11 முகம் கொண்ட முருகன்

முருகன் 11 தலை 22 கைகளுடன் அருள்மிகு சுவாமிநாத சுவாமி என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். இராமநாதபுரம் குண்டுக்கரை பகுதியில் இக்கோவில் உள்ளது. சூரபத்மனை வதம் செய்வதற்கு முன்பு முருகன் இத்தலத்துக்கு வந்த முருகனுக்கு 11 தலை 22 கைகள் இருந்ததாக தல வரலாறு சொல்கிறது. அதே வடிவில் விஸ்வரூபம் எடுத்த நிலையில் முருகன் தரிசனம் தருகிறார். மற்ற கோயில்களில் எல்லாம் பிரணவ மந்திரத்தின் பொருள் கூற முருகன் சிவனின் மடியில் அமர்ந்திருப்பது போல சிலை இருக்கும். ஆனால் இத்தலத்தில் தகப்பன் சுவாமியான முருகன் குன்றின் மீது அமர்ந்து பிரணவ மந்திரத்திற்கு பொருள் சொல்ல சிவன் அதை நின்று கேட்கும் நிலையில் அமைந்துள்ளது. முருகனே சிவன் சிவனே முருகன். இருவரும் ஒருவரின்றி வேறில்லை என்பதற்கேற்ப இங்கு தகப்பன் சுவாமி குன்றின் மீது அமர்ந்து அருள்பாலிப்பது மிகச்சிறப்பான அம்சமாகும். கோயிலுக்குள் 18 திருக்கரத்துடன் கூடிய 7 அடி உயர துர்க்கை சிலையும் உள்ளது.

300 ஆண்டுகளுக்கு முன் ராமநாதபுரத்தில் வாழ்ந்த பாஸ்கர சேதுபதி குண்டுக்கரை முருகன் கோயிலுக்கு தினமும் வந்து வழிபாடு செய்வார். ஒருமுறை இவர் சுவாமிமலை சென்று தரிசனம் செய்து விட்டு திரும்பி வந்த போது இவரது கனவில் சுவாமிமலை முருகன் தோன்றி குண்டுக்கரை முருகன் கோயிலில் உள்ள பழைய முருகன் சிலையை எடுத்து விட்டு புதிதாக முருகனை பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தால் உனக்கும் உனது மக்களுக்கும் நன்மை உண்டாகும் என கூறி மறைந்தார். ராமநாதபுரம் வந்த பாஸ்கர சேதுபதியும் கனவில் முருகன் கூறியபடி குண்டுக்கரை சென்று அந்த கோயிலிலிருந்த பழைய முருகன் சிலையை அகற்றி விட்டு புதிதாக முருகன் சிலை பிரதிஷ்டை செய்தார். சுவாமி மலையானின் பெயரான சுவாமிநாதன் என்று பெயர் சூட்டினார்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 280

கேள்வி: பைரவர் வழிபாடு கால வைரவர் வழிபாடு ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு இந்த மூன்று வழிபாடுகளையும் ஒரே மாதிரி செய்யலாமா? மேலும் தேய்பிறை அஷ்டமி வளர்பிறை அஷ்டமி இதில் எது உகந்தது?

அம்மாவை வணங்கு. தாயை வணங்கு என்று கூறினால் எல்லாம் ஒன்றுதானப்பா. பைரவர் என்றால் சிவனின் அம்சம்தான். இந்த பைரவருக்கு 64 வடிவங்கள் இருப்பதாக இப்பொழுது மனிதர்கள் எண்ணியிருக்கிறார்கள். 108 க்கும் மேற்பட்ட பைரவர் வடிவங்களும் வழிபாடுகளும் இருந்தது உண்மை. தற்சமயம் சில வைரவ வழிபாடுகள் மட்டும் இந்தப் பூவுலகில் இருக்கிறது. எனவே எந்த பைரவரை உள்ளன்போடு எப்படி வழிபட்டாலும் நன்மைதான். பொதுவாக அஷ்டமியில் லோகாய காரியங்களை செய்யாமல் இறைவனை வணங்குவது தொண்டுகள் ஆற்றுவது மனிதனுக்கு ஏற்றது. அவனுடைய கடுமையான பாவ தோஷங்கள் வெளிப்படக்கூடிய தருணங்களில் அஷ்டமியும் நவமியும் ஒன்று என்பதால்தான் முற்காலத்திலே லோகாய செயலையெல்லாம் செய்ய வேண்டாம் என்று கூறினார்களே தவிர ஏதோ அஷ்டமியும் நவமியும் தீமை பயக்கக்கூடிய தினமாக மனிதன் எண்ணி விடக்கூடாது. ஒரு மனிதனுக்கு சந்திராஷ்டமம் என்றால் அன்றும் அந்த தினங்களில் அவன் இறை வழிபாடும் தர்ம காரியங்களும் தொண்டும் செய்து வருவது ஏற்புடையதாக இருக்கும். இதுபோல் நிலையிலே எந்த காலமாக இருந்தாலும் பைரவரை உள்ளன்போடு வழிபடலாம். அது மட்டுமல்லாது நல்விதமாய் தீப வழிபாடோ மலர் கொண்டு வழிபாடோ அல்லது ஏதும் இயலாதவர்கள் மனமொன்றி பிராத்தனையோ செய்து வரலாம். இதற்கு அஷ்டமி வரை பொறுத்திருக்க வேண்டியதில்லை. அன்றாடமும் வணங்கலாம். அவரவர்கள் வாய்ப்பு போலவும் வணங்கலாம். எல்லா காலத்திலும் இறைவனை வணங்கலாம். இறைவனை வணங்க காலம் தேவையில்லை. அவனவன் உள்ளம் பக்குவம் அடைந்தால் அதே போதும்.

கேள்வி: மதிய உணவை ஒரு சிறந்த யோகிக்கு வழங்கினால் ஒருவருடைய பூர்வ வினை கழிந்து மறு பிறப்பு இல்லாத நிலையை அடைவார்கள் என்ற கருத்து பற்றி:

தொடர்ந்து எல்லோரையும் யோகியாகப் பார்ப்பது ஒன்றுதான் இதற்கு ஏற்ற வழியாகும். எல்லோருக்கும் வழங்கிக் கொண்டே போவதுதான் சிறப்பு அப்பா. குறிப்பாக இன்ன ஆலயம் செல் இன்ன திதியில் செல் இந்த நட்சத்திரத்தில் செல் இந்தக் கூட்டத்திலே மூன்றாவது வரிசையில் நான்காவதாக அமர்ந்திருக்கிறானே அவன்தான் யோகி என்றால் மனிதன் என்ன செய்வான்? அவனை மட்டும் நன்றாக கவனித்து விட்டு வருவான். இது சுயநலம் இல்லையா? எல்லோருக்கும் உதவ வேண்டும். எல்லோருக்கும் இயன்றதை செய்ய வேண்டும். பிறகு அது தன்னால் யோகியின் கரங்களுக்கு சென்று சேரும். யோகியை யாரும் தேட வேண்டாம். மெய்யான அன்பர்களை நாடி யோகி எனப்படுபவன் தன்னால் வருவான்.

