மகாபாரதம் 15. ஆஸ்ரமவாசிக பருவம் பகுதி -1

யுதிஷ்டிரன் தனது ஆட்சியில் மக்களை நல்வழியில் நடத்துவது தன் கடமை என உணர்ந்து செயல்பட்டான். அவன் ஆட்சியில் குறை ஏதும் தென்படவில்லை. நிறைவு எங்கும் நிலைத்திருந்தது. மக்கள் அனைவரும் யுதிஷ்டிரனை தங்கள் தந்தையாக கருதிவந்தனர். ஆட்சி புரிபவன் நான் என்ற எண்ணம் அரசனிடமும் இல்லை. ஆளப்பட்டு வருகின்றோம் என்ற எண்ணம் மக்களிடம் இல்லை. நாட்டில் உள்ள அனைவரும் பரந்த ஒரே குடும்பமாக அனைவரும் வாழ்ந்து வந்தார்கள்.

யுதிஷ்டிரன் தனது பெரியப்பாவாகிய திருதராஷ்டிரனுக்கு முழுமனதுடன் பணிவிடை செய்தான். திருதராஷ்டிரன் தனது மக்கள் அனைவரையும் இழந்துவிட்டான். துரியோதனனை ஆட்சில் அமர வைக்க வேண்டும் என்ற திருதராஷ்டிரனுடைய வாழ்வின் நோக்கம் நிறைவேறவில்லை. திருதராஷ்டிரன் நிலைமை இப்போது பரிதாபகரமாக இருந்தது. அத்தகைய நிலையில் திருதராஷ்டிரனுக்கு ஆறுதலையும் அமைதியையும் கொடுப்பது யுதிஷ்னிரனுடைய நோக்கமாக இருந்தது. துரியோதனன் திருதராஷ்டிரனுக்கு ஓயாத தொல்லை கொடுத்து வந்தான். அதற்கு நேர்மாறாக இப்பொழுது பாண்டுவின் புதல்வர்கள் யுதிஷ்டிரன் தலைமையில் சிறிதளவும் தர்மத்திலிருந்து பிசகாமல் நடந்து கொண்டார்கள். அதேவேளையில் நாட்டின் சக்கரவர்த்தியாக ஆட்சி புரிந்து வருவது தான் அல்ல. திருதராஷ்டிரன் தான் என்பதை என் பெரியப்பாவிடம் யுதிஷ்டிரன் சொல்லிக்கொண்டே வந்தான். யுதிஷ்டிரன் படைத்திருந்த பரந்த மனப்பான்மையின் விளைவாக மன வேதனையில் இருந்து திருதராஷ்டிரன் விடுபட்டான். குந்தியும் திரௌபதியும் காந்தாரிக்கு பணிவிடை செய்து அவளுக்கு ஆறுதலையும் அமைதியையும் கொடுத்தார்கள்.

யுதிஷ்டிரனுடைய நெறி பிறழாத ஆட்சி முறையிலும் பாதுகாப்பிலும் திருதராஷ்டிரன் 15 வருடகாலம் வாழ்ந்து வந்தான். சௌபாக்கியம் நிறைந்த அந்த நல்ல சூழ்நிலையில் வாழ்ந்து வந்ததன் விளைவாக துரியோதனன் சகுனி மற்றும் பலரின் நடுவில் பொல்லாங்கு மனதுடன் வாழ்ந்து வந்த திருதராஷ்டிரன் நல்ல மனதும் ஆழ்ந்த சிந்தனையும் உடைய மாறிவிட்டான். பீமனும் துரியோதனனும் ஜன்ம விரோதிகளாக முன்பு வாழ்ந்துவந்தனர். அதை முன்னிடு திருதராஷ்டிரன் பீமன் மீது கோபம் மிக படைத்திருந்தான். பீமன் எச்சரிக்கையாக நடந்து கொண்டதன் விளைவாக தற்போடு திருதராஷ்டிரனின் மனப்பான்மையை பீமன் அடியோடு மாற்றி விட்டான். திருதராஷ்டிரரின் மனதை திருத்தி அமைத்த சிறப்பு பாண்டவர்களுக்கு உரியதாக இருந்தது.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.