனர்.
பத்மவியூகம் என்பது ஒர்புள்ளி தொடர் சுழல் போன்றதாகும். பத்மவியூகத்தை உடைத்து உள்ளே செல்வது கடினம். மீறி உள்ளே சென்று வெளியே வந்து விட்டால் வியூகத்தை வென்று விடலாம். உள்ளே செல்வதை விட வெளியே வருவது நூறு மடங்கு சிரமம். ஒவ்வொரு திருப்பத்திலும் இரண்டு அல்லது மூன்று மகாரதர்கள் இருப்பர். அவர்களுக்கு துணையாக அவர்களின் காலாட்படை வீரர்கள் இருப்பார்கள். வியூகத்தின் மத்திய புள்ளிக்கு சென்றுவிட்டால் எந்த திசையில் இருந்தும் யார் வேண்டுமென்றாலும் தாக்க கூடும். எப்பக்கத்தில் இருந்து அம்பு பாய்கிறது. யார் ஈட்டி எறிகிறார்கள். யார் போர்வாள் சுழற்றுவார்கள். கதாயுதம் எங்கிருந்து வரும் என்று எதையுமே யூகிக்க முடியாது. பத்மவியூகத்தை உடைக்க அசாத்திய ஆற்றல் வேண்டும்.
பஞ்சமுக சிவலிங்கம் ஆந்திர மாநிலம் பத்ராச்சலத்தில் உள்ள ITDA கோயிலில் இந்த பஞ்சமுக சிவலிங்கம் அமையப்பெற்றிருக்கிறது.
முனிவர் ஒருவர் மரத்தடியில் அமர்ந்து தம் வேட்டியில் இருந்த கிழிசலை தைத்துக்கொண்டு இருந்தார். அப்போது சிவனும் பார்வதியும் வான்வெளியில் வலம் வந்து கொண்டிருந்தனர். மரத்தடியில் ஒளிப்பிழம்பாய் அமர்ந்திருந்த முனிவரை கண்டதும் உளம் நெகிழ்ந்த பார்வதி ஐயனைப் பார்த்து மரத்தடியில் பார்த்தீர்களா ஏதேனும் வரம் கொடுத்துவிட்டுப் போகலாம் வாருங்கள் என்றாள் பார்வதி. அவன் அந்த நிலையெல்லாம் கடந்தவன். இப்போது அவனிடம் செல்வது வீண்வேலை வேண்டாம் வா நம் வழியே போகலாம் என சொல்ல ஆனால் பார்வதி விடவில்லை. ஐயனை வற்புறுத்தி மரத்தடிக்கு அழைத்து வந்துவிட்டாள்.
வணக்கம் முனிவரே என வணங்கினர் அம்மையும் அப்பனும். முனிவர் நிமிர்ந்து பார்த்தார். எம்பெருமானும் பெருமாட்டியுமா வரணும் வரணும் என்று வரவேற்றவர் தாகத்திற்கு மோர் கொடுத்து உபசரித்தார். அவ்வளவுதான். மீண்டும் கிழிசலைத் தைக்கத் தொடங்கிவிட்டார். சற்றுநேரம் பொறுமையாகக் காத்திருந்துவிட்டு நாங்கள் விடை பெறுகிறோம் என்றனர் அம்மையும் அப்பனும். மகிழ்ச்சியாய்ப் போய் வாருங்கள் வணக்கம் என்று சொல்லி விட்டு மீண்டும் கிழிசலைத் தைக்க முனைந்தார் முனிவர். அம்மை குறிப்புக் காட்ட அப்பன் பணிவாய்க் கேட்டார். முனிவரே நாங்கள் ஒருவருக்குக் காட்சி கொடுத்து விட்டால் வரம் கொடுக்காமல் போவதில்லை. எனவே தாங்கள் ஏதாவது வரம் கேளுங்கள். கொடுக்கிறோம் என சொல்ல முனிவர் சிரித்தார். வரமா உங்கள் தரிசனமே எனக்குப் போதும் பரமா வரம் எதுவும் வேண்டாம். உங்கள் வழியைத் தொடருங்கள் என்று சொல்லி விட்டுப் பணியில் ஆழ்ந்தார்.
அப்பனும் அம்மையும் விடவில்லை. ஏதாவது வரம் கொடுக்காமல் செல்ல மாட்டோம் என்று பிடிவாதமாய் நிற்க முனிவர் வேறு வழியின்றி ஒரு வரம் கேட்டார். நான் தைக்கும் போது இந்த ஊசிக்குப் பின்னாலேயே நூல் போக வேண்டும் அது போதும் என்றார்.
