மகிஷாசுரமர்த்தினியின் சிற்பம் அதைச் சுற்றி நவதுர்கைகள். நேபாளம் பக்தபூரில் அமைந்துள்ளது.

மகிஷாசுரமர்த்தினியின் சிற்பம் அதைச் சுற்றி நவதுர்கைகள். நேபாளம் பக்தபூரில் அமைந்துள்ளது.
கண்ணனை ஒரு புறமிருந்து பார்த்தால் ருக்மிணியை மட்டும் அணைத்திருப்பதாய் தோன்றும். மறுபுறம் பார்த்தால் சத்யபாமாவை மட்டும் கைபிடித்திருப்பதாய் தோன்றும். தூணின் கோண பகுதியில் நின்று கண்டால் கண்ணன் இருவரையும் கைபிடித்திருப்பதை காணலாம்.
பழமையான சிவலிங்கம்
உத்தரபிரதேச மாநிலம் மதுரா அருங்காட்சியகத்தில் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ள பழமையான சிவலிங்கம்.
சிலி சான்டியாகோ கலை அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள 1100 ஆண்டுகள் பழமையான நவகிரகங்கள் கொண்ட சிற்பம். இடமிருந்து வலமாக சூரியன் சந்திரன் செவ்வாய் புதன் வியாழன் சுக்கிரன் சனி ராகு மற்றும் கேது. ராகுவின் தலையில் பல நாகங்கள் கோபுரங்கள் போல் இருப்பதை காணலாம்.
ஸ்ரீதிரிபுவன சித்தர் தாமரை மலரில் உருவாக்கிய சிவலிங்கம்
இரவனபாடி குடைவரைக் கோயில் ஐஹோளே கர்நாடக மாநிலத்தில் இந்த சிலை உள்ளது. வலது முன்கை மார்பை அணைத்தபடி இருக்க இடது முன்கை பக்கவாட்டில் விரிந்துள்ளது. உயரமான தலையலங்காரம் இடையில் மடிப்புடன் அமைந்த ஆடை அணிந்து சிவன் ஆடும் நடனத்தை பார்வதி கணபதி முருகன் (முகம் சிதைக்கப் பட்டுள்ளது) தேவலோகப் பெண்கள் மற்றும் சப்த_மாதர்கள் கண்டுகளிக்கிறார்கள். இங்கு சிவன் காட்டும் ஆடல் அந்தகாசுரனை அழித்த பின்பு வெற்றிக்களிப்புடன் ஆடும் நடனம்.
கர்நாடகாவின் பல்லாரி மாவட்டத்தில் ஹுவினஹதகலியில் அமைந்துள்ள முருதேவரா கோயிலில் சுமார் 1000 ஆண்டுகள் பழமையான பால கோபால் சிற்பம் பின்பக்கம் வினாயகர்.
தொகன்ஜி கோவில் வினாயகர்
ஜப்பான் நகோயாவில் உள்ள தொகன்ஜி கோவிலில் உள்ள சிவலிங்கம்