பந்தார் விரலி

இராமானுஜரின் ஐந்து குருக்களில் திருக்கோட்டியூர் நம்பியும் ஒருவர். இவரிடத்தில் அஷ்டாக்ஷர மந்திரோபதேசம் பெறுவதற்காக 36 முறை அலைந்தார். அத்தனை முறையும் இன்னும் உனக்கு பக்குவம் வரவில்லை என்று இராமானுஜரை திருப்பி அனுப்பி விட்டார் குருவாகிய நம்பி. அதனால் தினமும் தன்னுடைய குருவை சந்திக்க வேண்டும் என்று திருக்கோஷ்டியூரிலேயே தங்கி தினமும் குருவை தரிசித்தார் இராமானுஜர். மார்கழி மாதம் ஒரு நாள் அதிகாலையில் இராமானுஜர் வீதியில் சங்கீர்த்தனம் செய்து கொண்டே தன்னுடைய குருவை பார்க்க சென்று கொண்டிருந்தார். மார்கழி மாதம் என்பதினால் ஒவ்வொரு வீட்டு வாசலில் கோலம் போட்டு அதில் ஒரு பூ வைத்து விளக்கு வைப்பார்கள். இராமானுஜர் குருவின் வீட்டு வாசலில் வந்து நின்றார். அப்போது நம்பியின் வீட்டு வாசலில் அவரது பெண் இருட்டில் கோலம் போட்டு கையில் விளக்குடன் நிற்பதைப் பார்த்ததும் ‘ஆ’ என்று கத்தி மயக்கம் போட்டு விழுந்து விட்டார். அந்தப் பெண் பயந்து வீட்டின் உள்ளே ஓடிச் சென்று நம்பியிடம் நமது வீட்டு வாசலில் ஒருவர் திருப்பாவை பாடிக் கொண்டே வந்து நின்றார். வந்தவர் என்னைப் பார்த்ததும் மயக்கம் போட்டு விழுந்து விட்டார் என்று சொன்னாள். இதனைக் கேட்ட நம்பி அவர் என்ன பாட்டு திருப்பாவையில் பாடிக் கொண்டு வந்தார் என்று கேட்டார். பந்தார் விரலி பாடல் என்றாள்.

பந்தார் விரலி பாடலின் அர்த்தம் என்ன என்றால் கையில் விளக்குடன் அந்த மகாலக்ஷ்மியின் தரிசனம் எனக்குக் கிடைக்கிறது என்று அர்த்தம். அப்போது திருக்கோஷ்டியூர் நம்பி தன் மகளிடம் சொல்கிறார். அவன் மேல் ஒன்றும் குறையில்லை. அந்தப் பாட்டில் மகாலட்சுமி எதிரில் வந்தாய் என்ற வார்த்தையை அவன் பாடும் போது அவன் முன் நீ கையில் விளக்குடன் நின்றிருப்பாய். அந்தப் பாட்டில் அவன் இலயித்து இருந்ததால் உன்னைப் பார்த்ததும் மகாலட்சுமி நிற்பது அவன் கண்களுக்கு தெரிந்திருக்கிறது. ஆகையால் அவன் அப்படியே மயங்கி விழுந்து விட்டான் என்றார்.

இதுபோல் எந்தப் பாட்டு நாம் பாடினாலும் அந்தப் பாட்டில் நம்மை ஐக்கியப்படுத்தி இலயித்துப் பாடும் போதுஅதன் பலன் முழுமையாக இருக்கும். மந்திரங்கள் நாம் ஜெபிக்கும் போதும் மந்திரத்தின் தெய்வத்தை நினைத்துக் கொண்டே தன்னை அதில் ஐக்கியப்படுத்தி ஜெபம் செய்வதினால் அந்த மந்திரத்தின் சித்தி விரைவாக கிடைக்கும்.

திருப்பாவை பாடல் 18

உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன்
நந்தகோபாலன் மருமகளே! நப்பின்னாய்
கந்தம் கமழும் குழலி கடை திறவாய்
வந்தெங்கும் கோழி அழைத்தன காண் மாதவிப்
பந்தல் மேல் பல்கால் குயிலினங்கள் கூவின காண்
பந்தார் விரலி! உன் மைத்துனன் பேர்பாட
செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப
வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.

பொருள்: மதம் கொண்ட வலிமையான யானையை தன்னிடத்தே கொண்டனும் போரில் பின்வாங்காத தோள்வலிமை உடையவனுமான நந்தகோபனின் மருமகளே! நப்பின்னை பிராட்டியே! ((நப்பின்னை என்றாள் கண்ணனுக்கு முறைப்பெண் என்று பொருள்) வாசனை சிந்தும் கூந்தலை உடையவளே! உன் வாசல் கதவைத் திற! கோழிகள் கூவும் ஒலி நாலாபுறத்தில் இருந்தும் கேட்கிறது. குருக்கத்திக் கொடியின் மேல் அமர்ந்து குயில்கள் பாடத் துவங்கி விட்டன. பூப்பந்தைப் போன்ற மென்மையான விரல்களைக் கொண்டவளே! உன் கணவனின் புகழ் பாட நாங்கள் வந்துள்ளோம். அளவுமாறாத நீ உனது செந்தாமரை மலர் போன்ற கைகளில் உள்ள வளையல்களின் ஓசைகள் ஒலிக்கும் கைகளால் மகிழ்ச்சியுடன் வந்து கதவைத் திறந்தால் எங்கள் உள்ளம் மகிழ்ச்சியடையும் என்று அழைக்கிறாள் ஆண்டாள்.

விளக்கம்: பெருமாள் கோயிலுக்குப் போனால் நேராக சுவாமி சன்னதிக்கு போகக்கூடாது. தாயாரை முதலில் சேவிக்க வேண்டும். ஏன் என்றால் நமது வீட்டில் அப்பாவிடம் கோரிக்கை வைத்தால் எதற்கடா அதெல்லாம் என்பார். அதையே அம்மாவிடம் சொல்லி அப்பாவிடம் கேட்கச் சொன்னால் அதே கோரிக்கை பத்தே நிமிடத்தில் நிறைவேறி விடும். இதுபோல் தான் நாராயணனிடம் ஒரு கோரிக்கை வைத்தால் அந்த மாயன் அவ்வளவு எளிதில் ஏற்க மாட்டான். அதையே தாயாரிடம் சொல்லி வைத்து விட்டால் அவனால் தப்பவே முடியாது. கண்ணனின் மனைவி நப்பின்னையை (மகாலட்சுமியை) எழுப்பி கண்ணனை எழுப்புகிறார்கள் பாவை நோன்பிருக்கும் பெண்கள்.

இந்த திருப்பாவைப் பாடலை தினமும் இராமானுஜர் இலயித்து பாடியது போல் பாடி பரந்தாமனை வணங்கினால் வாழ்வில் குன்றாத செல்வமும் குறையாத மகிழ்வும் தந்து நம்மை உய்விப்பான் மாலவன்.