இதைக்கேட்ட அம்மையும் அப்பனும் ஏற்கனவே ஊசிக்குப் பின்னால் தான் நூல் போகிறதே. இதற்கு நாங்கள் ஏன் வரம் தர வேண்டும் என்று அம்மை பணிவாய் கேட்கிறார். அதைத்தான் நானும் கேட்கிறேன். நான் ஒழுங்கு தவறாமல் நடந்துகொண்டு வந்தால் வரவேண்டிய பலன் நியதிப்படி தானாகப் பின்னால் வருமே. இடையில் நீங்கள் எதற்கு எனக்கு வரம் தர வேண்டும்? என்று கேட்டார் முனிவர்.
முனிவரின் விளக்கத்தைக் கேட்ட அம்மையும் அப்பனும் சிரித்து விட்டு சென்றனர்.
தூய்மையான இறை நம்பிக்கையுடன் சரியாக நடந்துகொண்டால் அதன் விளைவும் சரியாக இருக்கும்.
துரோணர் யுதிஷ்டிரரை சிறைப்பிடித்து விடுவாரோ என்னும் பயம் பீமனுக்கு ஏற்பட யுதிஷ்டிரர் இருக்கும் இடத்திற்கு பீமன் வந்தான். அவன் மீது பல யானைகளை ஏவினான் துரியோதனன். அவைகளை பந்தாடினான் பீமன். அபிமன்யூவும் கௌரவர் படையை எதிர்த்து போராடினான். இன்றும் அவன் துரியோதனனின் ஐந்து தம்பிகளை கொன்று அர்ஜுனனை கௌரவித்தான். அவன் ஆற்றல் கண்டு அர்ஜுனன் மகிழ்ச்சியின் உச்சிக்கு சென்றான். துருபதன், சிகண்டி, கடோத்கஜன், சுவேதன், ஆகியோர் கர்ணனை கவனிக்கும் படி திருஷ்டத்துய்மன் வியூகம் வகுத்திருந்தான். அவர்களும் அவ்வாறே செய்தனர். கர்ணன் ஒரு மாவீரன். அவன் ஆற்றல் சாதாரணமானதல்ல என்பதை இவர்கள் நன்கு அறிவார்கள். இருப்பினும் தங்கள் முழு திறனை கொண்டு அவனை எதிர்த்தனர். கடோத்கஜன் அரக்கியின் மகன் என்பதால் மாயங்கள் அறிந்தவன். அவன் செய்த மாயங்களை கர்ணன் சூரிய அஸ்திரம் கொண்டு சுலபமாய் தகர்த்தான். இவர்கள் நால்வரின் தாக்குதலையும் ஒருவனாய் நின்று எதிர்த்தான். இதை கண்ட அர்ஜுனனும் வியந்தான்.
பகதத்தன் எனும் மன்னன் சுப்ரதீபம் என்னும் யானையில் வந்து பீமனுடன் போரிட்டான். அந்த யானை பீமனின் தேரை தகர்த்தது. பின் பீமனை தன் துதிக்கையால் பற்றி தூக்கி எறிய முற்பட்டது. பீமன் அதன் பிடியிலிருந்து தப்பி அதன் மர்மஸ்தானத்தை தாக்கினான். அந்த வேதனையிலும் அது பீமனை மிதித்துத் தள்ளப் பார்த்தது. ஆயினும் பீமன் அதனிடமிருந்து தப்பினான். பின் அந்த யானை அபிமன்யூவின் தேரைத் தூள் தூளாக்கியது. சாத்யகியின் தேரும் அதே நிலையை எட்டியது. யானையின் அட்டகாசத்தை அறிந்த அர்ஜூனன் அதனைக் கொல்ல விரைந்து வந்தான் அர்ஜூனன் பகதத்துடன் கடும் போர் புரிந்தான். அர்ஜூனன் எய்த ஒரு அம்பு யானையின் கவசத்தைப் பிளந்து மார்பில் ஊடுருவியது. யானை வீழ்ந்து மாண்டது. ஆத்திரம் அடைந்த பகதத்தன் சக்தி ஆயுதத்தை அர்ஜுனன் மீது செலுத்தினான். கிருஷ்ணன் அதை தன் மார்பில் தாங்கியதால் அர்ஜுனன் உயிர் பிழைதான். பின் அர்ஜூனன் செலுத்திய அக்னி அஸ்திரம் மாவீரன் பகதத்தனைக் கொன்று வீழ்த்தியது.
