மனம்

மனம் என்பது உழாத நிலம் போன்றது ஆகும். நிலத்தில் கலைகள் தேவையில்லாத முட்கள் முளைத்து இருக்கும். மண் முரடாக இருக்கும். கல் பாறைகள் இருக்கும். அதில் தெய்வீக செடியை நட இயலாது. மண்ணில் உள்ள தேவையில்லாத குப்பைகளை நீக்கி மண்ணை முதலில் ஏர் உழுது பன்படுத்திய பிறகுதான் செடியை நட வேண்டும். அப்போது செடியானது நன்கு வளரும். நிலத்தை உழுது பன்படுத்துவது போல நம் மனதையும் இயமத்தால் தீயவற்றை நீக்கி மனதால் நன்மை தரக்கூடிய நியம வழியை கடைபிடித்து தெய்வீக செடியை நட்டு வைத்தால் இறைவன் அங்கு வந்து அமர்வான்.

இயமம்: தீமைகளைப் போக்குவது. இதில் ஐந்து பிரிவுகள் உள்ளன:

  1. மனதாலும் பேச்சாலும் செயலினாலும் எந்த உயிரையும் துன்புறுத்தாமை.
  2. மனதாலும் பேச்சாலும் செயலினாலும் பிறர் பொருளைக் களவாடாமை.
  3. மனதாலும் பேச்சாலும் செயலினாலும் முழு பிரம்மச்சரியம் கடைப்பிடித்தல்.
  4. மனதாலும் பேச்சாலும் செயலினாலும் உண்மையைப் பின்பற்றுதல்.
  5. பிறர் கொடுக்கும் பரிசுகளை ஆசையினால் பெற்றுக் கொள்ளாமை.
    இதனைக் கடைபிடித்தால் நம்மிடமுள்ள அனைத்து தீமைகளும் விலகும்.

நியமம்: நன்மைகளைப் பெறுவது

தவம் ஜபம் சந்தோஷம் தெய்வ நம்பிக்கை தானம் சிவவிரதம் சித்தாந்தக் கேள்வி சிவபூசை ஞான அறிவு நாணம் ஆகிய பத்துக் காரியங்களையும் தவறாது மேற்கொள்ளுதல் நியமம் ஆகும். இவற்றை மேற்கொள்ளும் போது ஒளியாகிய சிவத்தையும் அந்த ஒளியின் ஆற்றலாகிய சத்தியை தியானித்தலும் நியமம் ஆகும்.

இதனை தொடர்ந்து செய்பவர்களுக்குள் இறைவன் வந்து அமர்வான். இதனை திருமந்திரம் அட்டாங்க யோகம் தலைப்பில் வரும் பாடல்களில் தெரிந்து கொள்ளலாம்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 263

கேள்வி: ஷ ஹ ஸ போன்ற எழுத்துக்களைப் பேசவோ எழுதவோ முடியவில்லையே? இது எதனால் ஏற்பட்டது?

இறைவனின் கருணையாலே மொழியாகட்டும் மனிதனின் பழக்க வழக்கமாகட்டும் ஒரு காலத்தில் இருந்தது போல் மறுகாலத்தில் இருப்பதில்லையப்பா. அதைப் போல மொழியிலே கலப்பு வருவதையும் யாராலும் தடுக்க இயலாது. வேண்டுமானால் ஒவ்வொரு மொழிக்கும் தனித்தன்மை இருக்கிறது. பிற மொழி கலப்பால் அது பாதிக்கப்படுகிறது என்று மனிதன் வாதம் செய்யலாம். எந்த மொழியும் பிற மொழி சேர்வதால் எக்காலத்திலும் எந்த பாதிப்பும் அடைந்து விடாது. ஆனால் அதே சமயம் ஒன்றை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். வாழும் காலம் அல்லது சம காலம் அல்லது நிகழ்காலம் என்று வைத்துக் கொண்டால் சக மனிதர்கள் பெருவாரியான மனிதர்கள் புரிந்து கொள்ளக் கூடிய ஊடகமாகத்தான் மொழி இருக்க வேண்டுமே தவிர அது தனித்தனியாக இருக்க வேண்டும். மிக சிறப்புற மொழி இப்படியெல்லாம் சீரழிந்து கிடக்கிறதே என்றெல்லாம் வருத்தம் அடைந்து விடக்கூடாது. அப்படியொரு நிலையை கடைபிடிக்கத் துவங்கினால் எல்லொருக்குமே ஒருவிதமான அயர்வும் வெறுப்பும்தான் ஏற்படும். இன்னொன்று. நீ கூறியது போல எல்லா வகையான ஒலிக் குறிப்புகளும் இந்த மொழியில் அதாவது தமிழ் மொழியில் ஒரு காலத்தில் இருந்தது.

