வாராஹிதேவி

ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டம் பெர்ஹாம்பூருக்கு அருகில் பூர்ணகிரி மலைத் தொடரில் அமைந்துள்ள ஆதி சக்தி பீடமாக விளங்கும் தாராதாரிணி கோயிலில் அன்னை வாராஹிதேவி. நான்கு கரங்களில் பின் இருக்கரங்களில் சங்கு சக்கரம் ஏந்திய படியும் சாந்தமே உருவாக கையில் குழந்தையுடன் அன்னை காட்சியளிக்கின்றாள்.

மூன்று அடி மண் கேட்ட வாமன அவதாரம்

மகாபலி என்ற மன்னர் கேரளத்தை சிறப்போடு ஆட்சி செய்து வந்தார். தானம் தர்மங்கள் செய்வதில் சிறந்து விளங்கிய இந்த மன்னன் ஒருமுறை வேள்வி செய்யும் போது திருமால் வாமன அவதாரத்தில் வந்து மூன்றடி மண் கேட்டார். மகாபலியும் தந்தான். ஒரு அடியால் இந்த பூமியையும் மறு அடியால் விண்ணையும் அளந்தார் திருமால். மூன்றாவது அடிக்காக தனது தலையையே கொடுத்தான் மகாபலி மகாராஜா. அவருக்கு முக்தி அளிக்க வேண்டி அவர் தலையில் கால் வைத்து அவரை பாதாள உலகிற்கு தள்ளினார் திருமால். தன் நாட்டுமக்கள் மீது மிகுந்த அன்பு வைத்திருப்பதால் வருடம் ஒருமுறை பாதாளத்தில் இருந்து தனது நாட்டுக்கு வந்து மக்களை கண்டு மகிழும் வரம் வேண்டினான் மகாபலி. அதன்படி ஒவ்வொரு திருவோணத் திருநாள் அன்று மகாபலி பாதாள உலகில் இருந்து பூலோகத்திற்கு வருவதோடு தங்களது வீடுகளுக்கும் வந்து செல்வதாக கேரள மக்கள் நம்புகிறார்கள் இதனை நினைவு கூர்ந்து மகாபலியை மீண்டும் வரவேற்கும் வகையில் ஓணம் பண்டிகை ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. இந்த சிற்பம் உள்ள இடம் ஜகன்னாதர் கோவில். கிதிர்பூர் கொல்கத்தா மாநிலம்.

தேரோட்டியாக கிருஷ்ணர்

மகாபாரத காப்பியத்தில் பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையே 18 நாட்கள் நடந்த குருக்ஷேத்திரப் போரில் கிருஷ்ணர் அர்ஜூனனின் தேருக்குச் சாரதியாக (தேரோட்டி) செயல்பட்ட சிற்பம். இடம் ஸ்ரீசென்னகேசவசுவாமி கோயில். புஷ்பகிரி ஆந்திரப்பிரதேசம்.

வாயுபகவான்

அஷ்டதிக் பாலகர்களில் ஒருவரான வாயுபகவனின் புடைப்புச் சிற்பம். காற்றின் கடவுள் வாயுபகவான் தன் மனைவி வாயுஜாயை உடன் அங்குசம் ஏந்தி தன் வாகனமான மானின் மீது அமர்ந்துள்ளார். இடம் அரகேஸ்வரர் கோயில். கர்நாடக மாநிலம் சாமராசநகர் மாவட்டம் ஹோல் சூலூரில் உள்ள வில்.

விஷ்ணு லட்சுமியுடன் கருடன்

ஒற்றைக் கல்லில் கருடன் விஷ்ணு லட்சுமி மற்றும் 8 பாம்புகள் என 11 கடவுள்கள் செதுக்கப்பட்டுள்ளனர். 11 மற்றும் 12ஆம் நூற்றாண்டில் ராமானுஜாச்சாரியாரால் நிறுவப்பட்ட சிலை இது. சுமார் 1100 ஆண்டுகள் பழமையானது. கருட பகவான் ஒரு காலில் மண்டியிட்டு வலது கையில் விஷ்ணு பகவானனையும் இடது கையில் லட்சுமி தேவியையும் ஏந்தி நிற்கிறார். இடது கை சிறிது உயர்ந்த நிலையில் உள்ளது. இது லட்சுமியின் செல்வச் செழிப்பைக் குறிக்கிறது. மகாவிஷ்ணுவும் கருடனும் மகாலட்சுமியை நோக்கி தரிசனம் செய்கின்றனர். ஆனால் லட்சுமி தேவி நேராக அமர்த்த வண்ணம் தன்னை நாடி வரும் பக்தர்களை ஆசீர்வதிக்கிறார். கருடன் சிலை சுமார் 5.5 அடி உயரம் கொண்டது. அதைச் சுற்றி 8 பாம்புகள் அவரது அணிகலன்களாக உள்ளன. இது விஜயநகர காலத்தில் கட்டப்பட்ட கோவில். இடம்: கருடதேவஸ்தானம். கோலாதேவி கிராமம். கோலார் மாவட்டம். கர்நாடக மாநிலம்.

