சுயம்பு நடராஜர்

கோனேரிராஜபுரம் நடராஜர் தீபாராதனை. புண்ணியம் செய்தவர்கள் மட்டுமே இந்த கோவிலில் உள்ள நடராஜரை தரிசிக்க முடியும் என்று அப்பர் பெருமானார் போற்றிப் பாடப்பட்ட சுயம்பு நடராஜர் இவர். இந்த கோயில் வரலாற்றையும் நடராஜரின் வரலாற்றை அறிந்து கொள்ளவும் மேலும் புகைப்படங்களை பார்க்கவும் கீழ் உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்கள்

சிவலிங்கத்தைச் சுமக்கும் சதாசிவன்

தன்னைத்தானே அர்ச்சிக்கும் மூர்த்தி சதாசிவ வடிவமாகும். அகவழிபாடு செய்பவர்களுக்கு அவரது உடம்பே சதாசிவமாயும் சதாசிவ லிங்கமாயும் நிற்கும். உருவம் அருஉருவம் (லிங்கம்) என இரண்டு நிலைகளை பார்க்கும் வண்ணமும் அருபத்தை உணரும் வண்ணமும் இத் திருவுருவம் அமைந்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் கொடும்பாளூரிலும் அரியலூர் மாவட்டத்தில் மேலப்பழுவூரிலும் சிவலிங்கத்தைத் தோளில் சுமந்தவாறு காட்சி தரும் அரிய சதாசிவனின் சிற்பங்கள் உள்ளன.

வினாயகர்

இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவாவில் உள்ள துலிஸ்கையோ கிராமத்தில் அமைந்துள்ளது இந்த விநாயகர். இந்த 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சிலை மூன்று மீட்டர் உயரமுடைய ஒற்றைக்கல்லில் செதுக்கப்பட்டது.

கின்னரர்

கின்னரர் என்பவர்கள் இந்து தொன்ம இயலின்படி இடுப்பிற்கு கீழ் பறவை உருவமும் இடுப்பிற்கு மேல் மனித உருவமும் கொண்ட ஆண் மற்றும் பெண் பாலினத்தவர்கள். இந்து மற்றும் பௌத்த வழிபாட்டுத் தலங்களில் கின்னரர்களின் உருவச் சிலைகளும் புடைப்புச் சிற்பங்களும் ஓவியங்களும் காணப்படுகிறது. இடம் போரோபுதூர் கோவில். மத்திய ஜாவா மாகாணம் இந்தோனேசியா.

சந்நியாச வினாயகர்

நான்கு கரங்கள் கொண்ட விநாயகர். சந்நியாசத்தின் உருவகமாக தனது நெற்றியில் மூன்றாவது கண்ணுடன் ஒரு முனிவரின் புலித் தோலை அணிந்துள்ளார். 7 அல்லது 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த விநாயகர் சிலை. இடம் வியட்நாமில் உள்ள டா நாங் நகர். சாம் சிற்ப அருங்காட்சியகம்.

கண்டபேருண்டா

வலிமை கொண்ட இரு தலைகள் கொண்ட பறவையான கண்டபேருண்டா மல்லிகார்ஜூனா கோவிலில் புடைப்புச் சிற்பமாக உள்ளது. 1399 முதல் 1947 வரை மைசூர் சாம்ராஜ்யத்தை ஆண்ட உடையார்களின் அரச முத்திரையாக இந்த வலிமைமிக்க பறவை இருந்தது. தற்போது கர்நாடக அரசின் அதிகாரப்பூர்வ சின்னமாக உள்ளது.