யாங்கள் (சித்தர்கள்) அடிக்கடி கூறுவது போல் இறைவன் அருளால் கூறுகிறோம். தொடர்ந்த எண்ணங்களின் ஓட்டமே சிந்தனை. தொடர்ந்த சிந்தனை என்பது மனமாகும். விழிகளை மூடிக் கொண்டு ஒவ்வொரு மனிதனும் தன் மனதை உற்று நோக்கினால் அதில் எத்தனையோ ஆசா பாசங்கள் இருக்கலாம். அவற்றிலே ஏற்றத் தாழ்வுகள் இருக்கலாம். அதை விட்டுவிட்டு மேலும் பார்த்தால் என்ன தெரியும்? லோகாயம் மட்டுமே அதில் நிரப்பப்பட்டு இருக்கும். ஒன்று இல்லக் கடமை அல்லது தசக்கடமை (தொழில்) அல்லது அப்பொழுது அவன் சந்திக்கின்ற கடுமையான பிரச்சினை குறித்த சிந்தனை அல்லது எதிர்காலத்தில் வேறு ஏதாவது புதிதாக ஒரு பிரச்சனை இதனை சார்ந்து வந்துவிடுமோ? என்ற அச்சம். இது எதுவுமே இல்லாத மனிதனாக இருந்தால் பொழுதை ஆக்குவதற்கு பதிலாக போக்குகிறேன் என்று அந்தப் பொழுதை வீண் செய்வதும் அதற்காக தனத்தை வியம் (விரயம்) செய்வதுமாக ஒரு அசுரத் தனமான செயல்களில் ஈடுபடுவது. இப்படி மனதிற்கு அந்த மாபெரும் சக்திக்கு சரியான பணியை தராமல் அதன் ஆற்றலை முறைப்படுத்தி பயிர்களுக்கு அந்த மனோசக்தி எனப்படும் நீரை பாய்ச்சாமல் தேவையற்ற வெள்ளமாக வடிய விடுவதுதான் மனிதனுக்கு என்றென்றும் இயல்பாக இருந்து வருகிறது. எல்லோருக்குமே இது பெரும்பாலும் பொருந்துகிறது.
உடல் வேறு உடலில் குடிகொண்டு இருக்கும் ஆத்மா வேறு. ஆத்மா எத்தனையோ உடலுக்குள் இருந்து கொண்டு புகுந்து கொண்டு பிறவி என்ற பெயரில் வாழ்ந்து மடிந்து வாழ்ந்து மடிந்து சேர்த்த வினைகளின் தொகுப்புதான் அந்த வினைகளின் அடிப்படையில்தான் அடுத்த உடம்பு கிடைத்திருக்கிறது. அந்த உடம்போடு அந்த ஆன்மா மயக்கமுற்ற நிலையிலே தன்னை அறியாமல் வாழ்கிறது. அப்படி வாழ்கின்ற அந்த பிறவியிலும் அது பல்வேறு வினைகளை செய்கிறது. அதில் பாவமும் புண்ணியமும் அடங்குகிறது. இதிலே பாவங்களைக் குறைத்து எல்லா வகையிலும் புண்ணியங்களை அதிகரிக்க வேண்டும் என்பதுதான் மகான்களின் உபதேசமாக இருக்கிறது. இந்த புண்ணியத்தை கனவிலும் நனவிலும் ஒவ்வொரு அணுவிலும் எப்பொழுதும் சிந்தித்துக் கொண்டே