குருநாதர் கருத்துக்கள் #1.45

கேள்வி: கலிகாலத் தன்மையில் வாழ்க்கை கடினமாக இருக்கும் போது இடைவிடாமல் எப்படி தியானம் செய்வது? இறைவன் மீது எவ்விதம் சிந்தனை வைப்பது?

ஒவ்வொரு காரியங்களையும் செய்யும் முன்னதாக அதை இறைவனுக்கு அர்ப்பணித்தல் வேண்டும். இறைவன் என்பது அவரவர்களின் இஷ்ட தெய்வம் ஆகும். பின்பு நேரம் கிடைக்கும் போதெல்லாம் இறைவனது நாமங்களைக் கூறிக்கொண்டிருக்க ஒரு வினாடியும் அவன் எண்ணம் இல்லாமல் இருக்காது என்பது எமது கணக்கு. இக்கணக்கு தவறாகாது. ஏனெனில் இது அனுபவத்தின் வழியாக அடைந்த ஒரு உண்மை. எப்பொழுதும் எக்காலத்திலும் இறை சிந்தனையோடு செயல்படுங்கள். இவ்விதம் செய்திட இடைவிடாமல் இறை தியானம் கைகூடும்.

One thought on “குருநாதர் கருத்துக்கள் #1.45

Leave a Reply to muthukumar67Cancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.