பாபநாசநாதர் திருக்கோயில் 1

மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் சந்தனச் சோலைகளும் மூலிகைகளும் நிறைந்த பொதிகை மலை உச்சியில் தாமிரபரணி உற்பத்தியாகி பாய்ந்து வரும் தாமிரபரணி ஆற்றங்கரையில் இக்கோயில் அமையப் பெற்றுள்ளது. மூலவர் பாபநாசநாதர். லிங்க வடிவில் அருள்பாலிக்கிறார். அம்மாள் உலகம்மை விமலை உலகநாயகி. சுவாமி சன்னதிக்கு வடக்கில் உலகம்மை சன்னதி மேற்கு நோக்கி அமைந்துள்ளது. கருவறையில் அம்மை அழகே உருவாக வலது கையில் மலர்ச் செண்டுடனும் இடது கையைத் தொங்க விட்டும் நின்ற கோலத்தில் அருள் பாலிக்கிறாள். இடம் பாபநாசம் திருநெல்வேலி. புராண பெயர் இந்திரகீழ சேத்திரம். தலவிருட்சம் முக்கிளா மரம். தீர்த்தங்கள் தாமிரபரணி வேத தீர்த்தம் பைரவ தீர்த்தம் கல்யாண தீர்த்தம்.

அகத்தியரின் சீடரான உரோமச முனிவர் தாமிரபரணி நதிக்கரையில் பல இடங்களில் லிங்க பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்று அதற்கான இடங்களை தேர்ந்தெடுத்து தருமாறும் குருவிடம் கேட்டார். சிவனுக்கு பூஜை செய்த தாமரை மலர்களை தாமிரபரணியில் வீசும்படியும் அவை எங்கெல்லாம் கரை ஒதுங்குகிறதோ அங்கெல்லாம் லிங்க பிரதிஷ்டை செய்யும்படியும் அகத்தியர் கூறினார். அதன்படி உரோமசர் தாமரை மலர்களை நீரில் விட 9 பூக்கள் பல இடங்களில் கரை ஒதுங்கின. இந்த இடங்களில் எல்லாம் சிவலிங்க பிரதிஷ்டை செய்தார் உரோமசர். இவை நவ கைலாய தலங்கள் எனப்பட்டன. நவக்கிரகங்கள் ஒன்பது என்பதால் ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு இடம் ஒதுக்கப்பட்டது. 1. பாபநாசம் 2. சேரன்மாதேவி 3. கோடகநல்லூர் 4. செங்காணி 5. முறப்பநாடு 6. ஸ்ரீவைகுண்டம் 7. தெந்திப்பேரை 8. ராஜாதிபதி 9. சேந்தபூமங்களும் ஆகிய கோயில்கள் நவகைலாயங்கள் என்று அழைக்கப்படுகிறது. நவ கைலாயம் என்று அழைக்கப்படும் கோவில்களில் முதன்மையான இக்கோயில் முதல் கிரகமான சூரியனுக்கு உரியது. சூரிய தலம் என்றும் சூரிய கைலாயம் என்றும் இக்கோயில் அழைக்கப்படுகிறது.

அம்பாளின் 51 சக்தி பீடங்களில் இக்கோயில் விமலை சக்தி பீடம் ஆகும். கோயிலின் அனைத்துக் கருவறைகளயும் உள்ளடக்கியவாறு கோயிலைச் சுற்றிக் கருங்கல் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. நுழைவாயில் கோபுரம் ஏழு அடுக்குகள் கொண்டதாகும். கருவறையின் வெளிச்சுவற்றில் விநாயகர் சுப்பிரமணியர் தட்சிணாமூர்த்தி துர்க்கை நவகோள்கள் ஆகியோரின் உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கொடிமரத்தை அடுத்துள்ள சிறுகோயிலில் யாளிகளைமைந்த தூண்களைக் கொண்ட மண்டபத்தில் நடராசர் உள்ளார். இங்கு ஆனந்த தாண்டவ கோலத்தில் காணப்படும் நடராசர் புனுகு சபாபதி என அழைக்கப்படுகிறார். இக்கோயில் குளம் பாபநாச தீர்த்தம் எனப்படுகிறது. மேலும் அகத்திய தீர்த்தமும் கல்யாணி தீர்த்தமும் இக்கோயிலைச் சேர்ந்தவையாகும். அகத்தியர் லோபாமுத்ரையுடன் அருள் பாலிக்கிறார்.

அசுர குருவான சுக்ராச்சாரியாரின் மகன் துவஷ்டா என்பவனை குருவாக ஏற்றான் இந்திரன். ஒரு சமயம் துவஷ்டா அசுரர்களின் நலனுக்காக யாகம் ஒன்றை நடத்தினார். இதனை அறிந்த இந்திரன் அவரை கொன்று விட்டான். இதனால் அவனை பிரம்மஹத்தி தோஷம் பிடித்தது. பூலோகத்தில் பல தலங்களுக்கும் சென்று சிவனை வழிபட்டு விமோசனம் தேடினான். வியாழ பகவான் இந்திரனிடம் இத்தலத்தில் உள்ள சுவாமியை வணங்கினால் தோஷம் நீங்கும் என்றார். அதன்படி இந்திரன் இத்தலத்தின் எல்லைக்கு வந்தபோதே பாவம் நீங்கப்பெற்றான். இந்திரனின் பாவத்தை நீக்கிய சிவன் என்பதால் இவர் பாபநாசநாதர் என்று பெயர் பெற்றார்.

முற்காலத்தில் விக்கிரமசிங்கபுரத்தில் நமசிவாயக் கவிராயர் என்பவர் வாழ்ந்து வந்தார். இவர் உலகம்மை மீது அளவு கடந்த பக்தியும் அன்பும் கொண்டிருந்தார். இவர் தினந்தோறும் பாவநாசம் திருக்கோயிலுக்குச் சென்று அர்த்தசாம வழிபாட்டில் அம்பிகையை தரிசித்துவிட்டு வருவதை வழக்கமாக கொண்டிருந்தார். ஒரு நாள் இவர் இங்கு தரிசனம் முடித்துவிட்டு அம்மையின் மீது பாடல்களைப் பாடிகொண்டு நடந்தபடியே வீடு திரும்பிக் கொண்டிருந்தார். உலகம்மை கவிராயரின் பாடல்களைக் கேட்டவாறே அவருக்குத் தெரியாமல் பின்தொடர்ந்து வந்தாள். கவிராயர் தரித்திருந்த தாம்பூலத்தின் எச்சிலை அவர் உமிழ்ந்து கொண்டே பாடி வர அந்த உமிழ்ந்த எச்சில் பின் தொடர்ந்து வந்த அம்மையின் மீது பட்டுவிட்டது. அக்கோலத்துடனேயே அம்பிகையும் கோயிலுக்கு எழுந்தருளினாள். மறுநாள் காலை கோவிலுக்கு வந்த அர்ச்சகர் அம்மையின் வெண்ணிற ஆடை முழுவதும் படிந்திருந்த தாம்பூல எச்சில் திவலைகளைக் கண்டு மனம் பதறி மன்னனிடம் முறையிட்டார். மன்னனும் திருக்கோவில் வந்து பார்வையிட்டு அதற்குரிய பிராயச்சித்த பூஜைகள் செய்ய உத்தரவிட்டார். இப்பாதகச் செயலைச் செய்தவரை கண்டுபிடிக்க உத்தரவு பிறப்பித்தார்.

