இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹளபீடு என்னும் இடத்தில் உள்ள ஹோய்சலேஸ்வரர் கோயில் ஆகும். இது 12ஆம் நூற்றாண்டில் போசளப் பேரரசை விஷ்ணுவர்த்தனன் ஆண்டுவந்த காலத்தில் கட்டப்பட்டது. இக் கோயிலில் மிகவும் நுணுக்கமாக செதுக்கப்பட்ட சிலை.

இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹளபீடு என்னும் இடத்தில் உள்ள ஹோய்சலேஸ்வரர் கோயில் ஆகும். இது 12ஆம் நூற்றாண்டில் போசளப் பேரரசை விஷ்ணுவர்த்தனன் ஆண்டுவந்த காலத்தில் கட்டப்பட்டது. இக் கோயிலில் மிகவும் நுணுக்கமாக செதுக்கப்பட்ட சிலை.

பகவத் கீதை 3. கர்ம யோகம் 3-9
யாகம் போன்ற கர்மங்களை தவிர மற்ற கர்மங்கள் செய்வதனால் மூலமாக இந்த மனத சமுதாயம் கர்மங்களால் பந்தப்படுகிறது. ஆகையால் அர்ஜூனா பற்று இல்லாமல் யாகம் செய்வது போல பற்று இல்லாமல் இந்த கடமையை செய்வாயாக.
இந்த சுலோகத்தின் கருத்து என்ன?
எந்த விதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் பற்றில்லாமல் இறைவனுக்காக மட்டுமே என்ற எண்ணத்தில் செயல்களை செய்து அதனை இறைவனுக்கு சமர்ப்பணம் செய்வது யாகம் எனப்படும். இந்த யாகத்தை செய்வதினால் உலகத்துடன் பந்தங்கள் ஏற்படுவதில்லை. இறைவனுக்காக மட்டுமே என்று செய்யாத எந்த செயலும் உலகத்துடன் தொடர்பு ஏற்படுத்தப்பட்டு விடுகிறது. இதன் விளைவாக நல் கர்மாவோ தீய கர்மாவோ ஏற்படுகிறது. அது மேலும் பிறவிகளை உண்டாக்குவதற்கான வாய்ப்பு இருக்கிறது. ஆகவே செய்யும் செயல்களை யாகம் செய்வது போல பற்றில்லாமல் இறைவனுக்காக என்ற எண்ணத்தில் செய்வாயாக என்று அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் உபதேசம் செய்கிறார்.

பகவத் கீதை 3. கர்ம யோகம் 3-8
உனக்கு விதிக்கப்பட்ட கர்மங்களை செய்வாயாக. ஏனெனில் கர்மங்கள் செய்யாமல் இருப்பதை விட கர்மங்களை செய்வது சிறந்தது. மேலும் கர்மம் செய்யாமல் இருப்பதால் உனக்கு உடலை பராமரிப்பதும் இயலாத செயலாகி விடும்.
இந்த சுலோகத்தின் கருத்து என்ன?
உனக்கு விதிக்கப்பட்ட விதியின் படி உனது தாய் தந்தை குழந்தைகளை பார்த்துக் கொள்வது முதல் உனக்கு உண்டான தொழிலை அல்லது உனக்கு விருப்பமான தொழிலை நீ செய்தே ஆக வேண்டும். ஏனெனில் நான் ஒன்றும் செய்ய மாட்டேன் என்று சும்மா இருப்பதினால் உனக்கு விதிக்கப்பட்ட கர்மங்களை நீ செய்யாத காரணத்தினால் உனக்கு பாவம் வந்து சேரும். மேலும் உன்னை சுற்றி இருப்பவர்கள் எதற்கும் நீ உபயோகமில்லை என்று உன்னை தூற்றி தவறாக பேசுவார்கள். ஆகவே சும்மா இருப்பதை விட உனக்கு ஏற்ற தொழிலை நீ செய்து கொண்டு உனது குடும்பத்தை பார்த்துக் கொள்வது சிறந்தது. எதுவும் செய்யாமல் சும்மா இருப்பதினால் உடலும் உனக்கு ஒத்துழைக்காமல் கெட்டு விடும் என்று அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் உபதேசம் செய்கிறார்.

மகாராஷ்டிராவின் நாசிக்கின் வடமேற்கே சுமார் 37 கிமீ தொலைவில் வகேரா மலைக்கோட்டையில் உள்ள புராண லிங்கம்.