தட்சிணாமூர்த்தி

தட்சிணாமூர்த்தி கோட்டப்பன் என்னும் திருப்பெயரில் ஒரு பீடத்தில் அமர்ந்து ஒரு காலை மற்றொன்றின் மீது ஏற்றி தலையை சிறிது உயர்த்தி சாய்ந்தபடி வித்தியாசமான தோற்றத்தில் காட்சி அளிக்கிறார். வசீகரமான பார்வையுடன் நான்கு கைகளிலும் பாரம்பரிய சின்னங்கள் உள்ளன. ஒளிரும் வெள்ளிக் கிரீடம் தலையில் உள்ளது. விஷ்ணு சிவலிங்கம் மற்றும் தேவி சிலைகளும் இதே சன்னதியில் செதுக்கப்பட்டுள்ளன.

இக்கோவில் கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள முள்ளூர்கரா இரயில் நிலையத்திலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் முள்ளூர்கர பஞ்சாயத்தின் நடுவில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமமான இருநிலம்கோட்டில் அமைந்துள்ளது. பிரதான சாலைக்கு மிக அருகில் பழமையான சிவன் கோவில் இது. இது கேரள அரசின் தொல்லியல் துறையின் பாதுகாப்பில் உள்ளது. இக்கோவில் குகைக் கோயிலாக விளங்கி வருகின்றது. ஒரு குகைக்குள் ஒரு சிறிய குன்றின் கீழ் விளிம்பில் பாறையில் சிலை செதுக்கப்பட்டுள்ளது. இந்த குகை இருக்கும் குன்று 100 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பில் திடமான பாறைகளுடன் அமைந்துள்ளது.

இக்கோவில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அறியப்படாமல் இருந்தது சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு சில கிராமவாசிகள் தற்செயலாக இதைக் கண்டுபிடித்தனர். ஒரு நாள் மழை பெய்து கொண்டிருந்த போது ஒரு பெண் தொழிலாளி குகைக்குள் சென்றார். அங்கே அவள் அரிவாளைக் கூர்மைப்படுத்த ஆரம்பித்தாள். அப்போது அவள் விரலில் ஒரு சிவப்பு திரவத்தைக் கண்டு தன் கை வெட்டப்பட்டு இரத்தம் வருகிறது என்று பயந்து தன் கையில் காயத்தை தேடினாள். கையில் காயங்கள் ஒன்றும் இல்லை. சிகப்பு திரவம் வரும் இடத்தை தேடினாள். பதட்டத்துடனும் ஆர்வத்துடனும் அவள் அரிவாளைக் கூர்மைப்படுத்திய பாறைப் பகுதியைக் கவனித்தாள். அந்த திரவம் மெதுவாக துளிதுளியாக பாறையில் இருந்து வெளியேறுவதைக் கண்டாள். அவளின் பதட்டம் அதிகரித்தது. அவள் கிராம மக்களிடம் ஓடிச் சென்று நடந்த சம்பவத்தைப் பற்றி சொன்னாள். அவர்கள் உடனடியாக அந்த இடத்திற்கு விரைந்து வந்தார்கள். அவர்கள் பாறைத் தளத்தைக் கண்டு பிடித்து கவனமாகப் பார்த்தார்கள். அதே திரவம் வெளி வருவதைக் கண்டார்கள். புதர்களில் இருந்த புல் மற்றும் புதர்களை மெதுவாகவும் கவனமாகவும் அகற்றத் தொடங்கினார்கள். இறுதியில் தட்சிணாமூர்த்தி தெய்வத்தின் முழு வடிவத்தைக் கண்டதும் திகைத்து பரவசத்தில் ஆழ்ந்தனர். கூப்பிய கரங்களுடன் இறைவனுக்கு வணக்கம் செலுத்தி பூஜைகள் செய்தார்கள். பிரதான கோவிலுக்கு மிக அருகில் சிறிய தேவி கோவில் உள்ளது. இங்கு வழிபடப்படும் அம்மன் கந்தன்காளி என்று அழைக்கப்படுகிறார்.

சுலோகம் -157

பகவத் கீதை 3. கர்ம யோகம் 3-38

எவ்விதம் புகையால் நெருப்பும் அழுக்கினால் கண்ணாடியும் மறைக்கப்படுகிறதோ கருப்பை தசைகளால் கரு மறைக்கப்படுகிறதோ அது போலவே காமத்தினால் ஞானம் மறைக்கப்படுகிறது.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

நெருப்பை அதில் இருந்து வரும் புகை மறைத்து விடும். தெளிவாக அனைத்தையும் காட்டக்கூடிய கண்ணாடியை அழுக்கு சேர்ந்து மறைத்து விடும். கருவை கர்ப்பப்பை தசைகள் மறைத்து விடும். அது போலவே உயிர்களிடத்தில் உள்ள ஞானத்தை காமமும் கோபமும் மறைத்து விடும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 279

கேள்வி: வேதாத்ரி மகரிஷி தன் வாழ்நாளை அர்ப்பணித்து தவ முறை தியான முறை பயிற்சியை சொல்லிக் கொடுத்திருக்கிறார். அது உயர்வு பெறுமா? அதன் மூலம் இந்த உலகம் அமைதியை நோக்கி நகருமா?

இறைவனின் கருணையாலே இந்த உலகிலே மனிதர்கள் எப்படி வாழ வேண்டும்? எப்படி வாழக் கூடாது? என்பதற்காக இறைவன் பல்வேறு ஞானியர்களையும் மகான்களையும் அவ்வப்பொழுது மனித வடிவிலேயே அனுப்பி வைத்து போதனைகள் செய்து வருகிறார். சில சமயம் நூல்கள் வாயிலாக கூட பல மனிதர்கள் கண்ணில் நல்ல விஷயங்களை படுமாறு இறைவன் செய்வதும் உண்டு. பல மனிதர்களுக்கு இவையெல்லாம் ஓரளவு தெரியத்தான் செய்யும். ஆனால் மனிதன் அறிவு மயமானவன் அல்ல. உணர்வு மயமானவன். அவன் அறிவுக்கு பல நல்ல விஷயங்கள் தெரிந்தாலும் அவன் உணர்வுக்கு எது பிடித்திருக்கிறதோ அதைதான் செய்வான். மனிதனின் உணர்வுகளைத் தூண்டி விட்டாலே இங்கே எல்லா செயல்களையும் செய்யலாம் என்றுதான் பல மனிதர்கள் காரியத்தை சாதித்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே உணர்வுகளை கட்டுப்படுத்தி பெரும்பாலான தருணங்களில் நல்லறிவை தெய்வீக அறிவைப் பயன்படுத்த மனிதன் முயற்சி செய்ய வேண்டும். இல்லையென்றால் கட்டாயம் எத்தனை உயர்ந்த போதனையாக இருந்தாலும் எத்தனை நல்ல விஷயமாக இருந்தாலும் அது வெறும் செவியாடலாக மட்டும் இருக்குமே ஒழிய நடைமுறைக்கு வரவே வராது.