நமச்சிவக்கவிராயர் தாம்பூலம் தரிக்கும் பழக்கமுடையவர் ஆகவே அவர் மீது சந்தேகம் கொண்டு அவரை கைது செய்து சிறையில் அடைத்தார்கள் அரண்மனை வீரர்கள். அன்றிரவு மன்னன் கனவில் அம்மை தோன்றி நடந்த விவரங்களை கூறினாள். இதனால் திகைத்து விழித்தெழுந்த மன்னன் மறுநாள் காலை நமச்சிவாயக்கவிராயரை அழைத்து வரச்செய்து அவருடைய பக்தியை உலகறியச் செய்ய எண்ணி அம்மையின் கரத்தில் பூச்செண்டு ஒன்றை வைத்து பொன் கம்பிகளால் கட்டிவைத்து கவிராயரின் பக்தி உண்மையென்றால் அவர் பாடும் பாடல்களுக்கு இசைந்து அப்பூச்செண்டு கவிராயரின் கைகளுக்கு தானே வர வேண்டும் என கேட்டுக் கொண்டார். உடனே நமச்சிவாய கவிராயரும் அம்மை மீது அந்தாதி பாடல்களை பாடினார். அப்படி அவர் பாடிய ஒவ்வொரு பாடலின் முடிவிலும் அம்மையின் கரத்தில் கட்டப்பட்டிருந்த பொன் கம்பிகள் ஒவ்வொரு சுற்றாக அறுந்து கவிராயரின் பெருமையை வெளிப்படுத்தியது. இறுதியாக கவிராயர் பாடலை பாடி முடிக்கவும் அம்மையின் கரங்களில் இருந்த பூச்செண்டு கவிராயர் கைக்கு தானாக வந்தது. இதனைக் கண்ட மன்னனும் கவிராயரின் பக்தியை மெச்சி அவரை விடுதலை செய்து அவரிடம் மன்னிப்பு கோரினான். இதன் மூலம் நமச்சுவாயக் கவிராயரின் புகழை அம்மை உலகறியச்செய்தாள்.

இத்தலத்து லிங்கத்திற்கு முக்கிளா லிங்கம் என்ற பெயரும் உண்டு. கருவறையில் ருத்ராட்ச வடிவிலும் பிரகாரத்தில் முக்கிளா மரத்தின் கீழும் பாபநாசர் இருக்கிறார். ரிக் யஜுர் சாமம் ஆகிய மூன்று வேதங்களே கிளா மரமாக மாறி இறைவனுக்கு நிழல் தந்தும் அதர்வண வேதம் ஆகாயமாக இருந்தும் இவரை வழிபட்டது. எனவே சிவனுக்கு இப்பெயர் வந்தது. அம்பாள் உலகம்மை சன்னதி முன்பு ஒரு உரல் இருக்கிறது. இதில் பெண்கள் விரளி மஞ்சளை இட்டு அதனை இடித்து இம்மஞ்சளாலேயே அம்பாளுக்கு அபிஷேகங்கள் நடக்கிறது. வியாக்ரபாதர் பதஞ்சலி ஆகியோருக்கு ஒரு தைப்பூசத்தன்று நடராஜர் நந்தியின் கொம்புகளுக்கு இடையே நின்று நடன தரிசனம் தந்தார். எனவே இங்கு தைப்பூசத்தில் நந்திக்கு சந்தனக்காப்பு செய்து சிறப்பு பூஜைகள் நடக்கிறது. இத்தலத்தில் இறைவன் இறைவியுடன் திருமணக் கோலத்தில் அகத்தியருக்கு காட்சியளித்தார். இக்கோயிலுக்கு அருகிலுள்ள அருவி அகத்தியர் அருவி என அழைக்கப்படுகிறது

பொதிகை மலையில் உருவாகி மலைகளில் விழுந்து வரும் தாமிரபரணி நதி இக்கோயிலுக்கு அருகேதான் சம நிலையடைகிறது. தினமும் உச்சிக்கால பூஜையின் போது தாமிரபரணி நதியில் மீன்களுக்கு நைவேத்திய உணவுகளைப் படைத்து பூஜைகள் செய்யப்படுகிறது. சாளுக்கிய பாண்டியர்களால் கட்டப்பட்ட இக்கோயில் பின்னர் 16ஆம் நூற்றாண்டில் விஜயநகர அரசர்களாலும் நாயக்கர் அரசர்களாலும் மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. நாயக்கர் காலக் கலைப்பாணியிலான சிற்பங்கள் இக்கோயிலில் காணப்படுகின்றன. மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகளை ஆண்ட சந்திரகுல பாண்டியன் என்ற பாண்டிய அரசனால் இக்கோயிலின் நடுக் கோயிலும் விமானமும் கட்டப்பட்டது. மதுரை நாயக்க வம்சத்தைச் சேர்ந்த வீரப்ப நாயக்கரால் கிபி1609-23 யாகசாலை கொடிமரம் நடராசர் மண்டபம் கட்டப்பட்டன.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 562

கேள்வி: இராஜராஜ சோழன் கருவூரார் நேரடி பார்வையிலே இருந்தார். அப்படியென்றால் அவர் புரிந்த போர்களை நீங்கள் சொன்ன அடிப்படையில் எப்படி புரிந்து கொள்வது?

அப்படியென்று நாங்கள் ஒருபோதும் கூறவில்லையே. இப்பொழுது எப்படி இங்கு வருகின்றவர்களுக்கு நாங்கள் ஜீவ அருள் ஓலையிலே தோன்றி ஆலோசனைகள் கூறுகிறோமோ. நாங்களே ஆலோசனைகள் கூறுவதால் இங்கே வருகின்றவன் உயர்ந்த வழியில் சென்று விடுகிறானா என்ன? அல்லது இதுவரை செய்த பாவத்தை எல்லாம் நிறுத்திவிட்டு மகா முனிவர்களெல்லாம் இப்படி கூறுகிறார்கள். இந்த வழியில் தான் செல்ல வேண்டும் என்று தீர்மானிக்கிறானா? இந்த இடத்தில் கேட்கும் பொழுது பவ்வியமாக கேட்டுவிட்டு பிறகு இவையெல்லாம் நடைமுறைக்கு ஒத்து வராது. நடைமுறை வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்றால் சக மனிதர்கள் எதையெல்லாம் பின்பற்றுகிறார்களோ அதைத்தான் பின்பற்ற வேண்டும் என்று இங்கு வருகின்ற இங்கு சில ஆண்டுகளாக வந்து கொண்டிருக்கின்ற அனைவருமே அப்படித்தான் வாழ்கிறார்கள். அப்படித்தான் கருவூரார் எதைக் கூறினாலும் எது தனக்கு சாதகமோ தன்னால் இயலுமோ அதை ஏற்றுக் கொள்வதும் எது மற்ற மன்னர்கள் பின்பற்றினார்களோ அதை பின்பற்றித்தான் அந்த மன்னனும் வாழ்ந்தான். எனவே கருவூரார் என்ன? முக்கண்ணனாகிய சிவபெருமானே நேரில் தோன்றி அறிவுரை கூறினாலும் அப்பொழுது பவ்வியமாக கேட்டுவிட்டு சிவபெருமான் அந்த இடத்தை விட்டு சென்ற பிறகு மீண்டும் வழக்கம்போல் மனிதன் வாழ்வான். ஏனென்றால் அவன் மதி விதியிடம் இருக்கிறது. எவன் விதி அவன் மதியிடம் அடங்கி இருக்கிறதோ அவன் தான் எமது சொல்லை ஏற்பான்.

