கேள்வி: நாகம் ஒன்றில் தவக்களையை வாயில் இருப்பதைக் கண்டால் தவக்களையை காப்பாற்றினால் நாகத்தின் உணவை பறித்த பாவமும் அப்படியே விட்டு விட்டால் தவக்களையின் உயிரை போக்கிய பாவமும் உண்டு இந்நிலையில் பாவ புண்ணிய நிலைகளை எவ்விதம் அறிவது?
இயற்கையின் வழியில் ஓர் ஜீவனுக்கு மற்றோர் ஜீவன் இரையாகின்றது. நாம் உண்ணும் போது செடி கொடி கீரை வகைகள் பழ வகைகள் மரக்கறி வகைகள் நமக்கு உணவாகின்றன. பெரும் மிருகங்களுக்கு சிறு மிருகங்கள் இரையாகின்றது. இது இயற்கையின் விதி என்பதால் அவ்விதம் நடக்கட்டும். இதில் நமது குறிக்கீடு தேவையற்றதாம். நாம் செய்யும் பணிகள் சீராகவும் நலம் தரும் வகையிலும் செய்வதே போதுமானது. இதுவே எமது விளக்கம் ஆகின்றது.