கடமைகளை பற்றற்ற நிலையில் ஆற்றிக் கொண்டே உள்ளத்தில் சதா சர்வகாலம் இறை சிந்தனை மட்டும் வைத்துக் கொண்டு எதனையும் இறைவன் பார்த்தால் எப்படி பார்ப்பாரோ அந்த பார்வையில் பார்க்கப் பழகினால் மனம் நிம்மதியான நிலையிலிருக்கும். நிம்மதியான மன நிலையில்தான் மனிதனுக்கு பெரிய ஞானம் சார்ந்த விஷயங்கள் மெல்ல மெல்ல புரியத் துவங்கும். பிரச்சனைகளே இல்லாத வாழ்க்கை என்பது எக்காலத்திலும் எந்த மனிதனுக்கும் கிடையாதப்பா. பிர்ச்சனைகளை எப்படி எதிர் கொள்கிறான்? என்பதில்தான் வாழ்க்கை நிலை அடங்கியிருக்கிறது. அசைக்க முடியாத இறை பக்தி கொண்ட மனிதனுக்கும் வேறுபாடே அதிகளவு துன்பத்தை பார்க்கும் பொழுது அதனை எப்படி எதிர் கொள்கிறான்? என்பதை பொறுத்துதான். ஒரு வேளை இறைபக்தி இல்லாவிட்டாலும் தன்னுடைய அனுபவ அறிவைக் கொண்டும் தான் கற்ற கல்வியைக் கொண்டும் துன்பங்களை எதிர் கொண்டு வாழ்கின்ற மனிதன் எத்தனையோ மடங்கு மேலப்பா. இறை பக்தி இருந்தும் சோர்ந்து போகின்ற மனிதனை விட. எனவே மன சோர்வு மிகப்பெரிய பிணி. அதற்கு இங்கு வருகின்ற யாரும் இடம் தராமல் இருப்பதே சிறப்பு.
சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 270 வது தேவாரத்தலம் இலங்கையில் உள்ள மன்னார் மாவட்டம். புராணபெயர் மகாதுவட்டாபுரம். மூலவர் திருக்கேதீச்வரர். இங்கு இறைவன் கிழக்கு நோக்கி சுயம்பு லிங்கமாக அருளுகிறார். அம்பாள் கவுரி. தெற்கு நோக்கியபடி அருள்கிறாள். தீர்த்தம் பாலாவி. தலமரம் வன்னிமரம். கருவறைக்கு வெளியே இருபுறமும் விநாயகரும் சுப்பிரமணியரும் காட்சி தருகின்றனர். உட்பிராகாரத்தில் சூரியன், சம்பந்தர், கேது, சேக்கிழார், நால்வர், சுந்தரர் ஆகியோருக்கு தனித்தனி சன்னிதிகள். பின்புறம் பழைய மகாலிங்கம் உள்ளது. இங்கு பூஜை செய்து முடித்த பின்னரே கருவறை தீபாராதனை நடைபெருகிறது. கோவிலுக்கு வரும் அடியவர்களுக்காக ஆலயத்துக்கு வெளிப்புறமாக திருஞானசம்பந்தர் மடம், சுந்தரர் மடம், மலேசியா மடம், அடியார் மடம், சிவபூஜை மடம்,. நாவலர் மடம் என்று பற்பல மடங்கள் அமைந்துள்ளன.