புண்ணியம் செய்கின்ற மன்னர்களுக்கு அந்த புண்ணியத்தால் சில அரிய பெரிய சாதனைகளை செய்யக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. செல்வம் எப்படியோ புண்ணியமும் அப்படிதான். மிகப்பெரிய புண்ணியம் ஒரு மனிதனுக்கு பரிபூரண ஞானத்தை மிக இளவயதிலேயே அதாவது எல்லா தவறுகளையும் செய்துவிட்டு பிறகு மனம் திருந்தி நல்லவனாக மாறுவதுகூட ஆதியில் அவர்களுக்கு பாவம் இருக்கிறது என்பதை குறிக்கிறது. பரிபூரண புண்ணியம் என்றால் அவன் சிறிய பாவத்திற்காகவோ அல்லது இறைவன் கட்டளைக்காகவோ மனிதனாக பிறவியெடுக்க நேரிடும். அப்படி பிறவியெடுக்கும்பொழுதே ஒருவன் துறவியாக பிறவியெடுத்தால்தான் அவனுக்கு முழுமையான ஞானம் இருக்கிறது என்பதை நாங்கள் ஓரளவு ஒப்புக்கொள்வோம். மற்றவர்கள் எல்லாம் புண்ணியத்தால் உலகியல் சுகங்களை நுகர்ந்துகொண்டே பிறகு எனக்கு இறை பக்தி இருக்கிறது. எனக்கு இறையருள் இருக்கிறது. என்னிடம் இந்த அளவு வளம் இருப்பதால் நான் மிகப்பெரிய ஆலயம் கட்டப்போகிறேன் என்று கூறக்கூடிய நிலையில்தான் இருக்கக்கூடியவர்கள். எனவே சராசரி மனிதர்களைப் பார்க்கும்பொழுது ழுது அவன் மிகப்பெரிய புண்ணியவான். அதற்கு முன்பு அதற்கு முன்பும் மிகப்பெரிய சிவபக்தன். சிவனுக்காக தொண்டு செய்து, செய்து. செய்து தன் ஆஸ்திகளையெல்லாம் இழந்தவன். சிவன் மீது மிகப்பெரிய பிரியத்தை வளர்த்தவன். அந்த வழியில் இறைவன் அருளால் மாபெரும் சக்ரவர்த்தியாக பிறவியெடுத்து வழக்கம்போல் சக்ரவர்த்திகள் என்னென்ன தவறுகள் செய்வார்களோ அதையெல்லாம் செய்து வாழ்ந்தவன்தான். என்ன ? ஏனைய சக்ரவர்த்திகள் இறக்கும் தருவாயில் கொஞ்சம் திருந்துவார்கள். இவன் தன் வாழ்வின் ஒரு) பகுதிக்கு மேல் திருந்தி ஒரு துறவிபோல் வாழ முற்பட்டான். அவ்வளவே. ஒரு தீபம் சுடர்விட்டு எரிந்து கொண்டிருக்கலாம். அந்த தீபத்திலிருந்து இன்னொரு தீபத்தை ஏற்ற அந்த தீபம் முன்வரலாம், அதிலுள்ள சுடரும் முன்வரலாம். ஆனால் இன்னொரு தீபம் அதற்கு ஆயத்த நிலையில் இருக்கவேண்டும். என்ன ஆயத்த நிலையில் இருக்கவேண்டும்? நல்ல நிலையில் ஒரு திரி இருக்கவேண்டும். அதிலே தூய எண்ணெய் இருக்கவேண்டும் அல்லது

தூய நெய் இருக்கவேண்டும். நெய் எப்படி இருக்கவேண்டும்? இளகிய நிலையில் இருக்கவேண்டும். அப்பொழுதுதான் இந்த தீப சுடர் அதில் பற்றும். வெறும் அகல் விளக்கு இருந்தாலும், வெறும் திரி இருந்தாலும் அல்லது திரி இல்லாமல் எண்ணெய் இருந்தாலும் அல்லது எண்ணெயும், திரியும் இருந்து அகல் இல்லாமல் இருந்தாலும் அங்கு பரிபூரண சுடர் பற்றாது. இப்படிப்பட்ட நிலையில்தான் பல மன்னர்களும் வாழ்ந்தார்கள். பல மனிதர்களும் வாழ்கிறார்கள். அவர்களுக்கு மீண்டும், மீண்டும் பிறவி கொடுக்கப்பட்டு, நிறைய பக்குவம் கொடுக்கப்பட்டுதான் இறுதியில்தான் இறைவன் சாயுச்சம், சாரூபம் போன்ற நிலைகளையெல்லாம் காட்டுவார்.

இன்னொரு வினாவை யோசித்துப் பார்த்தாயா? நீ உன் பூஜை தடத்தை அலங்கரிக்க என்ன செய்ய வேண்டும்? ஒரு மிகப்பெரிய சிவலிங்கத்தை வைத்து வணங்கவேண்டும் என்றால் நீ என்ன செய்ய வேண்டும்? நீ நேர்மையாக உழைத்த தனத்தைக் கொண்டு ஒரு சிற்பியை அழைத்து “எனக்கு இன்ன வகையான சிவலிங்கம் வேண்டும் அல்லது இன்ன வகையான பூஜை பொருள்கள் வேண்டும்” என்று உன் பூஜை இடத்தை அலங்கரித்துக் கொள்ள வேண்டும் அல்லது வைத்துக்கொள்ள வேண்டும். ஏற்கனவே இன்னொருவன் அலங்கரித்து வைத்துள்ள பூஜை தடத்தை மிரட்டி எடுத்து வந்தால் அதற்கு என்ன பெயர்? அதற்கு என்ன பொருள் கூறுவது? இன்னொரு தேசத்தையெல்லாம் போர் என்ற பெயரில் கொள்ளையடித்து அந்த பொருள்களைக் கொண்டு ஆலயம் கட்டினால் இறைவன் ஏற்றுக்கொள்வாரா? அது நேர்மையான போராகவே இருக்கட்டும். அங்கு உள்ளவர்கள் தொல்லை கொடுக்கும் மனிதர்களாகவே இருக்கட்டும். ஒரு தேசத்தில் தொல்லை கொடுக்கும் மனிதர்கள் மட்டும்தான் இருப்பார்களா? நல்லவர்கள் இருக்க மாட்டார்களா? போர் என்றால் தீயவர்கள் மட்டும்தான் பாதிக்கப்படுவார்களா? அங்குள்ள நல்லவர்கள் பாதிக்கப்பட மாட்டார்களா? எனவே போரால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் பலகோடி பிறவிகள் எடுத்தாலும் தீராது அப்பொழுதும் அவனுக்கு ஆலோசனைகள் கூறப்பட்டது. ”நீ அறிந்தும், அறியாமலும் புகழுக்காகவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ உனது சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்த லட்சக்கணக்கான மனிதர்களை கொன்றிருக்கிறாய். அந்த தோஷம் பிறவிதோறும் பற்றாமல் இருக்கவேண்டும் என்றால் மிகப்பெரிய சிவாலயம் அமைத்தால் நல்லது’ என்று போதிக்கப்பட்டது. எனவேதான் தன் தோஷம் நீங்கவேண்டும் என்றும், தனக்கு சந்தோஷம் கிடைக்கவேண்டும் என்றும் அவன் செய்த செயல். ஆனாலும் இப்படியொரு செயலை செய்ததற்கு நாங்கள் அவனை பாராட்டுகிறோம்.

