சிவன் மற்றும் பார்வதிதேவி. உமாமகேஸ்வரர் கோலத்தில் இயல்பாக அமர்ந்துள்ளனர். 5 – 6 ஆம் நூற்றாண்டு. இடம்: பரசுராமேஸ்வரர் கோவில் புவனேசுவர் ஒடிசா மாநிலம்.



சிவன் மற்றும் பார்வதிதேவி. உமாமகேஸ்வரர் கோலத்தில் இயல்பாக அமர்ந்துள்ளனர். 5 – 6 ஆம் நூற்றாண்டு. இடம்: பரசுராமேஸ்வரர் கோவில் புவனேசுவர் ஒடிசா மாநிலம்.
சீனாவின் ஹெனான் மாகாணத்தின் புராதன நகரமான லுயாங்கின் தெற்கே 12 கிலோமீட்டர் தொலைவில் லாங்மென் குகைகளில் இச்சிலை கம்பீரமாக நிற்கிறது. 2000 ஆம் ஆண்டு யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாக பதிவுசெய்யப்பட்டது. 2300 க்கும் மேற்பட்ட குகைகள் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பௌத்த சிலைகள் உள்ளது. வட வேய் வம்ச காலத்தில் சுமார் 493 ஆம் ஆண்டு இந்த குகைகளின் உருவாக்கம் துவங்கியது. பல்வேறு வம்சங்களை கடந்து வந்த ஒரு முயற்சி தொடர்ந்த்து நடைபெற்றது. இந்த குகைகள் ஒவ்வொன்றும் வெறும் 2 சென்டிமீட்டர் அளவுள்ள சிறிய விவரங்கள் முதல் 17 மீட்டருக்கு மேல் இருக்கும் சிலைகள் வரை சிற்பங்களை மறைக்கின்றன. 800 கல்வெட்டுகளுக்கும் மேற்பட்ட வீடுகள் இங்கு அடங்கியுள்ளது. இந்த கல்வெட்டுகளில் இருந்து அவற்றின் வரலாற்று கவிதைகள் அரசின் செயல்பாடுகள் மற்றும்அந்த கால மக்களின் வாழ்க்கை முறைகளை தெரிந்து கொள்ளலாம்.
பதினெண் சித்தர்களுள் ஒருவரானவரும் போகர் சித்தரின் சீடரான புலிப்பாணிசித்தர்
இடம்: சண்முக நதி கோவில் பழனி.
கங்காதரேஸ்வரர் கோவிலில் 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த பஞ்சலிங்கம் உள்ளது. நான்கு புறம் நான்கு சிறிய பாணத்துடனும் நடுவில் ஒரு பெரிய பாணத்துடனும் இந்த சிவலிங்கம் உள்ளது. இடம் தோடாஷிவ்ரா, மாலூர் கோலர் கர்நாடக மாநிலம்.
திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு உட்பட்ட ஸ்ரீவெங்கடேஸ்வரா அருங்காட்சியகத்தில் உள்ள சக்கரத்தாழ்வார்.
அன்னை பராசக்தி தன்னுடைய உடலில் இருந்து 8 யோகினிகளை தோற்றுவித்தார். அந்த 8 யோகினிகளும் தலா 8 பேர் வீதம் 64 யோகினிகளாக மாறினர். சக்தி வழிபாட்டில் மிக முக்கியமான பரிவார தேவதைகளாக விளங்குபவர்கள் இந்த 64 யோகினிகள். அதில் ஒருவர் யோகினி உல்கா என்று இவரை வடநாட்டில் அழைக்கின்றனர். நான்கு கைகளுடனும் இரண்டு கைகளில் வாள் மற்றும் கேடயத்துடனும் இரண்டு கைகள் உதட்டில் குவித்து விசில் சத்தம் கொடுப்பது போலவும் அமைந்துள்ளது. இவளை மகாலட்சுமியின் அம்சமாகவும் அவரின் வாகனமாக ஆந்தை செல்லப் பறவையாகவும் வாகனமாகவும் வட இந்தியாவில் வழிபட்டு வருகிறார்கள். நம் நாட்டில் மத்திய பிரதேசத்தில் இருந்த இந்த பழமையான சிற்பம் தற்போது அமெரிக்கா டெக்சாஸில் உள்ள சான்அன்டோனியோ அருங்காட்சியகத்தில் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது. காலம் 10 முதல் 11 ஆம் நூற்றாண்டு.
ராமர் சீதை மற்றும் லட்சுமணன் வனவாசத்தின் போது லட்சுமணன் சூர்ப்பனகையின் மூக்கை வெட்டும் சிற்பமானது 5 மற்றும் 6 ஆம் நூற்றாண்டு குப்தர் காலத்தைச் சேர்ந்த ஆதிவராக கோவிலில் சிதிலமடைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டு தற்போது டெல்லி தேசிய அருங்காட்சியகத்தில் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது.
வள்ளியை மணம் முடிக்க வள்ளிமலைக்கு வயோதிக வடிவில் சென்றார் முருகர். அங்கு தினைப் புனத்தில் வேடனாகவும் வேங்கை மரமாகவும் விருத்தனாகவும் வேடமிட்டு லீலைகள் பல செய்து அவளை மணம் புரிய விரும்பி காதல் மொழிகளைப் பேசினார். வயோதிக உருவில் இருந்த அவரை இன்னார் என்று தெரியாமல் வள்ளி மிரண்டு விலக அவளை மணக்க அண்ணனாகிய விநாயகரைத் துணைக்கு அழைத்தார் முருகர். அவர் யானை வடிவில் வந்து வள்ளியைத் துரத்தினார். யானையைக் கண்டு அஞ்சி வயோதிகராக வந்த முருகனை அணைத்துக் கொண்டாள் வள்ளி. இப்படி வள்ளியிடம் குறும்பு விளையாட்டு நடத்திய முருகன் ஞானவேல் ஏந்தி மயில் மேல் ஆறுமுகனாகக் காட்சியளித்து ஞான உபதேசம் செய்து வள்ளிக்கு அருள்பாலித்தார். வள்ளி முருகன் திருமணம் சிறப்பாக நடந்தேறியது. இதனை அற்புதமாக விளக்கும் சிற்பக்காட்சி தஞ்சை பெருவுடையார் கோவில் வெளிப்புற சுவற்றில் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது.
பஞ்சபூதங்களகளில் ஒருவரும் அட்டதிக்கு பாலகர்களில் தென்கிழக்குத் திசைக்கு உரியவரான இரண்டு தலைகள் கொண்ட அக்னிபகவான். துணைவியான சுவாகா தேவியுடன் ஆடு வாகனத்தின் மீது அமர்ந்துள்ளார். 16 ஆம் நூற்றாண்டை சேர்ந்த சிற்பம்.
பீகார் மாநிலம் கயா மாவட்டத்தில் கண்டெடுக்கப்பட்ட நாகராஜனான வாசுகியின் தங்கையும் ஜரத்காரு முனிவரின் மனைவியுமான மானசாதேவி. இடம் லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி மியூசியம் ஆஃப் ஆர்ட்.