பெரும்பாலான மனிதர்களுக்கு இதை செய்யலாம். இதை செய்யக்கூடாது என்பது தெரிந்தாலும் உடனடியான லாபத்திற்கும் தேகம் சார்ந்த உணர்வுக்கும் அடிமைப்பட்டு செய்யக் கூடாத காரியங்களை செய்து கொண்டுதான் இருக்கிறான். செய்ய வேண்டியவற்றை செய்யாமல் தள்ளிப் போடுகிறான். எனவே தனி மனித ஒழுக்கமும் பண்பும் அவன் தன்னைத்தான் சீர் தூக்கிக் கொள்கின்ற முறையும்தான் முக்கியம். அப்படி தன்னைத்தான் திருத்திக் கொண்டால் ஏற்கனவே போதித்த நல்ல போதனைகளே போதும் மனித குலம் உயர. வெறும் உணர்வுகளுக்கு அடிமையாகி வாழுகின்ற மனிதனுக்கு எத்தனை போதனைகளையும் எத்தனை விதமான கருத்துக்களையும் கூறினாலும் அவைகள் அவன் செவியில் ஏறாது. இறைவனே நேரில் வந்து சொன்னாலும் கூட அத்தருணம் கேட்டுவிட்டு பிறகு அவன் மாற்றப் பாதையில்தான் செல்வான். எனவே தன் உடல் சார்ந்த இச்சைகளையெல்லாம் அவன் தன்னிடம் உள்ள அறிவைக் கொண்டு அடக்க முயன்றால்தான் இதிலிருந்து அவன் மேலேற முடியும்.

சுலோகம் -156

பகவத் கீதை 3. கர்ம யோகம் 3-37

ரஜோ குணத்திலிருந்து உண்டாகியது இந்தக் காமமும் கோபமுமாகும். இது பெருந்தீனிக்காரன். போகங்களில் போதும் என்ற எண்ணமில்லாதவன் மேலும் பெரிய பாவி இதையே இந்த விசயத்தில் பகைவனாக அறிந்து கொள்.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

ஒருவன் இறைவனை நோக்கிய யோகத்தில் ஈடுபடும் போதோ அல்லது தர்மத்தின் வழி செல்லும் போதோ பூர்வ ஜென்ம வாசனைகளின் காரணமாக ரஜோ குணம் தலை தூக்குகிறது. இதன் காரணமாக ஆசைகள் புலன்கள் வழியாக எளிதாக வந்து உலக விசயங்களில் இழுக்கிறது. இந்த ஆசைகளை அனுபவித்தாலும் பெருந்தீனீக்காரன் போல் மேலும் மேலும் என்று அடுத்த ஆசைகள் வந்து கொண்டே இருக்கிறது. இந்த ஆசைகளை அனுபவக்க முயற்சிக்கும் போது அது தடைபட்டால் மிகுந்த கோபம் ஏற்படுகிறது. இந்த கோபம் அடுத்தவர்களுக்கு தீமையை ஏற்படுத்துகிறது. இது பாவம் ஏற்பட காரணமாயிருக்கிறது. அனுபவித்த ஆசைகள் போதும் என்ற எண்ணமில்லாதவன் மேலும் பாவத்தை சேர்த்துக் கொள்கிறான். தணிக்க முடியாத ஆசையும் கோபமும் உயிர்களுக்கு மிகப்பெரிய விரோதிகள் இது உயிர்களின் அழிவிற்கு வழிவகுத்து விடுகிறது என்பதை அறிந்து கொள் என்று என்று அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் உபதேசம் செய்கிறார்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 278

கேள்வி: ஐயனே அம்மை நோய் எதனால் ஏற்படுகிறது? மக்கள் மாரியம்மன் உடம்பி்ல் இறங்கி விட்டதாக எண்ணி இதற்கு சிகிச்சை எடுத்துக் கொண்டால் அன்னையின் கோபத்துக்கு ஆளாக நேரிடும் என்று மருத்துவரிடம் செல்லாமல் வீட்டிலேயே வேப்பிலை சிகிச்சையோடு நிறுத்திக் கொள்கிறார்கள். அதற்கேற்றாற் போல் நான்கைந்து தினங்களில் அம்மை நோய் இறங்கி விடுகிறது. மருத்துவர்களோ இது நோய்க் கிருமிகளால் ஏற்படுகிறது. சிகிச்சை எடுத்துக் கொள்வது அவசியம் என்கின்றனர். இதில் எது உண்மை?

இறைவன் அருளால் இதுபோல் பல்வேறு நோய்களுக்கு மனிதன் பல்வேறு விதமான காரணங்களைக் கற்பித்துக் கொள்கிறான். இது ஒருபுறமிருக்கட்டும். எல்லா நோய்களும் கிருமிகளால் ஏற்படுகின்றன என்பது மனித விஞ்ஞானத்தின் கருத்து. நாங்கள்(சித்தர்கள்) அதை மறுக்கவில்லை. கிருமிகள் ஏன் ஏற்படுகின்றன? என்பதை மனிதன் ஆய்ந்து பார்க்கவேண்டும். எத்தனையோ கிருமிகள் எப்பொழுதுமே சுற்றிக் கொண்டிருக்க அந்த கிருமிகள் ஏன் குறிப்பிட்ட மனிதனை தாக்க வேண்டும்? எனவே மீண்டும் மீண்டும் பாவகர்மா என்ற நிலைக்குதான் நாங்கள் (சித்தர்கள்) வரவேண்டும். இது ஒருபுறமிருக்க தீவிரமான பக்தியிருந்தால் மனதிலே அணுவளவும் கபட எண்ணம் இல்லாமலிருந்தால் நல்ல எண்ணங்களும் சாத்வீக எண்ணங்களும் இருந்தால் தீவிரமான பக்தியோடு நல்ல எண்ணங்களும் சேர இவன் கூறிய நோயை மட்டுமல்ல எந்த நோயையும் மனிதன் விரட்டலாம் மருத்துவ சிகிச்சை இல்லாமல். இப்படி நாங்கள் (சித்தர்கள்) கூறினால் அடுத்ததொரு வினா வரும். அப்படியானால் இருக்கின்ற எல்லா மருத்துவமனைகளையும் இடித்துவிட்டு ஆலயங்களாக கட்டிவிடலாம் அல்லவா? வெறும் பிராத்தனைகள் மூலம் எல்லா நோய்களையும் நீக்கலாம் அல்லவா? என்று. விதி வழியாக நோய் வருவது இருக்கட்டும். மனிதனே தன்னை நன்றாக பராமரிக்க வேண்டும் தன் சுற்றுப்புறத்தை நன்றாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற உணர்வில்லாமல் அவனாகவே வரவழைத்துக் கொள்வது யார் குற்றம்? என்று பார்க்க வேண்டும்.