யானைகளை ஏன் பழக்கவேண்டும்? என்பதுதான் எமது கேள்வி. (ஜனகர், தசரதர் போன்ற மன்னர்களிடமும் யானைகள் இருந்தன. அப்படியென்றால் அவர்கள் செய்தது பாவம் இல்லையா). எல்லா பாடங்களிலும் தேர்வு பெறக்கூடிய நிலையில் யாருமே இருந்ததில்லை என்பதேயே இது குறிக்கிறது.

பகவானின் அம்சமாக இராமபிரான் இருந்தாலும் அந்த நிலை என்பது வேறு. அதாவது ஒரு கருடன் மீது மகாவிஷ்ணு ஏறி அமரும்பொழுது கருடனுக்கு அது பாரமாக இருக்குமா? துன்பமாக இருக்குமா? துயரமாக இருக்குமா? சுகமாக இருக்குமா? (சுகமாக இருக்கும்) எனவே பசுவான் செய்யும் செயல்களையெல்லாம் மனிதன் தன் செயல்களோடு ஒப்பிட்டுப் பார்ப்பது என்பது. சிறு குழந்தை பெரியவர்கள் செய்கின்ற செயலை தன்னோடு ஒப்பிட்டுப் பார்ப்பதுபோல. இஃதொப்ப நிலையிலே பகவானின் அம்சமான ஸ்ரீ இராமரோடு ஒப்பிட்டுப் பார்க்கவேண்டும் என்றால், அவருடைய ஏக தாரத்தை ஒப்பிட்டுப் பார்க்கவேண்டியதுதானே? அதே சமயம், சிற்றன்னை (ஸ்ரீ இராமரை) அழைத்து * நாடு வேண்டாம். காடு ஏற்றுக்கொள் என்றவுடன் புன்முறுவலோடு சென்றாரே. அதை ஏற்றுக்கொள்ள வேண்டியதுதானே? ஆனால் நல்லவைகளை ஏற்றுக்கொள்ள மனித மனம் விரும்பாது. அதே சமயம் மன்னர்கள் தம், தம் படைபலத்தை வளமாக்க, பலமாக்க விலங்குகளை பயன்படுத்துகின்ற முறைகளும் எம்மைப் பொறுத்தவரை ஏற்க முடியாத முறைதான். பகவானே செய்தாலும் நாங்கள் குற்றம் என்றுதான் கூறுவோம்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 561

கேள்வி: பூமி பாரத்தை குறைப்பதற்காக கிருஷ்ண பரமாத்மா இந்த யுத்தத்தை ஏற்படுத்தினாரா?

பதில்: இறைவன் அருளால் பூமி பாரமே ஏற்படாமல் செய்யக்கூடிய ஆற்றல் அவருக்கு இருக்கிறதா? இல்லையா? இருக்கிறது. அப்படியென்றால் எதற்காக ஒன்றை ஏற்படுத்த வேண்டும்? பிறகு ஒன்றை நீக்க வேண்டும்?

கேள்வி: புரியவில்லை ஐயனே?

பதில்: புரியும் பொழுது புரியும்.

அம்மநாதர் திருக்கோயில் 2

மூலவர் அம்மநாதர் அம்மையப்பர். கிழக்கு நோக்கி லிங்க வடிவில் சந்திர அம்சத்துடன் அருள்பாலிக்கிறார். அம்பாள் ஆவுடைநாயகி ஆவுடையம்மன் கோமதியம்பாள். கிழக்கு நோக்கிய தனி கருவறையில் ஆவுடையம்மை ஒரு கரத்தில் மலர் ஏந்தியும் மறு கையைக் கீழே தொங்கவிட்ட படியும் நின்ற கோலத்தில் புன்சிரிப்புடன் காட்சித் தருகிறாள். தல விருட்சம் பலாமரம் ஆலமரம். தீர்த்தம் தாமிரபரணி வியாச தீர்த்த கட்டம். இடம் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சேரன்மகாதேவி.

கோயிலுக்கு தெற்கு நோக்கியும் கிழக்கு நோக்கியும் இரண்டு வாசல்கள் உள்ளன. ஐந்து நிலை ராஜகோபுரம். பிரகாரத்தில் ஒரே கல்லில் செய்யப்பட்ட நடராஜருடன் சிவகாமி அம்மை காரைக்கால் அம்மை ஆகியோர் உள்ளார்கள். நாய் வாகனம் இல்லாத பைரவர் இருக்கின்றனர். நவக்கிரக சன்னதி கிடையாது. சந்திரன் நுழைவு வாசலின் வலப்புறத்தில் இருக்கிறார். மகாவிஷ்ணு காசி விஸ்வநாதர் விசாலாட்சி சுப்பிரமணியர் கஜலட்சுமி சனீஸ்வரர் நவகன்னிகள் ஆகியோரும் இருக்கின்றனர். இத்தலம் நவகைலாயங்களில் ஒன்று. இக்கோயிலை நந்தனார் தரிசித்திருக்க வேண்டும். இவரது சிற்பம் கொடிமரத்திற்கு கீழேயுள்ள பீடத்தில் இருக்கிறது. இவர் இங்கிருந்து சுவாமியை வணங்கியபடி இருக்க நந்தி சற்று விலகியிருக்கிறது. தற்போதும் கொடிமரம் அருகில் நின்று விலகிய நந்தி அருகில் நின்று சிவனை தரிசிக்கலாம். இக்கோயிலை கட்டிய சகோதரிகள் நெல் குத்தி அரிசி புடைக்கும் சிற்பம் முன்மண்டபத்திலுள்ள ஒரு தூணில் இருக்கிறது. அருகில் மற்றொரு தூணில் லிங்க பூஜை செய்யும் உரோமசர் உள்ளார். இத்திருக்கோயிலுக்கு அருகே யாக தீர்த்தம் உள்ளது. இங்கு தான் உரோமச முனிவருக்கு இறைவன் பக்தவச்சலராக காட்சியளித்தார். அங்கு தற்போது பக்தவச்சலார் கோவில் உள்ளது. அம்மநாதர் கோவிலுக்கும் யாக தீர்த்தத்திற்கும் இடையே ரணவிமோசன பாறை ஒன்று உள்ளது. இங்கு தொடர்ந்து 41 நாட்கள் விடாமல் ஸ்நானம் செய்தால் தீராத நோய்களும் தீரும். இத்தலத்தில் மார்கழி மாதத்தில் திருவிழா நடக்கும். இந்த திருவிழா அன்று அனைத்து நதிகளும் மூன்று நாட்கள் இந்தப் பகுதியில் சங்கமிக்கும் என்பது புராண வரலாறு.

