மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி மஹாராஜ் வாஸ்து சங்க்ரஹாலயா அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள துர்காதேவி மகிஷாசுரமர்த்தினியின் சிற்பம்

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி மஹாராஜ் வாஸ்து சங்க்ரஹாலயா அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள துர்காதேவி மகிஷாசுரமர்த்தினியின் சிற்பம்
கண்ணனை ஒரு புறமிருந்து பார்த்தால் ருக்மிணியை மட்டும் அணைத்திருப்பதாய் தோன்றும். மறுபுறம் பார்த்தால் சத்யபாமாவை மட்டும் கைபிடித்திருப்பதாய் தோன்றும். தூணின் கோண பகுதியில் நின்று கண்டால் கண்ணன் இருவரையும் கைபிடித்திருப்பதை காணலாம்.
பழமையான சிவலிங்கம்
உத்தரபிரதேச மாநிலம் மதுரா அருங்காட்சியகத்தில் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ள பழமையான சிவலிங்கம்.
அரண்மனையில் மன்னர் திருதராஷ்டிரர் துரோணாச்சாரியரை அழைத்தார். அவர் வந்ததும் எனக்கு ஒரு சந்தேகம் என்று ஆரம்பித்தார் மன்னர் திருதராஷ்டிரன். சீடர்களிடம் பாரபட்சம் காட்டாமல் வித்தைக்களை கற்பிப்பது தானே நல்ல ஆசானின் இலக்கணம்? என்று திருதராஷ்டிரன் கேட்டார். ஆம் மன்னா பதிலளித்தார் துரோணர். தாங்கள் நல்லதோர் ஆசானாகத் திகழ வேண்டும் என்பதே எனது விருப்பம். மன்னா என்ன கூறுகிறீர்கள்? திடுக்கிட்டார் துரோணர். துரோணரே பாண்டவர்களையும் கௌரவர்களையும் தாங்கள் சரிசமமாக பாவித்து வித்தைகளைக் கற்பிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என்றார் திருதராஷ்டிரர்.
பாண்டவர்கள் மீது பொறாமை கொண்ட கௌரவர்கள் தன்னைப் பற்றி தவறாக ஏதோ சொல்லி இருக்கிறார்கள் என்று உணர்ந்து கொண்டார் துரோணர். பிறகு அவர் மன்னிக்க வேண்டும் மன்னா நான் எந்த விதப் பாகுபாடும் காட்டுவதில்லை. ஆர்வம் முயற்சி உத்வேகம் தனித்தன்மை போன்ற இயல்புகள் எல்லோரிடமும் ஒரே மாதிரி அமையவில்லை என்பதைத் தாங்கள் உணர வேண்டும் என்று திருதராஷ்டிரனிடம் எடுத்துக் கூறினார். அதோடு கௌரவர்களுக்கு ஒரு பாடம் புகட்ட வேண்டும் என்று துரோணர் எண்ணினார். மறு நாள் காலை நேரத்தில் பாண்டவர்களும் கௌரவர்களும் வித்தைகள் பயில்வதற்காக வந்து துரோணரை வணங்கி நின்றனர். அவர்களிடம் துரோணர் சீடர்களே இன்று நான் ஓர் அரிய வித்தையை உங்களுக்குக் கற்பிக்கப் போகிறேன். அதற்காக நாம் காட்டுக்குச் செல்லலாம் என்றார். உடனே அனைவரும் துரோணருடன் புறப்பட்டனர்.
ஓர் ஆற்றங்கரையை அடைந்தனர். சீடர்களை அங்கு அமருமாறு கூறிய துரோணர் ஆற்று மணலில் தன் விரலால் ஒரு ஸ்லோகத்தை எழுதினார். சீடர்களே இன்று உங்களுக்குக் கற்பிக்கப் போகும் வித்தை மூலம் ஒரு காட்டையே எரித்து பஸ்பமாக்கி விடலாம். நான் எவ்வாறு இந்த ஸ்லோகத்தை உச்சரித்து அம்பைப் பிரயோகிக்கிறேன் என்று கூர்ந்து கவனியுங்கள் என்றவர் அர்ஜுனனிடம் அர்ஜுனா கமண்டலத்தை எடுத்து வர மறந்து விட்டேன். நீ விரைவாகச் சென்று ஆசிரமத்தில் இருந்து அதை எடுத்து வா என்றார். குருநாதர் கற்பிக்கும் இந்த அரிய வித்தையைக் கற்கும் வாய்ப்பு நழுவி விடுமோ? என்ற கவலையுடன் குருநாதரின் குடிலை நோக்கி விரைந்தான் அர்ஜுனன். கமண்டலத்துடன் திரும்பியவன் அவர்கள் ஆற்றங்கரையைத் தாண்டிச் செல்வதைப் பார்த்தான். உடனே ஆற்றைக் கடந்து அவர்களிடம் சென்றான். கமண்டலத்தை குருநாதரிடம் தந்தான். குருவே என்னை மன்னியுங்கள் சற்றுத் தாமதமாகி விட்டது என்றான் அர்ஜுனன். அவனிடமிருந்து கமண்டலத்தைப் பெற்றுக் கொண்ட துரோணர் மற்றவர்களிடம் தனது உரையைத் தொடர்ந்தார் நல்லது சீடர்களே இன்று கற்பித்த வித்தையில் எவருக்காவது சந்தேகம் இருந்தால் என்னிடம் கேளுங்கள் என்றார். குருவே நான் வருவதற்குள் பாடம் முடிந்து விட்டதா? என்று ஏமாற்றமாகக் கேட்டான் அர்ஜுனன். ஆம் என்று அவனுக்கு பதிலளித்த துரோணர் மற்றவர்களை நோக்கி சரி ஒவ்வொருவராக வந்து ஸ்லோகம் சொல்லி அம்பைப் பிரயோகித்து அந்தக் காட்டுப் பகுதியை எரியுங்கள் பார்க்கலாம் என்றார்.