காலப் போக்கிலே இப்பொழுது எப்படி வேற்று மொழியின் ஆதிக்கம் பரவலாக இருக்கிறதோ அதுபோல ஒரு காலத்தில் அந்த மந்திர மொழி (வட மொழி) என்று இன்று கருதப்படுகின்ற அந்த வட மொழியின் ஆதிக்கம் இருந்தது. அந்த மொழியைப் பேசினால்தான் கெளரவம் என்று இப்பொழுது போல் அப்பொழுதும் மனிதர்கள் எண்ணினார்கள். அதன் விளைவாக பலவிதமான கலப்புகளும் ஏற்பட்டது. ஆனாலும் கூட அந்த ஒலிக் குறிப்புகள் எல்லாம் அடியோடு இல்லாமல் போய் விட்டது. இப்பொழுது அந்த ஒலிக் குறிப்புகள் இல்லையென்று நீ வருந்தத் தேவையில்லை. இருக்கின்ற அந்த ஒலிக் குறிப்பினையே வைத்து தாராளமாக நீ உச்சரிக்கலாம். அப்படி உச்சரித்தால் அது தமிழ் மொழியை சார்ந்தது அல்ல என்கிற கருத்து எம்மால் ஏற்கக்கூடியது அல்ல. எந்த ஒரு வரி வடிவமும் எக்காலத்திலும் தொடர்ந்து அதைப் போலவே நிலை பெறுவது இல்லை. இப்பொழுதுள்ள மொழிக்கும் இப்பொழுதுள்ள சமுதாயத்திற்கும் எது ஏற்றதோ அதனை இறைவன் தந்திருக்கிறார்.

கேள்வி: தங்கள் அருளாசியால் 35 (திருவண்ணாமலை) சித்தர்களின் வரலாறு விளையாடல்களை வெளியிட மட்டுமே அருள் செய்தீர்கள். மீதியுள்ளவற்றையும் வெளியிட தங்களின் ஆசி வேண்டும்:

இறைவன் கருணையாலே இறைவன் அருளாணையிட மீண்டும் ஏனைய மகான்களின் விளையாடல்கள் இறையோடு தொடர்புடைய அந்த திருகிரி (திருவண்ணாமலை) தொடர்புடைய நிகழ்வுகள் மனிதர்களுக்கு தேவைப்படும் மனிதர்களுக்கு நம்பக்கூடிய மனிதர்களுக்கு இந்த வெளி உலகத்தில் தெரிய வருமப்பா.

சுலோகம் -149

பகவத் கீதை 3. கர்ம யோகம் 3-30

ஒன்றிய மனதுடன் எல்லாக் கர்மங்களையும் இறைவனிடம் அர்ப்பணம் செய்து விட்டு ஆசையற்றவனாக சுயநலம் இல்லாமல் தாபமற்றவனாக ஆகி யுத்தம் செய்.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

செய்யும் செயல்களில் எனக்கு என்று சுயநலமாக சிந்திக்காமலும் என் செயல் என்று ஒன்றும் இல்லை அனைத்தும் இறைவன் செயல் என்றும் மனதை ஒரு நிலையுடன் வைத்து செய்யும் செயல்கள் அனைத்தையும் இறைவனுக்கு அர்பணித்து மனதில் துக்கம் மகிழ்ச்சி என்று எதுவும் இல்லாமலும் இந்த யுத்தத்தை செய் என்று கிருஷ்ணர் அர்ஜூனனுக்கு உபதேசம் செய்கிறார்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 262

கேள்வி: கிருஷ்ணகிரி மத்தூர் சிவன் கோவில் கும்பாபிஷேகம் தடைகள் நீங்கி நிறைவேற தங்கள் அருளாசி:

இக்கோவில் பெயர் அருள்மிகு சோமேஸ்வரர் ஆலயம். மத்தூர் ஊராட்சி கிருஷ்ணகிரியில் இருந்து 30 கி.மீ தொலைவில் உள்ளது.