கடவுள் இருக்கின்றார்

ஒரு நாத்திகர் இருந்தார். அவர் ஒரு மக்கள் கூட்டத்தில் பேசும் போது கடவுள் என்ற ஒருவர் கிடையவே கிடையாது என்று கடவுளை அவன் விருப்பத்திற்கு திட்டினான். நான் வேண்டுமானால் சவால் விடுகிறேன். கடவுள் என்று ஒருவர் இருந்தால் இன்னும் 30 நிமிடத்திற்குள் இந்த மேடைக்கு வந்து என்னை கொல்ல வேண்டும். அப்போது நான் கடவுள் இருக்கிறார் என்று ஏற்கிறேன் என்று சொல்லி விட்டு கடிகாரத்தை அவர் முன் இருக்கும் டேபிள் மீது வைத்து அங்கு அமர்ந்து விட்டார். இப்போது இங்கு என்ன நடக்க போகிறது என்று அனைவரும் பார்த்துக் கொண்டிருந்தார்கள். 30 நிமிடம் ஆனது. சவால் விட்டவன் சாக இல்லை. அப்போது அங்கு உள்ளவர்களின் மனதில் கடவுளை இவ்வளவு திட்டுகிறான். இவ்வளவு திட்டியும் இவனுக்கு ஒன்றுமே ஆகவில்லையே? கடவுள் என்ற ஒருவர் இல்லையோ என்ற சந்தேகம் வர ஆரம்பித்தது. சிலர் இவன் சொன்னது சரிதான் 5 நிமிடமாகியும் இவன் சாகவே இல்லை. ஆக கடவுள் இல்லை என்று சொன்னார்கள்.

அப்போது அந்த மேடையில் ஒரு ஞானி வந்து மக்கள் முன் பேச ஆரம்பித்தார். இவன் சொன்னதை இவ்வளவு நேரம் கேட்டீர்கள். இப்போது நான் சொல்வதையும் கேட்டு சிந்தித்து முடிவு செய்யுங்கள் என்று ஆரம்பித்தார். உங்களது மகனோ மகளோ உங்களது எதிரில் வந்து என்னை நீ 5 நிமிடத்தில் கொன்றால்தான் நீ எனக்கு தாய் தந்தை. இல்லை என்றால் நீங்கள் எனது தாய் தந்தை இல்லை என்று என்று சொன்னால் நீங்கள் உங்களது தாய் தந்தை உறவை நிருபிக்க உங்களது குழந்தைகளை நீங்கள் கொல்வீர்களா? உங்களது குழந்தைகள் உங்களை தவறாக பேசினால் கூட அவர்களை எப்படி திருத்துவது என்றுதானே சிந்திப்பீர்கள். அவர்களுக்கு நீங்கள் தண்டனை கொடுப்பதில்லை. அதுபோல் இறைவன் என்பவர் நமக்கு உண்மையான தாய் தந்தை. அவர் அன்பின் உருவம். நாம் அவரை தவறாக பேசினால் கூட அவர் நம்மை தண்டிப்பதில்லை. நாம் இறைவன் என்று ஒருவர் இருக்கிறார் என்று அவரை ஏற்றுக் கொள்வதாலோ ஏற்றுக் கொள்ளாமல் போனாலோ அவருக்கு எந்த நஷ்டமும் இல்லை. அவர் தன்னுடைய கடமைகளை சரியாக செய்து கொண்டே இருப்பார். இதனை அறிந்து கொள்வதும் ஆன்மிகமே என்று சொல்லி முடித்தார். மக்கள் மனதில் வந்த சந்தேகம் முழுமையாக அகன்று இறைவன் இருக்கிறார் என்று ஒருமித்த குரலில் சொல்லி அங்கிருந்து கிளம்பினார்கள். நாத்திகரின் மனதிற்குள்ளும் இறைவன் இருக்கிறாரோ என்ற சிந்தனை ஓட ஆரம்பித்தது.

நன்மை தீமை

ஒரு சீடன் தன் குருவிடம் ஒரு கேள்வி கேட்டான். குருவே இறைவனை அடைய நல்லதை செய் நல்லதை பார் நல்லதை கேள் என்று சொல்லிக் கொடுக்கிறீர்கள். இந்த உலகில் உள்ள அனைத்தையும் நம்முடைய நன்மைக்காகவே படைத்தார் என்றும் சொல்கிறீர்கள். அப்படி என்றால் நன்மை தீமை இரண்டையும் இறைவன்தான் படைத்திருக்க வேண்டும். இறைவன் படைத்த நல்லதை நாம் ஏற்பது போல் கெட்டதையும் ஏற்றால் என்ன? என்று கேட்டான். அதற்கு குரு சிரித்துக் கொண்டே அது அவரவர் விருப்பம் என்று சொல்லி விட்டு உணவிற்கு பின் பதில் சொல்வதாக சொல்லி அவனையும் அழைத்துச் சென்றார்.

சீடன் தனக்கு அளிக்கப்பட உணவைப் பார்த்து அதிர்ந்து விட்டான். ஒரு கிண்ணத்தில் பாலும் மற்றோரு கிண்ணத்தில் பசு மாட்டு சாணமும் வைக்கப்பட்டு அவனிடம் உண்ணக் கொடுக்கப்பட்டது. சீடன் விழித்தான். குரு புன்முறுவலுடன் அவனிடம் சொன்னார். பால் சாணம் இரண்டுமே பசு மாட்டிடம் இருந்து தானே வருகிறது. பாலை ஏற்றுக் கொள்ளும்போது சாணியை ஏற்றுக் கொள்ளக் கூடாதா? என கேட்டார். சீடன் விழித்தான். குரு தொடர்ந்தார் பால் போன்ற நல்லவை நாம் மகிழ்வாய் வாழ. அதனை அப்படியே ஏற்கலாம். சாணியை விலக்கி மண்ணில் புதைத்து உரமாக்குவது போல் தீயவைகளை விலக்கி புதைத்து அது தரும் பாடத்தை வாழ்விற்கு உரமாக்கி உயரும் வல்லமை கற்க வேண்டும் என்று சீடனுக்கு விளக்கம் அளித்தார்.

கருடி

கருட வாகனத்தில் பெருமாளை தரிசிப்பவர்களுக்கு மறுபிறவியே இல்லை. பெருமாளுக்கு வாகனமாகவும் அவரது கொடியின் சின்னமாகவும் இருப்பவர் கருடாழ்வார். ஆண் வடிவில் மட்டுமே காணப்படும் கருடாழ்வார் ஒரு சில விஷ்ணு ஆலயங்களில் கருடி என்ற பெயரில் பெண் வடிவில் அருள் பாலிக்கிறார். புராணங்கள் நூல்களில் கருடனின் பெண் வடிவம் அல்லது கருடனின் துணைவி கருடீ அல்லது உன்னதி என்று அழைக்கப்படுகிறார். கருட பகவான் சாதாரணமாக இரு பெரிய இறக்கைகளுடன் மனிதனைப் போல வடிவம் கொண்டு வளைந்த மூக்குடன் அழகிய முகத் தோற்றத்தில் பெருமாள் எதிரே நின்ற நிலையில்தான் கோவில்களில் காட்சி தருவார். வாகனமாக திருமாலை எழுந்தருளச் செய்து செல்லும்போது அமர்ந்த நிலையில் காட்சி தருவார்.