அடுத்ததாக ஒரு நோய்க்கு சிகிச்சையே செய்யாதே என்று நாங்கள் (சித்தர்கள்) ஒருபொழுதும் கூறமாட்டோம். தெய்வத்தை நம்பு. வேண்டாம் என்று நாங்கள் (சித்தர்கள்) கூறவில்லை. மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்வதையும் நாங்கள் தவறு என்று நாங்கள் கூறவில்லை. ஆனால் சிகிச்சை எடுத்தால்தான் ஒரு பாதிப்பு வந்தது என்றோ பிராத்தனையால்தான் பாதிப்பு வந்தது என்ற வார்த்தைதான் நாங்கள் (சித்தர்கள்) ஏற்றுக் கொள்ள மாட்டோம். ஏனென்றால் சிகிச்சை செய்தாலும் அல்லது பிராத்தனை செய்தாலும் ஒரு நோயால் ஒருவனுக்கு பாதிப்பு வந்துதான் ஆகவேண்டும் என்ற விதி இருப்பின் அந்த பாதிப்பு வரத்தான் செய்யும். இதையெல்லாம் தாண்டி இவன் குறிப்பிட்ட நோய் மற்றும் இன்னும் சில நோய்களெல்லாம் இறைவனே மனித உடலில் ஆக்கிரமிப்பு செய்வதாக மனிதன் எண்ணுகிறான். இதை சித்தர்கள் ஒருபொழுதும் ஏற்றுக் கொள்வதில்லை. அது மட்டும்லாமல் இந்த மூடத்தனத்தின் உச்சம் என்னவென்றால் அன்னை இறங்கியிருக்கிறாள். எனவே அது அம்மையாகவே காட்சியளிப்பதாகவே கொள்வோம். ஆனால் அதற்கு சிகிச்சையளித்ததால் அன்னைக்கு கோபம் வந்துவிட்டது என்ற கருத்து மிகவும் ஏற்க முடியாத வாதம்.

கோடானு கோடி உயிர்களை துடிக்க துடிக்க கொல்லும் போது அன்னைக்கு வராத கோபம் அடுத்தவனை வஞ்சித்து ஏமாற்றும் பொழுது அன்னைக்கு வராத கோபம் அடுத்தவன் சொத்தையெல்லாம் ஏமாற்றி பிடுங்கும் பொழுது அன்னைக்கு வராத கோபம் இந்த உலகம் கெட்டுப் போக வேண்டும் என்று எண்ணி எத்தனையோ நச்சுத் தொழிலையெல்லாம் விடமாட்டேன் எனக்கு இதில் லாபம் கிட்டுகிறது. அடுத்த வரும் தலைமுறை எப்படி போனால் எனக்கென்ன? என்று மனிதர்கள் செயல்படும் பொழுது அன்னைக்கு வராத கோபம் தன் பிணி போக வேண்டும் என்று ஒரு மருத்துவ முயற்சி எடுத்தால் மட்டும் வந்து விடப் போகிறதா என்ன? மனிதனுக்கு சந்திக்கின்ற அறிவை பிரம்மதேவன் தந்திருக்கிறாரப்பா. சற்றே சிந்தித்துப் பார்த்தால் நன்றாக இருக்கும். ஒரு நோய்க்கு சிகிச்சை செய்வதும் தவறல்ல பிராத்தனை செய்வதும் தவறல்ல. அவன் விதி எவ்வாறோ அவ்வாறுதான் நடக்கும். அந்த விதியையும் மாற்றத்தான் நாங்கள் (சித்தர்கள்) எப்பொழுதுமே தர்மம் தர்மம் தர்மம் தர்மம் என்று எப்பொழுதுமே கூறிக் கொண்டேயிருக்கிறோம். இதை நன்றாக புரிந்துக் கொள்ள வேண்டும்.

தர்மத்தின் சிறப்பை உணர்த்தும் கதை

ஒரு காலத்திலே பல்வேறுவிதமான பணிகளை செய்யக் கூடிய மனிதர்கள் இருக்க அவர்களில் இல்லங்களை பழுதுபார்க்கும் ஒருவன் இருந்தான். ஜாதி பேதங்கள் கடுமையாக இருந்த காலமது. சில நாட்களாக பணியில்லாமல் இருந்த அவன் பக்கத்து ஊருக்கு பணி தேடுவதற்காக புறப்பட்டான். செல்லும் வழியில் ஒரு காடு. அந்த வனத்தை கடந்து அவன் போகும் பொழுது மகனே வா என்று அன்பொழுக யாரோ அழைப்பது போல் அவனுக்குத் தோன்றுகிறது. யார் நீ? எனக்கு பயமாக இருக்கிறது. ஓர் உருவத்தையும் இங்கு காண முடியவில்லையே? என்றான் மனிதன். அச்சம் வேண்டாம் மகனே ஒரு காரியத்தின் பொருட்டுதான் உன்னை அழைத்தேன். உன் நீண்ட கால வறுமையும் நீங்கிவிடும் என்றது அக்குரல். யார் என்னிடம் பேசிக் கொண்டிருப்பது? என்றான் மனிதன். நான் வனதேவதை. நான் உன் கண்ணுக்கு தெரியமாட்டேன். ஆனால் நான் சொல்வதை நீ செய்தே ஆக வேண்டும். ஏதும் குழப்பமில்லை. நான் சொல்வதை மட்டும் கேள். சரி சொல் என்றான் மனிதன். இதொ இந்த ஆலயத்தின் வடகிழக்கு மூலையிலே ஒரு அற்புதமான மணம் பரப்பும் பாரிஜாத மரம் இருக்கிறது. அதிலுள்ள மலர்களை பறித்து இங்குள்ள சிவபெருமான் சாற்றி வணங்கிவிட்டு அம்மரத்தின் பக்கத்தில் இத்தனை தூரம் குழி தொண்டு என்று வனதேவதை கூற இவனும் பவ்யமாக அவ்வாறே செய்கிறான். அங்கே ஏராளமான தங்கத் துவர்கள் (துவரம் பருப்பு) இருந்தன. இதை பார்த்தவுடன் அந்த மனிதனுக்கு ஆசை பொங்கி விட்டது. எல்லாவற்றையும் எடுத்து தன்னிடம் உள்ள ஒரு கோணிப்பையிலே போட்டு முடிக்கும் பொழுது வனதேவதை குறுக்கிட்டது. மகனே அவசரப்படாதே. அத்தனையையும் எடுத்துக் கொள்ளாதே. அது உனக்கு ஆபத்தை விளைவிக்கும். அதில் ஒரு சிறிய பங்கை மட்டும் எடுத்துக் கொண்டு மீதியை அங்கேயே வைத்துவிடு. நான் காரணமாகத்தான் கூறுகிறேன். முழுவதையும் எடுத்துக் கொள்ள உன் விதி இடம் தரவில்லை என்று வனதேவதை கூற அதெல்லாம் முடியாது. எனக்கென்று காட்டினாய். இப்பொழுது மாற்றிப் பேசினால் என்ன பொருள் முழுவதும் எனக்கே சொந்தம் என்றான் மனிதன். வேண்டாமப்பா பகுதியாவது வைத்துவிடு. முடியாது. வேண்டாம் மகனே கால் பகுதியையாவது மீதம் வை. ஒரு காரணமாகத்தான் கூறுகிறேன” என்றது வனதேவதை. அதெல்லாம் முடியாது என்றான் மனிதன். மீண்டும் வனதேவதை பலமுறை கெஞ்ச என்ன இது? உன் தொல்லை அதிகமாகி விட்டதே? என்று அலுத்துக் கொண்டே நான்கே நான்கு கனகப்பருப்பை மட்டும் மீதம் வைத்து விட்டு மற்றவற்றையெல்லாம் மூடை கட்டி அந்த வனதேவதைக்கு நன்றி கூட சொல்லாமல் காட்டை விட்டு வெளியேறுகிறான்.

