64 யோகினிகளில் ஒருவரான யோகினி யமுனை சிதிலமடைந்த நிலையில் இருக்கிறாள். இந்த யோகினி ஒரு ஆமையின் மேல் ஒரு காலையும் அதன் வால் முனையின் மேல் மற்றொரு காலையும் வைத்து தன்னை சமநிலைப்படுத்திக் கொள்வதைக் காணலாம். இந்த யோகினிக்கு நான்கு கைகள் உள்ளன. மிகவும் குறிப்பிடத்தக்க தனிச்சிறப்பான அம்சம் இவளது தலையை சுற்றி சுருண்டு எழும்பியுள்ள ஜடாமுடி தான்.
அமைவிடம்: சௌசாத் யோகினி கோவில் ஹிராபூர் ஒடிசா மாநிலம்.
மயில் மீது இரு புறமும் கால்கள் போட்டு அமர்ந்த வடிவில் நுக்கேஹள்ளி எனும் இடத்தில் உள்ள ஹொய்சளர் கலைப்பாணி முருகன் சிலை இது. பொதுவாக ஹொய்சளர்கள் மிக அரிதாகவே முருகன் சிலையை உருவாக்கியுள்ளனர். இது 13-ம் நூற்றாண்டு சிலையாகும். இங்கே நமக்கு மிகவும் பரிச்சயமான அழகான வேல் ஒரு கையிலும் மறு கையில் பாசக்கயிறு மற்றொரு கையில் அக்கமாலை நான்காம் கையில் ஹொய்சளர் சிலைகள் அனைத்திலும் இருக்கும் ஒருவித எலுமிச்சைவகைப் பழம் இருக்கிறது. ஆறு முகத்தில் மூன்று முகத்தை காண முடிகிறது. மயிலை அதன் தோகைகளுடன் மிக மிக அழகாக உருவாக்கியுள்ளனர்.
திருமூலர் தனது ஏழு சீடர்களுடன் திருவாவடுதுறை கோமூக்தீஸ்வரர் ஆலயத்தில் அமர்ந்திருக்கும் ஓவியம். 1912 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட திருமந்திரம் புத்தகத்தில் உள்ளது.
கேள்வி: தேங்காய் எண்ணையில் தீபம் ஏற்றுவதற்கு நேரம் உண்டா?
தீபத்தை ஏற்றுவதன் பொருள் இருள் மாயா சக்தி. இருள் அசுர சக்தி. ஒளியே தெய்வ சக்தி. எனவே ஒளியைத்தான் ஆதிகாலத்தில் தெய்வத்தின் வடிவமாக பார்த்து அதுபோலவே வழிபாடு செய்து வாந்தான். ஒளி அக்னியாக மின்னலைக் கண்டு அதிலும் தெய்வ அம்சமாக இப்படி தீபத்திலும் இறை சக்தியை கண்டு வணங்கி வந்தான். எனவே இன்றும் எத்தனையோ தற்காலத்தில் இதுபோல் எண்ணை இல்லா (மின்சார விளக்கு) விளக்குகள் மனிதன் பயன்படுத்தக் கூடிய நிலை இருந்தாலும் முந்தைய கால தீபம் ஏற்றுகின்ற முறையும் இருந்து வருகிறது. இவற்றில் கலப்பில்லா நெய் எல்லா வகையிலும் சிறந்தது. தீபத்தை ஏற்றுவதின் மூலம் ஒரு மனிதன் அந்த சுற்று வெளியை தூய்மை படுத்துகிறான். எனவே அந்த தீபத்தில் அவன் இடுகின்ற பொருளுக்கும் இதுபோல் அந்த சுற்று வெளிக்கும் பர வெளிக்கும் தொடர்பு இருக்கிறது. தூய்மையான நெய் தீபம் பொதுவாக அனைவருக்கும் ஏற்றது. எந்த நிலையிலும் அது ஏற்புடையது. அது இல்லாத நிலையிலே இலுப்பை எண்ணை கொண்டு ஏற்றலாம். எள் எண்ணையும் ஏற்றலாம். இதுபோல் தேங்காய் எண்ணையும் தாராளமாக ஏற்றலாம். இவற்றுக்கெல்லாம் காலமோ அல்லது இந்தந்த நட்சத்திரங்களில் தான் இந்தத்த தீபம் ஏற்ற வேண்டும் என்பதல்ல. ஆனால் தீபத்தை ஏற்றுகிறேன் என்று ஆலயத்தை அசுத்தப்படுத்தினால் அது கடுமையான தோசத்தை ஏற்றுகின்றவனுக்கு ஏற்படுத்தும். ஆலயத்தை தூய்மையாக பராமரிப்பதும் பக்தியின் ஓர் அங்கம்தான்.
