சோழர் காலத்து லிங்கோத்பவ மூர்த்தியின் கிரானைட் சிற்பம். தற்போது இருப்பது அருங்காட்சியகம் பாரிஸ் பிரான்ஸ்.

சோழர் காலத்து லிங்கோத்பவ மூர்த்தியின் கிரானைட் சிற்பம். தற்போது இருப்பது அருங்காட்சியகம் பாரிஸ் பிரான்ஸ்.
ஆடை ஆபரணங்களோடு கால் மூட்டு கூட கல்லில் தெரிய காலை சிறிது மடக்கி இடையை கொஞ்சம் வளைத்து ஒயிலாக நிற்கும் நாராயணி என்றும் அழைக்கப்படும் விஷ்ணு துர்க்கை தேவியின் பல வடிவங்களில் ஒன்று.
இராஜராஜேஸ்வரம் 9 ஆம் மற்றும் 10ஆம் நூற்றாண்டு இராஜராஜசோழர் காலம்.
சிவப் புராணத்தில் உள்ளபடி மீனாட்சி அம்மன் பாண்டிய மன்னன் மலையத்துவசன் காஞ்சனமாலை தம்பதியர் வேள்வி செய்து பெற்ற தவப்புதல்வி ஆவாள். இவளே சுந்தரேஸ்வரரின் மனைவியும் ஆவாள். மீனாட்சி அம்மனை தடாதகை பிராட்டி எனவும் அழைக்கப்பட்டதாக சில கூற்றுகள் இருக்கின்றன. பிறப்பில் மீனாட்சி அம்மனுக்கு மூன்று மார்பகங்கள் இருந்தன. தன்னை திருமணம் செய்துக் கொள்ள போகும் மணவாளனை பார்த்த பிறகு தனது மூன்றாவது மார்பகம் மறைந்து போகும் எனும் நிலை கொண்டிருந்தார். கயிலை மலையில் சிவனை கண்ட பிறகு மீனாட்சி அம்மனின் மூன்றாவது மார்பான நடுமார்பு மறைந்தது என சிவப்புராணத்தில் கூறப்பட்டிருக்கிறது. மீனாட்சி அம்மன் மிகுந்த வீரம் கொண்ட பெண்ணாக இருந்துள்ளார். தனது தந்தை இறந்த பிறகு பாண்டிய நாட்டிலிருந்து படையுடன் கிளம்பி கயிலை மலை வரை சென்று வென்று வந்தார் என திருவிளையாடல் புராணம் கூறுகிறது. கயிலை மலையில் சிவனை கண்டு வெட்கம் கொண்ட பெண் நிலையை மீனாட்சி அம்மன் அடைந்த பிறகு மூன்றாவது மார்பான நடுமார்பு மறைந்தது. சிவனையே சுந்தரேசுவரராக திருமணம் செய்து கொண்டார். இன்றளவும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் முதலில் மீனாட்சி அம்மனுக்கு பூஜைகள் நடந்த பிறகே சுந்தரேஸ்வரருக்கு பூஜைகள் நடைப் பெற்று வருகின்றன.
ஆவுடையார் கோவில் தூணில் உள்ள சிவ தாண்டவம்.
பட்டீஸ்வரம் 16 பட்டை சந்திரகாந்த சோடச லிங்கம்
மகாராஷ்டிராவின் நாசிக்கின் வடமேற்கே சுமார் 37 கிமீ தொலைவில் வகேரா மலைக்கோட்டையில் உள்ள புராண லிங்கம்.
ரிஷிகளின் அறிவுரைப்படி ஸ்ரீ ராமர் சீதை மற்றும் லட்சுமணருடன் சேர்ந்து பிரம்மஹத்தி பாவத்தைப் போக்க சிவலிங்கத்தை நிறுவி ஆகம முறைப்படி வழிபட்டார். அனுமன் அருகில் இருந்தார். அப்போது சிவன் பார்வதியுடன் வானில் தோன்றினார். இராமநாதசுவாமி கோயிலின் கிழக்குப் பகுதியில் உள்ள தூணில் இதை விளக்கும் சிற்பம்.
கர்நாடகா ஹம்பியில் பகவான் ரங்கநாத சுவாமியின் பிரம்மாண்டமான பாறை செதுக்கல்கள்.
32 பட்டைகளுடன் உள்ள இந்த சிவ லிங்கம் 8ம் நூற்றாண்டு பல்லவர் காலத்தை சேர்ந்த மிகப்பழமையான லிங்கமாகும். இவர் முன்பு அமர்ந்திருக்கும் நந்தி இறைவனை நேராக பார்க்காமல் தனக்கு வலது பக்கமாக சிறிது திருப்பி இருக்கிறார். இவர் காஞ்சிபுரம் ராமநாதர் கோவிலில் இருக்கிறார்.