பின்னர் அர்ஜூனன் திருதிராட்டிர மன்னனின் மைத்துனர்களான அசலன் விகுஷன் ஆகியோரைக் கொன்றான். சகோதரர்களின் மரணத்தை அறிந்த சகுனி மாயையால் இருள் பரவச் செய்தான். அர்ஜூனன் ஒளிமய கணையால் அந்த இருளைப் போக்கினான். சகுனி பயந்து வேறிடத்திற்கு நகர்ந்தான். யுதிஷ்டிரரை பிடித்துவிடலாம் என்ற துரோணரின் கனவு தகர்ந்தது. கௌரவர்கள் கலங்க பாண்டவர்கள் மகிழ சூரியன் மறைய பன்னிரன்டாம் நாள் யுத்தம் முடிவுக்கு வந்தது.
அன்றைய போரில் நடந்தவற்றை கண்டு சினம் கொண்ட துரியோதனன் துரோணரிடம் சென்று கடுமையாகப் பேசினான். யுதிஷ்டிரரைப் பிடிக்கும் வாய்ப்பை தவற விட்டீர்கள். எனக்கு கொடுத்த வாக்குறுதியை காற்றில் பறக்க விட்டீர். நீர் சொல்வது ஒன்று செய்வது ஒன்று என்றான். இதனால் கோபம் அடைந்த துரோணர் துரியோதனா உனக்கு பலமுறை சொல்லியுள்ளேன். அர்ஜூனனைப் போரில் வெல்ல முடியாது. போர்க்களத்தில் அவன் எப்படி யுதிஷ்டிரரைப் பாதுகாத்தான் என்று நீ பார்த்தாய். நாளை நான் உன்னதமான வேறு ஒரு போர் முறை ஒன்றைக் கையாளப் போகிறேன். அர்ஜூனனை நீ எப்படியாவது யுதிஷ்டிரனிடமிருந்து பிரித்து வெளியே கொண்டு செல் என்றார். துரோணரின் பேச்சில் துரியோதனனுக்கு நம்பிக்கை வர அங்கிருந்து சென்றான்.
தொடரும்………
அமர்நாத் குகை கோயில் 5,000 ஆண்டு பழமையானது, அமர்நாத் குகையின் உட்புறத்தில் சிவலிங்கம் ஒன்றின் பனிக்கட்டிச் சிலை அமைந்துள்ளது. இச்சிலை மே முதல் ஆகஸ்ட் வரையான காலங்களில் உருகி மீண்டும் சுயம்புவாக உருவாகிறது. இந்த லிங்கமானது சந்திரனின் வளர்பிறை நேரத்தில் வளர்ந்தும் தேய் பிறை காலத்தில் கரைந்தும் காலங்களுக்கு ஏற்ப உரு மாறுகிறது இக்குகை 3,888 மீட்டர் உயரத்தில் உள்ளது.
யோக யாத்ரா என்ற புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வரலாற்று நிகழ்வு
1879 ஆம் ஆண்டு பிரிட்டனின் ஆட்சியின் கீழ் இந்திய இருந்தது. ஆங்கிலேய அதிகாரியான லெப்டினென்ட் கர்னல் மார்ட்டின் அகர் மால்வா ஆப்கானிஸ்த்தான் நாட்டிற்கு எதிரான போரில் படையை தலைமை ஏற்று வழி நடத்தி கொண்டிருந்தார். கர்னல் மால்வா தன் மனைவிக்கு தன் நலன் குறித்து கடிதங்கள் அனுப்புவது வழக்கம் ஆனால் இந்த போர் நீண்டு கொண்டு சென்றது மேலும் கர்னிலிடமிருந்து எந்த கடிதமும் அவரது மனைவிக்கு வரவில்லை. கர்னலின் மனைவி கடிதம் வராதது கண்டு துயருற்றார்.