கட்டாயம் விநாயகப் பெருமான் வழிபாட்டை உள்ளன்போடு செய்து உள்ளன்போடு அது தொடர்புடைய மாந்தர்கள் (மனிதர்கள்) அந்த ஸ்தல யாத்திரையை மேற்கொண்டால் நலம் நடக்கும்.

கேள்வியின் தொடர்ச்சி கேள்வி: இத்தலத்தில் (மத்தூர் சிவன் கோவில்) அன்னையின் ஆலயம் எழுப்ப வேண்டுகிறோம். இது 3500 ஆண்டுகளுக்கு முற்பட்டது என கூறப்படுகிறது. இத்தலத்தின் சிறப்பு பற்றி கூற வேண்டுகிறேன். இத்தலத்தில் ஒரு சித்தரின் ஜீவ சமாதி உள்ளது என்பது உண்மையா?

இறைவனின் கருணையாலே இந்த ஸ்தலத்திற்கு எத்தனையோ சிறப்புகள் இருக்கிறது. ஸ்தல புராணம் குறித்து நாங்களே ஒரு முறை என்ன நிகழ்ந்திருக்கிறது? அல்லது என்ன நிகழ்ந்து கொண்டிருக்கிறது? மனிதர்கள் இது வரை செவியாறலாகக் கேட்டவை எவை? கேட்கத் தவறியவை எவை? என்றெல்லாம் பின்னர் கூறுவதாகக் கூறியிருக்கிறோம். அந்த நிலையிலே ஜீவ சமாதி என்பதை விட பல சித்தர்கள் வந்து வழிபட்டார்கள். இன்றும் வழிபடுகிறார்கள் என்று கூறுவது பொருத்தமாகும். அதே தருணம் இந்த நிலையிலே நல்விதமாய் அன்னைக்கு ஆலயமும் திருப்பணியும் ஆவதற்கு நாங்கள் அருளாசி கூறுகின்ற அதே தருணம் மனிதர்கள் ஒன்றை மறந்து விடுகிறார்கள். அன்னையாக தெய்வத்தை வணங்கத் தெரிகிறது. அன்னையாக நதியைப் போற்றத் தெரிகிறது. ஆனால் நிஜமான வடிவிலே வாழ்கின்ற பெண்களையெல்லாம் இடர்படுத்தினால் கொடுமைப் படுத்தினால் எப்படியப்பா இறைவன் அருள்வார்? அன்னையை வணங்க வேண்டும் அன்னைக்கு வழிபாடு செய்ய வேண்டும் என்று கூறிக் கொண்டே அதே பெண்களை நீ இப்படி இருப்பதால் இப்பொழுது இங்கு வரக்கூடாது. நீ பெண் என்பதால் இந்த பூஜையை செய்யக்கூடாது என்றெல்லாம் யார் வகுத்துத் தந்தார்கள்? என்று தெரியவில்லை. எனவே முதலில் அவரவர்கள் இல்லத்தில் உள்ள பெண்களை ஒவ்வொரு ஆணும் மதிக்க வேண்டும். அதைப் போல ஆண்களையும் பெண்கள் மதிக்க வேண்டும். இதை செய்யாமல் ஆலயத்திற்கு சென்று அங்கு மட்டும்தான் அன்னை இருப்பதாக எண்ணினால் கட்டாயம் அந்த அன்னையின் அருள் யாருக்குமே கிட்டாது. பொதுவாக ஒரு மனிதன் நல்லவனாக இருக்கலாம். அல்லது அதற்கு மாறான குணங்கள் கொண்டவனாக இருக்கலாம். பெண்களிலும் விரும்பத்தகாத குணங்கள் கொண்டவர்களும் இருக்கலாம். அது பற்றி நாங்கள் கூறவில்லை. ஆனாலும் கூட மனித வடிவம் எடுத்துவிட யாரையும் பழிக்காமல் இடர்படுத்தாமல் ஒருவன் வாழ்ந்தாலே அதுவே இறைவனை பூஜை செய்வதற்கு சமமாகும்.

