குருநாதர் கருத்துக்கள் #45

கேள்வி: குருவை எவ்விதம் அணுகுதல் வேண்டும்?

விசுவாசம் என்கின்ற நிலையில் அணுகுதல் வேண்டும். விசுவாசம் என்பதற்கு மறுபெயர் நம்பிக்கை. நம்பிக்கையானது பிரதானமாக எல்லாவித உறவிலும் எல்லா நிலையிலும் காண்கிறோம். நாளை நாம் இருக்கப் போகின்றோம் என்கின்ற நம்பிக்கையுடன் செயலாற்றுகின்றோம். நாளை நமக்கு எது வேண்டுமோ அது கிடைக்கும் என்று நம்பிக்கையுடன் செயல்படுகின்றோம். இவ்விமிருக்க நாம் நல்வழியில் சீடனாக அமைந்து நல்வழியில் நமக்கு குரு அருள் புரிவார் என்கின்ற நம்பிக்கையுடன் விசுவாசம் நிலைத்திட அனைத்தும் பெற்றிட இயலும். இரண்டாவதாக எண்ணம் போல் வாழ்க நாம் எவ்விதம் எண்ணுகின்றோமோ அவ்விதமே வாழ்வோம் எண்ணம் சிறிது பழுது பட்டு போனாலும் அவ்விதமே நமது வாழ்க்கையும் அமையும் என்பதை மறக்காமல் வாழுதல் வேண்டும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.