விஜயநகர காலத்து நரசிம்மரின் சிற்பம். கடிஹஸ்தத்துடன் புன்னகை தவழ காட்சி தருகிறார். அவரது பாதங்களுக்கு கீழே அஞ்சலி முத்திரையுடன் கருடபகவான் அமர்ந்துள்ளார். நரசிம்மரின் இருபுறம் சங்கு மற்றும் சுதர்சனம் இருக்கிறது.

விஜயநகர காலத்து நரசிம்மரின் சிற்பம். கடிஹஸ்தத்துடன் புன்னகை தவழ காட்சி தருகிறார். அவரது பாதங்களுக்கு கீழே அஞ்சலி முத்திரையுடன் கருடபகவான் அமர்ந்துள்ளார். நரசிம்மரின் இருபுறம் சங்கு மற்றும் சுதர்சனம் இருக்கிறது.
தண்டாயுதபாணி தன்னுடைய வாகனமான மயில் மீது சாய்ந்த தோரணையில் சுமார் 6 அடி உயரத்தில் நிற்கும் எழில்மிகு தோற்றம். மயிலின் வாயில் பாம்பு. இடம் ஆத்மநாத சுவாமி கோவில் ஆவுடையார்கோயில். புதுக்கோட்டை மாவட்டம்.
யோகினி கோயில் அல்லது சௌசதி யோகினி கோயில் என்று அழைக்கப்படும் இக்கோவில் ஓரிசா மாநிலத்தின் கோர்த்தா மாவட்டத்தின் ஹிராப்பூர் கிராமத்தில் அமைந்துள்ளது. மிகவும் பழைமையான சாக்த சமயக் கோயில் ஆகும். இக்கோயிலில் காளி பிரதான தெய்வமாக இருக்கிறாள். இக்கோயிலின் உட்புறச் சுவரில் 64 கலைகள் 64 நோய்களுக்கு காரணமாக 64 யோகினி தேவதைகளின் சிற்பங்கள் உள்ளதால் இக்கோயிலை 64 யோகினி கோயில் என்றும் அழைப்பார்கள். இந்த யோகினி பெண் தெய்வங்களின் பெயர்கள் அவற்றின் பீடத்தில் பொறிக்கப்பட்டுள்ளது இக்கோவில் கிபி 9ம் நூற்றாண்டில் கலிங்க இராணி ஹிராவதியால் கட்டப்பட்டது.
யோகினி கோயில் மணற்கல்லால் கட்டப்பட்டுள்ளது. யோனி அமைப்பில் வட்ட வடிவில் இக்கோயிலின் கட்டிட அமைப்பு உள்ளது. கோயிலின் மூலவரான காளி தேவி அரக்கனின் உடல் மீது ஏறி நின்ற கோலத்தில் அருள் பாலிக்கிறாள். கருவறையின் வெளிப்புறச் சுவர்களில் ஏகபாத மூர்த்தி பார்வதி பிள்ளையார் ரதி சாமுண்டி பைரவர் கிருஷ்ணர் சிற்பங்கள் உள்ளது. கோயிலின் உட்புறச் சுவர்களில் 64 யோகினி தேவதைகளின் கருங்கல் சிற்பங்கள் உள்ளது. இக்கோயில் சூரிய ஒளி படுமாறு அமைக்கப்பட்டுள்ளது. நுழைவாயிலில் துவாரபாலகர் வடிவங்கள் உள்ளன. வெளிச்சுவரில் ஒன்பது காத்யாயினி வடிவங்கள் உள்ளன. கோயிலின் மையப்பகுதியில் உள்ள மண்டபம் சண்டி மண்டபம் எனப்படுகிறது. இக்கோவிலில் சாக்த சமய தாந்திரீகர்கள் தாந்திரீகச் சடங்குகள் செய்து வழிபட்டுள்ளனர். தற்போது இந்தியத் தொல்லியல் ஆய்வகம் இக்கோயிலை நிர்வகித்து பராமரிக்கிறது.
செண்பகாதேவி அம்மன் கோவில் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது. குற்றாலம் மெயின் அருவிக்கு மேல் சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் இக்கோவில் உள்ளது. குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோவிலின் கட்டுப்பாட்டில் இந்த கோவில் செயல்பட்டு வருகிறது. செண்பகாதேவி அம்மன் கோயில் பெருமையை குற்றால ஸ்தல புராணத்தில் சிறப்பாக பாடப்பட்டுள்ளது. இங்கு நாகம் மற்றும் புற்று அமைந்துள்ளது. செண்பகாதேவி அம்மன் திருக்கோயிலை சுற்றி விநாயகர் அகத்தியர் உள்ளிட்ட சித்தர்களின் சிலை மற்றும் பாறையில் செதுக்கப்பட்ட நந்தி சிவலிங்கம் போன்றவையும் உள்ளது. செண்பகாதேவி அம்மன் பெயரிலேயே இங்குள்ள அருவி செண்பகாதேவி அருவி எனப் பெயர் பெற்றது. அகத்திய மாமுனிவர் செண்பகாதேவி அம்மனை பிரதிஷ்டை செய்துள்ளார்.
இந்த ஆலயத்தில் கருவறை அர்த்தமண்டபம் மகா மண்டபம் என்ற அமைப்புகளுடன் உள்ளது. இங்கு லட்சுமி சரஸ்வதி தேவியருடன் இணைந்து செண்பகாதேவி அம்மன் கருவறையில் காட்சியளிக்கின்றனர். அம்மனுக்கு ஆண்டு தோறும் சித்ரா பௌர்ணமி அன்று திருவிழா சிறப்பாக நடைபெறும். திருவிழா நேரத்தில் சில ஆண்டுகள் முன்பு வரை ஆண்டு தோறும் சித்ரா பௌர்ணமியன்று மழை பெய்யும். செண்பகாதேவி அம்மன் திருக்கோயிலில் பௌர்ணமி பொழுது மட்டும் அதுவும் மதியம் வரை மட்டுமே தற்போது மக்கள் அனுமதிக்கப் படுகிறார்கள். மற்ற நேரங்களில் பொது மக்களுக்கு அனுமதி கிடையாது.
சேனாதிபதி ஆறுமுகனின் அழகிய கற்சிலை. ஆறு முகத்தில் ஐந்து முகம் மட்டுமே முன்னால் தெரிகிறது. முருகரின் வலது பக்கத்தில் ஆறாவது முகம் மறைவாக இருக்கிறது. இடம்: ஸ்ரீ கண்டேஸ்வரர் கோயில். நஞ்சன்கூடு. கர்நாடக மாநிலம்.