அகத்தியரின் சீடரான உரோமச முனிவர் தாமிரபரணி நதிக்கரையில் பல இடங்களில் லிங்க பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்று அதற்கான இடங்களை தேர்ந்தெடுத்து தருமாறும் குருவிடம் கேட்டார். சிவனுக்கு பூஜை செய்த தாமரை மலர்களை தாமிரபரணியில் வீசும்படியும் அவை எங்கெல்லாம் கரை ஒதுங்குகிறதோ அங்கெல்லாம் லிங்க பிரதிஷ்டை செய்யும்படியும் அகத்தியர் கூறினார். அதன்படி உரோமசர் தாமரை மலர்களை நீரில் விட 9 பூக்கள் பல இடங்களில் கரை ஒதுங்கின. இந்த இடங்களில் எல்லாம் சிவலிங்க பிரதிஷ்டை செய்தார் உரோமசர். இவை நவ கைலாய தலங்கள் எனப்பட்டன. நவக்கிரகங்கள் ஒன்பது என்பதால் ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு இடம் ஒதுக்கப்பட்டது. 1. பாபநாசம் 2. சேரன்மாதேவி 3. கோடகநல்லூர் 4. செங்காணி 5. முறப்பநாடு 6. ஸ்ரீவைகுண்டம் 7. தெந்திப்பேரை 8. ராஜாதிபதி 9. சேந்தபூமங்களும் ஆகிய கோயில்கள் நவகைலாயங்கள் என்று அழைக்கப்படுகிறது. நவ கைலாயம் என்று அழைக்கப்படும் கோவில்களில் இரண்டாவதான இக்கோயில் 2 ஆவதாக உள்ள கிரகமான சந்திரனுக்கு உரியது. சந்திர தலம் என்றும் சந்திர கைலாயம் என்றும் இக்கோயில் அழைக்கப்படுகிறது.

இங்கு உரோமசர் லிங்க பிரதிஷ்டை செய்து சிவனை வழிபட்டார். பிற்காலத்தில் அந்த லிங்கம் ஒரு அரச மரத்தின் கீழ் இருந்தது. இப்பகுதியில் வசித்த சகோதரிகளான சிவபக்தைகள் இருவர் நெல் குத்தி அரிசி வியாபாரம் செய்து வந்தனர். தினமும் இத்தல லிங்கத்திற்கு பூஜை செய்து வணங்கிய பின்பே தங்கள் வேலையை துவங்குவார்கள். வெகுநாளாக இந்த லிங்கம் கோயிலில் இல்லாமல் மரத்தடியில் யாராலும் கவனிக்கப்படாமலேயே இருக்கிறதே என்று எண்ணினார்கள். எனவே சிவனுக்கு கோயில் கட்ட நினைத்தார்கள். ஏழைகளான அவர்களிடம் கோயில் கட்டுமளவிற்கு பணம் இல்லை. அவர்கள் தங்களது உழைப்பின்மூலம் கிடைக்கும் பணத்தை சிறுகச் சிறுக சேர்த்து வைத்தனர். அவர்களது பக்தியில் மகிழ்ந்த சிவன் அடியார் வடிவில் அப்பெண்களின் வீட்டிற்கு சென்றார். அவரை வரவேற்ற சகோதரிகள் உபசரித்து உணவு பரிமாறினர். அப்போது வீட்டில் விளக்கு எரியவில்லை. அதை சுட்டிக் காட்டிய அவர் விளக்கு எரியாத வீட்டில் எவ்வாறு பிரகாசம் இருப்பதில்லையோ அதைப் போலவே மங்களமும் இருப்பதில்லை. எனவே மங்களம் இல்லாத இவ்வீட்டில் நான் சாப்பிட மாட்டேன் என்று எழுந்தார். பதறிப் போன சகோதரிகள் அவசரத்தில் தேடிய போது விளக்கை கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே சமையலுக்கு வைத்திருந்த தேங்காயை உடைத்து அதில் நெய்விட்டு விளக்கேற்றினர். மகிழ்ந்த சிவனடியார் சாப்பிட்டுவிட்டு சுய ரூபத்தில் காட்சி தந்தார். சகோதரிகள் சிவனை வணங்கினர். அதன்பின்பு அவர்களது இல்லத்தில் செல்வம் பெருகியது. அதைக் கொண்டு இங்கு கோயில் எழுப்பினார்கள்.

ராஜ ராஜ சோழன் மற்றும் ராஜேந்திர சோழன் கோவிலைக் கட்டியதாக கல்வெட்டுக்கள் உள்ளது. இத்திருக் கோயிலில் பாண்டியர்கள் கால கல்வெட்டுகளும் உள்ளது. மகாதேவி என்பது சேர மன்னன் மகளின் பெயர் ஆகும். சேர மன்னர் தன் மகளின் பெயரை இந்த ஊருக்கு சூட்டினார் என்றும் அதன் பின்னரே இந்த ஊருக்கு சேரன்மகாதேவி மங்கலம் என்ற பெயர் வந்தது என்று கோயிலில் உள்ள கல்வெட்டுக்களில் காணப்படுகிறது.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 560

கேள்வி: ஒரு தேவனோ அல்லது மனிதனோ இந்த பூமியில் பிறவி எடுக்கும் பொழுது தான் எதற்காக பிறவி எடுத்திருக்கிறோம் என்று தெரிவதில்லை தான் எதற்காக துன்பப்படுகிறோம் என்றும் தெரிவதில்லை இது ஏன்?

காரணமே தெரியாமல் துன்பத்தில் ஆழும் பொழுதுதான் தண்டனையின் உச்சகட்டம். அதன் பிறகுதான் இப்படி இனம் தெரியாமல் துன்பம் வருகிறதே? இனியாவது ஒழுங்காக இருக்க வேண்டும் என்ற சிந்தனை வரும் என்பதின் காரணமாகத்தான் பல விஷயங்கள் மறைக்கப்பட்டிருக்கின்றன. ஆசிகள்.

கைலாசநாதர் திருக்கோயில் 3

மூலவர் கைலாசநாதர். கிழக்கு நோக்கி லிங்க வடிவில் காட்சி தருகிறார். அம்பாள் சிவகாமி தெற்கு நோக்கிய தனி கருவறையில் நின்ற கோலத்தில் ஒரு கையில் மலர் ஏந்தியும் மறு கையை கீழே தொங்கவிட்ட படியும் இடை நெளித்தும் அழகிய புன்சிரிப்புடனும் காட்சித் தருகிறாள். நாகத்தின் கீழ் ஆனந்த கௌரி அம்மன் தனியாக அருள்பாலிக்கிறார். இவளுக்கு சர்ப்பயாட்சி நாகாம்பிகை என்றும் பெயர் உள்ளது. தல விருட்சம் வில்வம். தீர்த்தம் தாமிரபரணி. இடம் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கோடகநல்லூர். புராண பெயர் கார்கோடக நல்லூர். பெயர் மருவி கோடக நல்லூர் என்று தற்போது விளங்கி வருகிறது. இத்தலம் நவகைலாயங்களில் ஒன்று இது செவ்வாய் தலமாகும். கொடிமரம் பலிபீடம் பரிவார மூர்த்திகள் என எதுவுமே இல்லாத வித்தியாசமான கோயில் இது. சுவாமியே பிரதானம் என்பதால் இக்கோவில் இந்த அமைப்பில் உள்ளது. துவாரபாலகர்களின் இடத்தில் கல்யாண விநாயகரும் முருகரும் துவார பாலகர்களாக இருக்கின்றனர். நவ கைலாய தலங்களிலேயே பெரிய மூர்த்தி இவர். எனவே இவருக்கு எட்டு முழத்தில் எட்டு வேட்டிகளை அணிவித்து அலங்கரிக்கிறார்கள். இக்கோயிலில் உள்ள நந்திக்கு தாலி கட்டி பெண்கள் வழிபடுகிறார்கள். இக்கோயிலைச் சுற்றி இங்கு கரு நீல வண்ண பாம்புகள் நிறைந்து காணப்பட்டாலும் நல்லோரை தீண்டுவதில்லை.