உலகிலேயே மிகப் பெரிய சோமாஸ்கந்தர் சிலை உள்ளது. இந்த கோயிலும் 1600 இல் போர்ச்சுக்கிசியர்களால் அழிக்கப்பட்டது. மீண்டும் புதுப்பிக்கப்பட்டது. கோவிலில் ஐந்து திருத்தேர்கள் உள்ளன. அதில் முதல் தேரில் உலகிலேயே மிகப்பெரிய சோமாஸ்கந்தர் சிலை வைப்பார்கள். சிவராத்திரி இரவு முழுக்க இங்கு பூஜை நடைபெறும். அன்று காலையில் பாலாவியில் நீராடி விரதத்துடன் நீர் எடுத்து வந்து பக்தர்கள் தம் கையாலேயே பஞ்சாட்சரம் கூறியபடியே அபிஷேகம் செய்யலாம். கேது பகவான் இக்கோயிலுக்கு வந்து தவமியற்றி பூஜை செய்து வழிபட இறைவன் அம்மை அப்பராக அவருக்குத் தரிசனம் அளித்தார். இதனால்தான் திருகேது ஈஸ்வரம் என்று பெயர் பெற்று பின்பு திருக்கேதீஸ்வரமாக மாறியது. சூரபத்மனின் பேரனான துவட்டா என்பவன் இத்தீர்த்தத்தில் நீராடி இறைவனை வழிபட்டு அவருடைய திருவருளால் பிள்ளைப்பேற்றைப் பெற்றான். பின்னர் இங்கேயே தங்கியிருந்து இவ்விடத்தை பெருநகரமாக்கியதால் மாதுவட்டா என்ற பெயரும் ஏற்பட்டது. பின்னாளில் மருவி மாதோட்டம் என்றும் மாத்தை என்றும் ஆனது. ராமபிரான் சிவபெருமானிடமிருந்து பெற்ற மூன்று லிங்கங்களுள் ஒன்றை இங்கு பிரதிஷ்டை செய்து வழிபட்டுள்ளார். அகத்திய மாமுனிவர் தென்திசைப் பயணம் வரும்போது தட்சிணக் கயிலாயமான கோணேஸ்வரத்தைத் தரிசிக்கும் முன்பு திருக்கேதீச்சரம் வந்து சிவ வழிபாடு செய்ததாக தல புராணம் தெரிவிக்கிறது. ராவணன் மனைவி மண்டோதரி அவள் தந்தை மயன் முதலானோர் இத்தலத்தில் பூஜித்துள்ளனர். இங்கு பழங்குடியினரான நாகர்கள் வழிபட்டுள்ளதால் நாகநாதர் என்றும் இத்தல இறைவனுக்குப் பெயருண்டு.
கி.மு.3 ஆம் நூற்றாண்டில் இத்தலம் மகாதீர்த்தம் என அழைக்கப்பட்டுள்ளதைக் கதிர்காமக் கல்வெட்டின் மூலம் அறியலாம். 10, 11 ஆம் நூற்றாண்டில் சோழ மன்னன் ராஜேந்திரனால் இக்கோயில் கட்டப்பட்டது. சுந்தர பாண்டியனும் பல திருப்பணிகள் செய்ததாக கல்வெட்டுகள் உணர்த்துகின்றன. அதன்பின்னர் போர்த்துகீசியர் படையெடுப்பில் இக்கோயிலிலிருந்து தூண் மற்றும் பெரிய கற்களை உடைத்து எடுத்து மன்னார் கோட்டையைக் கட்டியதாக வரலாறு. பின்னர் ஆங்கிலேயர் கையில் சிக்கிய இக்கோட்டை வெள்ளத்தில் புயலில் சிதைந்து மண்மேடாகியது. விடிவெள்ளியாக அவதரித்த யாழ்ப்பாணத்து சைவப் பெருவள்ளல் ஆறுமுக நாவலர் கனவில் இந்த திருக்கேதீச்சரத்தில் ஒரு தேன் பொந்து மறைந்துள்ளது அதனைச் சென்றடையுங்கள் என்று இறைவன் சுட்டிக் காட்டினார். உடனே அவர் அங்கு சென்று 1893-ல் கோவில் உள்ள காட்டுப்பகுதி 43 ஏக்கர் நிலப்பரப்பினை வாங்கி கோயிலுக்கு அளித்து திருப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டது.
