பைரவர்களின் தலைமையை ஏற்றவர். இவருக்கு சட்டைநாதர் என்று பெயர். நின்ற திருக்கோலத்தில் வலது கரம் அபய முத்திரையைக் காட்டி அருள்கிறார். இடது கரத்தில் கபத்தை வைத்திருக்கிறார். இடம் குற்றம்பொருத்தநாதர் கோவில் தலைஞாயிறு திருகருப்பறியலூர் நாகை மாவட்டம்.


பைரவர்களின் தலைமையை ஏற்றவர். இவருக்கு சட்டைநாதர் என்று பெயர். நின்ற திருக்கோலத்தில் வலது கரம் அபய முத்திரையைக் காட்டி அருள்கிறார். இடது கரத்தில் கபத்தை வைத்திருக்கிறார். இடம் குற்றம்பொருத்தநாதர் கோவில் தலைஞாயிறு திருகருப்பறியலூர் நாகை மாவட்டம்.
சிவபெருமான் சண்டேச அனுக்கிரக மூர்த்தியாக வந்து விசாரசருமருக்கு திருத்தொண்டர்களின் தலைவர் பதவியான சண்டேசுர பதவியை கொடுத்தருளி தனது திருமுடியிலுள்ள கொன்றை மலரை எடுத்து விசாரசருமருக்குச் சூடி அருளினார். சண்டேசுவர பதவியைப் பெற்றமையால் சண்டேசுவர நாயனார் என்று அழைக்கப்படுகிறார். இவரை சண்டேசர் சண்டிகேசுவர் என்றும் அழைக்கப்படுகிறார். இடம் ஸ்ரீராமேஸ்வர கோவில் நரசமங்கலம் சாமராஜ்நகர் தாலுக்கா கர்நாடக மாநிலம்.
அறுபத்து மூன்று சிவ திருமேனிகளுள் ஒன்றாக கங்காள மூர்த்தி வடிவம் வணங்கப்படுகிறது. கங்காளம் என்றால் எலும்பு என்று பொருள். சிவபெருமான் வாமனரின் முதுகெலும்பை கையில் தண்டாக மாற்றிக் கொண்ட கோலமே கங்காள மூர்த்தி ஆகும். கங்காளர் வடிவமும் பிச்சாண்டவர் வடிவமும் சில இடங்களில் ஒரே மாதிரியான தோற்றம் போல தோன்றினாலும் அவை வெவ்வேறான வடிவங்களாகும். இடம் கைலாசநாதர் கோவில் காஞ்சிபுரம்.
தில்லைவனத்தில் ஆடல்வல்லான் தமது ஆனந்த தாண்டவத்தினை மீண்டும் ஒருமுறை நிகழ்த்திட எண்ணினார். இந்நிலையில் பார்வதி தேவி தமது தற்பெருமையினால் சிவனை நாட்டியப் போட்டிக்கு அழைத்தார். இதனை ஏற்றுக் கொண்ட ஆடல்வல்லான் இப்போட்டியில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்கள் தில்லையை விட்டு விலகி அதன் புறப்பகுதியில் வாழ்ந்திட வேண்டும் என்று நிபந்தனை விதித்தார். அந்த நிபந்தனையுடன் முனிவர்கள் தேவர்கள் முன்னிலையில் இருவருக்குமிடையே நாட்டியப் போட்டி நடைபெற்றது. இந்நிகழ்வில் ஓர் கர்ண அமைப்பில் சிவன் தமது காலினை விண்ணை நோக்கி உயர்த்தினார். அந்நிலையில் அது போன்ற ஓர் கர்ணத்தைப் பெண் என்ற நிலையில் பார்வதி தேவியினால் நிறைவேற்ற முடியாததால் தலை குனிந்தார். நிபந்தனைபடி பார்வதி தேவி தில்லையின் புறப்பகுதியில் குடியேறினார் என்பது ஊர்த்துவ தாண்டவம் நடைபெற்ற புராண நிகழ்வாகும். இடம் சௌந்தரராஜப்பெருமாள் கோயில். தாடிக்கொம்பு திண்டுக்கல்.
கேரளா கொச்சியில் உள்ள நாட்டுப்புற அருங்காட்சியகம் இந்த பார்வத்தி சிலை உள்ளது. காலம் சுமார் 18 ஆம் நூற்றாண்டு.