கௌரவர்கள் நூறு பேர் பாண்டவர்கள் நால்வர் (அர்ஜுனனைத் தவிர) என ஒவ்வொருவராக வந்து ஸ்லோகத்தை உச்சரித்து அஸ்திரம் பிரயோகித்தனர். ஆனால் பலன் இல்லை. என் உழைப்பு மொத்தமும் வீண் என்று கோபத்தில் கத்தினார் துரோணர். குருவே தாங்கள் ஆணையிட்டால் அந்தக் காட்டை நான் எரித்துக் காட்டுகிறேன் என்று அர்ஜுனன் முன்வந்தான். உடனே கௌரவர்களிடையே பெரும் சலசலப்பும் கேலிக் கூக்குரல்களும் எழுந்தன. பாடம் நடத்தும் போது இவன் ஆளே இல்லை. பாடத்தைக் கவனித்த நம்மாலேயே ஒன்றும் செய்ய முடியவில்லை. இவன் எரித்துக் காட்டப் போகிறானாம். நல்ல வேடிக்கை என்று இகழ்ந்தனர். வீணாக குருவின் கோபத்துக்கு ஆளாகப் போகிறான் என்றான் கௌரவர்களில் ஒருவன். துரோணர் அர்ஜுனனிடம் எங்கே எரித்துக் காட்டு. பார்க்கலாம் என்றார். வில்லையும் அம்பையும் எடுத்த அர்ஜுனன் கண்களை மூடி ஸ்லோகத்தை உச்சரித்து அம்பைப் பிரயோகித்தான். உடனே காடு திகுதிகுவென தீப்பிடித்து எரிந்தது கௌரவர்கள் உட்பட அனைவருக்கும் பிரமிப்பு. அர்ஜுனா மந்திர உபதேசம் செய்யும் போது நீ இங்கு இல்லை. பிறகு எப்படி உன்னால் இதைச் சாதிக்க முடிந்தது? என்று துரோணர் கேட்டார். குருவே கமண்டலத்துடன் ஆற்றங்கரைக்கு வந்த போது அங்கு நீங்கள் மணலில் எழுதிய மந்திர ஸ்லோகம் பார்த்தேன் படித்தேன். அதை மனதில் பதிய வைத்தேன் அவ்வளவுதான் என்றான். துரோணரின் முகத்தில் மகிழ்ச்சி தென்பட்டது. ஒரு சீடனிடம் ஆர்வம் இருந்தால் குருவின் போதனையை எப்படியும் கற்றுக் கொள்ளலாம் என்பதற்கு அர்ஜுனனே சாட்சி என்ற துரோணர் கௌரவர்களைப் பார்த்தார். வெட்கித் தலை குனிந்தனர் கௌரவர்கள்.
மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள ஒரு மலை சதுரகிரியாகும். சதுர் என்றால் நான்கு. கிரி என்றால் மலை நான்கு திசைகளிலும் திசைக்கு நான்கு மலைகள் வீதம் மொத்தம் பதினாறு மலைகள் இருக்கின்றன. சதுரகிரி தன்னுள் கிழக்கே சூரிய கிரி குபேர கிரி சிவகிரி சக்தி கிரி மேற்கே விஷ்ணுகிரி சந்திர கிரி வடக்கே கும்ப கிரி மகேந்திர கிரி இந்திர கிரி சஞ்சீவி கிரி தெற்கே பிரம்ம கிரி சித்தி கிரி இராம கிரி உதய கிரி இருக்கிறது.
சதுரகிரி மலை அடிவாரத்திலுள்ள கோட்டையூரில் பிறந்தவன் பச்சைமால். இவன் பசுக்களை மேய்த்து பிழைப்பு நடத்தி வந்தான். இவனது பெற்றோர் தில்லைக்கோன் திலகமதி. மனைவி சடைமங்கை. இவள் தன் மாமனார் வீட்டிற்கு தினமும் அவர்களுக்குத் தேவையான பாலைக் கொடுத்து விட்டு வருவாள். ஒருமுறை பால் கொண்டு சென்ற போது எதிரில் வந்த துறவி அவளிடம் குடிக்க பால் கேட்டார். சடைமங்கையும் கொடுக்கவே தினமும் தனக்கு பால் தரும்படி கேட்டார். சடைமங்கையும் ஒப்புக்கொண்டாள். வழக்கத்தை விட சற்று பால் குறைவதைக் கவனித்த சடைமங்கையின் மாமனார் இதுபற்றி மகன் பச்சைமாலுக்கு தெரிவித்து விட்டார். பச்சைமால் தனது மனைவியை பின் தொடர்ந்து சென்று அவள் துறவிக்கு பால் தந்ததை அறிந்து கோபம் கொண்டு அடித்தான்.