ஒரு முனிவர் இப்பகுதியில் தவம் செய்து கொண்டிருந்தார். அவருக்கு உதவியாக அவரது மகனும் இருந்தார். அவர் விறகு பொறுக்க காட்டிற்குள் சென்றுவிட்டார். அப்போது ஒரு ராஜகுமாரன் அங்கு வந்தான். அவனுக்கு ராஜ்ய அபிவிருத்திற்காக யாகம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. நிஷ்டையில் இருந்த முனிவரை எழுப்பி யாகம் செய்யும் முறை பற்றி கேட்டறியலாம் என எண்ணினான். ஆனால் எவ்வளவோ எழுப்பியும் அவர் கண் திறக்கவில்லை. கோபமடைந்த ராஜகுமாரன் ஒரு இறந்த பாம்பை எடுத்து முனிவரின் கழுத்தில் போட்டுவிட்டு சென்றுவிட்டான். நிஷ்டையில் இருந்ததால் முனிவருக்கு பாம்பு கழுத்தில் கிடப்பது தெரியவில்லை. விறகு பொறுக்கச் சென்ற மகன் திரும்பி வந்தார். தன் தந்தையில் கழுத்தில் பாம்பு கிடப்பதை பார்த்து கோபமடைந்தார். இந்த செயலை செய்தது ராஜகுமாரன் என்பது தெரிய வந்தது. உடனே அரண்மனைக்கு சென்று என் தந்தையின் கழுத்தில் போடப்பட்ட செத்த பாம்பு உயிர்பெற்று உன் தந்தையான பரிக்ஷித்து மன்னனை தீண்டும் என சாபமிட்டுவிட்டு சென்று விட்டார். சில நாட்கள் கழித்து மகாராஜாவின் ஜாதகத்தை பார்த்த ஜோதிடர்கள் ராஜாவுக்கு சர்ப்பதோஷம் இருப்பதாக கூறினர். பரிக்ஷித்து ராஜா பாம்பிடம் இருந்து தன்னை காத்துக் கொள்ள மிகவும் மறைவான இடத்தில் ஒரு மண்டபம் கட்டி வசித்தார். அதன் உள்ளே ஒரு எறும்புகூட புக வழியில்லை. ஒரு நாள் பரிக்ஷித்து ராஜா மாம்பழம் சாப்பிடும்போது உள்ளே குட்டியாக இருந்த கரு நீல வண்ண பாம்பு பழத்தினுள் இருந்து வெளிப்பட்டு ராஜாவை சாபப் படியும் கர்ம வினைப் படியும் தீண்டியது. இதனால் மகாராஜா இறந்து விடுகிறார்.

கார்கோடகன் என்னும் அந்த பாம்பு ஒருநாள் தான் வசித்த இடத்தில் ஏற்பட்ட காட்டுத் தீயில் மாட்டிக் கொண்டது. அப்போது அந்த வழியாக சூதாட்டத்தில் நாட்டையும் சொத்தையும் இழந்த நள மகாராஜா சோகத்தில் நடந்து வந்து கொண்டு இருந்தார். கார்கோடகன் பாம்பு தீயில் மாட்டிக் கொண்டதை பார்த்த நள மகாராஜா அந்த கார்கோடகன் பாம்பை உயிருடன் மீட்டு காப்பாற்றுகிறார். தன்னை காப்பாற்றியதற்கு பிராயச்சித்தமாக கார்கோடகன் பாம்பு நள மகாராஜாவை தீண்டி உருமாற்றியது. இதனால் நள மகாராஜா நாட்டு மக்களின் கண்களுக்கு தெரியாதவராக உருமாறினார். நள மகாராஜா உருமாறியதால் அவரது மனைவி தமயந்திக்கு கூட நள மகாராஜாவின் உருவம் தெரியவில்லை. இதனால் நள மகாராஜா நாட்டை இழந்து விட்டு எங்கோ சென்று விட்டார் என்று கருதினார். அந்த சமயத்தில் தேர் ஓட்டுவதில் மிகுந்த திறமை படைத்த நள மகாராஜா வீமராஜாவிடம் தேரோட்டியாக வேலைக்கு சேர்கிறார். நளன் வீமராஜாவிற்கு தேர் ஓட்டுவதை பார்த்த தமயந்தி உருவில் நளனை தெரியாவிட்டாலும் அவன் தேர் ஓட்டும் விதத்தை பார்த்து அவன் தான் தனது கணவன் என்பதை உறுதி செய்து கொண்டாள். பின்னர் நளனும் தமயந்தியும் ஒருவரையொருவர் பார்த்து சம்பாஷனை செய்து கொண்டனர். இதையறிந்த வீமராஜா நளனையும் தமயந்தியையும் மீண்டும் சேர்த்து வைத்தார். நளன் ஏழரை ஆண்டுகள் கழித்து மீண்டும் ராஜாவாக பட்டம் சூட்டிக் கொண்ட பின்னர் கார்கோடகன் பாம்பு மீண்டும் நளனை தீண்டி பழைய உருவத்திற்கு மாற்றியது.

பரிக்ஷித்து மன்னனையும் நளனையும் தீண்டிய பாவம் நீங்க விஷ்ணுவை நோக்கி அந்த கரு நீல வண்ண கார்கோடகன் பாம்பு தியானம் செய்தது. விஷ்ணு அங்கு தோன்றி இக்கோவிலில் உள்ள சிவபெருமானை வழிபட்டால் பாவம் நீங்கும் என்றார். அதன்படி சிவனை வழிபட்ட பாம்பு சாப விமோசனம் பெற்றது. பாம்பின் பாவத்தை போக்க சிவன் கைலாயத்தில் இருந்து வந்ததால் கைலாசநாதர் என்னும் பெயர் பெற்றார். கைலாசநாதர் கோயில்கள் பல இடங்களில் அமைக்கப்பட்டன. அதில் இந்தக் கோயிலும் ஒன்று. அங்காரகன் இங்கு சிவனை வழிபட்டார். அதனால் இது செவ்வாய் பரிகார தலமாயிற்று.