திருவாரூரிலிருந்து சுமார் 30 கிமீ தொலைவில் உள்ள மன்னார்குடியில் அமைந்துள்ள இராஜகோபாலசுவாமி கோவிலில் செங்கமலத்தாயார் சன்னிதி அருகே பெருமாள் சன்னிதி எதிரே பெண் வடிவ கருடாழ்வார் காட்சி தருகிறார். இவர் காதணி மூக்கணி மற்றும் புடவை அணிந்த கோலத்தில் மங்களகரமாகக் காட்சி தருகிறார். ஆண் வடிவ கருடன் பெருமாளுக்கு வாகனமாக இருப்பது போல தாயாரின் வாகன சேவைக்கு அடையாளமாக இந்த பெண் வடிவ கருடீ வழிபடப்படுகிறார்.

சிவபெருமானின் 108 போற்றி விளக்கம்

  1. ஓம் சிவாய நமஹ – மங்களகரமானவருக்கு வணக்கம்.
  2. ஓம் மகேஸ்வராய நமஹ – சிவபெருமானுக்கு வணக்கம்.
  3. ஓம் ஷம்பவே நமஹ – நமது மகிழ்ச்சிக்காக மட்டுமே இருக்கும் இறைவனுக்கு வணக்கம்.
  4. ஓம் பினகினே நமஹ – தர்மத்தின் பாதையைக் காக்கும் சிவனுக்கு வணக்கம்.
  5. ஓம் சசிஷேகராய நமஹ – சடைமுடியில் பிறையை அணிந்த இறைவனுக்கு வணக்கம்.
  6. ஓம் வாமதேவாய நமஹ – எல்லா வகையிலும் பிரியமானவரும் மங்களகரமானவருமான இறைவனுக்கு வணக்கம்..
  7. ஓம் விருபாக்ஷாய நமஹ – களங்கமற்ற வடிவத்தின் இறைவனுக்கு வணக்கம்.
  8. ஓம் கபர்தினே நமஹ – அடர்த்தியான சடைமுடியுடன் இறைவனுக்கு வணக்கம்.
  9. ஓம் நீலலோஹிதாய நமஹ – விடியற்காலையில் தோன்றும் செந்நிறச் சூரியனைப் போல் ஒளிமயமான இறைவனுக்கு வணக்கம்.
  10. ஓம் சங்கராய நமஹ – எல்லா வளங்களுக்கும் மூலமான இறைவனுக்கு வணக்கம்.
  11. ஓம் ஷுலபனாயே நமஹ – ஈட்டியை ஏந்திய இறைவனுக்கு வணக்கம்.
  12. ஓம் கத்வங்கினே நமஹ – கைப்பிடியுள்ள தடியை ஏந்திய இறைவனுக்கு வணக்கம்.
  13. ஓம் விஷ்ணுவல்லபாய நமஹ – விஷ்ணுவுக்குப் பிரியமான சிவனுக்கு வணக்கம்.
  14. ஓம் சிபிவிஷ்டாய நமஹ – பிரகாசமான ஒளிக் கதிர்களைப் பரப்பும் திருமுகம் கொண்ட இறைவனுக்கு வணக்கம்..
  15. ஓம் அம்பிகாநாதாய நமஹ – அம்பிகையின் இறைவனுக்கு வணக்கம்.
  16. ஓம் ஸ்ரீகாந்தாய நமஹ – நீல ஒளி வீசும் கழுத்தைக் கொண்டவருக்கு வணக்கம்.
  17. ஓம் பக்தவத்ஸாலய நமஹ – பிறந்த கன்றுக் குட்டியைப் போன்ற மென்மையுடன் தன் பக்தர்களைப் பேணி வளர்க்கும் இறைவனுக்கு வணக்கம்.
  18. ஓம் பவாய நமஹ – இருப்பின் சாராம்சத்தில் உருவெடுத்த தெய்வத்திற்கு வணக்கம்.
  19. ஓம் சர்வாய நமஹ – அனைத்தையும் உள்ளடக்கிய சிவனுக்கு வணக்கம்.
  20. ஓம் திரிலோகேஷாய நமஹ – மூன்று உலகங்களுக்கும் அதிபதியான சிவனுக்கு வணக்கம்.
  21. ஓம் சீதகாந்தாய நமஹ – ஆழ்ந்த நீல நிறக் கழுத்தைக் கொண்ட ஆதி ஆன்மாவிற்கு வணக்கம்.
  22. ஓம் சிவப்ரியாய நமஹ – சக்திக்கு பிரியமான தெய்வத்திற்கான வணக்கம்.
  23. ஓம் உக்ராய நமஹ – மகத்தான மற்றும் பிரமிக்க வைக்கும் பிரசன்னத்தைக் கொண்ட சிவனுக்கு வணக்கம்.
  24. ஓம் கபாலினே நமஹ – மனித மண்டை ஓட்டையே பிட்சைப் பாத்திரமாகக் கொண்ட இறைவனுக்கு வணக்கம்.
  25. ஓம் காமராயே நமஹ – எல்லா ஆசைகளையும் வெல்லும் சிவனுக்கு வணக்கம்.
  26. ஓம் அந்தகாசுர சுதனாய நமஹ – அசுரனை கொன்ற இறைவனுக்கு வணக்கம்.
  27. ஓம் கங்காதரய நமஹ – தன் சடையில் கங்கை நதியைத் தாங்கியிருக்கும் இறைவனுக்கு வணக்கம்.
  28. ஓம் லலாதக்ஷாய நமஹ – படைப்பையே விளையாட்டாகக் கொண்ட இறைவனுக்கு வணக்கம்.
  29. ஓம் காலகாலய நமஹ – மரணத்திற்கே மரணமான சிவனுக்கு வணக்கம்.
  30. ஓம் கிருபநிதாய நமஹ – கருணையின் புதையலாக விளங்கும் தெய்வத்திற்கு வணக்கம்.
  31. ஓம் பீமாய நமஹ – அபாரமான வலிமை கொண்ட சிவனுக்கு வணக்கம்.