திருக்கேதீச்வரர் கோவிலில் திருப்பணிகள் செய்யும் போது மண்ணில் சிதையுண்ட நந்தி, சோமாஸ்கந்தர், கணேசர், பலிபீடம், துவஜஸ்தம்பம், அர்த்த மண்டபம் ஆகியவை வெளிப்பட்டன. இறையருளால் பழைய கருவறை மகாலிங்கமும் மண்ணிலிருந்து வெளிப்பட லிங்கத் திருமேனியை வெளியே எடுக்கையில் சிறிது பழுதுபட்டதால் அவரை மேற்கு பிராகாரத்தில் எழுந்தருளச் செய்து இறைவனுக்கு பூஜைகள் நடத்தப்பட்டது. மீண்டும் திருப்பணிகளுடன் 1910-ல் சிறுகோயில் கட்டப்பட்டது. பாலாவிப் புனித தீர்த்தக் குளமும் புதுப்பிக்கப்பட்டது. 1952 ஆம் ஆண்டு ஆவணி மாதத்தில் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. மேலும் சில அகழ்வாராய்ச்சிக்கு பின்னர் இத் திருக்கோயிலில் மீண்டும் 1976 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நான்காம் திகதி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. அப்போது கருவறைக்கு காசியிலிருந்து புதிய லிங்கம் தருவிக்கப்பட்டு பிரசிஷ்டை செய்யப்பட்டது. இதன் வரலாறு ராமேஸ்வர புராணத்தில் உள்ளது.
திருக்கேதீஸ்வரத் திருக்கோயிலில் பிருகு மகாமுனிவர் சிவபெருமானை வழிபட்டதை மகா முனிவர்கள் வரலாறு எடுத்துரைக்கின்றது. நவக்கிரகங்களில் ஒருவரான கேது பகவான் இத் திருக்கோயிலில் சிவபெருமானை வழிபட்டுத் தமது சாபம் நீங்கப்பெற்றார் என்று தக்ஷிண கைலாச மான்மியம் என்ற பண்டைய வரலாற்று நூல் எடுத்துரைக்கின்றது. மிகப் பெரிய புராண நூலான ஸ்கந்த புராண’த்தில் மூன்று அத்தியாயங்களில் இலங்கையைப் பற்றியும் அத்தீவின் அழகைப் பற்றியும் அங்கே வாழ்ந்த மக்களின் வாழ்க்கை முறைகளையும் பற்றி விளக்கிவிட்டு இலங்கையின் முக்கியமான இரண்டு புராதனமான சிவன் திருக்கோயில்களான திருக்கேதீஸ்வரம் திருக்கோணேஸ்வரம் ஆகியவற்றின் தோற்றத்தைப் பற்றியும் எடுத்துரைக்கின்றது. அப்புராணத்தின்படி முன்னொரு காலத்தில் வாயுதேவனுக்கும் ஆதிசேடனுக்கும் யுத்தம் மூண்டபோது ஆதிசேடனைத் தாக்குவதற்காக வாயுதேவன் மகா மேரு மலையின் சிகரங்களில் மூன்றை எடுத்து வீசினார். அந்தச் சிகரங்களில் இரண்டு இலங்கைத் தீவில் வீழ்ந்தன. ஒன்று திருக்கேதீஸ்வரம். மற்றொன்று திருக்கோணேஸ்வரம். சிவபெருமான் இத் திருத்தலங்களையும் தமது உறைவிடங்களாக்கிக் கொண்டார்.
சோழர்கள் இலங்கையை பலமுறை ஆட்சி செய்துள்ளனர். கி.பி 1028 ல் ரஜேந்திர சோழனால் ஈழம் கைப்பற்றப்பட்டது. இவர்கள் ஆட்சியில் ஊரின் பெயர்களும் ஆலயங்களின் பெயர்களும் மாற்றம் செய்யப்பட்டன. திருக்கேதீச்சரம் ஆலயத்தை ராஜராஜேஸ்வரம் என்றும் மாதோட்ட நகரினை ராஜராஜபுரம் என்றும் வழங்கியுள்ளனர். கோவில் பாதுகாப்பிற்க்காக திருக்கேதீச்சரம் ஆலயத்தைச்சுற்றி நன்னீர் கடல்நீர் கொண்ட இரு அகழிகள் அமைக்கப்பட்டது. ரஜேந்திரசோழன் இலங்கையை ஆட்சி செய்த காலத்தில் இவ்வாலயத்தின் ஆண்டுதோறும். ஏழுநாள் விழாவெடுத்து வைகாசிவிசாகத்தன்று தீர்த்தவிழா நடத்தியதாக ரஜேந்திரசோழன் கல்வெட்டுக் கூறுகின்றது. கி.பி 13 ஆம் நூற்றாண்டில் இலங்கையை ஆண்ட முதலாம் சுந்தரபாண்டியன் இவ்வாலயத்தில் சிற்பவேலைகள் பலவற்றைச் செய்ததோடு வேறு பல திருப்பணிகளையும் செய்துள்ளான். இலங்கையை ஆட்சிசெய்த 4வது மகிந்தனின் அநுராதபுரக் கல்வெட்டில் கோவில் ஒரு புண்ணியதலம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. திருநாவுக்கரசு சுவாமிகள் அவர்களின் திருதாண்டகத்திலும் சேக்கிழார் பெருமானின் பெரியபுராணத்திலும் இத்திருத்தலம் கூறப்பட்டிருக்கிறது. திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் பாடல்கள் பாடியுள்ளனர்.
