கேள்வி: மலை போல் நம்பினோம் என அனைவரும் உரைக்க இதற்கு விஷேச விளக்கம் யாதும் உண்டா?
மலை போல் என்பது உயரத்துக்கல்ல. மலை போல் என்பது வஜனத்துக்கு என்பேனே. வஜனம் என்றால் கனம் என்பது பொருளாகும். அதாவது அசைக்க முடியாத நம்பிக்கை என்பது பொருளாகும். மேலும் மற்றோர் விளக்கமும் உண்டு. அதுவும் இறைவன் போல் நம்பினோம் என்கின்ற பொருளும் உண்டு. ஏனெனில் மலை மேல் நின்றிட யாம் சிறியதாக உணர்வு பெறுவோம். இத்தகைய நிலையில் அப்பெரும் நம்பிக்கை இறைவன் போல் உம்மையும் நம்பினோமே என்பதோடு மலை போல் நம்பினோம் என்றும் கூறுவார்களே.
