அரளிப்பட்டி அரவங்கிரிக் குன்றின் குடைவரையின் மண்டபச் சுவர்களில் வடபுறமுள்ள இலிங்கத் திருமேனியில் பிள்ளையார் லிங்கமாக ஒன்றுக்குள் ஒன்றாய் இலிங்க பாணத்தில் உள்ளது. காலம் எட்டாம் நூற்றாண்டு.

அரளிப்பட்டி அரவங்கிரிக் குன்றின் குடைவரையின் மண்டபச் சுவர்களில் வடபுறமுள்ள இலிங்கத் திருமேனியில் பிள்ளையார் லிங்கமாக ஒன்றுக்குள் ஒன்றாய் இலிங்க பாணத்தில் உள்ளது. காலம் எட்டாம் நூற்றாண்டு.
இடம் ஜம்புலிங்கேஸ்வரர் கோவில் வாரங்கல்.
பெரிய திருவடியான கருடன் மேல் அமர்ந்துள்ள சதுர்புஜ விஷ்ணு. இடம் வரதராஜப்பெருமாள் கோவில் காஞ்சிபுரம்.
சாளுக்கியர்களின் முதல் தலைநகரம் மலபிரபா ஆற்றின் கரையில் அமைந்திருந்தது. இங்கு சிவநந்தி துர்கா கோவில் உள்ளது. கிபி 6 ஆம் நூற்றாண்டில் கட்ட ஆரம்பிக்கப்பட்டு கிபி 12 ஆம் நூற்றாண்டு வரை இக்கோயில் கட்டப்பட்டது. இங்கு 125 க்கும் மேற்பட்ட கோயில்கள் பல்வேறு வடிவங்களில் உள்ளது. இடம் ஐஹோல் கர்நாடகா.
இயமனின் மனைவி என்பதைச் சுட்டுமாறு இவரது திருவடிக்கீழ் எருமைத்தலை செதுக்கப்பட்டுள்ளது. குடைவரைக் காலச் சாமுண்டிகளில் இவரே அளவில் பெரியவர். படியச் சீவி உச்சியில் கொண்டையிட்ட சடைப்பாரமும் மிகப் பெரிய முகமும் கொண்டுள்ள சாமுண்டியின் செவிகளில் சடல குண்டலங்கள் தோள்களை வருடுகிறது. கொண்டையின் முகப்பில் மண்டையோடு உள்ளது. வலக் கையில் சுரைக் குடுவை உள்ளது. இடம் சிவகங்கை மாவட்டத்திலுள்ள திருக்கோளக்குடிக் குடைவரை கோவில். தமிழ்நாட்டிலேயே மிக அதிக அளவிலான கல்வெட்டுப் பதிவுகளைக் கொண்டுள்ள ஒரே குடைவரை கோயில் கோளக்குடிதான்.
பைரவர்களின் தலைமையை ஏற்றவர். இவருக்கு சட்டைநாதர் என்று பெயர். நின்ற திருக்கோலத்தில் வலது கரம் அபய முத்திரையைக் காட்டி அருள்கிறார். இடது கரத்தில் கபத்தை வைத்திருக்கிறார். இடம் குற்றம்பொருத்தநாதர் கோவில் தலைஞாயிறு திருகருப்பறியலூர் நாகை மாவட்டம்.
சிவபெருமான் சண்டேச அனுக்கிரக மூர்த்தியாக வந்து விசாரசருமருக்கு திருத்தொண்டர்களின் தலைவர் பதவியான சண்டேசுர பதவியை கொடுத்தருளி தனது திருமுடியிலுள்ள கொன்றை மலரை எடுத்து விசாரசருமருக்குச் சூடி அருளினார். சண்டேசுவர பதவியைப் பெற்றமையால் சண்டேசுவர நாயனார் என்று அழைக்கப்படுகிறார். இவரை சண்டேசர் சண்டிகேசுவர் என்றும் அழைக்கப்படுகிறார். இடம் ஸ்ரீராமேஸ்வர கோவில் நரசமங்கலம் சாமராஜ்நகர் தாலுக்கா கர்நாடக மாநிலம்.
அறுபத்து மூன்று சிவ திருமேனிகளுள் ஒன்றாக கங்காள மூர்த்தி வடிவம் வணங்கப்படுகிறது. கங்காளம் என்றால் எலும்பு என்று பொருள். சிவபெருமான் வாமனரின் முதுகெலும்பை கையில் தண்டாக மாற்றிக் கொண்ட கோலமே கங்காள மூர்த்தி ஆகும். கங்காளர் வடிவமும் பிச்சாண்டவர் வடிவமும் சில இடங்களில் ஒரே மாதிரியான தோற்றம் போல தோன்றினாலும் அவை வெவ்வேறான வடிவங்களாகும். இடம் கைலாசநாதர் கோவில் காஞ்சிபுரம்.
தில்லைவனத்தில் ஆடல்வல்லான் தமது ஆனந்த தாண்டவத்தினை மீண்டும் ஒருமுறை நிகழ்த்திட எண்ணினார். இந்நிலையில் பார்வதி தேவி தமது தற்பெருமையினால் சிவனை நாட்டியப் போட்டிக்கு அழைத்தார். இதனை ஏற்றுக் கொண்ட ஆடல்வல்லான் இப்போட்டியில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்கள் தில்லையை விட்டு விலகி அதன் புறப்பகுதியில் வாழ்ந்திட வேண்டும் என்று நிபந்தனை விதித்தார். அந்த நிபந்தனையுடன் முனிவர்கள் தேவர்கள் முன்னிலையில் இருவருக்குமிடையே நாட்டியப் போட்டி நடைபெற்றது. இந்நிகழ்வில் ஓர் கர்ண அமைப்பில் சிவன் தமது காலினை விண்ணை நோக்கி உயர்த்தினார். அந்நிலையில் அது போன்ற ஓர் கர்ணத்தைப் பெண் என்ற நிலையில் பார்வதி தேவியினால் நிறைவேற்ற முடியாததால் தலை குனிந்தார். நிபந்தனைபடி பார்வதி தேவி தில்லையின் புறப்பகுதியில் குடியேறினார் என்பது ஊர்த்துவ தாண்டவம் நடைபெற்ற புராண நிகழ்வாகும். இடம் சௌந்தரராஜப்பெருமாள் கோயில். தாடிக்கொம்பு திண்டுக்கல்.
கேரளா கொச்சியில் உள்ள நாட்டுப்புற அருங்காட்சியகம் இந்த பார்வத்தி சிலை உள்ளது. காலம் சுமார் 18 ஆம் நூற்றாண்டு.