தனக்கு பால் கொடுத்ததால் அடி வாங்கிய சடைமங்கை மேல் இரக்கம் கொண்ட துறவி அவளுக்கு சடதாரி என்று பெயரிட்டு காக்கும் தேவியாக சிலையாக்கி விட்டு மறைந்தார். மனைவியை பிரிந்த பச்சைமால் மனம் திருந்தி சதுரகிரிக்கு வந்த அடியவர்களுக்கு பால் கொடுத்து உதவி செய்தான். சுந்தரானந்த சித்தர் என்பவர் செய்த பூஜைக்கும் பால் கொடுத்து உதவினான். சித்தர்கள் செய்த பூஜையில் மகிழ்ந்த சிவன் இத்தலத்தில் அவர்களுக்கு காட்சி கொடுத்தார். பச்சைமாலுக்கும் தரிசனம் கொடுக்க நினைத்த இறைவன் ஒருநாள் சிவன் ஒரு துறவியின் வேடத்தில் சிவ பூஜைக்கு பால் கொடுக்கும் காராம் பசுவின் மடுவில் வாய் வைத்து பால் குடித்து கொண்டிருந்தார். இதைக்கண்ட பச்சைமாலுக்கு கடும் கோபம் ஏற்பட்டு துறவியின் தலையில் கம்பால் அடித்தான். அப்போது சிவன் புலித்தோல் அணிந்து காட்சி கொடுத்தார். சிவனை அடித்து விட்டதை அறிந்த பச்சைமால் மிகவும் வருந்தி அழுதான். சிவபெருமான் அவனை தேற்றி நீ தேவலோகத்தை சேர்ந்தவன். உன் பெயர் யாழ்வல்லதேவன் என்று தெரிவித்து மறைந்தார்.
சதுரகிரி மலையில் ஐந்து கோவில்கள் உள்ளன. 1. மகாலிங்கம் 2. சுந்தரமூர்த்தி லிங்கம் 3. சந்தன மகாலிங்கம் 4. இரட்டை லிங்கம் 5. காட்டு லிங்கம். சதுரகிரி மலையில் கிடைக்கும் பல அற்புத மூலிகைகள் உள்ளது. முறிந்த எலும்புகளை ஒன்று கூட்டி இந்த மூலிகை இலையை வைத்துக் கட்டினால் அதிசயத்தக்க வகையில் எலும்பு கூடும். பூமியில் எங்கும் காணக் கிடைக்காத ஜோதி விருட்சம் சாயா விருட்சம் போன்ற அதி அற்புதமான மரங்கள் மூலிகைகள் இலைகள் இம்மலையில் மேல் உள்ளன. இறவாமை அளிக்கக்கூடிய கருநெல்லி போன்ற அரிய கனிவகைகள் இருக்கின்றன.
சதுரகிரி மலையில் வாழும் மலைவாழ் மக்கள் பளியர்கள் வழிபட்டு வந்து பின்னர் மன்னர் திருமலை நாயக்கர் ஆட்சி காலத்தில் இராமகாடையா நாயக்கர் என்பவரால் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் சந்தன மகாலிங்கம் கோவில்கள் கட்டப்பட்டது. சுந்தரமகாலிங்கம் சன்னதியில் மகாலிங்கம் சாய்ந்த நிலையில் இருக்கிறார். 1950 ஆம் ஆண்டு வரை இக்கோவில் பாளையக்காரர் பராமரிப்பில் இருந்து வந்தது. இம்மலை பகுதி 1950 ஆம் ஆண்டுக்குப் பிறகு வனத்துறை கட்டுப் பாட்டில் இருந்து வருகிறது.
கோரக்க முனிவரால் உதகம் என்று குறிப்பிடப்படும் உதகநீர் சுனையும் உண்டு. மருத்துவ குணம் கொண்ட மரம் செடி கொடிகளின் மேல் பட்டு இறங்கி வரும் தண்ணீர் தேங்கிய சுனைகளாக இருக்கிறது. இந்தச் சுனையில் உள்ள நீருக்குத் தான் உதகம் என்று பெயர். பார்ப்பதற்கு குழம்பிய சேற்று நீர் போல் காணப்படும். இந்த உதகநீர் மருத்தவ குணங்களைக் கொண்டது. இதுபோன்ற நீரை நாம் பருகிவிட முடியாது. விபரங்கள் அறிந்தவர்களின் மூலமும் துணையோடு அந்நீரை மருந்தாக பயன்படுத்த வேண்டும்.