ஏதாவது பணி கிடைத்தால் அந்த பணியையும் செய்து அதில் வரும் தனத்தையும் பெறலாமே? என்ற பேராசையோடு ஓர் ஊரை அடைகிறான். அந்த ஊரிலே ஒரு பெண்ணின் வீட்டு மேல்விதானம் சிதிலம் அடைந்திருந்தது. ஓடுகள் அலங்கோலமாக இருந்தது. அந்த பெண்மணி இவனிடம். அப்பா என் வீட்டு ஓடுகளை எல்லாம் சரி செய்து தருவாயா? என்று கேட்க அது எனக்கு கை வந்த கலை. செய்து தருகிறேன். அதற்கு எவ்வளவு தனம் தருவீர்கள்? என்று இம்மனிதன் கேட்க அப்பெண்மணி ஒரு தொகையைக் கூற இந்த பெண்மணி குறைவாகத்தான் சொல்கிறாள். என்றாலும் கிடைத்தவரை இலாபம்தானே? என்று எண்ணி மூடையை ஓரமாக வைத்துவிட்டு மேலே ஏற முற்படுகிறான். அந்த மூடையைப் பார்த்த அப்பெண்மணி இது என்னப்பா மூடை? என்று கேட்க அது ஒன்றுமில்லை தாயே என் மனைவி சமையலுக்கு பருப்பு வாங்கி வரும்படி சொன்னாள். சந்தையிலே வாங்கிக் கொண்டு போகிறேன் என்றபடியே மேலேறி ஓடுகளை சரிசெய்யும் பணிகளில் இறங்குகிறான். அப்பெண்மணி வீட்டின் உள்ளே சென்று சமையல் செய்யத் துவங்குகிறாள். அப்போது தான் பருப்பு இல்லை என்று என்பது நினைவிற்கு வருகிறது. உடனடியாக அவளுக்கு ஓர் எண்ணம் தோன்றுகிறது. இதோ இவன்தான் பருப்பு மூடை வைத்திருக்கிறானே? இதிலிருந்து சிறிது எடுத்துக் கொள்வோம். அதற்குரிய தனத்தை மாலையிலே சேர்த்துக் கொடுத்து விடுவோம் என்று முடிவு செய்து அப்பா உன் மூடையிலிருந்து சிறிது பருப்பு எடுத்துக் கொள்ளட்டுமா? என்று கேட்கிறாள். வேலை மும்முரத்தில் இருந்தவனுக்கு இப்பெண்மணி கேட்டது காதில் விழவேயில்லை. சரி பிறகு இவனிடம் சொல்லிக் கொள்ளலாம் என்று மூடையை அந்தப் பெண்மணி திறந்து பார்க்கிறாள். உள்ளே கனக துவரம் பருப்புகள். ஆச்சிரியம் மேலிட அப்பா எத்தனை தங்கம்? என்று எண்ணுகிறாள். வழக்கம் போல் அங்கே அவளுக்கு அசுர புத்தி தலை தூக்குகிறது. துவரம் பருப்பு என்று சொல்லி இவன் நம்மை ஏமாற்றி விட்டானே? என்று எண்ணியவள் சூழ்ச்சியாக அந்த கனக பருப்புகளை எல்லாம் வேறு இடத்தில் பாதுகாப்பாக வைத்துவிட்டு உண்மையான பருப்பை வாங்கிக் கொட்டி மூடையாக மூடி மீண்டும் அதே இடத்திலேயே வைத்து விடுகிறாள்.

