குருநாதர் கருத்துக்கள் #1.29

கேள்வி: நாமஸ்மரணம் (இறைவனின் நாமங்களை நினைத்து உச்சரித்து தியானிப்பது) என்பது எக்காலத்திலும் செய்யக் கூடியதா?

நாமஸ்மரணனத்திற்கு எவ்வித கால ஒதுக்கீடும் இல்லை என்றும் சதா நாமமாகவும் சதா மந்திரமாகவும் (எப்பொழுதும்) கூறக்கூடியது. இது எங்கும் எந்த வேலை செய்யும் காலத்திலும் கூறக்கூடியது என்றும் இங்கு எடுத்துரைப்போம். இதற்கு எவ்வித விதி விலக்கும் இல்லை.

கேள்வி: நாம் ஆலயத்திற்கு இறைவனிடம் செல்லும் காலத்தில் நம்மை மனதாலும், உடம்பாலும், தூய்மையாக்கிக் கொண்டு செல்லுதல் வேண்டுமா? இது கட்டாயமா?

பொதுவாக இறை நாட்டம் செல்லும் போது ஆலயம் பூஜை அறை செல்லும் போது உடலை சுத்தப் படுத்துவதோடு மன நிலையையும் சுத்தமாக வைத்துக் கொண்டு செல்லுதல் வேண்டும் என்பது நலம் தருவதாகும். இருப்பினும் இறை பாதையில் செல்ல நாம் முதன்மையில் உடலை தூய்மையாக்கிச் செல்லுதல் வேண்டும் என்பது விதியில்லை. ஏனெனில் நாம் எவ்விதம் இருக்கின்றோமோ அந்நிலையில் சரணடைவதே முக்கியமாகும். இவ்விதம் தாயே அப்பனே என்று சரணடைந்து விட்டால் அவர்கள் நம்மை சுத்தப்படுத்தி அனுப்புவார்கள். ஓர் குழந்தையை தாய் சுத்தப் படுத்துவது கடமை என்கின்றபோது இறைவன் உலகத்திலுள்ள எல்லா தாயையும் விட மேன்மையானவன் என்பதை நினைவில் வைத்துக் கொண்டு செயல்படுவீர்களாக.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.