  32. ஓம் பரசு ஹஸ்தாய நமஹ – தன் கைகளில் கோடரியை ஏந்தியிருக்கும் இறைவனுக்கு வணக்கம்.
  33. ஓம் மிருகபானாய நமஹ – வனாந்தரத்தில் ஆன்மாவைக் காக்கும் இறைவனுக்கு வணக்கம்.
  34. ஓம் ஜடாதராய நமஹ – சடை முடியைத் தாங்கிய சிவனுக்கு வணக்கம்.
  35. ஓம் கைலாசவாசினே நமஹ – கைலாச மலையில் வீற்றிருக்கும் தெய்வத்திற்கு வணக்கம்.
  36. ஓம் கவசச்சினி நமஹ – கவசம் போர்த்திய இறைவனுக்கு வணக்கம்.
  37. ஓம் கதோராய நமஹ – எல்லா வளர்ச்சிக்கும் காரணமான சிவனுக்கு வணக்கம்.
  38. ஓம் திரிபுராந்தகாய நமஹ – மூன்று அசுர நகரங்களை அழித்த இறைவனுக்கு வணக்கம்.
  39. ஓம் விருஷங்காய நமஹ – காளையை சின்னமாகக் கொண்ட தெய்வத்திற்கு வணக்கம்.
  40. ஓம் விருஷபாருதாய நமஹ – காளையை ஓட்டும் சிவனுக்கு வணக்கம்.
  41. ஓம் பாஸ்மோத்துலித விக்ரஹாய நமஹ – புனித சாம்பலால் மூடப்பட்ட இறைவனுக்கு வணக்கம்.
  42. ஓம் சமப்ரியாய நமஹ – சாம வேதத்தின் துதிகளை மிகவும் விரும்பும் இறைவனுக்கு வணக்கம்.
  43. ஓம் ஸ்வரமாயாய நமஹ – ஒலியால் படைக்கும் சிவனுக்கு வணக்கம்.
  44. ஓம் திரயிமூர்த்தயே நமஹ – மும்மடங்கு வடிவங்களில் வழிபடப்படும் இறைவனுக்கு வணக்கம்.
  45. ஓம் அனிஷ்வராய நமஹ – நிகரற்ற இறைவனுக்கு வணக்கம்.
  46. ஓம் சர்வக்யாய நமஹ – அனைத்தையும் அறிந்த இறைவனுக்கு வணக்கம்.
  47. ஓம் பரமாத்மனே நமஹ – பரம் பொருளுக்கான வணக்கம்.
  48. ஓம் சோமசூரக்னி லோச்சனாய நமஹ – சோமன், சூர்யன் மற்றும் அக்னியின் கண் ஒளிக்கு வணக்கம்.
  49. ஓம் ஹவிஷே நமஹ – நெய் பிரசாதம் பெறும் சிவனுக்கு வணக்கம்.
  50. ஓம் யக்யமயய நமஹ – அனைத்து யாகச் சடங்குகளுக்கும் படைப்பாளனுக்கு வணக்கம்.
  51. ஓம் சோமய நமஹ – ஞானியின் தரிசனமாகிய நிலவொளிக்கு வணக்கம்.
  52. ஓம் பஞ்சவக்த்ராய நமஹ – ஐந்து செயல்களின் இறைவனுக்கு வணக்கம்.
  53. ஓம் சதாசிவாய நமஹ – என்றும் மங்களகரமான கருணையுள்ள சிவனுக்கு வணக்கம்.
  54. ஓம் விஸ்வேஷ்வராய நமஹ – பிரபஞ்சம் முழுவதும் வியாபித்துள்ள இறைவனுக்கு வணக்கம்.
  55. ஓம் விரபத்ராய நமஹ – நாயகர்களில் முதன்மையான சிவனுக்கு வணக்கம்.
  56. ஓம் கணநாதாய நமஹ – கணங்களின் இறைவனுக்கு வணக்கம்.
  57. ஓம் பிரஜாபதயே நமஹ – படைப்பாளருக்கு வணக்கம்.
  58. ஓம் ஹிரண்யரேதசே நமஹ – பொன்னான ஆன்மாக்களை வெளிப்படுத்தும் சிவனுக்கு வணக்கம்.
  59. ஓம் துர்தர்ஷாய நமஹ – வெல்ல முடியாத உயிரினத்திற்கு வணக்கம்.
  60. ஓம் கிரிஷாய நமஹ – புனித கைலாச மலையின் மன்னருக்கு வணக்கம்.
  61. ஓம் கிரிஷாய நமஹ – இமயமலையின் இறைவனுக்கு வணக்கம்.
  62. ஓம் அனகாய நமஹ – எந்த பயத்தையும் தூண்டக்கூடிய சிவனுக்கு வணக்கம்.
  63. ஓம் புஜங்கபூஷணாய நமஹ – பொன்நாகங்களால் அலங்கரிக்கப்பட்ட இறைவனுக்கு வணக்கம்.
  64. ஓம் பர்காய நமஹ – ரிஷிகளுக்கெல்லாம் முதன்மையானவரானவருக்கு வணக்கம்.
  65. ஓம் கிரிதான்வனே நமஹ – மலையை ஆயுதமாகக் கொண்ட தெய்வத்திற்கு வணக்கம்.
  66. ஓம் கிரிப்ரியாய நமஹ – மலைகளை விரும்பும் இறைவனுக்கு வணக்கம்.
  67. ஓம் கிருத்திவாசசே நமஹ – தோல் ஆடை அணிந்த சிவனுக்கு வணக்கம்.
  68. ஓம் புரரதயே நமஹ – வனாந்தரத்தில் தங்கியிருப்பது போன்ற இறைவனுக்கு வணக்கம்.
  69. ஓம் பகவதே நமஹ – செழிப்பின் இறைவனுக்கு வணக்கம்.
  70. ஓம் ப்ரமதாதிபாய நமஹ – பூதங்களால் சேவிக்கப்படும் தெய்வத்திற்கு வணக்கம்.
  71. ஓம் மிருதுஞ்ஜயாய நமஹ – மரணத்தை வென்றவருக்கு வணக்கம்.
