ஶ்ரீ பூதநாதகீதை பகுதி – 11

இறைவனே மணிகண்டனாக அவதரித்திருக்கிறார் என்பதை அந்த இறைவனின் அருளால் உணர்ந்த ஐயப்பனின் வளர்ப்புத் தந்தை அரசன் இராஜசேகர பாண்டியன் இறைவனது பாத கமலங்களில் சரண் புகுந்து பிறவிப் பிணி தீர்க்க வேண்டி பிரார்த்தித்தார். முக்தியை நாடி வரும் மன்னனுக்கு மணிகண்டன் தானே ஞானாசிரியனாக விளங்கி ஞான தத்துவங்களை உபதேசித்தார். இந்த உபதேசத்தில் ஞான முதிர்ச்சி அடைந்தார் மன்னன். அந்த உபதேசமே ஶ்ரீபூதநாத கீதை நூல் ஆகும். இந்த ஶ்ரீபூதநாதகீதை நூல் திரு V. அரவிந்த் சுப்ரமணியம் அவர்களால் வெளிக் கொண்டு வரப்பட்டது. அந்த நூலில் உள்ள உபதேசங்களில் ஏழாம் அத்தியாயத்தில் இந்த உடலை பெற்ற பயன் என்ன? என்றும் மனம் ஒன்றி முக்தியை நாடும் நிலைக்கு நம்மை அழைத்துச் செல்லும் கர்மா கர்ம யோகம் பற்றி பற்றி உபதேசித்திருக்கிறார். இந்த ஏழாம் அத்தியாயத்தில் மொத்தம் 12 சுலோகங்கள் உள்ளது. இந்த 12 சுலோகங்களுக்கு சிறு விளக்கம் இந்த வீடியோவில் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதன் தொடர்ச்சி பகுதி – 12 விரைவில் பதிவேற்றப்படும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.