பெட்டன்னா ஹெகடே சோமன்னா மற்றும் கேஷன்னா ஆகிய மூன்று சகோதரர்கள் பூர்வீகவாசிகளிடமிருந்து ஒரு இலவச இடத்தைப் பெற்று கி.பி 1234 இல் கோவிலைக் கட்டினர் என்று கல்வெட்டுகள் வெளிப்படுத்துகின்றன.
இறைவனின் கருணையைக் கொண்டு இயம்புவது யாதென்றால் இது போல நலம் நலம் நலமே எல்லா நிலையிலும் எல்லா சூழலிலும் தொடர்ந்து கிட்டிட இறைவன் அருளால் நல்லாசிகள் இத்தருணம் இயம்புகின்றோம். இறைவன் அருளாலே மனிதர்களின் வாழ்விலே பின்னிப் படர்ந்து கிடக்கின்ற கர்ம வினைகள் பெரும்பாலும் பாவங்களே இருப்பதால்தான் அறியாமை அதிகமாக மதியிலே (அறிவிலே) படர்ந்து கிடக்கிறது. அறியாமையை விட மிகப்பெரிய துன்பம் மனிதனுக்கு வேறு எதுவுமில்லை. எல்லாம் அறிந்திருக்கிறோம் என்று அறியாத நிலையிலும் அறிந்தது போல் மனிதன் இருப்பதுதான் அறியாமையின் உச்ச நிலையாகும். அதாவது லோகாய அறிவு என்பது ஒரு நிலை. லோகாய அறிவை நன்றாகக் கைவரப் பெற்ற மனிதன் கூட பல்வேறு தருணங்களில் அந்த அறிவால் பெரிய பலனேதுமில்லாமல் துன்பத்தில் வாழ்வது உண்டு. அதே சமயம் அறிவை செயல்பட விடாமல் முடக்குவதில் ஆசைக்கு மிகப்பெரிய பங்கு உண்டு. அந்த ஆசைக்கு துணையாக கடுமையான பாசத்திற்கும் மிகப்பெரிய பங்களிப்பு உண்டு. ஆசையும் பாசமும் மட்டுமா அறியாமைக்கு துணை செய்கிறது?. அதோடு உணர்ச்சி நிலை மிகு உணர்ச்சி நிலை. இவை அனைத்தையுமே கொண்டுள்ள மனிதன் அதிலிருந்து தப்ப இயலாமல் தொடர்ந்து போராடிக் கொண்டே வாழ வேண்டிய நிலையில்தான் இருக்கிறான் அன்றும் இன்றும் என்றும். எனவே தான் ஒரு மனிதன் எப்பொழுதுமே இறை பக்தியோடு சத்தியத்தை விடாது மனசாட்சியோடு தொடர்ந்து தர்ம சிந்தனையோடு வாழ மேற்கூறிய அறியாமை மெல்ல மெல்ல விலகும்.
