பெரிய திருவடியான கருடன் மேல் அமர்ந்துள்ள சதுர்புஜ விஷ்ணு பகவானின் அழகிய சிற்பம். இடம் தேசிய அருங்காட்சியகம். இந்தோனேசியா.



பெரிய திருவடியான கருடன் மேல் அமர்ந்துள்ள சதுர்புஜ விஷ்ணு பகவானின் அழகிய சிற்பம். இடம் தேசிய அருங்காட்சியகம். இந்தோனேசியா.



மண்டை ஓடுகளின் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் பகவான் விநாயகரின் 13 ஆம் நூற்றாண்டு சிற்பம். இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவாவில் உள்ள சிங்கோசரி என்ற இந்து கோயிலில் ஒரு காலத்தில் இருந்தது. தற்போது நெதர்லாந்தின் லைடன் வோல்கன்குண்டே அருங்காட்சியகத்தில் உள்ளது.




கபால சிம்மாசனத்தில் அமர்ந்துள்ள கணங்களின் அதிபதி கணபதி. இடம் தேசிய அருங்காட்சியகம் பாங்காக்.


சங்கு நாராயண பெருமாள் திருக்கோவில் பக்தாப்பூர் நேபாளம்.

ஸ்ரீ மீனாட்சி (மூன்று மார்பகங்களுடன்) போர்க்கோலம் பூண்டு திக்விஜயம் செல்லும் ஒர் அரிய சிற்பம் இவ்வாலயத்தூணில் அழகுற அமைக்கப் பட்டுள்ளது. இடம்: பொள்ளாச்சி சுப்பிரமணிய சுவாமி கோயில். கொங்கு பகுதியை ஆண்ட விக்கிரம சோழன் காலத்திலும் பின்னர் 12-13 ஆம் நூற்றாண்டு சுந்தர பாண்டியன் காலத்தில் திருப்பணி செய்யப்பட்டு திரு அகத்தீஸ்வரமுடையார் என்ற பெயர் கொண்ட சிவாலயம் பிற்காலத்தில் சுப்பிரமணிய சுவாமி கோயிலாகப் புகழ் பெற்றது.

தர்மசாலா ஜெய்பூர் நகரை சேர்ந்தது வராஹ அவதார சிற்பம். இந்த 10 ஆம் நூற்றாண்டு காலத்தைக் கொண்ட இந்த சிற்பம் தற்போது ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் மாநில அருங்காட்சியகத்தில் உள்ளது.

தெய்வீக மயில் வாகனத்தின் மீது அமர்ந்துள்ள மயில்வாகனன். இடம்: திரிலோசனேஸ்வரர் கோவில் திரிலோச்சனபாதா, ஜஜ்பூர் டவுன், ஒடிசா மாநிலம்.

ஸ்ரீகிருஷ்ண பகவானின் காளிங்க நர்த்தனர் மரத்தால் செதுக்கப்பட்ட சிற்பம். இடம் தாய்லாந்து நாட்டின் பட்டாயா நகரில் உள்ள சத்திய சரணாலயம்.

கிழக்கு சாளுக்கிய காலத்தைச் சேர்ந்த சிம்மநாதர். இடம் சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் உள்ளது. காலம் 10 ஆம் நூற்றாண்டு.

திருநாளைப்போவார் என அழைக்கப்படும் நந்தனார். இவர் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டம் வைத்தீஸ்வரன் கோயிலை அடுத்து ஆதனூரில் பிறந்தவர். ஞானஒளி வீசும் தெய்வீக தோற்றத்துடன் பொன்னொளி வீச தில்லை நடராஜரின் திருவடிகளில் இரண்டரக் கலந்தார்.