சுலோகம் -148

பகவத் கீதை 3. கர்ம யோகம் 3-29

பிரகிருதியில் உண்டான குணங்களால் மிக்க மயக்கம் அடைந்துள்ள மனிதர்கள் குணங்களிலும் கர்மங்களிலும் ஈடுபடுகிறார்கள். முற்றும் அறிந்திராத குறை மதியுடைய அந்த அஞ்ஞானிகளை முழுமையான அறிவு பெற்றுள்ள ஞானி தடுமாறச் செய்யலாகாது.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

சுலோகம் 146 இல் உள்ளபடி பிரகிருதியில் உண்டான மூன்று குணங்களால் ஆத்மாவை அறியாமல் மயங்கி நின்று அந்த குணங்களால் உண்டாகும் செயல்களில் மனிதர்கள் ஈடுபடுகிறார்கள். இறைவனை அறிந்து கொண்ட ஞானத்தை பெற்றவர்கள் முழுமையான ஞானத்தை பெறாத இவர்கள் கர்ம யோகத்தின் படி செய்யும் செயல்களை தவறு என்று சொல்லியோ இதனை செய்யக் கூடாது என்று சொல்லியோ கர்ம யோகத்தில் செல்பவர்களை தடுத்து ஞான யோகத்தில் செல்லுங்கள் என்று அவர்களை குழப்பக் கூடாது.

ஸ்ரீ யந்திர ஆலயம்

ஸ்ரீ யந்திர ஆலயம்

மத்திய பிரதேசம் அமர்கண்டக் என்னும் இடத்தில் அமைந்துள்ளது இக்கோவில். இந்த கோயிலின் நுழைவாயிலில் 4 தலைகளைக் கொண்ட பிரமாண்டமான சிற்பம் உள்ளது. இந்த 4 தலைகளும் லட்சுமி சரஸ்வதி காளி புவனேஸ்வரி தேவியின் முகங்களைக் குறிக்கின்றன. இவர்களுக்கு கீழே 64 யோகினிகளின் நேர்த்தியான சிற்பங்களும் விநாயகர் மற்றும் முருகனின் சிற்பங்களும் உள்ளன.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 261

கேள்வி: வைணவ ஆலயங்களில் தீர்த்தம் சடாரி துளசி போன்றவற்றையும் சிவ ஆலயங்களில் விபூதியை பிரசாதமாக வழங்குவதின் தாத்பர்யம் என்ன?

சில சிவ ஆலயங்களிலும் சடாரி வைக்கப்படுவது உண்டப்பா. எல்லாவற்றிலும் மனிதனின் வித்தியாசமான சிந்தனை இருந்து கொண்டே இருக்கும். நீ இப்படி செய்கிறாயா? நான் இப்படி செய்யமாட்டேன் என்பது போன்ற மனோபாவத்தில் வருவதுதான். இருந்தாலும் கூட சில ஆகமங்களுக்குப் பின்னால் பலவிதமான மகான்களின் நீதி போதனைகள் அர்த்தங்கள் அடங்கியிருக்கின்றன. சகலமும் ஒரு தினம் ஒன்றுமில்லாமல் அழியப் போகிறது. அப்படி அழிக்கக்கூடிய ஆற்றல் கொண்டது நெருப்பு. அந்த நெருப்பை தன்னகத்தே கொண்டவர் இறைவன். அந்த இறைவன் நெருப்பு வடிவமாக இருக்கும் பொழுது சிவனாக முக்கண்ணனாக லிங்க ரூபியாக இருக்கிறார். அந்த அக்னி எரிந்து கொண்டே இருக்கிறது. எரியும் அக்னியிலிருந்து என்ன வரும்? சாம்பல் வரும். எனவே அங்கே விபூதி பிரசாதமாக தரப்படுகிறது. அந்த விபூதி எரியும் அக்னியிலிருந்து வந்தாலும் விபூதி என்பது அக்னித் தன்மையும் கொண்டது. குளிர்ந்த தன்மையும் கொண்டது. அதே சமயம் தூய்மையான விபூதியை ஒருவன் நெற்றியிலே அதிகமாக இட்டால் கபாலத் தொல்லைகள் (தலைவலி) குறைவதோடு கபாலத்தின் உள்ளே இருக்கும் நீர் உறிஞ்சப்பட்டு பாதுகாப்பாக வெளியேறும். இதனால் சீதளத் தொல்லைகள் இல்லாமல் வாழலாம். அதனால்தான் அக்னி ஸ்வரூபமாக இருக்கக்கூடிய அந்த லிங்க ரூபிக்கு குளிர்ந்த வில்வத்தை ஆராதனை செய்ய பயன்படுத்த சொல்லி மகான்கள் அறிவுறுத்தியிருக்கிறார்கள்.