  72. ஓம் சூட்சுமதனவே நமஹ – சூட்சுமங்களிலும் சூட்சுமமானவர்களுக்கு வணக்கம்.
  73. ஓம் ஜகத்வ்யாபினே நமஹ – உலகம் முழுவதையும் நிரப்பும் சிவனுக்கு வணக்கம்.
  74. ஓம் ஜகத்குருவே நமஹ – எல்லா உலகங்களுக்கும் குருவானவருக்கு வணக்கம்.
  75. ஓம் வ்யோமகேஷாய நமஹ – நமக்கு மேலே உள்ள பரந்த வானத்தை உருவாக்கும் சடைமுடியைக் கொண்ட தெய்வத்திற்கு வணக்கம்.
  76. ஓம் மஹாசேனஜனகாய நமஹ – மகாசேனாவின் தோற்றத்திற்கு வணக்கம்.
  77. ஓம் சாருவிக்ரமாய நமஹ – அலைந்து திரியும் யாத்ரீகர்களின் பாதுகாவலரான சிவனுக்கு வணக்கம்.
  78. ஓம் ருத்ராய நமஹ – புகழுக்குரிய இறைவனுக்கு வணக்கம்.
  79. ஓம் பூதபதயே நமஹ – பூதங்கள் அல்லது ஆவியுலக உயிரினங்கள் உட்பட, உயிரினங்களின் மூலத்திற்கான வணக்கம்..
  80. ஓம் ஸ்தானவே நமஹ – உறுதியான மற்றும் அசைக்க முடியாத தெய்வத்திற்கு வணக்கம்.
  81. ஓம் அஹிர்புத்ஞாய நமஹ – உறங்கும் குண்டலினிக்காகக் காத்திருக்கும் இறைவனுக்கு வணக்கம்.
  82. ஓம் திகம்பராய நமஹ – பிரபஞ்சத்தையே ஆடையாகக் கொண்ட சிவனுக்கு வணக்கம்.
  83. ஓம் அஷ்டமூர்த்தயே நமஹ – எட்டு வடிவங்களைக் கொண்ட இறைவனுக்கு வணக்கம்.
  84. ஓம் அனேகாத்மனே நமஹ – ஒரே ஆன்மாவான சிவனுக்கு வணக்கம்.
  85. ஓம் சாத்விகாய நமஹ – எல்லையற்ற சக்தியின் இறைவனுக்கு வணக்கம்.
  86. ஓம் சுத்த விக்ரஹாய நமஹ – எல்லா ஐயங்களிலிருந்தும் பிணக்குகளிலிருந்தும் விடுபட்டவருக்கு வணக்கம்.
  87. ஓம் ஷாஷ்வதாய நமஹ – முடிவில்லாத மற்றும் நித்தியமான சிவனுக்கு வணக்கம்.
  88. ஓம் கண்டபரசவே நமஹ – மன வேதனையைப் போக்கும் சிவனுக்கு வணக்கம்.
  89. ஓம் அஜய நமஹ – நிகழும் அனைத்திற்கும் காரணமானவருக்கு வணக்கம்.
  90. ஓம் பாபவிமோச்சகாய நமஹ – எல்லா பந்தங்களையும் நீக்கும் இறைவனுக்கு வணக்கம்.
  91. ஓம் மிருதாய நமஹ – கருணையை மட்டுமே காட்டும் இறைவனுக்கு வணக்கம்.
  92. ஓம் பசுபதயே நமஹ – பரிணமிக்கும் அனைத்து ஆன்மாக்களின் அதிபதியான விலங்குகளுக்கு வணக்கம்.
  93. ஓம் தேவாய நமஹ – தேவர்கள், அர்தேவர்கள் ஆகியோரில் முதன்மையானவருக்கு வணக்கம்.
  94. ஓம் மஹாதேவாய நமஹ – தேவர்களிலேயே சிறந்தவருக்கு வணக்கம்.
  95. ஓம் அவ்யயாய நமஹ – எந்நேரமும் மாறாதவருக்கு வணக்கம்.
  96. ஓம் ஹரயே நமஹ – எல்லா பந்தங்களையும் கலைக்கும் சிவனுக்கு வணக்கம்.
  97. ஓம் பசுதாந்தாபிதே நமஹ – பூஷனைத் தண்டித்தவருக்கு வணக்கம்.
  98. ஓம் அவ்யக்ரய நமஹ – நிலையானவரும் அசைக்க முடியாதவருமான இறைவனுக்கு வணக்கம்.
  99. ஓம் தக்ஷத்வரஹாராய நமஹ – தட்சனின் செருக்கு நிறைந்த யாகத்தை அழித்தவருக்கு வணக்கம்.
  100. ஓம் ஹராய நமஹ – பிரபஞ்சத்தை உள்ளிழுக்கும் சிவனுக்கு வணக்கம்.
  101. ஓம் பகநேத்ராபிதே நமஹ – பகவானுக்குத் தெளிவாகப் பார்க்கக் கற்றுக் கொடுத்த சிவனுக்கு வணக்கம்.
  102. ஓம் அவ்யக்தாய நமஹ – நுட்பமான மற்றும் கண்ணுக்கு தெரியாத சிவனுக்கு வணக்கம்.
  103. ஓம் சஹஸ்ரக்ஷாய நமஹ – எல்லையற்ற வடிவங்களின் இறைவனுக்கு வணக்கம்.
  104. ஓம் சஹஸ்ரபதே நமஹ – எங்கும் நின்றும் நடந்தும் கொண்டிருக்கும் இறைவனுக்கு வணக்கம்.
  105. ஓம் அபவர்கபிரதாய நமஹ – அனைத்தையும் கொடுப்பவரும் எடுப்பவருமான இறைவனுக்கு வணக்கம்.
  106. ஓம் அனந்தாய நமஹ – முடிவில்லாத இறைவனுக்கு வணக்கம்.
  107. ஓம் தாரகாய நமஹ – மனித குலத்தின் மாபெரும் விடுதலை அளிப்பவருக்கு நமஸ்காரங்கள்
  108. ஓம் பரமேஷ்வராய நமஹ – பெருமானுக்கு வணக்கம்.