பகவத் கீதை 3. கர்ம யோகம் 3-7
அர்ஜூனா எவனொருவன் தன் இந்திரியங்களை வசப்படுத்திப் பற்றில்லாதவனாக இருந்து கொண்டு தன் கர்மேந்திரியங்களால் கர்ம யோகத்தை கடைபிடிக்கிறானோ அவனே சிறந்தவன்.
இந்த சுலோகத்தின் கருத்து என்ன?
அர்ஜூனா எவன் ஒருவன் தன்னுடைய பார்த்தல் பேசுதல் காணுதல் நுகர்தல் கேட்டல் ஆகியவற்றால் ஏற்படும் ஆசைகளின் வழியில் செல்லாமல் அதனை அடக்கி வசப்படுத்தி எதன் மீதும் பற்றில்லாமல் இருந்து கொண்டு வாக்கு கைகள் கால்கள் உடல் கழிவுகளை வெளியே தள்ளும் உறுப்புகள் பிறப்புறுப்புக்கள் ஆகிய ஐந்து கர்மேந்திரியங்களையும் கர்ம யோகத்தினால் (நான் செய்கிறேன் என்ற எண்ணம் இல்லாமல்) செயல்படுத்துகிறானோ அவனே சிறந்தவனாக இருக்கிறான் என்று அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் உபதேசம் செய்கிறார்.

ரிஷிகளின் அறிவுரைப்படி ஸ்ரீ ராமர் சீதை மற்றும் லட்சுமணருடன் சேர்ந்து பிரம்மஹத்தி பாவத்தைப் போக்க சிவலிங்கத்தை நிறுவி ஆகம முறைப்படி வழிபட்டார். அனுமன் அருகில் இருந்தார். அப்போது சிவன் பார்வதியுடன் வானில் தோன்றினார். இராமநாதசுவாமி கோயிலின் கிழக்குப் பகுதியில் உள்ள தூணில் இதை விளக்கும் சிற்பம்.

பழனியில் இருந்து 20 கிமீட்டரும் உடுமலையில் இருந்து 18 கிமீ துாரத்திலுள்ள கொழுமம் ஊரில் உள்ளது மாரியம்மன் கோவில். மாரியம்மன் அமராவதி ஆற்றின் கரையில் கிழக்கு நோக்கி வீற்றிருக்கிறாள். தரைக்கு மேல் இரண்டரை அடி உயரத்தில் லிங்க வடிவில் காட்சி தருகிறாள் மாரியம்மன். லிங்கத்தின் அடியில் ஆவுடையார் (பீடம்) உள்ளது. அம்பாளுக்குரிய அடையாளங்கள் எதுவும் இல்லாவிட்டாலும் அம்பாளாகவே கருதப்பட்டு புடவை கட்டி பூஜை செய்யப்படுகிறது. கருவறையில் அணையா விளக்கு எப்போதும் எரிந்து கொண்டிருக்கிறது.
அமராவதி ஆற்றில் மீனவர் ஒருவர் மீன் பிடிக்க வலை வீசிய போது லிங்க வடிவ கல் ஒன்று சிக்கியது. அதை கரையில் போட்டு விட்டு மறுபடியும் மீனவர் வலையை வீசினார். திரும்பவும் அதே கல் வலையில் சிக்கியது. மீனவர் மீண்டும் வலை வீச அந்த கல் வந்து கொண்டே இருந்தது. பயந்து போன அவர் வீட்டிற்கு திரும்பி விட்டார். அன்றிரவில் அவரது கனவில் தோன்றிய அம்பாள் ஆற்றில் லிங்க வடிவில் உனக்கு தரிசனம் தந்தது நான் தான் என்றாள். இத்தகவலை ஊர் மக்களிடம் கூறினார் மீனவர். மக்கள் அனைவரும் ஆற்றங்கரையில் கல்லை தேடிய போது கிடைக்கவில்லை. ஓரிடத்தில் இந்த கல் மண்ணில் புதைந்து சிறிய புடைப்பு போல வெளிப்பட்டிருந்ததைக் கண்டு அவ்விடத்தில் தோண்டினர். எவ்வளவோ தோண்டியும் அடிப்பாகத்தை காண முடியவில்லை. பின் அங்கேயே அம்பாளுக்கு கோயில் கட்டினர். கல் லிங்கம் போல இருந்ததால் அப்படியே பிரதிஷ்டை செய்து அந்த சிவலிங்க வடிவையே அம்பாளாக பாவித்து மாரியம்மன் என பெயர் சூட்டி பூஜைகள் விழாக்கள் நடக்க ஆரம்பித்தன.
குதிரையாறும் அமராவதியும் இணையும் உயரமான கோட்டை போன்ற இடத்தில் இருந்து ஊரைக் காப்பதால் கோட்டை மாரி என்றும் பெயர் உள்ளது. குமண மன்னர் ஆட்சி செய்த பகுதி என்பதால் இவ்வூர் குமணன் நகர் என அழைக்கப்பட்டது. இங்கு வணிகர்கள் குழுமியிருந்து வியாபாரம் செய்ததால் குழுமூர் எனவும் அழைக்கப்பட்டு காலப்போக்கில் அதுவே மருவி கொழுமம் என்று ஆனது.