தேவகி தாயாருடன் பாலகிருஷ்ணர்

கோவா மாநிலத்தில் மார்செல் இடத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற தேவகி கிருஷ்ணர் கோவிலில் மட்டுமே கிருஷ்ண பரமாத்மா தேவகி தாயாரின் இடுப்பில் அமர்ந்திருப்பார். கிருஷ்ணரின் குழந்தை வடிவத்துடன் அன்னை தேவகி வழிபடப்படும் ஒரு அரிய கோயிலாகும்.

இரட்டை நந்தி

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி செல்லும் சாலையில் 8 கிலோமீட்டரில் உள்ள சர்க்கார் பெரியபாளையத்தில் சுக்ரீஸ்வரர் ஆலயம் உள்ளது. இக்கோயில் இங்கு 2500 ஆண்டுகள் பழமையானது. இந்த ஆலயத்தில் இரண்டு நந்திகள் ஒன்றன்பின் ஒன்றாக இருக்கின்றன. முதலில் உள்ள நந்திக்கு கொம்பு காது இல்லை. உடைந்த நிலையில் காணப்படுகிறது.

ஒரு முறை விவசாயி ஒருவரின் நிலத்தில் மாடு ஒன்று மேய்ந்தது. ஆத்திரமடைந்த விவசாயி அந்த மாட்டின் காதையும் கொம்பையும் வெட்டினார். மறுநாள் கோவிலுக்குச் சென்ற அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அங்கிருந்த கற்சிலையான நந்தியின் கொம்பும் காதும் வெட்டப்பட்டு ரத்தம் வழிந்துள்ளது. வந்தது. தெய்வ நந்தி என்பதை அறியாமல் செய்த தவறுக்கு விவசாயி வருந்தினார். அதற்கு பிராயச்சித்தமாக புதிய நந்தி சிலை ஒன்றை பழைய நந்தி சிலையின் பின்பாக பிரதிஷ்டை செய்தார்.

சாதிபிரல்ல அகஸ்தியேஸ்வரர்

சிவலிங்கத்தின் தலையில் சடாமுடி உள்ளது. சடாமுடியில் இருந்து வரும் தலைமுடி சிவலிங்கத்தின் பாணத்தில் தலையை சுற்றி பரந்து விரிந்திருக்கிறது. இக்கோயில் சோழர் காலத்தில் கட்டப்பட்டு பின்னர் வெவ்வேறு வம்சங்களால் புணரமைக்கப்பட்டது. 1500 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட இக்கோயிலில் 12 கல்வெட்டுகள் உள்ளன. 9 ஆம் நூற்றாண்டில் குறிப்பிட்ட அம்மனா பேக்கடா கோயிலை மீண்டும் புதுப்பித்து கட்டினார். இடம் கமலாபுரம் கடப்பா மாவட்டம். ஆந்திரப் பிரதேச மாநிலம்.

சூரிய பகவான்

தேரோட்டி அருணா ஏழு குதிரைகள் கொண்ட தேரை ஓட்ட தேரில் இரண்டு தாமரை மலர்களை ஏந்தியபடி அமர்ந்திருக்கும் சூரிய பகவான். தேர் வேகமாக செல்வதை குறிக்கும் வகையில் சூரிய தேவனின் பின்னால் பறக்கும் அவரின் வஸ்திரம். இடம் வாராஹி தேயுலா கோவில். ஒடிசா மாநிலத்தில் உள்ள கோனார்க் சூரிய கோவிலுக்கு வடக்கே 30 கிமீ தொலைவில் உள்ள சௌராஷி என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது. 10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சிற்பம்.