அகத்தியரின் சீடரான உரோமச முனிவர் தாமிரபரணி நதிக்கரையில் பல இடங்களில் லிங்க பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்று அதற்கான இடங்களை தேர்ந்தெடுத்து தருமாறும் குருவிடம் கேட்டார். சிவனுக்கு பூஜை செய்த தாமரை மலர்களை தாமிரபரணியில் வீசும்படியும் அவை எங்கெல்லாம் கரை ஒதுங்குகிறதோ அங்கெல்லாம் லிங்க பிரதிஷ்டை செய்யும்படியும் அகத்தியர் கூறினார். அதன்படி உரோமசர் தாமரை மலர்களை நீரில் விட 9 பூக்கள் பல இடங்களில் கரை ஒதுங்கின. இந்த இடங்களில் எல்லாம் சிவலிங்க பிரதிஷ்டை செய்தார் உரோமசர். இவை நவ கைலாய தலங்கள் எனப்பட்டன. நவக்கிரகங்கள் ஒன்பது என்பதால் ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு இடம் ஒதுக்கப்பட்டது. 1. பாபநாசம் 2. சேரன்மாதேவி 3. கோடகநல்லூர் 4. செங்காணி 5. முறப்பநாடு 6. ஸ்ரீவைகுண்டம் 7. தெந்திப்பேரை 8. ராஜாதிபதி 9. சேந்தபூமங்களும் ஆகிய கோயில்கள் நவகைலாயங்கள் என்று அழைக்கப்படுகிறது. நவ கைலாயம் என்று அழைக்கப்படும் கோவில்களில் மூன்றாவது இக்கோயில் அங்காரகன் என்று அழைக்கப்படுகின்ற செவ்வாய்க்கு உரியது. செவ்வாய் தலம் என்றும் அங்காரக கைலாயம் என்றும் இக்கோயில் அழைக்கப்படுகிறது.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 559

கேள்வி: கும்பாபிஷேகத்தின் போது கருடன் வருவது பற்றி:

சுபசகுனம் தான். பல்வேறு தருணங்களில் கருடாழ்வாரே வந்து தரிசனம் தருவதும் உண்டு. ஆனால் சில ஆலயங்களில் அவ்வாறு வருவதில்லை. வேறு சில பறவைகள் வருகிறது. அதுவும் தேவலோகத்தில் இருந்து வரக்கூடிய பறவைகள் தான். எப்படி இருந்தாலும் அதை சுப சகுனமாகவே எடுத்துக் கொள்ள வேண்டும். கருடன் வந்தால் மட்டும்தான் அது நன்மையை தரும் என்று எடுத்துக் கொள்ளத் தேவையில்லை.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 558

கேள்வி: கர்ப்ப ஸ்த்ரீகள் சந்திர கிரகணம் போன்ற நாட்களில் எந்த செயல்களிலும் ஈடுபடக்கூடாது என்று சொல்வது பற்றி:

இறைவன் அருளால் இது போல் கிரகணத்தின் போது கர்ப்பவதிகள் மட்டுமல்ல யாருமே உணவு உண்ணாமல் இருந்து இறை நாமத்தை ஜபிப்பதே முதலில் தேக ஆரோக்கியத்திற்கு ஏற்புடையதாக இருக்கும். அடுத்ததாக மகான்களும் ஞானிகளும் அவர்களின் பத்தினிமார்களும் சதா சர்வ காலமும் லோக நன்மைக்காக பிரார்த்தனை செய்து கொண்டு தான் இருப்பார்கள்.

கோத பரமேஸ்வரர் திருக்கோயில் 4

மூலவர் கோதபரமேஸ்வரர் கைலாசநாதர் திருநாகீசர். லிங்க வடிவில் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். கோத என்றால் சமஸ்கிருதத்தில் பசு என்று பொருள். பசு இறைவனை வெளிப்படுத்தியதால் கோத பரமேஸ்வரர் என்று பெயர் பெற்றார். சிவலிங்கத்தில் நாக வடிவில் ராகு இருக்கிறார். அம்பாள் சிவகாமி. தெற்கு நோக்கிய தனி கருவறையில் ஒரு கரத்தில் மலர் ஏந்தியும் மறு கையைக் கீழே தொங்கவிட்ட படியும் நின்ற கோலத்தில் புன்னகை பூத்த முகத்துடன் காட்சி தருகிறாள். தலவிருட்சம் வில்வ மரம். தீர்த்தம் தாமிரபரணி. இடம் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள குன்னத்தூர். புராண பெயர் திருநாங்கீசநேரி சங்காணி. காணி என்றால் நிலம் என்றும் செங்காணி என்றால் செம்மண் நிறைந்த நிலம் என்றும் பொருள். செங்காணி என்பதே பின்னர் சங்காணி என்று மறுவியது. மேலும் இந்தப் பகுதியில் சிறு சிறு குன்றுகள் சூழ்ந்து இருப்பதால் குன்றத்தூர் என்ற பெயர் பெற்று பின்னர் குன்னத்தூராக மறுவியது. முற்காலத்தில் இந்த ஊர் கீழவேம்புநாட்டு செங்காணியான நவணி நாராயண சதுர்வேதி மங்கலம் என அழைக்கப்பட்டு வந்திருக்கிறது.

தாமிரபரணி ஆற்றின் கரையில் குன்றுகள் நிறைந்த நிலப்பகுதியில் இக்கோயில் அமையப் பெற்றுள்ளது. இங்குத் தனி விமானத்துடன் கூடிய  கிழக்கு நோக்கிய தனி சந்நிதியில் சுவாமியும் தனி விமானத்துடன் கூடிய தெற்கு நோக்கிய சந்நிதியில்  அம்மையும் காட்சி தருகிறார்கள். சுற்றுப் பிரகாரத்தில் நந்தி தட்சணாமூர்த்தி கன்னிமூலகணபதி வள்ளி தெய்வானை உடன் ஆறுமுகநயினார் என்னும் நாகசுப்ரமணியர் உள்ளார். இவரின் சிலையில் இருந்து சப்த ஸ்வரங்களும் எழும் விதமாய் வடிக்கப்பட்டுள்ளது. சண்டிகேஸ்வரர் பைரவர் ஆகியோர் உள்ளார்கள். முன் மண்டபம் அர்த்த மண்டபம் நடு மண்டபம் என்ற மூன்று மண்டபங்கள் உள்ளன. இங்குச் சுவாமிக்கு எதிரே உள்ள நந்தி பக்தர்களுக்கு ஆபத்து வரும் வேளையில் அவர்களை ஆபத்திலிருந்து மீட்பதற்குத்  தயாராக உள்ளார் என்பது போல கால்களை தூக்கி எழும்புவதற்கு தயாராக இருப்பது போல் உள்ளார்.