108 சிவன் பெயர்கள்

சிவபெருமானுக்கு எண்ணிலடங்கா வடிவங்களும் பெயர்களும் உள்ளது. அவற்றில் 108 பெயர்கள் அதிகமாக அறியப்பட்டு உள்ளது. அவற்றில் 108 சிவன் பெயர்களும் அதற்கான பொருளும்:

  1. ஆதிகுரு – முதல் குரு
  2. ஆஷுதோஷ் – அனைத்து விருப்பங்களையும் உடனடியாக நிறைவேற்றுபவர்
  3. ஆதிநாத் – முதல் கடவுள்
  4. ஆதியோகி – முதல் யோகி
  5. அஜா – பிறப்பில்லாதவன்
  6. அக்ஷய குணா – எல்லையில்லா குணங்களை உடையவன்
  7. அனகா – குறையில்லாதவன்
  8. அனந்ததிருஷ்டி – முடிவில்லா நோக்கு உடையவன்
  9. ஔகத் – எப்போதும் திருப்தியாக இருப்பவன்
  10. அவ்யாய பிரபு – அழிக்க முடியாதவன்
  11. பைரவ் – பயத்தை அழிப்பவன்
  12. பலநேத்ரா – நெற்றிக்கண் உடையவன்
  13. போலேநாத் – எளிமையானவன்
  14. பூதேஸ்வரா – பஞ்ச பூதங்களின் மேல் ஆளுமையுடைவன்
  15. பூதேவா – பூமியின் கடவுள்
  16. பூடபாலா – உடல் சிதைந்த மனிதர்களைக் காப்பவன்
  17. சந்த்ரபால் – நிலவின் தலைவன்
  18. சந்த்ரப்ரகாஷ் – பிறைநிலவை சூடியவன் (பிறைசூடி)
  19. தயாளு – கருணை வடிவானவன்
  20. தேவாதி தேவா – கடவுளர்களின் கடவுள்
  21. தனதீபா – செல்வங்களின் கடவுள்
  22. தியான தீப் – தியான ஒளி
  23. தியூடிதரா – பெரும்திறமைகளின் கடவுள்
  24. திகம்பரா – வானத்தையே தனது ஆடையாக அணிந்தவன்
  25. துர்ஜநீயா – அறிந்துகொள்ளப்பட வேண்டியவன்
  26. துர்ஜயா – வெற்றிகொள்ளப்படாதவன்
  27. கங்காதரா – கங்கை ஆற்றின் கடவுள்
  28. கிரிஜாபதி – மலைமகளின் கணவன்
  29. குணக்ரஹின் – குணங்களை ஏற்பவன்
  30. குருதேவா – மஹாகுரு
  31. ஹரா – பாவங்களைக் களைபவன்
  32. ஜகதீஷா – பிரபஞ்சத்தின் தலைவன்
  33. ஜராதிஷாமனா – துயரங்கள்/பாதிப்புகளிலிருந்து மீட்பவன்
  34. ஜாடின் – ஜடாமுடி தரித்தவன்
  35. கைலாஷ் – நிம்மதி/அமைதி அளிப்பவன்
  36. கைலாஷபதி – கைலாய மலையின் கடவுள்
  37. கைலாஷ்நாத் – கைலாஷ்நாத்
  38. கமலாக்ஷணா – தாமரைக் கண்கள் கொண்ட கடவுள்
  39. காந்தா – காந்தா
  40. கபாலின் – மண்டையோடுகளை கழுத்தில் ஆபரணமாக அணிந்திருப்பவன்
  41. கோச்சடையான் – ஜடாமுடி தரித்த அரசன்
  42. குண்டலின் – காதில் அணிகலன்கள் அணிந்தவன்
  43. லாலாடக்க்ஷா – நெற்றிக்கண் உடையவன்
  44. லிங்காத்யக்க்ஷா – லிங்கங்களின் அரசன்
  45. லோகங்காரா – மூவுலகையும் படைத்தவன்
  46. லோகபால் – உலகைக் காப்போன்
  47. மகா புத்தி – எல்லை கடந்த புத்திசாலித்தனம்
  48. மகா தேவா – மஹா கடவுள்
  49. மகா காலா – காலங்களின் கடவுள்
  50. மகா மாயா – மஹா மாயை
  51. மகா மிருத்யுஞ்ஜெயன் – மரணத்தை வென்ற மாவீரன்
  52. மகா நிதி – மிகப்பெரும் களஞ்சியம்
  53. மகா சக்தி மயா – எல்லையில்லா சக்திகளைக் கொண்டவன்
  54. மகா யோகி – மிகப்பெரும் யோகி
  55. மகேசா – உச்ச கடவுள்
  56. மகேஸ்வரா – கடவுள்களின் கடவுள்
  57. நாக பூஷணா – பாம்புகளை ஆபாரணமாக அணிந்தவன்
  58. நடராஜா – நடனக் கலையின் அரசன்
  59. நீலகண்டா – நீல நிற கழுத்தை உடையவன்
  60. நித்யசுந்தரா – எப்பொழுதும் அழகானவன்
  61. நிருத்யப்ரியா – நடனங்களின் காதலன்
  62. ஓம்காரா – ஓம்-ஐ படைத்தவன்
  63. பாலன்ஹார் – அனைவரையும் காப்பவன்
  64. பஞ்சாட்சரன் – வீரியமுடையவன்/ஐந்தெழுத்தைக் கொண்டோன்
  65. பரமேஸ்வரன் – கடவுள்களிலெல்லாம் முதலானவன்
  66. பரம்ஜ்யோதி – மிகப் பெரும் ஒளி
  67. பசுபதி – வாழும் உயிர்க்கெல்லாம் அரசன்
  68. பினாகின் – கையில் வில்லை ஏந்தி இருப்பவன்
  69. ப்ரணவா – ஓம் என்னும் மூல மந்திரத்துக்கு மூலமானவன்
  70. பிரியபக்தா – பக்தர்களின் விருப்பமானவன்
  71. பிரியதர்ஷனா – அன்பான பார்வை உடையவன்
  72. புஷ்கரா – போஷாக்கு அளிப்பவன்
  73. புஷ்பலோச்சனா – பூக்களைப் போன்ற கண்களை உடையவன்
  74. ரவிலோச்சனா – சூரியனைக் கண்ணாக கொண்டவன்
  75. ருத்ரா – கர்ஜிப்பவர்
  76. சதாசிவா – எல்லைகளைத் தாண்டியவர்
  77. சனாதனா – முடிவில்லா கடவுள்
  78. சர்வாச்சார்யா – உச்ச ஆசிரியர்
  79. சர்வஷிவா – முடிவில்லா கடவுள்
  80. சர்வதாபனா – எல்லோருக்கும் முன்னோடியாக இருப்பவர்
  81. சர்வயோனி – எப்போதும் தூய்மையானவர்
  82. சர்வேஷ்வரா – அனைவரின் கடவுள்
  83. ஷம்போ – மங்களகரமானவர்
  84. ஷங்கரா – எல்லா கடவுளர்க்கும் கடவுள்
  85. ஷாந்தா – ஸ்கந்தனுக்கு முன்னோடி
  86. ஷூலின் – மகிழ்ச்சியை அளிப்பவர்
  87. ஷ்ரேஷ்த்தா – சந்திரனின் கடவுள்
  88. ஸ்ரீகந்தா – எப்போதும் தூய்மையானவர்
  89. ஷ்ருதிப்ரகாஷா – திரிசூலத்தை வைத்திருப்பவர்
  90. ஸ்கந்தகுரு – வேதங்களுக்கு ஒளியேற்றுபவர்
  91. சோமேஸ்வரா – தூய்மையான உடலைக் கொண்டிருப்பவர்
  92. சுகடா – மகிழ்ச்சியை அளிப்பவர்
  93. ஸ்வயம்பு – தானாக உருவானவர்
  94. தேஜஸ்வனி – ஒளியைப் பரப்புபவர்
  95. த்ரிலோச்சனா – மூன்று கண்களைக் கொண்ட கடவுள்
  96. த்ரிலோகபதி – மூவுலகிற்கும் அதிபதி
  97. த்ரிபுராரி – அசுரர்கள் உருவாக்கிய 3 திரிபுரத்தை அழித்தவர்
  98. த்ரிசூலின் – திரிசூலத்தை கைகளில் ஏந்தியவர்
  99. உமாபதி – உமாவின் கணவன்
  100. வாச்சஸ்பதி – பேச்சுக்களின் அரசன்
  101. வஜ்ரஹஸ்தா – இடியை தன் கரங்களில் ஏந்தியவன்
  102. வரதா – வரங்களை அளிப்பவர்
  103. வேத கர்த்தா – வேதங்களின் மூலம்
  104. வீர பத்ரா – பாதாள லோகத்தின் முதன்மை கடவுள்
  105. விஷாலாக்க்ஷா – பரந்த பார்வை கொண்ட கடவுள்
  106. விஸ்வேஷ்வரா – பிரபஞ்சத்தின் கடவுள்
  107. விஸ்வநாத் – பிரபஞ்சத்தின் அதிபதி
  108. வ்ரிஷவாஹனா – எருதை வாகனமாகக் கொண்டவர்

நாம் யார்?