அதே இறை குளிர்ந்த ரூபமாக மஹாவிஷ்ணுவாக அங்கே காட்சி தருகிறார். யோக நிலையிலே சயன நிலையிலே நின்ற நிலையிலே இருக்கிறார். அங்கு சதா குளிர் சதா நீர் எனவே அங்கு வெது வெதுப்பும் வெப்பமும் தேவை என்பதால் அதுபோல் துளசி தரப்படுகிறது. யாருக்கெல்லாம் சீதளத் தொல்லை இருக்கிறதோ நுரையீரலிலே நீர் கோர்த்துக் கொண்டு இருக்கிறதோ நுரையீரல் தொடர்பான பிரச்சினை இருக்கிறதோ சுவாசம் செய்யவே கடினமாக இருக்கிறதோ அவர்கள் எல்லாம் தூய்மையான செம்பு கலசத்திலே சிறிதளவு கருந்துளசியை இட்டு தூய்மையான நீரை இட்டு அதை ஏக நாழிகை அல்லது உபய நாழிகை இயன்றால் சில நாழிகைகள் வைத்திருந்து பலமுறை தன்வந்திரி நாமத்தை உருவேற்றி அந்த நீரையும் துளசி தளத்தையும் உண்டால் கட்டாயம் தேகம் (உடல்) நலமாக இருக்கும். எனவே எல்லா மருத்துவ முறைகளும் எல்லா விதமான மனிதனுக்குத் தேவையான பொருள் பொதிந்த ஆன்மீக உண்மையும் கொண்டதுதான் இறை வழிபாடு. இவையெல்லாம் சிறு குறிப்புதான். இன்னும் போகப் போக உள்ளே அதிக விஷயங்கள் இருந்து கொண்டேயிருக்கும். ஒவ்வொரு மனிதனும் ஆய்வு செய்து பார்த்தால் ஒவ்வொரு இறை வழிபாட்டின் நுட்பங்களுக்குப் பின்னால் உள்ள தத்துவம் நன்றாகவே புரிபடும். சிக்கல் இல்லாமல் வாழ்வு இல்லை சிக்கலையெல்லாம் மெதுவாக களைந்தால்.

ஒரு கடினமான ஓடு உடைய தேங்காய் இருக்கிறது. அந்தக் கடினத்தையும் மோதி முயற்சி செய்து உடைத்து விட்டால் தேங்காயின் வெண்மையான தன்மை தெரிகிறது. எனவே அந்த இறை தத்துவமும் சிக்கல் போலவும் கடினம் போலவும் இருந்தாலும் கூட போராடி அதனை புரிந்து கொண்டால் இறுதியில் அந்த தேங்காயின் தன்மை போல் இறை பொருள் என்பது மனிதனுக்கு புரியவரும். அதைப் போல் அக்னி ஸ்வரூபமாக இருக்கக் கூடிய தெய்வத்திற்கு இன்னொரு அக்னியைக் காட்டி இந்த அக்னியும் ஒன்று நீயும் ஒன்று அக்னியாகிய உன் தன்மையை நாங்கள் தொட இயலாது. ஆனால் உன் சார்பாக இந்த சிறு அக்னியை உனக்கு காட்டிவிட்டு அந்த அக்னியை நாங்கள் தொட்டு ஆராதனை செய்கிறோம் என்றுதான் தூய்மையான கற்பூர தீபமும் நெய் தீபமும் காட்டப்படுகிறது. இவையெல்லாம் பல மனிதர்கள் அறிந்த உண்மைதான். இவற்றுக்குள்ளேயே ஆழ்ந்து விடாமல் ஒரு மனிதன் தனக்குள் இருக்கக் கூடிய இறையையும் தனக்குள் உள்ள பாவங்களையும் வென்று எண்ணங்களில் எல்லா விதமான நல் சிந்தனைகளை வளர்த்துக் கொண்டு வாழ்ந்தால் கட்டாயம் இறையருள் அது எந்த நிலையாக இருந்தாலும் அவன் எந்த வடிவை வணங்கினாலும் அவன் விரும்பும் வடிவில் அவன் விரும்பும் நிலையில் அவனுக்கு இறைவனால் காட்சி தரப்படும் அருளப்படும்.