ஒரு காலத்தில் குன்னத்தூரில் வாழ்ந்து வந்த அரசன் தங்கியிருக்கும் இடம் அருகே ஒரு அதிசய மரம் இருந்தது. அந்த மரத்தில் ஒரு ஆண்டில் ஒரு பூ பூத்து ஒரு பழம் மட்டுமே பழுக்கும். அந்த அதிசய கனியை அரசன் மட்டுமே உண்ணுவான். ஏனெனில் பழத்தை உண்பவருக்கு நித்திய இளமையையும் வலிமையையும் தரும். ஆகவே அரசன் மரத்தைப் பாதுகாப்பதில் சிறப்பு கவனம் செலுத்தி வந்தான். ஒரு முறை அந்த மரத்தின் பக்கமாக தண்ணீர் எடுத்து சென்ற ஒரு கர்ப்பிணிப் பெண்ணின் குடத்தில் மரத்தில் பழுத்திருந்த பழம் விழுந்து விட்டது. இதை அறியாத பெண் வீட்டிற்கு சென்று விட்டாள். மரத்தில் பழத்தை காணாத அரசன் காவலர்களை அனுப்பி வீடு வீடாக பழத்தை தேடச் சொன்னான். கர்ப்பிணிப்பெண் வீட்டில் இருந்த பழத்தை கண்ட காவலர்கள் மன்னனிடம் அழைத்துச் சென்றார்கள். விசாரணை ஒன்றும் செய்யாமல் அரசன் அவளை கழுவேற்ற மன்னன் உத்தரவிட்டான். தான் நிரபராதி என்று எவ்வளவு சொல்லியும் அவளது பேச்சை யாரும் கேட்கவில்லை. அந்த பெண் இறக்கும் தருவாயில் நீதியற்ற இவ்வூரில் நீதி தளைக்கும் வரை பெண்களும் குழந்தைகளும் பசுக்களும் தவிர மற்றவை அழியட்டும் என சாபமிட்டாள். பின்னர் அவளின் சாபத்தின் படியே காலப் போக்கில் ஆண்கள் யாரும் அந்த ஊரில் இல்லாமல் போனார்கள். பின்னர் ஆண்கள் இல்லாததால் பெண்களும் அவ்வூரை விட்டு வெளியேற ஆரம்பித்தார்கள். அவள் சாபத்தின்படி அந்தப் பகுதியில் பசுக்கள் தவிர அனைத்தும் பாம்புகளால் அழியத் தொடங்கியது. நாளாக நாளாகப் பாம்புகள் பெருகின. அந்த ஊரில் எஞ்சி இருந்த பெண்களை திருமணம் செய்யவும் யாரும் முன்வரவில்லை. அனைவரும் யோசித்து ஈசனை நினைத்துப் பிரார்த்தித்து வழிபாடுகள் செய்ய ஆரம்பித்தார்கள். இவர்களின் பக்தியை இறைவன் ஏற்றுக் கொண்டு அவர்களுக்கு சாப நிவர்த்தி கொடுத்து அருள விரும்பினார். ஆகவே உரோமச முனிவர் பிரதிஷ்டை செய்து வழிபட்ட சிவலிங்கத்தை வெளிப்படுத்த எண்ணினார். இதனால் பாம்புகள் சூழ்ந்திருந்த மண் புற்றுக்கு மேல் அங்கு மேய்ந்து கொண்டிருந்த பசுக் கூட்டங்கள் சென்று மறைந்திருந்த இறைவன் மீது தானாகப் பாலை சொரிந்தன. அதனை கண்ட பசுவை மேய்ப்பவர்கள் இந்தச் செயலை பாண்டிய மன்னரிடம் தெரிவித்தார்கள். மன்னரும் அங்கு வந்து அந்த அதிசயத்தை  நேரில் கண்டு மகிழ்ந்தார். சிவபெருமானுக்கு கம்பீரமான கோவில் ஒன்றை எழுப்ப எண்ணினார். உடனடியாக அந்தப் பகுதியைச் சுத்தம் செய்து இறைவனுக்கு முறையான கோயில் கட்ட உத்தரவிட்டார். இச்செயல் இறைவனின் அருளால் கர்ப்பிணிப் பெண்ணின் சாபத்தை நிராகரிக்க முடிந்தது.

அகத்தியரின் சீடரான உரோமச முனிவர் தாமிரபரணி நதிக்கரையில் பல இடங்களில் லிங்க பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்று அதற்கான இடங்களை தேர்ந்தெடுத்து தருமாறும் குருவிடம் கேட்டார். சிவனுக்கு பூஜை செய்த தாமரை மலர்களை தாமிரபரணியில் வீசும்படியும் அவை எங்கெல்லாம் கரை ஒதுங்குகிறதோ அங்கெல்லாம் லிங்க பிரதிஷ்டை செய்யும்படியும் அகத்தியர் கூறினார். அதன்படி உரோமசர் தாமரை மலர்களை நீரில் விட 9 பூக்கள் பல இடங்களில் கரை ஒதுங்கின. இந்த இடங்களில் எல்லாம் சிவலிங்க பிரதிஷ்டை செய்தார் உரோமசர். இவை நவ கைலாய தலங்கள் எனப்பட்டன. நவக்கிரகங்கள் ஒன்பது என்பதால் ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு இடம் ஒதுக்கப்பட்டது. 1. பாபநாசம் 2. சேரன்மாதேவி 3. கோடகநல்லூர் 4. செங்காணி 5. முறப்பநாடு 6. ஸ்ரீவைகுண்டம் 7. தெந்திப்பேரை 8. ராஜாதிபதி 9. சேந்தபூமங்களும் ஆகிய கோயில்கள் நவகைலாயங்கள் என்று அழைக்கப்படுகிறது. நான்காவது மலர் கரை ஒதுங்கிய இடம் குன்னத்தூர். நவ கைலாயம் என்று அழைக்கப்படும் கோவில்களில் நான்காவதான இக்கோயில் இராகுவுக்கு உரியது. இராகு தலம் என்றும் இராகு கைலாயம் என்றும் இக்கோயில் அழைக்கப்படுகிறது.

இந்தக் கோவிலின் அருகே கீழத்திருவேங்கடநாதபுரம்  வரதராஜ பெருமாள் கோவிலும் சற்று தொலைவில் சிறிய மலைக்குன்றின் மீது மேலத்திரு வெங்கட நாத புரம் கோவில் கோவிலும் உள்ளது. இங்குள்ள கல்வெட்டுக்கள் மூலம் இந்தக் கோவில் 16 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது. இந்தக் கோவில் பூஜைகள் முறையாக நடைபெற வீரபாண்டிய மன்னன் 4200 ரூபாய் மதிப்புடைய பணம் கொடுத்துள்ளது கல்வெட்டில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்தக் கோவிலில் நில அளவுகோல் ஒன்று உள்ளது. இது ஊரில் ஏற்படும் நிலம் சம்மந்தமான பிரச்சனைகளைத் தீர்த்து வைக்கப் பயன்படுத்தப்பட்டதாகவும் கல்வெட்டில் குறிக்கப்பட்டு உள்ளது. திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயிலில் பாதுகாக்கப் பட்டுவரும் செப்பேடு ஒன்றில் இந்தத் திருத்தலத்தின் பெயர் திருநாங்கீசநேரி என்றும் இங்குள்ள இறைவனின் பெயர் திருநாகீசர் என்றும் அழைக்கப்பட்டுள்ள செய்தி குறிப்பிடப்பட்டு உள்ளது.

கண்டபேருண்டா

வலிமை கொண்ட இரு தலைகள் கொண்ட பறவையான கண்டபேருண்டா மல்லிகார்ஜூனா கோவிலில் புடைப்புச் சிற்பமாக உள்ளது. 1399 முதல் 1947 வரை மைசூர் சாம்ராஜ்யத்தை ஆண்ட உடையார்களின் அரச முத்திரையாக இந்த வலிமைமிக்க பறவை இருந்தது. தற்போது கர்நாடக அரசின் அதிகாரப்பூர்வ சின்னமாக உள்ளது.