ஒரு நாள் உலவ குதிரை சவாரி சென்றவளின் கண்களில் பைஜிநாத் கோவில் தென்பட்டது, அந்த கோவிலின் உள்ளிருந்து ஒலித்து கொண்டிருந்த சங்கொலியும் மந்திர ஒலிகளும் அவளை ஈர்க்க உள்ளே சென்று அங்கே பிரார்த்தனை புரிந்து கொண்டிருந்த வேதியர்களை கண்டாள். துயருற்ற முகத்தை கண்ட வேதியர்கள் காரணத்தை கேட்ட பிறகு வேதியர்கள் சிவபெருமான் பக்தர்களின் பிரார்த்தனைகளுக்கு செவிமடுத்து அருள் புரிபவர் எனவும் தன்னை அண்டியவர்களின் துயரங்களில் இருந்து மீட்பவர் என்றும் கூறி கர்னலின் மனைவிக்கு ஓம் நமசிவாய எனும் மந்திரத்தை தொடர்ந்து 11 நாட்கள் உச்சரித்து பிரார்த்தனை புரியுமாறு கூறுகின்றனர். கர்னலின் மனைவியும் தனது கணவன் எந்த துயருமின்றி வீடு திரும்பினால் பைஜிநாத் ஆலயத்தை புதுப்பித்துத் தருவதாக வேண்டி கொண்டு வீடு திரும்பினாள்.
ஓம் நமசிவாய மந்திரத்தை உச்சரிக்க தொடங்கி சரியாக பதினோராம் நாள் செய்தி கொண்டு வருபவர் கர்னலிடமிருந்து செய்தியை கொண்டு வருகிறார், அதில் எழுதி இருந்தது. போர்க்களத்தில் இருந்து தொடர்ச்சியாக உனக்கு நான் கடிதங்களை அனுப்பி கொண்டிருந்தேன் ஆனால் சட்டென ஒரு நாள் அனைத்து பக்கங்களில் இருந்தும் எதிரிகள் எங்களை சூழ்ந்து விட்டனர், நாங்கள் தப்பிச்செல்ல இயலாதவாறு சிக்கி கொண்டோம். நம்பிக்கையற்ற சூழலில் அங்கே சற்று நேரத்தில் ஒரு நீண்ட கேசமுடைய இந்திய துறவியை கண்டேன். அவரது கரங்களில் மூன்று முனைகளையுடைய கூறிய ஆயுதம் வைத்திருந்தார். மேலும் அவரது தோற்றம் மெய்சிலிர்க்கும் வண்ணமும் மேலும் அவர் தனது கையில் இருந்த அந்த ஆயுதத்தை கையாண்ட விதமும் மகத்தான விதமாக இருந்தது, இந்த சிறந்த மனிதனை கண்ட எதிரிகள் பின்வாங்கி ஓடிவிட்டனர். அந்த துறவியின் கருணையினால் தோல்வியை தழுவ வேண்டிய தருணம் நேர் எதிராக மாறி வெற்றியை பெற்றோம். இவைகள் எல்லாம் சாத்தியமானதன் கரணம் அவர் அணிந்திருந்த புலித்தோலும் கைகொண்டிருந்த மூன்று முனை உடைய கூறிய ஆயுதமே. அந்த உன்னத துறவி என்னிடம் கவலை கொள்ள வேண்டாம் என்றும் என் மனைவி பிரார்த்தனை மூலம் கேட்டுகொண்டதற்கு இணங்க காக்க வந்ததாகவும் கூறினார்.
இந்த கடிதத்தை வாசிக்கும் கணமே கர்னலின் மனைவி கண்களில் ஆனந்த கண்ணீர் வந்தன. அவரது இதயம் ஆனந்தத்தில் மூழ்கி இருந்தது, அவர் சிவபெருமானின் பாதங்களில் சரணடைந்தார். சில வாரங்களுக்கு பின் கர்னல் மார்ட்டின் திரும்பிய பின் அவரது நடந்தவற்றை விவரித்தார். கர்னல் மற்றும் அவர் மனைவியும் அது முதல் சிவ பக்தர்களாக விளங்கினர். 1883 ஆம் ஆண்டு கர்னல் மற்றும் அவர் மனைவி 16000 ரூபாய் ஆலயத்தை புதுப்பிக்க நன்கொடை கொடுத்தனர். இந்த செய்திகள் இன்றும் பைஜிநாத்தின் கோவில் கல்வெட்டுக்களில் உள்ளது.