மாணிக்கவாசகரை ஆட்கொள்ள நரியை குதிரையாக்கி குதிரையை மீண்டும் நரியாக்கி காட்டுக்குள் ஓடச் செய்து ஊருக்குள் வெள்ளம் வரச் செய்து வெள்ளத்தை அடைக்க கிழவிக்காக பிட்டுக்கு மண் சுமந்து கரையை அடைக்காமல் போக்கு காட்டி மன்னனால் முதுகில் பிரம்படிபட்டு அது அனைவர் முதுகிலும் வலி பெறச் செய்து கிழவி வந்தி அமைச்சன் மணிவாசகன்; மன்னன் அரிமர்த்தனன் என மூவருக்கும் முக்தி அளித்தார் சிவபெருமான். சிவனின் கையில் நரம்புகள் புடைத்ததுக் கொண்டு இருப்பதைக் காணலாம். இடம் ஆத்மநாத சுவாமி கோயில். திருப்பெருந்துறை. புதுக்கோட்டை மாவட்டம்.
அசுரர்களை அழிக்க சிவன் இங்கிருந்த முருகனை அசுர வதத்திற்கு கிளம்பும்படி கூற முருகனும் கிளம்பினார். அப்போது சிவனும் தேவர்களும் முருகருக்கு பல ஆயுதங்களை கொடுத்தனர். அப்போது திருமால் தனது சங்கு சக்கரத்தை கொடுத்தார். ஆயுதங்களுடன் சென்ற முருகன் அசுரர்களை சம்ஹாரம் செய்தார்.
இந்த நிகழ்வின் அடிப்படையில் இங்குள்ள முருகன் கைகளில் கேடயம் வில் அம்பு சாட்டை கத்தி சூலாயுதம் வஜ்ரம் மற்றும் திருமாலின் ஆயுதங்களான சங்கு சக்கரத்துடன் காட்சி தருகிறார். சங்கு சக்கரமே இவரது பிரதான ஆயுதமாக இருக்கிறது. இந்திர மயில் மீது அமர்ந்த கோலத்தில் இருக்கும் முருகர் கல்யாண சுந்தர சண்முக சுப்பிரமணியர் என்று அழைக்கப்படுகிறார். அருகில் வள்ளி தெய்வானையும் இருக்கின்றனர். இவரது திருவாச்சி ஓம் வடிவில் அமைக்கப்பட்டிருக்கிறது. அருகில் மகாலட்சுமி சன்னதி இருக்கிறது. திருமாலின் ஆயுதங்களுடன் முருகனையும் அருகில் மகாலட்சுமியையும் ஒரே சமயத்தில் இங்கு தரிசிக்கலாம். இடம் படிக்காசுநாதர்கோயில் அழகாபுத்தூர்.
சைவம் மற்றும் வைணவத்தை சாஸ்தா தன்னுள் இணைத்து அவர்களின் ஒற்றுமையை உறுதிப்படுத்துகிறார். இந்தச் சிற்பத்தில் சாஸ்தா பகவான் ஒரு பீடத்தில் அமர்ந்தபடி வலது காலை கீழே தொங்கவிட்ட நிலையில் இடது காலை மடக்கி ஆசனத்தில் அமர்ந்துள்ளார். இடம் திருவனந்தபுரம் நேபியர் மியூசியம். காலம் கிபி 15 ஆம் நூற்றாண்டு.
திருமாலின் பத்து அவதாரர்களில் மூன்றாவது அவதாரம் வராக அவதாரமாகும். இந்த அவதாரத்தில் இரணியனின் தம்பி இரண்யாட்சன் என்ற அசுரனுடன் போர் செய்து வென்றார். இடம் கம்போடியா. 10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சிற்பம்.
அறுபத்து மூன்று சிவ திருமேனிகளுள் ஒன்றாக காலசம்ஹாரர் வணங்கப்படுகிறார். காலன் என்று அழைக்கப்படும் யமனை அழித்த சிவ உருவம் கால சம்ஹாரர் எனவும் காலந்தகர் எனவும் அழைக்கப்படுகிறார். இடம்: திருப்பூதீஸ்வரர் கோவில் கொடும்பாளூர். புதுக்கோட்டை மாவட்டம்