அறியாமை விலக விலகவே மனிதனுக்கு நிம்மதி பிறக்கும். அது போல் நிலையிலே மனிதன் தன்னையும் தன்னை சேர்ந்த குடும்பத்தாரையும் பாச வலைக்குள் வைத்து பார்க்கும் பொழுதுதான் என் பிள்ளை இப்படி துன்பப்படுகிறானே என் தாய் இப்படியெல்லாம் கடினப்படுகிறாளே என்றெல்லாம் எண்ணி எண்ணி ஒரு மயக்கத்தில் ஆழ நேரிடும். ஆயினும் கூட அந்த பாசம்தான் பெருமளவு குடும்பக் கடமைகளை செய்ய மனிதனுக்கு ஒருவிதத்தில் உதவுகிறது. இருந்தாலும் அதுவே அதிகமாகும் தருணத்தில் அவனை அறியாமையில் வழுக்கி விழ வைக்கிறது. அதை அப்படியே மூன்றாவது மனிதன் மீது பார்க்கும் பொழுது இரத்த சம்பந்தமில்லாத நட்போ உறவோ இல்லாத மனிதரிடம் பார்க்கும் பொழுது அப்படியெல்லாம் ஏற்படாததால் அப்படி ஏற்பட்டு ஒரு மயக்கம் கிட்டாததால் மனிதன் அதனை சாதாரணமாகப் பார்க்கிறான். அவர்களின் துன்பம் மனிதனுக்கு துன்பமாகத் தெரிவதில்லை. அதை அப்படியே இரத்த சம்பந்தம் உடைய உறவுகளோடு பொருத்திப் பார்க்க பழகிவிட்டால் அதுதான் ஞானத்தை நோக்கி செல்கின்ற பாதையாகும். அது எப்படி? சொந்த உறவுகளுக்கும் சொந்த நட்புகளுக்கும் பழகிய உறவுகளுக்கும் துன்பம் என்றால் பார்த்துக் கொண்டு இருப்பதா? என்றால் யாங்கள் அந்த பொருளில் கூறவில்லை. யாராக இருந்தாலும் துன்பம் வந்துவிட்டால் அதனை துடைக்கும் வழியை மேற் கொண்டிட வேண்டும். ஆனால் உள்ளத்தில் பாசமும் ஆசையும் அறியாமையும் வைத்துக் கொண்டு அதனை செய்யாமல் நடுநிலையோடு செய்யப் பழகினால் மனதிலே சோர்வில்லாமல் தொடர்ந்து செய்து கொண்டே இருக்கலாம். இந்தக் கருத்தை மனதிலே வைத்துக் கொண்டால் வாழ்வு நலமாகும் சுகமாகும் சாந்தியாகும்.
கோபத்தினால் அறிவின்மை ஏற்படும். அறிவின்மையால் நினைவு தடுமாற்றம் ஏற்படுகிறது. நினைவு தடுமாற்றத்தினால் புத்தி அழிவு ஏற்படுகிறது. புத்தி அழிவதினால் மனிதன் தன் நிலையில் இருந்து வீழ்ச்சி அடைகிறான்.
இந்த சுலோகத்தின் கருத்து என்ன?
மனிதனின் ஆசை மற்றும் அவனது எண்ணங்கள் நிறைவேறாத போது ஏற்படும் கோபத்தினால் அவனுக்கு அறிவு மயக்கம் ஏற்படுகிறது. இதனால் அவனது அறிவு தான் செய்வது மட்டுமே சரியானது என்று எண்ணி மனதில் தோன்றியதெல்லாம் செய்து கொண்டு சரியான முடிவெடுக்க முடியாமல் தடுமாறுகிறது. இந்த தடுமாற்றத்தினால் அவனது புத்தி கீழ் நிலைக்கு சென்று அழிய ஆரம்பிக்கின்றது. புத்தி அழிவதினால் மனிதன் தன் நிலையில் இருந்து கீழான நிலைக்கு செல்கிறான் என்று அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் உபதேசம் செய்கிறார்.
