அகத்தியரின் விரல்களை தாண்டி வளர்ந்த நகங்களைக் கூட தத்ரூபமாக செதுக்கியுள்ளார்கள் சிற்பிகள். 12 ஆம் நூற்றாண்டை சேர்ந்த இந்த சிற்பம் லக்கிசாராய் மாவட்டம் பீகார் மாநிலத்தில் உள்ளது.


அகத்தியரின் விரல்களை தாண்டி வளர்ந்த நகங்களைக் கூட தத்ரூபமாக செதுக்கியுள்ளார்கள் சிற்பிகள். 12 ஆம் நூற்றாண்டை சேர்ந்த இந்த சிற்பம் லக்கிசாராய் மாவட்டம் பீகார் மாநிலத்தில் உள்ளது.
ஹரியானா மாநிலம் பெஹோவா குர்க்ஷேத்ராவிலிருந்து கண்டெடுக்கப்பட்ட 4 – 5 ஆம் நூற்றாண்டு குப்தர் காலத்தைச் சேர்ந்த இராமாயண இதிகாசத்தின் ஒரு பகுதியாக ஜடாயுவை சந்திக்கும் ராமர் மற்றும் லட்சுமணரின் சிற்பம். தற்போது ஹரியானா மாநில தொல்லியல் துறையில் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது.
சாளுக்கியர்கள் காலத்திய சிற்பம். இடம்: பாதாமி குடைவரை கோவில். பகால்கோடு மாவட்டம் கர்நாடக மாநிலம்.
அமெரிக்காவின் ஓஹியோவில் உள்ள கிளீவ்லேண்ட் மியூசியம் ஆஃப் ஆர்ட் கலை அருங்காட்சியகத்தில் உள்ளது. 11 ஆம் நூற்றாண்டை சேர்ந்த சிற்பம்.
துர்காதேவி சிங்க வாகனத்தின் மீது அமர்ந்தபடி சிம்மவாகினியாக காட்சி அளிக்கிறாள். தற்போது இச்சிலை நேபாள நாட்டின் காத்மாண்டு நகரில் தேசிய அருங்காட்சியகத்தில் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த சிற்பம் 13 ஆம் நூற்றாண்டை சேர்ந்தது.
காளையுடன் இருக்கும் சிவனின் உருவத் திருமேனி ரிஷபாரூடர் என்று அழைக்கப்படுகிறது. காளையின் மீது நான்கு கரங்களுடன் சிவபெருமான் உமையம்மையுடன் காட்சி தருகின்றார். இடம் அருள்மிகு கோகர்ணேஸ்வரர் (பிரகதாம்பாள்) திருக்கோயில் திருக்கோகர்ணம் புதுக்கோட்டை மாவட்டம்.
சத்தீஸ்கரில் உள்ள தோல்கல் மலையில் அடர்ந்த வனத்தின் நடுவில் உள்ள மலையின் மேல் இந்த வினாயக மூர்த்தி அமர்ந்துள்ளார். 1000 ஆண்டுகள் பழமையானவர் இவர்.
கர்நாடகாவில் உள்ள ஹேமகுடா மலையின் வழியில் உள்ள ஹம்பியில் மிகப் பெரிய உருவத்தில் விநாயகர் சிலை உள்ளது. இவருக்கு சசிவேகாலு விநாயகர் என்று பெயர். கன்னடத்தில் சசிவ் காலு என்றால் கடுகு விதை என்று பொருள். இது கடுகு விற்பவரால் செதுக்கப்பட்டதால் அந்த சிலைக்கு சசிவேகாலு விநாயகர் என்று பெயர் வந்தது.
அன்னை பார்வதி கௌரி என்ற பெயரில் ஒற்றைக் காலில் தவம் செய்யும் சிற்பம். இடம்: கௌரி குண்டம் உத்தராகண்ட் மாநிலம்.
கஜலட்சுமி தேவியின் வித்தியாசமான சிற்பம். தாமரை பீடத்தில் இரு பக்கங்களிலும் பணிப் பெண்கள் இருக்கிறார்கள். இரு யானைகள் கலச நீரை அபிஷேகம் செய்ய பத்மாசனத்தில் அமர்ந்துள்ளார் கஜலட்சுமி. இடம் ஸ்ரீ கோதண்டராமர் திருக்கோவில் அரியலூர்.