அந்த மனிதன் ஓட்டு வேலை முடிந்ததும் கூலியைப் பெற்றுக் கொண்டு மூடையை எடுத்துக் கொண்டு செல்கிறான். திடீரென்று அவனுக்கு ஒரு நப்பாசை. அந்த வனதேவதையின் ஆலயத்திற்கு அருகே வந்தவுடன் அந்த மூடையை திறந்து பார்க்கிறான். உள்ளே எல்லாம் பருப்பாக இருக்கிறது. அவனுக்கு ஒரே அதிர்ச்சி. ஆஹா அந்தப் பெண்மணி நம்மை நன்றாக ஏமாற்றி விட்டாள். திரும்பி சென்று அவளிடம் கேட்பதானால் எந்த ஆதாரத்தை வைத்துக் கேட்பது?. உண்மையையும் சொல்ல முடியாதே? என்று வேதனைப்பட்டு அழத் தொடங்கினான். அப்பொழுது அந்த வனதேவதையின் குரல் கேட்டது. மகனே ஏனப்பா அழுகிறாய்? தாயே கொடுப்பது போல் கொடுத்து மீண்டும் அத்தனையும் பறித்துக் கொண்டாயே? நாங்கள் மனிதர்கள் மோசக்காரர்கள் ஒத்துக் கொள்கிறோம். தேவதை வர்க்கமான நீ இப்படி செய்யலாமா? இது நியாயமா? என்று அம்மனிதன் கேட்க மகனே அதற்குத்தான் முன்னமே சொன்னேன் பகுதியை வைத்து விட்டு மீதத்தை எடுத்துக் கொள் என்று. பிறகு பகுதியிலும் பகுதி வை என்றேன். ஆசை விட்டதா? ஒன்றைத் தெரிந்து கொள். இன்றைய விதிப்படி அந்த பெண்ணுக்குத்தான் இந்த புதையல் போய் சேர வேண்டும். அதுவும் உன் மூலம் போக வேண்டும் என்பதே விதி. என்றாலும் நீ தூக்கி செல்வதற்காக உனக்கு சுமை கூலி தர வேண்டும் என்று நான் விரும்பினேன். அதற்கு உன் விதியில் இடம் இல்லை என்றாலும் என் வார்த்தைகளால் உன் மனதை மாற்றலாம் என்று ஆசைப்பட்டுத்தான் அவ்வாறெல்லாம் கூறினேன். கெஞ்சினேன். ஆனால் விதி உன் மதிக்குள் அமர்ந்து ஆசை எனும் அசுரனைப் புகுத்தி அனைத்தையுமே உனக்கே என்று வைத்துக் கொள்ள செய்தது. அனைத்தும் அந்தப் பெண்மணிக்குதான் போய் சேர வேண்டும் என்பது எனக்கு தெரிந்தாலும் அதை வெளிப்படுத்த இயலாது என்பதே எமது விதி. இப்பொழுது நாலே நாலு வைத்தாயல்லவா? அதை மட்டும் எடுத்துக் கொள். புரிந்துகொள் யாருக்கோ எனும் பொழுது உன் கை சுருங்குகிறது அல்லவா? தரும் பொழுது தாராளமாக கொடுத்தால் அதுவே வேறு வடிவில் உனக்கே மீண்டும் வந்து சேரும் என்று வனதேவதை கூற வேறு வழியில்லாமல் அந்த நாலு பருப்புகளை மட்டும் அவன் எடுத்து சென்றான்.

இந்தக் கதையின் சம்பவங்களை விட்டுவிட்டு கருத்தை மட்டும் உள்வாங்கிக் கொள்ள வேண்டும். பிறருக்கு தரும் பொழுது தாராளமாக இருந்தால் தனக்கு வரும் பொழுதும் அது தாராளமாகவே இருக்கும். எனவே பிறருக்கு தருவதெல்லாம் தனக்குத்தானே மறைமுகமாகத் தருவதுதான் என்ற கருத்துதான் இக்கதையின் மையக்கருத்தாகும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 277

தர்மத்தின் சிறப்பை உணர்த்தும் காதை (கதை) ஒன்று கூறுங்கள் ஐயனே

எத்தனையோ காதைகளை (கதைகளை) முன்னர் கூறியிருக்கிறோம் அப்பா. கூறியது கூறல் பலருக்கு இகழ்ச்சியாகத்தான் இருக்கிறது. அந்தக் காதை (கதை) முக்கியமல்ல. அதில் உள்ள கருத்துதான் முக்கியம் என்பதற்காக மீண்டும் கூறுகிறோம். இதுவும் முற்காலத்திலே நடந்த நிகழ்வுதான். கொடுப்பதில் அளவு பார்க்காமல் தாராளமாக இருந்தால் அது பிறருக்கு கொடுப்பதல்ல (மறைமுகமாக) தனக்குதானே கொடுப்பது போல என்ற தத்துவத்தை புரிய வைக்கவே இந்த காதையை (கதையை) மீண்டும் நினைவூட்டுகிறோம்.

ஒரு காலத்திலே பல்வேறுவிதமான பணிகளை செய்யக் கூடிய மனிதர்கள் இருக்க அவர்களில் இல்லங்களை பழுதுபார்க்கும் ஒருவன் இருந்தான். ஜாதி பேதங்கள் கடுமையாக இருந்த காலமது. சில நாட்களாக பணியில்லாமல் இருந்த அவன் பக்கத்து ஊருக்கு பணி தேடுவதற்காக புறப்பட்டான். செல்லும் வழியில் ஒரு வனம் (காடு). அந்த வனத்தை கடந்து அவன் போகும் பொழுது மகனே வா என்று அன்பொழுக யாரோ அழைப்பது போல் அவனுக்குத் தோன்றுகிறது. யார் நீ? எனக்கு பயமாக இருக்கிறது. ஓர் உருவத்தையும் இங்கு காண முடியவில்லையே? என்றான் மனிதன். அச்சம் வேண்டாம் மகனே ஒரு காரியத்தின் பொருட்டுதான் உன்னை அழைத்தேன். உன் நீண்ட கால வறுமையும் நீங்கிவிடும் என்றது அக்குரல். யார் என்னிடம் பேசிக் கொண்டிருப்பது? என்றான் மனிதன். நான் வனதேவதை. நான் உன் கண்ணுக்கு தெரியமாட்டேன். ஆனால் நான் சொல்வதை நீ செய்தே ஆக வேண்டும். ஏதும் குழப்பமில்லை. நான் சொல்வதை மட்டும் கேள். சரி சொல் என்றான் மனிதன். இதொ இந்த ஆலயத்தின் வடகிழக்கு மூலையிலே ஒரு அற்புதமான மணம் பரப்பும் பாரிஜாத மரம் இருக்கிறது. அதிலுள்ள மலர்களை பறித்து இங்குள்ள என் ஐயன் முக்கண்ணனுக்கு (சிவபெருமான்) சாற்றி வணங்கிவிட்டு அம்மரத்தின் பக்கத்தில் இத்தனை தூரம் குழி தொண்டு என்று வனதேவதை கூற இவனும் பவ்யமாக அவ்வாறே செய்கிறான். அங்கே ஏராளமான தங்கத் துவர்கள் (துவரம் பருப்பு) இருந்தன. இதை பார்த்தவுடன் அந்த மனிதனுக்கு ஆசை பொங்கி விட்டது. எல்லாவற்றையும் எடுத்து தன்னிடம் உள்ள ஒரு கோணிப்பையிலே போட்டு முடிக்கும் பொழுது வனதேவதை குறுக்கிட்டது. மகனே அவசரப்படாதே. அத்தனையையும் எடுத்துக் கொள்ளாதே. அது உனக்கு ஆபத்தை விளைவிக்கும். அதில் ஒரு சிறிய பங்கை மட்டும் எடுத்துக் கொண்டு மீதியை அங்கேயே வைத்துவிடு. நான் காரணமாகத்தான் கூறுகிறேன். முழுவதையும் எடுத்துக் கொள்ள உன் விதி இடம் தரவில்லை என்று வனதேவதை கூற அதெல்லாம் முடியாது. எனக்கென்று காட்டினாய். இப்பொழுது மாற்றிப் பேசினால் என்ன பொருள் முழுவதும் எனக்கே சொந்தம் என்றான் மனிதன். வேண்டாமப்பா பகுதியாவது வைத்துவிடு. முடியாது. வேண்டாம் மகனே கால் பகுதியையாவது மீதம் வை. ஒரு காரணமாகத்தான் கூறுகிறேன” என்றது வனதேவதை. அதெல்லாம் முடியாது என்றான் மனிதன். மீண்டும் வனதேவதை பலமுறை கெஞ்ச என்ன இது? உன் தொல்லை அதிகமாகி விட்டதே? என்று அலுத்துக் கொண்டே நான்கே நான்கு கனகப்பருப்பை மட்டும் மீதம் வைத்து விட்டு மற்றவற்றையெல்லாம் மூடை கட்டி அந்த வனதேவதைக்கு நன்றி கூட சொல்லாமல் வனத்தை (காட்டை) விட்டு வெளியேறுகிறான்.