கேள்வி: எதை என்றும் புரியாத அளவிற்கு கூட கிரகங்கள் பிடியிலிருந்து தப்பித்துக் காெள்ள ஒரே வழி?
அண்ணாமலையே அண்ணாமலையை (திருவண்ணாமலையை) நாடி நாடி வந்தாலே பாேதுமானது. கிரகங்கள் ஒன்றும் செய்யாது என்பேன். திருவண்ணாமலை மலை உச்சியில் ஏற்றப்படும் தீபத்தை தரிசனம் செய்து வர வேண்டும். இதனால் பல கர்மாக்கள் நீங்கும். அண்ணாமலை உண்ணாமலை கார்த்திகை திங்களில் (கார்த்திகை மாதத்தில்) அழகாகவே இங்கே நடனம் ஆடுவார்கள் என்பேன். அவர்களுக்கு இல்லம் கார்த்திகை மாதத்தில் வந்து செல்வார்கள் என்பேன். அழகாக பின் மகிழ்வான் என்பேன் ஈசன் தீபத்தன்று கூட.
இத்தீபத்தின் மகிமை தீபத்தை கூட எதற்காக ஏற்றுகின்றீர்கள்? எதை என்று கூட யாருக்கும் தெரிவதில்லை. ஏதோ தீபம் ஏற்றி விட்டார்கள் என்பதை கூட ஆனால் இம்மலையானது (திருவண்ணாமலை) முன்னொரு காலத்தில் தங்கம் வைரம் இதையன்றி கூட பன்மடங்காக இதனடியில் பல சித்தர்களும் கூட.
அவ் ஒளியை (மலையில் கார்த்திகை தீபத்தை ஏற்றுவது) எழுப்பும் பொழுது அப்பனே எதை எவற்றினின்றும் கூட அனைத்து சித்தர்களின் ஒளி தான் அது. அதை கண்களால் காண்கின்ற பொழுது நம் மனதில் கூட அப்படி சில தீய வினைகள் அகலும். அதனைப் பார்த்திட்டு (திருவண்ணாமலை தீபத்தை பார்த்திட்டு) அதனை நம் நெஞ்சில் நிறுத்திட்டு மனதில் ஓர் மாதம் அல்லது இரு மாதம் அல்லது ஐந்து மாதங்கள் கூட அந்த தீபத்தை பார்த்திட்டு தீபத்தை எதை என்று உணர நம் மனதிலே நிறுத்தி அண்ணாமலையில் தீபம் ஏற்றினார்களே அதை நினைத்து அதையே மனதில் நிறுத்தி அதையே வைத்துக் கொண்டு அத் தீபத்தை நினைத்துக் கொண்டு தியானம் செய்து கொண்டிருந்தால் பல கர்மாக்கள் கரையும்.
தமிழகத்தில் 12 ஆம் நூற்றாண்டிற்குப் பிறகுதான் ஆறு தலையும் பன்னிரு கைகளும் மயிலும் முருகன் படிமத்தில் நுழைகின்றன. பின்னர் விஜயநகர நாயக்கர் காலத்தில் ஆறுமுகனை மயில் மீது அமர்ந்த கோலத்தில் காணமுடிகிறது. தில்லி தேசிய அருங்காட்சியகத்தில் உள்ள இச்சிலை சோழர் கலைப்பாணியில் அமைந்ததாகும். பன்னிரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.