புலன் நுகர் பொருட்களை சிந்தித்துக் கொண்டிருக்கின்ற மனிதனுக்கு அவ்விசயங்களில் பற்று ஏற்படுகிறது. பற்றில் இருந்து ஆசை உண்டாகிறது. ஆசையிலிருந்து கோபம் வருகிறது.
இந்த சுலோகத்தின் கருத்து என்ன?
இறைவனின் மீது தனது மனதை வைக்காதவனின் சிந்தனையானது உலகத்தில் உள்ள போகப் பொருட்களின் மீது சென்று கொண்டே இருக்கிறது. அந்த பொருட்களை நினைத்துக் கொண்டே இருப்பதினால் அந்தப் பொருட்களின் மீது பற்று உண்டாகிறது. பற்று உண்டான பின் அவற்றை அனுபவித்து விட வேண்டும் என்ற ஆசை வருகிறது. ஆசையை அனுபவித்து விட்டால் இதை விட பெரிய ஆசையை அனுபவிக்க வேண்டும் என்று மனமானது மேலும் ஆசைப்படுகிறது. ஆசையை அனுபவிக்க சூழ்நிலை இல்லை என்றாலோ தடங்கல் ஏற்பட்டாலோ அதற்கு காரணமானவர் மீது கோபம் வருகிறது என்று அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் உபதேசம் செய்கிறார்.
திருமந்திரம் நான்காம் தந்திரத்தில் 3 ஆவதாக உள்ள “அருச்சனை” தலைப்பைப் பற்றி “திருமந்திரத் திண்ணை” எனும் குழுவில் Zoom நேரலையில் 20-11-2021 அன்று நிகழ்த்திய கலந்துரையாடல்.
அனைத்து புலன்களையும் தன் வசப்படுத்தி ஒரு முகப்படுத்திய சித்தமுடையவன் என்னையே பரகதியாகக் கொண்டு தியானத்தில் அமர வேண்டும். ஏனெனில் எவனுடைய புலன்கள் வசப்பட்டு இருக்கின்றனவோ அவனுடைய புத்தி உறுதியானதாகிறது.
இந்த சுலோகத்தின் கருத்து என்ன?
தன் அனைத்து புலன்களையும் தனக்குள் உள்ளிழுத்து தன் வசப்படுத்தியவனின் புத்தியானது உறுதியான வைராக்கியத்துடன் இருக்கும். அந்த உறுதியான வைராக்கியத்துடன் தன் மனதை ஒரு முகப்படுத்தி தனக்குள் இருக்கும் இறைவனை காண வேண்டும் என்று தியானத்தில் அமர்ந்தால் தனக்குள் இருக்கும் இறைவனை கண்டு உணரலாம். அப்போது அவனுடைய மனதில் இருக்கும் ஆசைகள் அனைத்தும் அழிந்துவிடும் என்று அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் உபதேசம் செய்கிறார்.
புத்தி உறுதியாகி தியானத்தில் அமர்பவனுடைய மனம் இறைவனிடம் ஒன்று சேர்கிறது. அப்படி மனதை இறைவனிடம் ஒன்று சேர்த்த சாதகனின் மனமாகிய காற்றும் நெருப்பாகிய இறைவனும் ஒன்று சேர்வதினால் காற்றும் நெருப்பும் சேர்ந்து வைக்கோலை எரிப்பது போல் சாதகனின் மும்மலங்களும் கர்மாக்களும் எரிந்து சாதகன் முக்தி பெறுகிறான்.
திருமந்திரம் முதல் தந்திரத்தில் 21 ஆவதாக உள்ள “கேள்வி கேட்டு அமைதல்” தலைப்பைப் பற்றி “திருமந்திரத் திண்ணை” எனும் குழுவில் Zoom நேரலையில் 22-08-2021 அன்று நிகழ்த்திய கலந்துரையாடல்.