பங்களாதேஷத்தில் உள்ள சீதா தேவி கோயில் குளத்தில் உள்ள நீரில் நெருப்பு ஆண்டு முழுவதும் எரிந்து கொண்டே இருக்கிறது. இந்த தீயையே மக்கள் சீதா தேவியாக வணங்கி வருகின்றனர். இதை சீதா குண்டம் என்று அழைக்கின்றனர். இயற்கை எரிவாயு காரணமாக நீர் மேல் இந்த நெருப்பு எரிகிறது என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். ஆனால் இந்த எரிவாயு எப்படி இத்தனை ஆண்டுகளாக தொடர்ந்து இந்த இடத்தில் இருந்து வெளி வருகிறது என்று ஆய்வாளர்களால் சொல்ல முடியவில்லை.