வராக அவதாரம்

திருமாலின் பத்து அவதாரர்களில் மூன்றாவது அவதாரம் வராக அவதாரமாகும். இந்த அவதாரத்தில் இரணியனின் தம்பி இரண்யாட்சன் என்ற அசுரனுடன் போர் செய்து வென்றார். இடம் கம்போடியா. 10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சிற்பம்.

காலசம்ஹாரர்

அறுபத்து மூன்று சிவ திருமேனிகளுள் ஒன்றாக காலசம்ஹாரர் வணங்கப்படுகிறார். காலன் என்று அழைக்கப்படும் யமனை அழித்த சிவ உருவம் கால சம்ஹாரர் எனவும் காலந்தகர் எனவும் அழைக்கப்படுகிறார். இடம்: திருப்பூதீஸ்வரர் கோவில் கொடும்பாளூர். புதுக்கோட்டை மாவட்டம்

தெய்வங்கள்

வராஹர் விநாயகர் திரிமூர்த்தி மகிஷாசுரமர்த்தினி நரசிம்மர். தனியாக மண்டபம் போல் அமைப்பில் சிவலிங்கம். அனைத்து தெய்வங்களும் ஒரே மலையில் செதுக்கப்பட்டுள்ளது. இடம் பாமினி குகைக்கோயில் கர்நாடகா.

நெல்லிக்காய் பசவண்ணன் நந்தி

நந்தி மலையின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு சிறிய கோயில். யோக நந்தீசுவரர் இங்கே தவம் செய்த காரணத்தால் இம்மலைக்கு நந்தி மலை எனப் பெயர் வந்தது. ஆறு கல் தூண்களில் இக்கோயில் கட்டப்பட்டுள்ளது. கோயிலின் மையத்தில் ஒரு நந்தி அமர்ந்த நிலையில் உள்ளது. நந்தி சிலை ஒரே கல்லில் செதுக்கப்பட்டுள்ளது. நந்தி 10 அடி உயரமும் 6 அடி அகலமும் கொண்டது. கோவில் சோழர் பாணியில் உள்ளது. கோயிலின் முன்புறம் நெல்லி மரம் உள்ளது. ஆகவே இக்கோயில் நெல்லிக்காய் பசவண்ணா என்று அழைக்கப்படுகிறது. 1000 ஆண்டுகளுக்கும் மேல் பழமையானதாக இருக்கலாம் என்று கருத்தப்பட்டுகிறது. சோழர் காலத்தில் இம்மலை ஆனந்தகிரி என அழைக்கப்பட்டுள்ளது. இடம் நந்தி மலை.