ஒரு ராஜா யுத்தத்தில் தோற்றுப் போகிற மாதிரியான சூழல் வந்ததும் தப்பித்துப் போகலாம் என்று எண்ணுகிறான். நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் தன் மனைவியையும் அழைத்துக் கொண்டு குதிரையில் ஏறி தப்பிப் போகிறான். எதிரி நாட்டுக்காரர்கள் துரத்திக் கொண்டு வந்ததைப் பார்த்தலும் ராஜா தன் மனைவியிடம் நான் முடிந்தால் இவர்களுடன் சண்டை போட்டு ஜெயித்து வருவேன். நீ கர்ப்பிணியாக இருக்கிறாய் உன் வயிற்றில் இருப்பது நம் நாட்டின் வாரிசு. அவனை வைத்து எப்படியாவது நாட்டை மீட்பதற்கு தயார் செய். நாட்டிற்காக நீ தப்பித்துப் போ என்கிறான். அதனால் ராணி குதிரையின் மேல் ஏறி தப்பிப் போகிறாள். சண்டையில் ராஜா இறந்து விடுகிறார். ராணி சிறிது தூரம் சென்றவுடன் அவளுக்கு பிரசவம் ஆகிறது. குழந்தை பிறந்ததும் அவள் இறந்து விடுகிறாள். அந்த இடம் வேடர்கள் வசிக்கிற ஒரு காடு. அவர்களுக்கு இந்தப்பெண்மணி ராணி என்பதும் தெரியாது. அதனால் ராஜகுமாரன் தான் யார் என்று தெரியாமல் வேடவர்களுடைய காட்டில் வளர்கிறான். அவன் ராஜகுமாரன் என்கிற விஷயம் ராஜா ராணி இரண்டு பேருக்கு மாத்திரம் தான் தெரியும். இரண்டு பேரும் உயிரோடு இல்லை. அவன் வேடர்களைப் போலவே சாப்பிட்டு அவர்கள் மொழியை பேசி வளர்கிறான்.

அந்த நாட்டில் இருந்த மந்திரி புத்திசாலி. தப்பித்துப் போன ராஜா ஒரு வேளை உயிரோடு இருந்திருந்தால் இந்த நேரம் வந்திருப்பார். வரவில்லை ஆகையால் ராணிக்கு குழந்தை பிறந்து இன்று உயிரோடு இருந்தால் அந்த ராஜகுமாரனை வைத்து எப்படியாவது இந்த நாட்டை மீட்டுவிடலாம் என்று சொல்லி மந்திரி ராஜா தப்பிச் சென்ற திசையை நோக்கி சென்று தேடிச் செல்கிறார். காட்டில் வேடர் குலத்தில் வளரும் ராஜகுமாரனின் முகத்தில் அரசரின் சாயல் மற்றும் நடை பாவனையை பார்த்து வேடர்களிடம் இவனைப் பற்றி விசாரிக்கிறார். அவர்கள் சொன்னதை வைத்து நம் ராஜகுமாரன் இவன் தான் என்று தெரிந்து கொண்டு நீ ராஜகுமாரன் வா போகலாம் உனக்கென்று நாடு மக்கள் இருக்கிறார்கள். நாட்டை மீட்டுவிடலாம் வா. அங்கு வந்தால் உனக்கு அத்தனை சுகங்களும் கிடைக்கும் என்கிறார். அவன் பயந்து கொண்டு நான் ராஜா எல்லாம் கிடையாது என்னை விட்டு விடுங்கள் வர முடியாது என்கிறான். அவனை மந்திரி தேற்றி அவனுக்கு குதிரை ஏறுவது கத்தி சண்டை போடுவது வரை எல்லாவற்றையும் சொல்லிக் கொடுத்து அவனை அழைத்து வந்து நாட்டை மீட்டு விடுகிறார். நாட்டில் இப்போது அரசனாக அனைத்து சுகங்களையும் அனுபவித்தான் அந்த காட்டில் வளர்ந்த ராஜாகுமாரன்.

இது கதையில் உள்ள அந்த இளவரசன் நாம்தான். நம்முடைய தந்தை நடராஜா. சிதம்பரம் நடராஜா.

இக்கதையில் உள்ளது போல் நாமெல்லாம் பிறவி எடுக்கும் முன்பாக பகவானோடு இருந்தவர்கள். ஆசை காரணமாக எங்கிருந்து வந்தோம் ஏன் வந்தோம் எதற்கு வந்தோம் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் மாயையில் மாட்டிக் கொண்டு பிறவிப் பெருங்கடல் என்னும் இந்த பவசாகரத்தில் மாட்டிக் கொண்டு துன்பத்தை அனுபவித்துக் கொண்டு இதிலிருந்து மீள வழி வழி தெரியாமல் நாம் வாழும் இந்த உலகம் என்று சொல்லக்கூடிய இந்த காட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நாமெல்லாம் ராஜகுமாரர்கள். ஜீவாத்மாக்களாகிய நாம் கைலாயத்திலோ வைகுண்டத்திலோ இருந்தவர்கள். நம் அப்பா இறைவன் என்று சொல்கின்ற ராஜா நடராஜா. நாம் இந்த உலகத்தில் வந்து மக்களுடன் சேர்ந்து மக்களாகி விட்டோம். அவர்களைப் போல் உடை உடுத்திக் கொண்டு சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம். ஆனால் நாமெல்லாம் கைலாசவாசிகள். வைகுண்டவாசிகள் பசி தாகம் தூக்கம் இல்லாமல் அமிழ்தம் சாப்பிட்டுக் கொண்டு அழகாக பட்டாடைகளை தரித்துக் கொண்டு தேவர்களுடைய கிரீடத்தை போட்டுக் கொண்டு பேரின்பத்தில் லயித்துக் கிடந்தவர்கள். இன்றைக்கு பசிக்கிறது தாகம் எடுக்கிறது. உடலிலிருந்து துர்நாற்றம் வருகிறது என்று சேம்பும் சோப்பும் போட்டுக் கொண்டு சென்ட் அடித்துக் கொண்டிருக்கிறோம். பல நேரங்களில் இதனையெல்லாம் பெருமையாக வேறு நினைத்து செய்து கொண்டிருக்கிறோம். நாம் எவ்வளவு ஆனந்தமாக பகவானோடு இருந்தவர்கள். இன்றைக்கு மானுடர்களாக மயக்கத்தில் மயங்கிக் கொண்டிருக்கிறோம்.