யுதிஷ்டிரரை உயிருடன் பிடிக்க துரோணர் 11 வது நாளில் செய்த முயற்சிகள் அனைத்தும் அர்ஜூனன் கேடயம் போல் இருந்தமையால் பலனில்லாமல் போனது. யுதிஷ்டிரரை உயிருடன் பிடிக்க வெண்டுமெனில் அர்ஜூனனை அவர் அருகில் இருக்க விடக்கூடாது. யுதிஷ்டிரன் இருக்கும் திசைக்கு எதிர் திசையில் அர்ஜூனனை இழுக்க வேண்டும் எனத்திட்டம் தீட்டினர் கௌரவர்கள். திரிகர்த்த மன்னன் சுசர்மனும் அவனது சகோதரர்கள் சத்தியரதன், சத்தியவர்மன், சத்தியகர்மன் மற்றும் அவர்களது மகன்கள் 35 பேரும் அர்ஜுனனை கொல்வோம் அல்லது போரிட்டு மடிவோம் என சபதம் செய்தனர். இதற்கு சம்சப்தக விரதம் என்று பெயர். 12 ம் நாள் யுத்தம் தொடங்கியது. தென்திசையிலிருந்து அர்ஜூனனுக்கு சவால் விட்டனர். அர்ஜூனனும் சவாலை ஏற்றுக்கொண்டான். தென் திசைக்கு அவர்களை எதிர்க்க செல்வதால் பாஞ்சால நாட்டு மன்னன் துருபதனின் சகோதரன் சத்யஜித்திடம் யுதிஜ்டிரரை பாதுகாக்கும் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு திரிகர்த்த மன்னனையும் அவருடைய சகோதரர்களையும் எதிர்த்துச் சென்றான் அர்ஜூனன்.
கடுமையாக நடைபெற்ற போரில் கிருஷ்ணரின் திறமையால் அர்ஜூனன் தேர் எல்லா இடங்களிலும் சுழன்றது. கௌரவர்களும் அர்ஜுனனிடம் வெற்றி அல்லது வீரமரணம் என்று போரிட்டனர். திரிகர்த்த வேந்தனுக்குத் துணையாக அவன் சகோதரர்களையும் சேர்த்து பல்லாயிரக்கணக்கான வீரர்களும் சேர்ந்து போரிட்டனர். ஆயிரம் ஆயிரம் வீரர்களை திரிகர்த்த வேந்தனுக்கு துணையாக துரியோதனன் அனுப்பினான். யுதிஷ்டிரரோ அங்கு ஆபத்தில் இருக்கிறார். இங்கோ படை வீரர்கள் வந்த வண்ணமாகவே இருந்தனர். கிருஷ்ணரின் அறிவுரை படி அர்ஜூனன் வாயு அஸ்திரத்தை விடுத்து அனைவரையும் வீழ்த்தினான். சுசர்மன் மட்டும் தப்பினான்.
தென்திசைப்போரை முடித்துக் கொண்டு அர்ஜூனன் யுதிஷ்டிரரைக் காக்கும் பொருட்டுத் துரோணரை எதிர்த்தான். ஆனால் துரோணரோ யுதிஷ்டிரரை உயிருடன் பிடிப்பதில் குறியாய் இருந்தார். அன்றைய போரில் துரோணரின் திறைமை அனைவரையும் கவர்ந்தது. துரோணரை முறியடிக்க திருஷ்டத்துய்மன் முயன்றான். தனது மரணம் இவனால் தான் என்பதை அறிந்த துரோணர் அவனைத் தவிர்க்க முயற்சித்தார். அப்போது துரியோதனனின் தம்பியருள் ஒருவன் துர்முகன் திருஷ்டத்துய்மனைத் தாக்கி போரிட துரோணர் அங்கிருந்து நகர்ந்தார். துரோணரை அழித்து போர் செய்வதற்காகவே வேள்வியில் இருந்து தோன்றிய திருஷ்டத்துய்மன் துர்முகனின் வில்லை முறித்து தேரையும் தவிடுபொடி ஆக்கினான்.
அதே நேரத்தில் சத்யஜித் தன் திறமையைக் காட்டி யுதிஷ்டிரரைக் காக்க முற்பட்டான். அவனுக்கும் துரோணருக்கும் நடந்த போர் தீவிரமாய் இருந்தது. துரோணர் மீது பல அம்புகளைச் செலுத்தினான் அவன். அதனால் கோபமுற்ற துரோணர் விட்ட அம்பு அவன் தலையைக் கொய்தது. சத்யஜித் வீர மரணம் எய்தினான். சத்யஜித்தின் மரணம் கண்ட விராடனின் தம்பி சதானீகன் துரோணரை எதிர்க்க அவனையும் அவர் கொன்றார். இவர்கள் இருவரின் மரணம் பாண்டவர்களுக்கு பேரிழப்பாக இருந்தது.
