எட்டாம் நூற்றாண்டை சேர்ந்த இந்த கார்த்திகேயன் சிற்பம் உத்திரபிரதேச மாதிலத்தில் கன்னோஜ் நகரில் உள்ளது.

எட்டாம் நூற்றாண்டை சேர்ந்த இந்த கார்த்திகேயன் சிற்பம் உத்திரபிரதேச மாதிலத்தில் கன்னோஜ் நகரில் உள்ளது.
முருகனும் தெய்வானையும் சுகாசனத்தில் உள்ளனர். இறைவனின் சிதைந்த நிலையில் வலக்கால் உள்ளது. கைகளில் தோள் வளைகளும் பட்டை வளைகளும் உள்ளன. உயரமான சடை மகுடம் சடைப் புரிகள் இருபுறமும் தோள்களில் தவழ்கின்றன.
முருகனின் இடப்புறம் அவரைப் போலவே வலக்காலைக் கீழிறக்கி இடக்காலைக் இருத்தி சுகாசனத்தில் தெய்வானை அமர்ந்திருக்கிறார். இவரது கால்களும் சிதைந்த நிலையில் உள்ளது. சிதைந்துள்ள இடக்கை தொடை மீதும் வலக்கையில் மலர் உள்ளது. செவிகளில் மகர குண்டலங்கள் கழுத்தைச் சரபளியும் பதக்க மாலையும் உள்ளன. தலையில் அணிந்துள்ள சிறிய அளவிலான கரண்ட மகுடத்தை மீறிய சடைப்புரிகள் வலப்புறம் நெகிழ்ந்துள்ளன. இறைவனுக்காக தலையைச் சாய்த்தவாறு தேவியின் முகம் குனிந்திருக்கிறது. இடம் கந்தன் குடைவரை கோவில் (லாடன் கோயில்) ஆணைமலை மதுரை.
வள்ளியை மணம் முடிக்க வள்ளிமலைக்கு வயோதிக வடிவில் சென்றார் முருகர். அங்கு தினைப் புனத்தில் வேடனாகவும் வேங்கை மரமாகவும் விருத்தனாகவும் வேடமிட்டு லீலைகள் பல செய்து அவளை மணம் புரிய விரும்பி காதல் மொழிகளைப் பேசினார். வயோதிக உருவில் இருந்த அவரை இன்னார் என்று தெரியாமல் வள்ளி மிரண்டு விலக அவளை மணக்க அண்ணனாகிய விநாயகரைத் துணைக்கு அழைத்தார் முருகர். அவர் யானை வடிவில் வந்து வள்ளியைத் துரத்தினார். யானையைக் கண்டு அஞ்சி வயோதிகராக வந்த முருகனை அணைத்துக் கொண்டாள் வள்ளி. இப்படி வள்ளியிடம் குறும்பு விளையாட்டு நடத்திய முருகன் ஞானவேல் ஏந்தி மயில் மேல் ஆறுமுகனாகக் காட்சியளித்து ஞான உபதேசம் செய்து வள்ளிக்கு அருள்பாலித்தார். வள்ளி முருகன் திருமணம் சிறப்பாக நடந்தேறியது. இதனை அற்புதமாக விளக்கும் சிற்பக்காட்சி தஞ்சை பெருவுடையார் கோவில் வெளிப்புற சுவற்றில் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது.
1-3 ஆம் நூற்றாண்டு காலத்திய கார்த்திகேயனின் இந்த சிற்பமானது காந்தாரத்திலிருந்து (இன்றைய வடக்கு பாகிஸ்தான்) கண்டெடுக்கப்பட்டது.
தெய்வீக மயில் வாகனத்தின் மீது அமர்ந்துள்ள மயில்வாகனன். இடம்: திரிலோசனேஸ்வரர் கோவில் திரிலோச்சனபாதா, ஜஜ்பூர் டவுன், ஒடிசா மாநிலம்.