கதையில் வந்த மந்திரியைப் போல் நம் வாழ்க்கையிலும் ஒருவன் வந்து நீங்களெல்லாம் சாதாரண ஆட்கள் இல்லை. நான் உங்களை கயிலாயத்தில் பார்த்திருக்கிறேன். அங்கிருக்கும் சுகங்களையெல்லாம் விட்டுவிட்டு இப்படி மனிதனோடு மனிதனாகப் போய் சுற்றிக் கொண்டிருக்கிறீர்களே என்று சொன்னால் நாம் என்ன சொல்வோம். அதெல்லாம் கிடையாது இது என் உடம்பு என் வீடு என் பந்தம் என்போம். மாயையின் மயக்கத்தில் இருப்பதினால் இறைவனே வந்து சொன்னாலும் நான் மனிதன் என்போம். கதையில் வரும் மந்திரியை ராஜ குமாரன் நம்பி அவர் சொன்னதை எல்லாம் செய்தது போல் நம்மிடம் சொன்னவரை நம்பினால் அவர் சொல்வதை நம்பினால் அவர் விடாமல் பயிற்சி கொடுத்து நமக்கு இருக்கிற சக்தியை நமக்கு புரிய வைப்பார். யார் அந்த அவர்? நாயன்மார்கள், ஆழ்வார்கள், ஞானிகள், மகான்கள் மற்றும் சித்தர்கள் நமக்கு அருள்பாலித்த நூல்கள் நம்முடைய தேவாரம் திருவாசகம் திருமந்திரம் திருப்புகழ் பெரிய புராணம் உட்பட பன்னிரு திருமுறைகள் என்று பெரிய நூல் களஞ்சியமே இருக்கிறது. இந்த நூல்கள் வழியாக நமக்கு அவர்கள் பயிற்சி கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள். நாம் பயிற்சி செய்து அந்த பயிற்சியில் எப்போது முற்றுப் பெருவோமோ அப்போது இந்த துன்ப பிறவியில் இருந்து விடுபட்டு கைலாசம் அல்லது வைகுண்ட அரசவைக்கு சென்று விடுவோம்.

கோயில் கர்ப்பக்கிரகம்

கோயில் கர்ப்பக்கிரகத்தை அமைக்கும் போது அங்கே எந்தப் பக்கத்திலிருந்தும் சூரிய ஒளியோ வெளிச்சமோ எளிதில் புகாதபடி மிகத் தடிமனான கற்களைக் கொண்டு கட்டினார்கள். இதன் பின்னே ஓர் அறிவியல் உள்ளது.

ஒரு மனிதனின் மனம் ஐம்புலன்களின் வழியாக வெளி உலகத்தை பார்க்கும் போது வெளி உலகத்தோடு தொடர்பில் இருக்கும். ஆனால் கண்களை மூடி இருக்கும் போது இருட்டுடாக இருக்கும். அப்போது மனம் தானாகவே உள்நோக்கி பார்க்கத் துவங்கும். கோயிலுக்கு சென்று அங்கே மூலஸ்தானத்தில் இருட்டில் விளக்கு வெளிச்சத்தில் இறைவனை பக்தியோடு இறைவனை பார்க்கும் மனித மனமானது சுருங்க துவங்குகிறது. அந்தச் சிலையிலிருந்து வெளிப்படும் காந்த அலைகளையும் மந்திரங்களின் அதிர்வுகளையும் ஐம்புலன்களும் அடங்கிய நிலையில் மனித மனம் எந்த அளவிற்கு அடங்கியிருக்கிறதோ அந்த அளவிற்கு அந்த உடல் கிரகித்துக் கொள்ளும். கோயிலுக்கு செல்வது நமக்கு வேண்டியவற்றை கடவுளிடம் வேண்டிப் பெறுவதற்கு மட்டுமல்ல. வெளி உலக தொடர்பில் இருக்கும் குழப்பமடைந்த மனதை அந்த இருண்ட அறைக்குள் உள்ள இறைவனிடம் மனதை ஒரு நிலைப்படுத்தினால் மனம் அமைதி அடையும். அதில் கிடைக்கும் ஆனந்தம் வேறு எதிலும் அனுபவிக்க முடியாது. இந்த வழிபாட்டு முறையும் ஒரு வகை தியானமே.

அமைதி

ஒரு அரசன் அமைதி என்பதை மிகச் சரியாக விளக்கும் ஓவியத்திற்குப் பெரிய பரிசு கொடுக்கப்படும் என்று அறிவித்தார். பல ஓவியர்கள் பல அற்புதமான ஓவியங்களை வரைந்து வந்தனர். அதில் சிறந்த இரண்டு ஓவியங்களை மட்டும் அரசர் தேர்ந்தெடுத்தார்.

முதல் ஓவியத்தில் மிக அழகாக சலனமே இல்லாத ஒரு தெளிவான ஏரி இருந்தது. அதைச் சுற்றிப் பச்சைப் பசேலென்ற மலைகள். அதன் மேல் வெண் மேகங்கள் தவழும் நீல வானம் என அற்புதமாக இருந்தது. ஒவியத்தைப் பார்த்தாலே மனதில் முழுமையான அமைதி பிறக்கும். ஒவியத்தைப் பார்த்த அனைவரும் இந்த ஒவியத்தைதான் அரசன் தேர்ந்தெடுப்பார் என்று நினைத்தார்கள்.

இரண்டாவது ஓவியத்தில் இருண்ட வானம் இடி மின்னலுடன் பெய்யும் பயங்கரமான மழை. பார்ப்பதற்கே பயத்தைக் கொடுக்கும் உருண்டு திரண்டு விழும் ஒரு பெரிய அருவி. படத்தை உற்றுப் பார்த்தால் அந்த அருவிக்குப் பின்னால் உள்ள ஒரு பாறை இடுக்கில் ஒரு சின்ன செடியில் தாய் பறவை ஒன்று தன் கூட்டில் குஞ்சுகளோடு மிக நிம்மதியாகக் கண் மூடி அமர்ந்திருந்தது.

அரசர் இரண்டாவது ஓவியத்தை அமைதி ஒவியமாக அறிவித்தார். அனைவருக்கும் ஒரே குழப்பம் இந்த ஓவியத்தில் எங்கே அமைதி இருக்கிறது? என்று அரசரிடம் கேட்டார்கள். அரசர் சிரித்துக்கொண்டே சொன்னார். அமைதி என்பது சத்தமே இல்லாத எந்தப் பிரச்சனையும் இல்லாத இடத்தில் இருப்பது அல்ல. எவ்வளவு பெரிய புயலும் சத்தமும் போராட்டமும் உங்களைச் சுற்றி நடந்தாலும் உங்கள் மனதிற்குள் எந்தச் சலனமும் இல்லாமல் அந்தப் பறவையைப் போல் நிம்மதியாக இருந்தால் அதுதான் உண்மையான அமைதி என்றார்.

நம் வாழ்க்கையில பிரச்சனைகளே வரக்கூடாது அப்போதான் நிம்மதியா வாழ முடியும்னு நினைத்தால் அது கடைசி வரைக்கும் நடக்கவே நடக்காது. கடனைப் பற்றிய கவலை வேலைப்பளு குடும்பக் கஷ்டங்கள் என உலக துன்பங்கள் அனைத்தும் சுற்றிப் புயல் மாதிரி வீசினாலும் மனசை மட்டும் அந்தப் பறவை மாதிரி எப்பவும் அமைதியா வைத்துக் கொண்டால் அதுதான் அமைதியான நிம்மதியான வாழ்க்கை. உண்மையான அமைதி நிம்மதி வெளியில சூழ்நிலையில இல்லை. ஒவ்வொருவரின் மனதில் தான் இருக்கிறது.