கங்கைகொண்ட சோழபுரம் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட கங்கைகொண்ட சோழபுர கோயிலில் உள்ள மிகப்பெரிய சிவலிங்கம்.
கர்ணன் திரும்பிய திசையெங்கும் பிணங்கள் குவிந்தன. அவன் வில்லில் இருந்து புறப்படும் அம்பு அது புறப்பட்டதா இல்லையா என்று தெரியும் முன் இலக்கை தாக்கியது. கர்ணனின் அம்புகள் எதிரணியை சல்லடையாக துளைத்தது. துரியோதனன் பூரிப்படைந்தான். கௌரவ படைகள் ஆர்பரித்தன. வீரியத்துடன் போர் புரிந்தன. கர்ணனின் வருகையால் கௌரவ படை சற்று ஓங்கியது. பாண்டவர்கள் திகைத்தனர். கிருஷ்ணர் அர்ஜூனனை பார்த்து பார்த்தாயா கர்ணனை தெரிந்து கொள் அவன் ஆற்றலை. கர்னணனை நேருக்கு நேர் சந்திக்கும் போது தான் நீ உன்னை நிரூபிக்க வேண்டிய சரியான தருணம் வரும் என்றார்.
மற்றறொரு முனையில் அர்ஜுனனின் மகனான அபிமன்யு போர்களத்தில் தன் பெயரை நிலைநாட்டி கொண்டிருந்தான். அன்றைய போரில் அபிமன்யூவின் கை ஓங்கியது. அவனுக்குத் துணையாக கடோத்கஜன் இறங்கினான். துரியோதனனின் தம்பிகள் ஆறு பேரை கொன்றான். இதனால் துரோணரின் வியூகம் உடைக்கப்பட்டது. ஐந்து யானை படைகளை அம்பெய்து கொன்றான். அபிமன்யூவின் போர்த்திறன் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. அவன் வெல்ல முடியாதவனாய் காட்சியளித்தான். தன் மகனின் வீரத்தை கண்டு அர்ஜுனன் மெய் சிலிர்த்தான்.
யுதிஷ்டிரனை பிடிக்க வேண்டுமென்று துரோணர் உறுதி பூண்டார். துரியோதனின் லட்சியத்தை நிறைவேற்ற துரோணர் யுதிஷ்டிரர் மீதே குறியாக இருந்தார். அதற்காக அவர் யுதிஷ்டிரனை நோக்கி சென்ற பாய்ச்சல் பயங்கரமாக இருந்தது. தம்மை எதிர்த்த அனைவரையும் அழித்தார். துரோணருக்கு துணையாக துச்சாதனன் மற்றும் ஆறு தம்பிகள் இருந்தனர். யுதிஷ்டிரரை சுற்றி வளைத்து போர் செய்தனர். யுதிஷ்டிரன் அவர் கையில் அகப்பட்டுக் கொள்ளும் தருவாயில் இருந்தான். அவன் அகப்பட்டுக் கொண்டான் என்று யூகித்த கௌரவர்கள் வெற்றிக்கு அறிகுறியாக கூப்பாடு போட்டது. இதற்கிடையில் தக்க தருணத்தில் அர்ஜுனன் இப்போராட்டத்தில் கலந்து கொண்டான். பீமனும் யுதிஷ்டிரரை காப்பதில் ஈடுபட்டான். அர்ஜூனனின் தாக்குதலைத் துரோணரால் சமாளிக்க முடியவில்லை. ருத்ரமூர்த்தி போர்க்களத்தில் யுத்தம் செய்வது போல் அர்ஜுனன் காட்சியளித்தான். எல்லா பக்கங்களிலிருந்தும் எதிரிப்படைகளை அவன் அழித்தான். அர்ஜுனனின் அஸ்திரங்கள் யுதிஷ்டிரருக்கு கேடயமாக அமைந்து அவரை பாதுகாத்தது. ஆஞ்சநேயரின் அருள் பெற்ற பீமன் அனைவரையும் பந்தாடினான். அர்ஜுனன் பீமன் மற்றும் கடோட்கஜனின் போர் ஆற்றலை கண்ட கௌரவர்கள் நடுங்க ஆரம்பித்தனர். துரோணரும் சோர்ந்து போனார். யுதிஜ்டிரனை பிடிக்க முடியாமல் துரோணர் மிகவும் துயரம் அடைந்தார். மாலையில் சூரியன் மறைய அன்றைய போர் முடிந்தது.