ஏதாவது பணி கிடைத்தால் அந்த பணியையும் செய்து அதில் வரும் தனத்தையும் பெறலாமே? என்ற பேராசையோடு ஓர் ஊரை அடைகிறான். அந்த ஊரிலே ஒரு பெண்ணின் வீட்டு மேல்விதானம் சிதிலம் அடைந்திருந்தது. ஓடுகள் அலங்கோலமாக இருந்தது. அந்த பெண்மணி இவனிடம். அப்பா என் வீட்டு ஓடுகளை எல்லாம் சரி செய்து தருவாயா? என்று கேட்க அது எனக்கு கை வந்த கலை. செய்து தருகிறேன். அதற்கு எவ்வளவு தனம் தருவீர்கள்? என்று இம்மனிதன் கேட்க அப்பெண்மணி ஒரு தொகையைக் கூற இந்த பெண்மணி குறைவாகத்தான் சொல்கிறாள். என்றாலும் கிடைத்தவரை இலாபம்தானே? என்று எண்ணி மூடையை ஓரமாக வைத்துவிட்டு மேலே ஏற முற்படுகிறான். அந்த மூடையைப் பார்த்த அப்பெண்மணி இது என்னப்பா மூடை? என்று கேட்க அது ஒன்றுமில்லை தாயே என் மனைவி சமையலுக்கு பருப்பு வாங்கி வரும்படி சொன்னாள். சந்தையிலே வாங்கிக் கொண்டு போகிறேன் என்றபடியே மேலேறி ஓடுகளை சரிசெய்யும் பணிகளில் இறங்குகிறான். அப்பெண்மணி வீட்டின் உள்ளே சென்று சமையல் செய்யத் துவங்குகிறாள். அப்போது தான் பருப்பு இல்லை என்று என்பது நினைவிற்கு வருகிறது. உடனடியாக அவளுக்கு ஓர் எண்ணம் தோன்றுகிறது. இதோ இவன்தான் பருப்பு மூடை வைத்திருக்கிறானே? இதிலிருந்து சிறிது எடுத்துக் கொள்வோம். அதற்குரிய தனத்தை மாலையிலே சேர்த்துக் கொடுத்து விடுவோம் என்று முடிவு செய்து அப்பா உன் மூடையிலிருந்து சிறிது பருப்பு எடுத்துக் கொள்ளட்டுமா? என்று கேட்கிறாள். வேலை மும்முரத்தில் இருந்தவனுக்கு இப்பெண்மணி கேட்டது காதில் விழவேயில்லை. சரி பிறகு இவனிடம் சொல்லிக் கொள்ளலாம் என்று மூடையை அந்தப் பெண்மணி திறந்து பார்க்கிறாள். உள்ளே கனக துவரம் பருப்புகள். ஆச்சிரியம் மேலிட அப்பா எத்தனை தங்கம்? என்று எண்ணுகிறாள். வழக்கம் போல் அங்கே அவளுக்கு அசுர புத்தி தலை தூக்குகிறது. துவரம் பருப்பு என்று சொல்லி இவன் நம்மை ஏமாற்றி விட்டானே? என்று எண்ணியவள் சூழ்ச்சியாக அந்த கனக பருப்புகளை எல்லாம் வேறு இடத்தில் பாதுகாப்பாக வைத்துவிட்டு உண்மையான பருப்பை வாங்கிக் கொட்டி மூடையாக மூடி மீண்டும் அதே இடத்திலேயே வைத்து விடுகிறாள்.

அந்த மனிதன் ஓட்டு வேலை முடிந்ததும் கூலியைப் பெற்றுக் கொண்டு மூடையை எடுத்துக் கொண்டு செல்கிறான். திடீரென்று அவனுக்கு ஒரு நப்பாசை. அந்த வனதேவதையின் ஆலயத்திற்கு அருகே வந்தவுடன் அந்த மூடையை திறந்து பார்க்கிறான். உள்ளே எல்லாம் பருப்பாக இருக்கிறது. அவனுக்கு ஒரே அதிர்ச்சி. ஆஹா அந்தப் பெண்மணி நம்மை நன்றாக ஏமாற்றி விட்டாள். திரும்பி சென்று அவளிடம் கேட்பதானால் எந்த ஆதாரத்தை வைத்துக் கேட்பது?. உண்மையையும் சொல்ல முடியாதே? என்று வேதனைப்பட்டு அழத் தொடங்கினான். அப்பொழுது அந்த வனதேவதையின் குரல் கேட்டது. மகனே ஏனப்பா அழுகிறாய்? தாயே கொடுப்பது போல் கொடுத்து மீண்டும் அத்தனையும் பறித்துக் கொண்டாயே? நாங்கள் மனிதர்கள் மோசக்காரர்கள் ஒத்துக் கொள்கிறோம். தேவதை வர்க்கமான நீ இப்படி செய்யலாமா? இது நியாயமா? என்று அம்மனிதன் கேட்க மகனே அதற்குத்தான் முன்னமே சொன்னேன் பகுதியை வைத்து விட்டு மீதத்தை எடுத்துக் கொள் என்று. பிறகு பகுதியிலும் பகுதி வை என்றேன். ஆசை விட்டதா? ஒன்றைத் தெரிந்து கொள். இன்றைய விதிப்படி அந்த பெண்ணுக்குத்தான் இந்த புதையல் போய் சேர வேண்டும். அதுவும் உன் மூலம் போக வேண்டும் என்பதே விதி. என்றாலும் நீ தூக்கி செல்வதற்காக உனக்கு சுமை கூலி தர வேண்டும் என்று நான் விரும்பினேன். அதற்கு உன் விதியில் இடம் இல்லை என்றாலும் என் வார்த்தைகளால் உன் மனதை மாற்றலாம் என்று ஆசைப்பட்டுத்தான் அவ்வாறெல்லாம் கூறினேன். கெஞ்சினேன். ஆனால் விதி உன் மதிக்குள் அமர்ந்து ஆசை எனும் அசுரனைப் புகுத்தி அனைத்தையுமே உனக்கே என்று வைத்துக் கொள்ள செய்தது. அனைத்தும் அந்தப் பெண்மணிக்குதான் போய் சேர வேண்டும் என்பது எனக்கு தெரிந்தாலும் அதை வெளிப்படுத்த இயலாது என்பதே எமது விதி. இப்பொழுது நாலே நாலு வைத்தாயல்லவா? அதை மட்டும் எடுத்துக் கொள். புரிந்துகொள் யாருக்கோ எனும் பொழுது உன் கை சுருங்குகிறது அல்லவா? தரும் பொழுது தாராளமாக கொடுத்தால் அதுவே வேறு வடிவில் உனக்கே மீண்டும் வந்து சேரும் என்று வனதேவதை கூற வேறு வழியில்லாமல் அந்த நாலு பருப்புகளை மட்டும் அவன் எடுத்து சென்றான்.