சுலோகம் -147

பகவத் கீதை 3. கர்ம யோகம் 3-28

சுலோகம் -147

நீண்ட புஜங்களை உடையவனே குணங்களின் பிரிவு கர்மங்களின் பிரிவு இவற்றின் தத்துவம் அறிந்த ஞானயோகி குணங்கள் அனைத்தும் குணங்களில் செயல்படுகின்றன என்று அறிந்து அவற்றில் பற்று கொள்ளாமல் இருக்கிறான்.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

சுலோகம் 146 இல் உள்ளபடி மூன்று குணங்களையும் அதன் பிரிவுச் செயல்களான கர்மங்களின் பிரிவுகளையும் அவை செயல்படும் விதத்தையும் அறிந்த ஞானத்தை பெற்ற யோகி தான் செய்யும் செயல்களில் பற்றுக்கள் இல்லாமல் செயல்படுவார்.

திருமந்திரத்தில் நவ குண்டம்

“திருமந்திரத்தில் நவ குண்டம்” எனும் தலைப்பைப் பற்றி “திருமந்திரத் திண்ணை” எனும் குழுவில் Zoom நேரலையில் 19-02-2023 அன்று நிகழ்த்திய கலந்துரையாடல்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 260

கேள்வி: ஒவ்வொருவருக்கும் பொருளாதாரக் கல்வி ஆன்மீகக் கல்வி கிடைக்க வேண்டுமென்றால் என்ன பயிற்சி என்ன வழிபாடு செய்ய வேண்டும்?

இறைவன் அருளால் எல்லோருக்கும் எல்லாம் கிட்ட வேண்டும் என்பது பொதுவாகவே நல்லவர்களின் பிராத்தனை ஞானியர்களின் பிராத்தனையாக இருந்தாலும் கூட கர்ம வினை என்ற ஒன்று இருக்கும் வரை இந்த ஏற்றத் தாழ்வுகள் இருக்கத்தான் செய்யும். அதே தருணம் இன்னொருபுறம் மனிதன் சுயமாக சிந்தித்து ஏதோ செய்த புண்ணியமோ அல்லது இறைவன் அருளோ என்னை இறைவன் நன்றாக வைத்திருக்கிறான். எனக்கு நிறைய செல்வம் சேர்ந்திருக்கிறது. என்னால் முடிந்த ஒரு சில குடும்பத்தையாவது நான் காப்பாற்றுவேன் என்று ஒரு முடிவெடுத்து அவன் செயலில் இறங்கி விட்டால் எல்லோருக்கும் எல்லாம் என்கிற நிலை வந்துவிடும். ஆனால் இவையெல்லாம் கேட்பதற்கு நன்றாக இருக்கும். நடைமுறைக்கு சாத்தியமில்லை என்றுதான் மனிதன் எண்ணிக் கொண்டிருக்கிறான். இருந்தாலும் கூட பிராத்தனை என்று வைத்துக் கொண்டால் இறைவனை அன்னப் பூரணியாக வணங்கினால் இந்த அன்ன பிரச்சனை தீர்வதற்கும் இதே ஹயக்ரீவரையும் அன்னை கலைவாணியையும் (அன்னை சரஸ்வதி) வணங்கி வணங்கி வந்தால் கூட்டு வழிபாட்டிலும் இது போல முக்கியத்துவம் தந்து வந்தால் நல்லதொரு ஞானமும் கல்வி என்றால் ஏதோ மனிதர்களால் கற்பிக்கப்படும் கல்வியை நாங்கள் கூறவில்லை. மனிதர்களால் கற்பிக்கப்படும் கல்வியை நாங்கள் கல்வி என்றே ஒத்துக் கொள்வதில்லை. எனவே மெய்யான ஞானத்தை உணர்வதற்கு அது வழிகாட்டுவதாக இருக்கும். எனவே இந்த பக்தி மார்க்கம் தவிர இக்காலத்தில் வேறு எளிய வழி மனிதர்களுக்கு இல்லை.

கேள்வி: தனி மனிதன் தன் மானசீக குருவை எவ்வாறு தேர்ந்தெடுப்பது?

அவனவன் கற்ற விஷய பொருள்களில் அல்லது கேள்விப்பட்ட ஆன்மீக விஷயங்களில் எந்த குரு மீது இயல்பாக ஈர்ப்பு வருகிறதோ அந்த குருவை மானசீக குருவாக ஏற்றுக் கொள்ளலாம்.