பைஜ்நாத் கோவில். இடம் ஹிமாச்சல பிரதேசம். காலம் 12 ஆம் நூற்றாண்டு.
அசுரர்களை அழிக்க சிவன் இங்கிருந்த முருகனை அசுர வதத்திற்கு கிளம்பும்படி கூற முருகனும் கிளம்பினார். அப்போது சிவனும் தேவர்களும் முருகருக்கு பல ஆயுதங்களை கொடுத்தனர். அப்போது திருமால் தனது சங்கு சக்கரத்தை கொடுத்தார். ஆயுதங்களுடன் சென்ற முருகன் அசுரர்களை சம்ஹாரம் செய்தார்.
இந்த நிகழ்வின் அடிப்படையில் இங்குள்ள முருகன் கைகளில் கேடயம் வில் அம்பு சாட்டை கத்தி சூலாயுதம் வஜ்ரம் மற்றும் திருமாலின் ஆயுதங்களான சங்கு சக்கரத்துடன் காட்சி தருகிறார். சங்கு சக்கரமே இவரது பிரதான ஆயுதமாக இருக்கிறது. இந்திர மயில் மீது அமர்ந்த கோலத்தில் இருக்கும் முருகர் கல்யாண சுந்தர சண்முக சுப்பிரமணியர் என்று அழைக்கப்படுகிறார். அருகில் வள்ளி தெய்வானையும் இருக்கின்றனர். இவரது திருவாச்சி ஓம் வடிவில் அமைக்கப்பட்டிருக்கிறது. அருகில் மகாலட்சுமி சன்னதி இருக்கிறது. திருமாலின் ஆயுதங்களுடன் முருகனையும் அருகில் மகாலட்சுமியையும் ஒரே சமயத்தில் இங்கு தரிசிக்கலாம். இடம் படிக்காசுநாதர்கோயில் அழகாபுத்தூர்.
மயில் மீது சாய்ந்த தோரணையில் நிற்கும் தண்டாயுதபாணியின் எழில்மிகு தோற்றம். இடம் ஆத்மநாதசுவாமி கோவில் புதுக்கோட்டை மாவட்டம்.
முருகன் தன் தெய்வீக வாகனமான மயில் மீது கம்பீரமாக அமர்ந்துள்ளார். தேவந்திரனும் சூரனும் மயில் வடிவம் கொண்டு அவரை வாகனமாகத் தாங்கியதற்கு முன்பாக ஓங்கார (மந்திரம்) மயில் வடிவுடன் அவருக்கு வாகனமாக இருந்து வந்தது. இவ்வகையில் முருகனுக்கு தேவ மயில் அசுர மயில் இந்திர மயில் பிரணவாகார மயில் எனப் பலவிதமான மயில்கள் வாகனமாக இருக்கின்றன. இடம்: மதுரை மீனாட்சி அம்மன் கோவில்.
மயில் மீது இரு புறமும் கால்கள் போட்டு அமர்ந்த வடிவில் நுக்கேஹள்ளி எனும் இடத்தில் உள்ள ஹொய்சளர் கலைப்பாணி முருகன் சிலை இது. பொதுவாக ஹொய்சளர்கள் மிக அரிதாகவே முருகன் சிலையை உருவாக்கியுள்ளனர். இது 13-ம் நூற்றாண்டு சிலையாகும். இங்கே நமக்கு மிகவும் பரிச்சயமான அழகான வேல் ஒரு கையிலும் மறு கையில் பாசக்கயிறு மற்றொரு கையில் அக்கமாலை நான்காம் கையில் ஹொய்சளர் சிலைகள் அனைத்திலும் இருக்கும் ஒருவித எலுமிச்சைவகைப் பழம் இருக்கிறது. ஆறு முகத்தில் மூன்று முகத்தை காண முடிகிறது. மயிலை அதன் தோகைகளுடன் மிக மிக அழகாக உருவாக்கியுள்ளனர்.