இந்தக் காதையின் (கதையின்) சம்பவங்களை விட்டுவிட்டு கருத்தை மட்டும் உள்வாங்கிக் கொள்ள வேண்டும். பிறருக்கு தரும் பொழுது தாராளமாக இருந்தால் தனக்கு வரும் பொழுதும் அது தாராளமாகவே இருக்கும். எனவே பிறருக்கு தருவதெல்லாம் தனக்குத்தானே மறைமுகமாகத் தருவதுதான் என்ற கருத்துதான் இக்கதையின் மையக்கருத்தாகும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 276

அகத்திய மாமுனிவரின் பொதுவாக்கு:

பரந்துபட்ட உலகமும் இந்த பேரண்டமும் நீக்கமற நிறைந்துள்ள அனைத்தும் பரம் பொருள்தான் என்பதை ஒரு மனிதன் நன்றாக உள்வாங்கி திடமாக நம்பி எல்லாம் அவன் செயல் என்று தன்னை பரிசுத்த மனிதனாக மெல்ல மெல்ல மாற்றிக் கொண்டால் அப்படி மாற்றிக் கொள்கின்ற மனிதனுக்கு அப்படி மாற்றிக் கொண்டு உண்மையாக வாழ வேண்டும் உண்மை வழியில் செல்ல வேண்டும் என்று எண்ணுகின்ற மனிதனுக்கு அவன் எங்கிருந்தாலும் இறைவன் எம்போன்ற மகான்கள் மூலமாகவோ வேறு வழி மூலமாகவோ வழிகாட்டிக் கொண்டேயிருப்பார் அப்பா. அதுபோல் ஆத்மாக்களுக்கு யாங்களும் இறைவனருளால் வழிகாட்டிக் கொண்டிருக்கிறோம். இங்கு (குடிலுக்கு) வந்துதான் அவன் வழிமுறைகளைப் பெற வேண்டும் என்பதல்ல. நாங்கள் எத்தனையோ வழி முறைகளை வைத்திருக்கிறோம். அதில் ஒன்றுதான் ஓலை (ஜீவநாடி) மூலம் பேசுவது. வேளை வரும் பொழுது வேறு வேறு மார்க்கங்களையும் நாங்கள் (சித்தர்கள்) கடைபிடிப்போம். விதியிலே ஒரு மனிதனுக்கு அவன் எத்தனை நல்லவனாக இருந்தாலும் கூட நல்லவனாக இருந்து விட்ட அல்லது இருக்கின்ற காரணத்தினாலேயே இறை தரிசனமோ அல்லது சித்தர்கள் தரிசனமோ கிடைக்க வேண்டும் என்பது இல்லை அல்லது ஓலை (ஜீவநாடி) மூலம்தான் சித்தர்களின் வாக்கை அறிந்து முன்னேற வேண்டும் என்ற நிலையும் இல்லை. வேறு எத்தனையோ வழிமுறைகள் இருக்கின்றன. இதுகுறித்தும் பலமுறை கூறியிருக்கிறோம்.

இதுபோல் நிலையிலே எம்மைப் பொறுத்தவரை இங்கு வருபவர்களுக்கு பலமுறை உரைத்திருக்கிறோம். இதுபோல காலத்திலே பக்தி மார்க்கமும் பரிபூரண சரணாகதி தத்துவமும் அதோடு தக்க ஏழைகளுக்கு தேவையான அனைத்து உதவிகளை செய்வதும் அந்த தர்ம குணத்தை எப்படியாவது இறையிடம் போராடி பெற்று இன்னும் கூறப் போனால் மனித அறிவு ஏற்றுக் கொள்ள முடியாத எத்தனையோ விஷயங்கள் நாங்கள் (சித்தர்கள்) கூறினாலும் அதில் உச்சகட்டமாக இங்கு வருபவர்கள் வெளியில் ஏளனம் செய்வது ருணம் (கடன்) பெற்று அறம் செய் என்று நாங்கள் (சித்தர்கள்) கூறுகின்ற கருத்தை அதுவும் எல்லோருக்கும் நாங்கள் (சித்தர்கள்) கூறவில்லை. சிலருக்கு சிலவற்றை மனதிலே வைத்து கூறுகிறோம். அந்த தர்மத்தை எவனொருவன் தன்முனைப்பு இல்லாமல் செய்கிறானோ அவனுக்கு ஏதும் கூற வேண்டியதே இல்லையப்பா. அந்த தர்மத்தை விடாப்பிடியாகப் பிடித்துக் கொண்டு எத்தனை இடர் எதிர்ப்பு சோதனை வேதனை வந்தாலும் நீ தர்மம் செய்தாயே? அவன் உன்னை நன்றாக ஏமாற்றி விட்டான். அவனைப் போன்ற ஏமாற்றுக்காரனுக்கெல்லாம் நீ ஏனப்பா உதவி செய்கிறாய்? என்று இன்னொருவன் வந்து குழப்பத்தை ஏற்படுத்தினாலும்கூட என் கடன் தர்மம் செய்து கிடப்பதே என்று எவன் தொடர்ந்து தர்ம வழியில் வருகிறானோ அவனுக்கு ஏதும் கூற வேண்டாம். இறையே அவனை வழி நடத்தும். அதைதான் நாங்களும் தர்மம் தர்மம் தர்மம் என்று பலருக்கும் பல முறை கூறுகிறோம். ஆனால் கேட்க விடவேண்டுமே அவனவன் கர்மம். இந்த ஜீவ அருள் ஓலை உண்மை. இதில் வாக்குகளைக் கூறுவது சித்தர்கள்தான் என்று நம்பக்கூடிய அனைவருக்குமே இந்த வாக்கு பொருந்துமப்பா.